கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 17, 2022

வாழ்விற்கும் விதி

 


    வாழ்விற்கும் விதி

போக்குவரத்து விதிகள்

நில், கவனி, செல்

வகுப்பறைக்கும்தான்

ஆசிரியர் வந்ததும் எழுந்து நில்

நடத்தும் பாடத்தைக் கவனி

வகுப்பு முடிந்ததும் செல்

வாழ்க்கைக்கும் தான்

பிரச்சனையை எதிர்த்து துணிந்து நில்

உன்னைச் சுற்றி நாடக்கும் 

அனைத்தையும் கவனி 

அனைவரையும் கவனி

துன்பங்களைக் கண்டால் 

புன்னகையுடன் கடந்து செல்

திங்கள், செப்டம்பர் 13, 2021

வலிக்கவிதை



 

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

வெற்றிமேல் வெற்றி



உள்ளக் கழிப்பை
ஊருக்கே சொல்ல வேண்டும்
இந்நாள்
உன் எதிர்காலம் குறித்த
வறட்சி வயலில்
வாய்க்கால் நீர் பாய்ந்த நாள்
இது உனக்கு ஆரம்பம்தான் – இனிமேல்
நீ நடுகின்ற ஒவ்வொரு நாற்றும்
மரமாய் வளரட்டும்
உளைச்சல் உனக்கானதாயினும்
விளைச்சல் ஊருக்காகவும் இருக்கட்டும்
பெருமிதம் கொள்ளாதே
வெற்றி கிடைத்து விடவில்லை
வெகுமதிதான் கிடைத்துள்ளது இது
போட்டியில் கிடைத்த
முதல் பரிசல்ல
பங்களிப்பில் கிடைத்த
ஆறுதல் பரிசு
முதல் பரிசும் உனக்காகத்தான்
காத்துக் கொண்டிருக்கிறது
மறந்து விடாதே
சொணங்கி விடாதே. !

செவ்வாய், ஜனவரி 03, 2012

பதிவுகள்

அடுக்கப்பட்ட வேலைகளில்
அடங்கியவை தெரிவதில்லை
அடங்க மருப்பவையே
தெரிகின்றன.

வேண்டியதும் வேண்டாததும்

இழந்தும் பெற்றும்தான்
ஞாபகங்களை
மீட்டெடுக்கின்றோம்
எதுவும் நிகழாவிட்டால்
மறதிதான் மிச்சம்.

நட்பு என்று
நாவில் கூறுவதும்
கற்பு என்று
கலையில் கூறுவதும்
அன்றாட
வாழ்க்கையாகிவிட்டது.

அட போங்கப்பா!

அப்பனுக்கு
கழுத்துல  பாம்பு
மகனுக்கு
இடுப்புல பாம்பு
நகைன்னு
நினச்சுடானுகளா?
நாகப்பாம்ப!

பத்து தலை நாகமாம்
தண்ணீரில் மிதக்குதாம்
ஒத்த தலைக்கே
ஓராயிரம்
கதை சொல்லுவான்...........

யானைக்குட்டிக்கு
ஊஞ்சறு வாகனமாம்
தாம் பிள்ளைனா
தலை போனாலும்
கப்பாத்துவாறு
ஊராம் பிள்ளைனா
நெற்றிக்கண்ணை
திறப்பாரு.

தம்பிக்கு
ரெண்டு பொண்டாட்டி
அண்ணன் ஆசாமி
அப்பன் பிச்சைக்காரன்
இவனுகள
கும்புடுற நாம  ??????

கதை  விடுறதுக்கு
ஆளில்லையோ!
இருந்திருந்தா
சிவனும் பார்வதியும்
தாத்தா பாட்டிதானே.

பார்வதி அழுக்குதான்
பிள்ளையாரு
அப்பனுக்கே தெரியாமலே 
பிள்ளை
ஆத்தா குளிக்க
மகன் காவல்
கடவுள் குடும்பமுனா
கேள்வி கேக்காதீங்க!


குறள் - திரு

திருக்குறள் பயின்று திருந்தாதார் வாழ்க்கை
தெருக்குரலில் இடும்பை தரும்.

பார்ப்பவர் கண்ணை பார்க்க அவர்
பார்ப்பின் பார்க்காதது போல.

ஆசிரியர் அறிவுறுத்தும் அறிவு அறிவிலான்
என்றும் ஏற்ப தில்லை.

பன்னூல் பயிலும் பண்பாலனுக்கு என்றும்
நன்னூல் நன்மை தரும்.

உயர்சாதி 50 பைசா

ஐம்பது பைசாவில்
சாதி உயர்வு
பலசரக்கு கடைகளில்
விற்கிறது நூற்கண்டு.

உயர்ந்த சாதிக்காரன்

நான் பணக்காரன்
எப்படி?
என்னிடம் பலகோடி
சொத்துக்கள் உள்ளன,
நான் உயர்ந்த
சாதிக்காரன்
எப்படி?
என்னிடம்
?????..........
அட போங்கடா....

சாதிக்கொரு கணினி

சாதி இல்லை என்றவனுக்கு
நாம் கொடுத்த பட்டம்
ராமசாமி நாயக்கர்,
தப்பிவிட்டான்
சார்லஸ் பாப்பேஜ்
தமிழகத்தில் பிறந்திருந்தால்
கிடைத்திருக்கும்
சாதிக்கொரு கணினி.

சாதிகள்

எனக்கு தெரிந்த
சாதிகள் இரண்டு
சாதியத்தை
பேசும் சாதி
பேசாத சாதி.

எல்லோரும் இப்படித்தான்

தவறிய பொருளை
தலை குனிந்து
எடுப்பதற்குள்
அவளின்
ஆடை தாண்டியது
என் பார்வை.

ராசாக் கதை

நான் பெத்த ராசானு
சொல்லிப்புட்டு
கதை கூறத் தொடங்குவாள்
என் அம்மா
ஒரு ஊருல
ஒரு ராசா இருந்தாரு.

புரியாதவை


என்பது வயதில்
புரிவதில்லை
பத்து வயதுக் கவிதைகள்.

எழுத்தில்
பிழை
அதனாலோ
சொற்கள் புரியவில்லை.

புதன், டிசம்பர் 14, 2011

சாதியக் கருக் களைப்பு

கருவேல மரமாக
காலூன்றிக் கிடக்கின்றன
சாதிகள்,
கிளைகளைத்தான்
வெட்டுகிறது
உன்
போர் வாள்,
அடியோடு
தோண்டினாலும்
அழிக்க முடியாது,
கருவை
கலைத்துவிடு
விதைத்தால் தானே
முளைப்பதற்கு.

வியாழன், ஜூலை 22, 2010

muthamil

உன் சிரிப்பு விஷம் என
அறிந்தும் அதையே பருக
என் மனம் விரும்புகிறது . பா .முத்தமிழ்