செவ்வாய், செப்டம்பர் 29, 2015

வெற்றிமேல் வெற்றி



உள்ளக் கழிப்பை
ஊருக்கே சொல்ல வேண்டும்
இந்நாள்
உன் எதிர்காலம் குறித்த
வறட்சி வயலில்
வாய்க்கால் நீர் பாய்ந்த நாள்
இது உனக்கு ஆரம்பம்தான் – இனிமேல்
நீ நடுகின்ற ஒவ்வொரு நாற்றும்
மரமாய் வளரட்டும்
உளைச்சல் உனக்கானதாயினும்
விளைச்சல் ஊருக்காகவும் இருக்கட்டும்
பெருமிதம் கொள்ளாதே
வெற்றி கிடைத்து விடவில்லை
வெகுமதிதான் கிடைத்துள்ளது இது
போட்டியில் கிடைத்த
முதல் பரிசல்ல
பங்களிப்பில் கிடைத்த
ஆறுதல் பரிசு
முதல் பரிசும் உனக்காகத்தான்
காத்துக் கொண்டிருக்கிறது
மறந்து விடாதே
சொணங்கி விடாதே. !