இரு இந்திப் பெண்ணியச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும்
அதன் சிக்கல்களும் என்னும் ஆய்வுத் தலைப்பின் கீழ் இந்திக்கும் தமிழுக்கும் இடையேயான
மொழிபெயர்ப்புச் சிக்கல்களைக் கண்டறிவதற்காக இந்தி மொழியிலிருந்து இரண்டு சிறுகதைகள்
எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஒன்று ‘மன்னு பண்டாரி’ எழுதிய திரிசங்கு எனும்
கதை. மற்றொன்று ‘சுசீலா டாக்பௌரே’ எழுதிய
எனது சமூகம் எனும் கதை. இவற்றில் திரிசங்கு
எனும் கதையானது இந்தியில் சிறந்த இந்தி ஆசிரியர்களின் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்த
பீஷ்ம ஸஹானியின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் ‘சரஸ்வதி
ராமனாத்’ அவர்களால் இந்திச் சிறுகதைத் தொகுப்பு எனும் தலைப்பில்
1999 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் ஆந்தாலஜி ஆஃப் ஹிந்தி ஷார்ட் ஸ்டோரீஸ் (Anthology of Hindi short stories)
(2003) என்னும் தலைப்பில் ‘ஜெய்ரத்தன்’ (Jai Ratan) என்பவரால் இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
எனது சமூகம் எனும் சிறுகதைக்குத்
தமிழ் மொழிபெயர்ப்பானது இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆகவே இது ஒரு முதல் மொழிபெயர்ப்பு
முயற்சியாக இருக்கும் எனக்கொள்ளலாம். இவ்வாறு மொழியாக்கம் பெற்ற சிறுகதைகள் இரண்டும்
பெண்ணியத் தளத்தினை மையமிட்டுள்ள சிறுகதைகளாகும். இவ்விரு சிறுகதைகளையும் மொழிபெயர்ப்பதன்
மூலமாக ஒலியன், உருபன் மற்றும் தொடரன் எனும் அடிப்படையில் இந்திக்கும் தமிழுக்கும்
இடையே ஏற்படுகின்ற மொழிபெயர்ப்புச் சிக்கல்களை வகைப்படுத்துவதாக இவ்வாய்வு அமைகின்றது.
மொழி
மொழி என்பது
மனிதனின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கருவி. அது மனித சமுதாயத்தின் பண்பாட்டைத் தலைமுறை
தலைமுறையாக ஒரு தலமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்கு எடுத்து வருகின்றது.
மொழி மனிதனின் வாழ்க்கைச் சூழல் காரணமாக பல இனக்குழுக்களாக வாழ வேண்டிய நிலையில் ஒவ்வொரு
மொழிக்கும் தனித்தனியான பண்பாடு, பழக்க வழக்கம் உருவாகிறது. ஒரு மொழியினர் இன்னொரு
மொழியினரின் பண்பாட்டுக்கூறுகளைப் பற்றியும் அம்மக்களின் வாழ்வியல் சூழ்நிலை குறித்தும்
அறிந்து கொள்வதற்கு மூலமொழியை மொழிபெயர்ப்பது அவசியமாகின்றது. இதனை மையமிட்டு இன்றைய
உலகத்தையே இணைக்கும் உறவுப்பாலமாக மொழிபெயர்ப்பு விளங்குகிறது. இத்தகைய மொழிபெயர்ப்பினைக்
குறித்த கோட்பாடுகள், வரலாறுகள், வகைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதாக இப்பகுதி அமைகின்றது.
4.1 மொழிபெயர்ப்பு
- ஓர் அறிமுகம்
மொழிபெயர்ப்பானது மொழி மற்றும் பெயர்ப்பு எனும்
இரண்டு சொற்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மொழி என்பது மனிதனின் சிந்தனைகளை வாழ்வியல்
கூறுகளுடன் இணைத்து வெளிப்படுத்தும் கருவி ஆகும். பெயர்ப்பு என்பது மூல மொழியில் (Source
language) உள்ள கருத்துக்களைப் பொருள்
மாறாமல் மூல மொழி வாசகர்கள் பெறுகின்ற உணர்வினைப் பெறுமொழி வாசகர்களும் பெறும் அளவிற்குப்
பெறுமொழிக்கு (Target language) மாற்றித் தருவதாகும். மொழிபெயர்ப்பு குறித்து ஜே.சி.காட்ஃபோர்டு (J.C.Cat
ford) “மூலமொழியில் உள்ள செய்திகளை அதற்கு
இணையாக வேறுமொழிச் சொற்களில் மாற்றுவதே மொழிபெயர்ப்பு.”[1] என்கிறார். இதனையே மு.கோவிந்தராசன் கூறுகின்ற பொழுது
“ஒரு மொழியிலுள்ள செய்தியை வேறொரு மொழியில் பொருள் வேறுபாடின்றி
சுவையும் தன்மையும் குன்றாமல் அப்படியே மாற்றுவது மொழிபெயர்ப்பு எனப்படும்”[2]
என்கிறார். மேலும் அறிஞர்கள் பலர் மொழிபெயர்ப்புக் குறித்து விளக்கம் தெரிவித்திருப்பினும்
பொதுவாக மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ள கருத்துக்களில் எவ்வித மாற்றமுமின்றி
அக்கருத்துக்களைப் பெறுமொழிக்குப் பெயர்த்துத் தரும் செயல் எனப் புரிந்துகொள்ளலாம்.
மொழிபெயர்ப்புக்
கோட்பாடுகள்
ஐரோப்பிய
மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளை தொடக்க காலம், இடைக்காலம், தற்காலம் என மூன்று வகைகளாகப்
பிரிக்கலாம். அவை பின்வருமாறு.[3]
தொடக்க காலம் (16 ம் நூற்றாண்டு)
- பிரெஞ்சு மொழியில் ‘டோலெட்’ (கி.பி 1540) என்ற அறிஞர் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளை இவ்வாறு வகைப்படுத்துகின்றார்.
- மொழிபெயர்ப்பாளர் மூல மொழியின் உணர்வுக் கூறுகளையும் பொருளையும்
உணர்ந்து கொண்டு சுதந்திரத் தன்மையுடன் தெளிவுபடுத்த வேண்டும்.
- மொழிபெயர்ப்பாளர் மூல மொழி மற்றும் பெறும் மொழி இரண்டிலும்
புலமை பெற்றவராக இருக்க வேண்டும்.
- சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தலைத் தவிர்க்க வேண்டும்.
- பொதுவான மொழி வடிவத்தை மொழிபெயர்ப்பில் கடைபிடிக்க வேண்டும்.
- மூல நூலின் சொல் வரிசையில் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு
பொருத்தமான முறையில் மொழிபெயர்க்க வேண்டும்.
- சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தலைத் தவிர்க்க வேண்டும்.
- மொழிபெயர்ப்பைப் படிக்கும் பொழுது மூலநூலின் உணர்ச்சியைப்
பெறுதல் வேண்டும்.
- மூலமொழிக் கருத்துக்களைப் பெறுமொழியில் முழுமையாகக் கொண்டு
வரவேண்டும். எந்தக் கருத்துக்களையும் விட்டு விடக் கூடாது.
இடைக் காலம் (கி.பி
17 - 18 ம் நூற்றாண்டு)
டைட்லர் (Alexander Fraser Titler) (கி.பி
1791) வெளியிட்ட மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்.
- மொழிபெயர்ப்பு, மூலநூலின் கருத்துக்களை முழுமையாக நகலெடுத்துத்
தரவேண்டும்.
- மொழிநடை, எழுதிச் சென்றுள்ள ஒழுங்கு முறை ஆகியவை மூல மொழியில்
உள்ளதைப் போன்றே பெறும் மொழியிலும் அமைய வேண்டும்.
- மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் அமைந்துள்ள அனைத்து எளிமைத்
தன்மைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்க வேண்டும்.
தற்காலக் கோட்பாடுகள் (கி.பி 19 முதல் 20 ம் நூற்றாண்டு வரை)
ஜே.சி.காட்போர்டு (1965) என்பவர் மொழிபெயர்ப்பு
பற்றிய மொழியியல் கோட்பாடுகள் (Linguistic Theory of Translation) எனும் நூலில் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் பற்றி விளக்கியுள்ளார்.
இவற்றினை எல்லை (Extent), தளம் (Levels), தரம் (Rank) ஆகியவற்றின் அடிப்படையில் வகைப் படுத்துகின்றார்.
எல்லை: மொழிபெயர்ப்பானது மூல மொழியிலிருந்து இலக்கு மொழிக்கு மொழிபெயர்க்கும் பொழுது
முழுப் பகுதியும் மொழிபெயர்ப்பு செய்யலாம் அல்லது குறிப்பிட்ட பகுதியினை மட்டும் மொழிபெயர்ப்பு
செய்யலாம். இவ்வாறு மொழிபெயர்ப்பதன் வழி அதன் எல்லை தீர்மானிக்கப்படுகின்றது.
தளம்: மொழிபெயர்ப்பு தளத்தின் அடிப்படையில் முழுமொழிபெயர்ப்பு, கட்டுப்பட்ட மொழிபெயர்ப்பு
என இருவகைப்படும். முழுமொழிபெயர்ப்பு என்பது மூலமொழியின் இலக்கணத்தையும் எழுத்துக்களின்
ஒலி வடிவத்தினையும் இலக்கு மொழியின் இலக்கண அமைப்பிற்கு ஏற்ப மொழிபெயர்த்துத் தருவதாகும்.
கட்டுப்பட்ட மொழிபெயர்ப்பு என்பது மொழி மற்றும் வரிவடிவத் தளத்தினை மட்டும் மொழிபெயர்ப்பதாகின்றது.
தரம்: மொழிபெயர்ப்பானது தரத்தின் அடிப்படையில் கட்டுப்பட்ட, கட்டுப்படாத மொழிபெயர்ப்பு
என இருவகைப்படும். கட்டுப்பட்ட மொழிபெயர்ப்பில் மூல மொழியானது பெறுமொழிக்கு வார்த்தை
நிலையில் மொழிபெயர்க்கப்படுகின்றது. கட்டுப்படாத மொழிபெயர்ப்பில் மூலமொழி பெறுமொழியில்
வாக்கிய நிலையில் மொழிபெயர்க்கப் படுகின்றது.[4]
மொழிபெயர்ப்பு வகைகள்
ஜாண்டிரைடன் (John
Dryden)
சொல்லுக்குச்
சொல் மொழிபெயர்ப்பு (Metaphrase)
மூலமொழியில்
உள்ள பிரதியானது பெறுமொழிக்கு மொழி பெயர்க்கின்ற பொழுது மூல மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும்
பெறுமொழியில் அதற்கு இணையான பொருள் குறிக்கபட்டு மொழிபெயர்ப்புச் செய்யப்படுவதாகும்.
சுருக்க மொழிபெயர்ப்பு (Abridged)
மூலமொழியிலிருந்து
பெறுமொழிக்கு மொழிபெயர்ப்பு செய்கின்ற பிரதியின் கருத்தினை முழுவதுமாக உள்வாங்கிக்
கொண்டு அதனைப் பெறுமொழியில் மொழிபெயர்த்துத் தருவது சுருக்க மொழிபெயர்ப்பு எனப்படும்.
சாயல் மொழிபெயர்ப்பு (Imitation)
மூலமொழியிலுள்ள
கருத்துக்கள் பெறும் மொழியின் இயல்புக்கு ஏற்ப ஒத்தத் தன்மையுடன் மொழி பெயர்க்கப்படுவது
சாயல் மொழி பெயர்ப்பாகும்.
தியோடர் சவேரியன் மொழிபெயர்ப்பு வகைகள் (1959)
துல்லியமான மொழிபெயர்ப்பு (Perfect Translation)
மூலமொழியில் உள்ள பிரதியின் சொல் மற்றும் வாக்கியம் போன்றவற்றின் இலக்கண அமைப்பு மாறாமல் பெறுமொழிக்கு மொழிபெயர்ப்பு
செய்வது துல்லியமான மொழிபெயர்ப்பு எனப்படும்.
தேவைக்குத் தகுந்த மொழிபெயர்ப்பு (Adequate Translation)
மூலமொழியிலிருந்து
பெறுமொழிக்கு பிரதியினை மொழிபெயர்க்கின்ற பொழுது மூல மொழியில் உள்ள செய்திகளைப் புரிந்து
கொண்டு சொற்கள் மற்றும் தொடர்களைச் சரியாக மொழிபெயர்ப்புச் செய்வதாகும். இதில் மூல
மொழியின் இலக்கண அமைப்பினை விட அதிலுள்ளக் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து
மொழிபெயர்ப்புச் செய்யப்படுகின்றது.
ஆங்கிலேயர் கால இந்தியாவில் மொழிபெயர்ப்புத் தோற்றம்
பிற நாடுகளிலிருந்து
இந்தியா வந்த பாதிரிமார்கள் தமிழின் மீது ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கியத்தினைக் கற்றனர்.
அதன் விளைவாகத் தமிழ் இலக்கியங்களை மேலைநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மேலைநாட்டு இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும் ஆங்கில மொழியின் மீதான தமிழர்களின் மோகம் மேலைநாட்டு மொழிகளைத் தமிழ்நாட்டிற்கு
அறிமுகப்படுத்தியது. ஆங்கில ஆட்சியில் கல்வி பொதுமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அனைவரும்
கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றனர். இதன் வழி மேலை நாட்டு இலக்கியங்களின் தாக்கம்
தமிழ் மொழியில் உருவானது எனலாம்.
இதனை அடுத்து
இருமொழிப் புலமை உடையவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் இந்தியாவில் மொழிபெயர்ப்புத்துறை
முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. புதிய இலக்கிய வடிவங்களும் தமிழ் இலக்கியத்தில் தோற்றம்
பெற்றன. மேலைநாட்டு இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவற்றினை மொழிபெயர்க்கவும்
தூண்டுகோலாக இருந்தது. இத்தகைய காலக் கட்டத்தில் தோன்றிய இருமொழிப் புலமை உடையவர்களை
‘துபாஷி’ என்றழைப்பர். மேலும் பத்திரிக்கைகளும்
அச்சுக்கூடங்களும் மொழிபெயர்ப்பின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றின.[5]
இந்தி - தமிழ் மொழிபெயர்ப்பு
ஓர் அறிமுகம்
தமிழுக்கும்
ஹிந்திக்குமான மொழிபெயர்ப்பு வரலாற்றினை ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட
வரலாறு தமிழிலிருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட வரலாறு என இருவகைப்படுத்தலாம்.
பல்வேறு மொழிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
இதனை ச.சிவகாமி மொழிபெயர்ப்பு நூலடைவு என்னும் நூலில் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட
பட்டியலின் வரிசையில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் மொழிபெயர்ப்பு நூல்கள் செய்யுள்
இலக்கியம், புதினம், சிறுகதை, நாடகம், பொது இலக்கியம், வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம்,
கடிதம், சொற்பொழிவு, கட்டுரை, தொகுப்பு, இலக்கணம், சமயம், தத்துவம், அறிவியல், மருத்துவம்,
உளவியல், தர்க்கம், வரலாறு, அரசியல், சட்டம், பொருளியல், தொழில், விவசாயம், புவியியல்,
சமூகவியல், கல்வி, கூட்டுறவு, கலைகள், சோதிடம், யோகம், விளையாட்டு எஞ்சியன என முப்பத்திமூன்று
பகுதிகளாக வகை பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிட்ட பிரிவுகளில் இந்தியிலிருந்து
தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்
இவ்விரு மொழிகளுக்கிடையே 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழிபெயர்ப்பு வரலாறு தோற்றம்
பெற்றுள்ளது என்பதினை உணரமுடிகின்றது. இதனைத் தொடர்ந்து இந்தியிலிருந்து தமிழுக்கு
மொழிபெயர்க்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை மொழிபெயர்ப்பாளர்களால் அதிகரித்துக்கொண்டு
வருகின்றன.
முதன்
முதலாகத் திருக்குறளை ‘கேமானந் ராகத்’ (Khemanand
Rakat) (1924) ஹிந்தியில் தமிழ்
வேதா எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்நூலை சாகித்திய அகாடெமி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பதிப்பும்
(1959) வெளியானது. மேலும் பலர் திருக்குறளை தமிழிலிருந்து இந்தி மொழிக்கு மொழியாக்கம்
செய்துள்ளனர். சிலப்பதிகாரத்தை இந்தி மொழியில் நூபுர் கதா (Nupur Gatha) எனும் பெயரில் ‘எம்.ஜி.வெங்கடேசன்’ (1965) மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இந்நூல் கல்கத்தாவில் உள்ள
பாரதி தமிழ்ச்சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. அதேபோல கம்பராமாயணம், திருப்பாவை, திவ்விய
பிரபந்தம் போன்ற நூல்கள் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
பாரதியின்
படைப்புகள், பாரதிதாசனின் பாடல்கள், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடல்களும்
தமிழிலிருந்து ஹிந்தி மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. நாவல்கள் வரிசையில்
தமிழில் முதல் நாவலான கமலாம்பாள் சரித்திரம்
‘கே.எம்.சிவராம சர்மா’ என்பவரால்
கமலாம்பா கீ கதா (1971) என்னும் பெயரில்
மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்கி எழுதிய அலையோசை, உமாசந்திரனின் முள்ளும் மலரும், அகிலனின் சித்திரப்பாவை மற்றும் ராஜம் கிருஷ்ணன் எழுதிய
குறிஞ்சித் தேன் என பல்வேறு நாவல்கள் மொழியாக்கம்
பெற்றுள்ளன.
சரஸ்வதி
ராம்நாத்தின் மொழிபெயர்ப்பு நூல்களை மு.வளர்மதி மொழிபெயர்ப்பு முன்னோடிகள் எனும் தனது
நூலில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகின்றார். அகிலனின் சிறுகதைகளைக் கோபுர் கா தீப் என்னும் பெயரிலும் அவரின் பெண் என்னும் சிறுகதையை நாரி என்ற தலைப்பிலும் சரஸ்வதி ராமநாத் மொழிபெயர்ப்புச்
செய்துள்ளார். பாரதி நூல்களை பாரதி லலித் நிபந்த்
என்னும் பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார். ரா.சு.நல்லபெருமாளின் படைப்பான போராட்டங்கள் என்ற நூலையும் மொழிபெயர்த்துள்ளார்.
சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பவபதகி
எனும் பெயரிலும் தமிழிலிருந்து இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். புகழ்பெற்ற கதாசிரியர்
பிரேம்சந்தின் மகன் அமிர்தராய் நடத்திய கஹானி மாத்ரூபூமி பிரசுரித்த யுகபிரபாத், தர்மயுக், சாரிகர மற்றும் ஆஜ்கல் முதலிய பத்திரிகைகளுக்குத் தமிழின்
தலைசிறந்த படைப்புகளை இந்தியில் மொழியாக்கம் செய்துள்ளார். குறிப்பாக தி.ஜானகிராமன்,
தொ.மு.சி.ரகுநாதன், அகிலன், ஆதவன், ஜெயகாந்தன் போன்றோரது எழுத்துக்களை இந்தியில் மொழிபெயர்த்ததோடு
தமிழில் முன்னணியில் உள்ள எழுத்தாளர் பலரையும் பலருக்கும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராக
விளங்குகின்றார்.[6]
மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்
பொதுவாக
ஒரு மொழிக்குள்ளாகவே பல்வேறு கிளைமொழிகள் வழக்கில் உள்ளன. வெவ்வேறு வட்டார மொழிகளை உடைய ஒரு மொழி பேசும் மக்களுக்கே
சில நேரங்களில் சொல் வழக்குகளில் தடுமாற்றம் ஏற்படுகின்றது. அப்படியிருக்க வெவ்வேறு
மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இரு மொழிகளை ஒப்பிடுகையில் சிக்கல்கள் ஏற்படுவது
இயல்பு. இதனடிப்படையில் இங்கு எடுத்துக்கொண்ட தமிழ் – இந்தி
ஆகிய இரு மொழிகளும் ஒரே நாட்டில் வழங்கும் மொழிகள் என்றாலும் மொழிக்குடும்பம், எழுத்து
முறை, மொழிகளின் இலக்கண அமைப்பு, பண்பாடு, உணவுப் பழக்க வழக்கங்கள் எனப் பல்வேறு நிலைகளில்
வேற்றுமை உடையவைகளாக விளங்குகின்றன. இத்தகைய வெவ்வேறு மொழிச் சூழலில் உருவான இரண்டு
கதைகளைத் தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்கின்ற பொழுது எழுகின்ற சிக்கல்களை ஒலியனியல்
சிக்கல்கள், உருபு மற்றும் தொடரனியியல் சிக்கல்கள் என வகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
மொழிபெயர்ப்பு
முறைமை
தேர்ந்தெடுக்கப்பட்ட இரு சிறுகதைகளையும் இந்தியில் தேர்ச்சி
இல்லாதவர்களும் இந்தி மொழியின் உச்சரிப்பு மாறாமல் எளிமையாக வாசிக்க வேண்டும் என்பதற்காக
ஒலிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. அதனை அடுத்து மூலத்தில் உள்ள சொற்களுக்குப் பொருத்தமான
தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தமிழ்ச் சூழலுக்கு
ஏற்ப மொழிபெயர்த்தும் பிற மொழிச்சொற்களை இன்றியமையாத இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்கள்
அனைத்திலும் சரியான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியும்
மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கதைகளில் உள்ள சொற்களைச் சரியான விளக்கத்துடனும்
இலக்கணக் குறிப்புகளுடனும் வரிசைப்படுத்தப்பட்ட சொல்லடைவு அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.
சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்புச் செய்த அகரவரிசைப்படுத்தப்பட்ட அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒலிபெயர்ப்பின் வகைகள்
மூலமொழியில்
உள்ள எழுத்துக்கள் பெறுமொழிக்கு ஒலிபெயர்ப்பு செய்யப்படுவதினை மொழியியலார் 1) தன் ஒலி
ஆக்கம் 2) ஒப்பொலியாக்கம் என்று இருவகைப்படுத்துவர். மூலமொழியின் எழுத்துக்களைப் பெறுமொழிக்கு மாற்றுகின்ற பொழுது உச்சரிப்பு
மாறாமல் எழுதுவதற்குக் குறியீடுகளையோ அல்லது பொதுவான எழுத்துக்களையோ பயன்படுத்துவது
தன் ஒலியாக்கம் எனப்படும்.
உதாரணமாக
सुरक्षा ஸுரக்ஷா பாதுகாப்பு
किताबें கிதாபே³~ புத்தகங்கள்
மூல மொழியின் எழுத்துக்களைத் தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் உச்சரிப்பிற்கு
ஏற்ப மாற்றி எழுதும் முறை ஒப்பொலியாக்கம் எனப்படும்.
உதாரணமாக
सुरक्षा சுரக்சா பாதுகாப்பு
किताबें கிதாபே புத்தகங்கள்
இந்த இருவகை ஒலிபெயர்ப்பு வகைகளில்
எடுத்துக்கொண்டுள்ள இரண்டு சிறுகதைகளை ஒலிபெயர்ப்பதற்காக ‘தன்
ஒலியாக்கம்’ எனும் ஒலிபெயர்ப்பு வகை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தி மொழிக்குரிய உச்சரிப்பு முறையிலேயே கதையினை
வாசிக்க வசிதியான கிரந்த எழுத்துக்களையும் பயன்படுத்தியதுடன் குறியீடுகள் மற்றும் வர்க்க
எழுத்துக்களை வரிசைப்படுத்துவதற்கு எண்கள் இட்டும் ஒலிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.
4.2 ஒலியனியல் சிக்கல்கள்
ஒரு
மொழியின் அடிப்படைக் கூறு ஒலியன் ஆகும். ஒலியங்களின் சேர்க்கையால்தான் ஒரு மொழியின்
செயல்பாடு அமைகின்றது. எல்லா மொழிகளுக்கும் ஒரே எண்ணிக்கையிலும் ஒரே உச்சரிப்பிலும்
எழுத்துக்கள் இருப்பதில்லை. அப்படியிருக்கும் சூழலில் மூலமொழியில் உள்ள எழுத்துக்களைப்
பெறுமொழிக்கு ஒலிபெயர்ப்புச் செய்கையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மூலமொழியில் உள்ள
எழுத்துக்களின் உச்சரிப்புமுறை பெறுமொழியின் பயன்பாட்டில் இல்லாத நிலையிலும் சிக்கல்கள்
உருவாகின்றன. எனவே இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் சில உத்திகளை உருவாக்கி
சரியான ஒலிபெயர்ப்புகள் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இவ்வாய்வின்படி இக்கதைகளை ஒலிபெயர்க்கையில்
ஏற்பட்ட சிக்கல்களும் ஒலிபெயர்ப்பு செய்யப்பட்ட முறைகளுமே இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.
உயிர் எழுத்துக்களை எழுதும் முறை
இந்தி
மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள் பதினொன்று ஆகும். தமிழில் உயிரெழுத்து வரிசையில் உள்ள எ, ஒ எனும்
இரு குறில் எழுத்துக்கள் இந்தி உயிர் எழுத்து வரிசையில் இல்லை. ஆனால் இவ்வெழுத்துக்களை உச்சரிக்கின்ற பண்பு இந்தி மொழியில் உள்ளது.
உதாரணமாக
मेहमान - மெஹமான் - விருந்தினர்
कोहरा - கொஹரா - மூடுபனி
வரிசை
எண்
|
ஹிந்தி
|
தமிழ்
|
ஆங்கிலம்
|
1
|
अ
|
அ
|
A
|
2
|
आ
|
ஆ
|
Ā
|
3
|
इ
|
இ
|
I
|
4
|
ई
|
ஈ
|
Ī
|
5
|
उ
|
உ
|
U
|
6
|
ऊ
|
ஊ
|
Ū
|
7
|
ऋ
|
ர்ரி
|
Rri
|
8
|
ए
|
ஏ
|
Ē
|
9
|
ऐ
|
ஐ
|
Ai
|
10
|
ओ
|
ஓ
|
Ō
|
11
|
औ
|
ஔ
|
Au
|
இவற்றில்
உள்ள மெஹமான் என்னும் சொல்லில் ‘மெ’ என்னும் எகர ஒலி உச்சரிப்பும் கொஹரா என்னும் சொல்லில் ‘கொ’ என்னும் ஒகர ஒலி உச்சரிப்பும் பயன்படுத்தப்படுகின்றன.
ஐ (ऐ), ஔ (औ) உச்சரிப்பு முறை
தமிழ் மொழியில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துக்களும் கூட்டொலிகள்
(அ+இ = ஐ, அ+உ = ஔ) ஆகும். இந்தியில்
இவை சற்றே மாறுபட்டு உச்சரிக்கப்படுகின்றன. ‘ஐ’ என்பது எ (ய்) போலவும் ‘ஔ’ என்பது ஒ (வ்) போலவும் உச்சரிக்கப்படுகின்றன.
உதாரணமாக
ऐ எ
(ய்) ऐसा ஐஸா இவ்வாறு
औ ஒ
(வ்) और ஔர் மற்றும்
வர்க்க எழுத்துக்களை எழுதும் முறை
இந்தி வர்க்க எழுத்துக்கள்
|
தமிழ் ஒலிபெயர்ப்பு
|
இந்திச் சொல்
|
தமிழ் ஒலிபெயர்ப்பு
|
பொருள்
|
क
|
க
|
काम
|
காம்
|
வேலை
|
ख
|
க2
|
अखाड़ा
|
அகா²டா³
|
அரங்கம்
|
ग
|
க3
|
गलत
|
க³லத்
|
தவறான
|
घ
|
க4
|
घर
|
க4ர்
|
வீடு
|
च
|
ச
|
चार
|
சார்
|
நான்கு
|
छ
|
ச2
|
छुरी
|
சூ²ரீ
|
சுத்தி
|
ज
|
ஜ
|
जन्म
|
ஜன்ம
|
பிறப்பு
|
झ
|
ஜ2
|
झंडा
|
ஜ2ண்டா3
|
கொடி
|
ट
|
ட
|
टमाटर
|
டமாடர்
|
தக்காளி
|
ठ
|
ட2
|
पाठशाला
|
பாடசாலா
|
பள்ளிக்கூடம்
|
ड
|
ட3
|
डर
|
ட3ர்
|
அச்சம்
|
ढ
|
ட4
|
पदाई
|
படா4ஈ
|
படிப்பு
|
त
|
த
|
तैयार
|
தையார்
|
தயார்
|
थ
|
த2
|
थोड़ा
|
தோ²டா³
|
கொஞ்சம்
|
द
|
த3
|
दया
|
த3யா
|
கருவரை
|
ध
|
த4
|
धन
|
த4ன்
|
செல்வம்
|
प
|
ப
|
पर
|
பர்
|
மேல்
|
फ
|
ப2
|
फिर
|
பி²ர்
|
மறுபடியும்
|
ब
|
ப3
|
बात
|
பா3த்
|
விஷயம்
|
भ
|
ப4
|
भीतर
|
பீ4தர்
|
உள்ளே
|
மேற்கண்ட
க(क), ச(च), ட(ट), த(त), ப(प) போன்ற வல்லின
ஒலிகளுக்கு மட்டுமே தமிழ் மொழியில் எழுத்துக்கள் உள்ளன. இவைகளைத் தொடர்ந்து வரும் வர்க்க
ஒலிகளுக்கு நிகரான எழுத்துக்கள் தமிழ் மொழியில் இல்லை. இவற்றினைத் தமிழ் மொழியில் குறிப்பதற்கு
இரண்டாவது ‘க’ (க2), மூன்றாவது
‘க’ (க3), நான்காவது ‘க’ (க4) என எண்கள் இட்டுப்
பயன்படுத்தப்படுகின்றன. இதுபோல தமிழ் மொழியிலும்
பிறமொழிகளில் இல்லாத சிறப்பெழுத்துக்கள் உள்ளன. ஆனால் இங்கு இந்தி மொழியிலிருந்து தமிழ்
மொழிக்கு மொழிபெயர்ப்பதனால் ஏற்படுகின்ற சிக்கல்களைப் பற்றி மட்டும் குறிப்பிடுவதால்
இந்தி மொழியின் படைப்புகளைத் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கின்ற பொழுது ஏற்படும் மொழிபெயர்ப்புச்
சிக்கல்கள் குறித்து மட்டும் விவாதிக்கப்படுகின்றது.
கிரந்த எழுத்துக்களின் ஒலிபெயர்ப்பு முறை
இந்தியில்
பயன்படுத்தப்படுகின்ற வடமொழி எழுத்துக்களுக்கு நிகரான எழுத்துக்கள் தமிழ் மொழியில்
இல்லாமையால் சில நேரங்களில் கிரந்த எழுத்துக்களை ஒலிபெயர்த்து அவற்றுடன் வர்க்க எண்கள்
இட்டும் எழுதப்பட்டுள்ளன.
இந்தி
கிரந்தம்
|
தமிழ்
|
இந்தி வார்த்தை
|
தமிழ் ஒலிபெயர்ப்பு
|
பொருள்
|
ज
|
ஜ
|
समाज
|
ஸமாஜ்
|
சமூகம்
|
झ
|
ஜ2
|
झगडा
|
ஜ2க3டா3
|
சண்டை
|
स
|
ஸ
|
समाज
|
ஸமாஜ்
|
சமூகம்
|
श
|
ஸ2
|
शरीर
|
ஸரீர்
|
உடல்
|
ष
|
ஷ
|
पुरुष
|
புருஷ்
|
ஆண்
|
ह
|
ஹ
|
बहस
|
ப³ஹஸ்
|
விவாதம்
|
क्ष
|
க்ஷ
|
शिक्षकों
|
ஷிக்ஸகோ~
|
ஆசிரியர்கள்
|
கூட்டெழுத்துக்கள்
தமிழ்
மொழியில் கூட்டெழுத்து அமைப்புமுறை கிடையாது. மாறாக இரண்டு மெய்கள் கூடும் போது முதலில்
வருகின்ற மெய்யெழுத்தின் மீது மெய்க்குறி (புள்ளி) இடப்படுகின்றது. இந்தியில் பெரும்பாலும்
முதல் மெய்யின் நேர்கோடு நீக்கப்பட்டும் வேறு சில உத்திகளுடனும் கூட்டெழுத்துக்கள்
அமைகின்றன.
உதாரணமாக
क्या -
க்யா - என்ன - क வின் (வளைவு நீக்கப்பட்டுள்ளது)
पुस्तक - புஸ்தக் - புத்தகம் - स
வின் (நேர்கோடு நீக்கப்பட்டுள்ளது)
மூக்கொலி (அனுஸ்வரம்)
தேவநாகரி எழுத்துக்களின் உச்சரிப்பிற்கு ஏற்ற ஒலிவடிவங்கள்
முழுமையானதாக தமிழ் மொழியில் காணப்படாததால் இந்தி மொழியினை உச்சரிப்பு மாறாமல் தமிழில்
எழுதுவதற்குச் சில குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தி மொழியில் உள்ள எழுத்துக்களின்
மேல் இடப்படுகின்ற மூக்கொலி உச்சரிப்பினைத் தருகின்ற இத்தகையக் குறியீட்டிற்கு அனுஸ்வரம்
என்று பெயர். இது சொற்களுக்கு இடையே மெல்லின ஒலிகளின் பயன்பாட்டிற்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக
शंकर - ஸ2ங்கர் - சங்கர்
अंदर - அந்த3ர் - உள்ளே
அனுநாஸிகம்
இந்தி
எழுத்தின் மேல் பிறையுடன் கூடிய புள்ளி இட்டு எழுதப்படும் குறியீட்டிற்கு (ँ) அனுநாஸிகம்
என்று பெயர். சொல் மற்றும் வாக்கியத்தின் இறுதியில் மூக்கொலி உச்சரிப்பினை வெளிப்படுத்துவதாக
அமைந்துள்ளது.
உதாரணமாக
मैं - மை~ - நான்
नहीं
- நஹீ~ - இல்லை
वहीं - வஹீ~ - அங்கே
यहाँ - யஹா~ - இங்கு
हूँ - ஹூ~ - இருக்கிறேன்
மேற்கண்ட முதல் மூன்று சொல்
வரிசையில் பயின்று வரும் ‘அனுநாஸிகம்’ இடத்தின்
அளவு கருதி பிறை வடிவம் நீக்கப்பட்டு புள்ளி மட்டும் இட்டு எழுதப்பட்டுள்ளது. அதனை
அடுத்து வருகின்ற சொற்களில் பிறையின் நடுவில் புள்ளி இட்டு முழுமையாக எழுதப்பட்டுள்ளது.
இந்தி எழுத்துக்களின் மேற்புறத்தில் புள்ளியிட்டு எழுதப்படும் எழுத்துக்கள் அல்லது
குறியீடுகள் பயின்று வரும் இடத்திற்கேற்ப ஒலிப்பும் மாற்றி ஒலிக்கப்படுகின்றது.
இதனைத் தமிழில் குறிப்பிடுவதற்காக எழுத்தின் வலது மேற்புறத்தில் (~) என்னும் குறியீடு பயன்பத்தப்பட்டுள்ளது.
4.3 உருபன் மற்றும்
தொடரன் சிக்கல்கள்
ஓர் எழுத்து
தனித்தோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தருமாயின் சொல் எனப்படும். அவ்வாறு
பொருள் தருகின்ற சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படுத்துவர். இரு மொழிகளிலும் தொடர்களில் பயின்று
வருகின்ற வினைவடிவங்கள் மாற்றம் பெறுகின்ற விதம் வேறுபட்டு அமைந்துள்ளன. இந்நிலையில் காலம், வினா, பால், திணை முதலானவற்றைக்
குறித்து வருகின்ற தொடரமைப்பினை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இந்தியிலிருந்து
தமிழுக்கு வாக்கிய அமைப்பினை மொழிபெயர்ப்பு செய்கின்ற பொழுது ஏற்படுகின்ற சிக்கல்கள்
குறித்து விளக்கும் விதமாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
பிரதிப்பெயர்கள்
பெயர்ச் சொற்களுக்குப்
பதிலிகளாக பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் பிரதிப் பெயர்கள் எனப்படும். இது இந்தி மொழியில்
‘சர்வநாம்’ (सर्वनाम) என்று அழைக்கப்படுகின்றது.
பிரதிப் பெயர்ச்சொல்
|
||
இந்தி
|
தமிழ்
|
வாக்கியம்
|
मैं
|
நான்
|
मैं
पद रहा हूँ |
நான்
படித்துக் கொண்டிருக்கின்றேன்
|
तुम
|
நீ
|
तुम
इन्हें चाय पर बुलाओगे ?
நீ இவர்களை தேநீர் விருந்திற்கு அழைக்கப் போகிறாயா?
|
हम
|
நாங்கள்
|
हम फ़िल्म देखने जायेंगे ।
நாங்கள் படம் பார்க்கப் போவோம்.
|
आप
|
நீங்கள்
|
आप
कहाँ जा रही हो ?
நீங்கள் எங்கே போகிறீர்கள்
|
यह
|
இவன் இவள் இது
இந்த
|
यह मेरा मित्र है । இவன் என்னுடைய நண்பன்.
यह काम मत करो । இந்த வேலையைச் செய்யாதே.
|
वह
|
அவன் அவள் அது அந்த
|
वह
बहुत मन लगाकर पढ़ाता हैं ।
அவன் மிகுந்த அக்கறையுடன் கற்பிக்கிறான்.
|
ये
|
இவர்கள்
|
ये
लोग हमारे घर आएँगे |
இவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
|
वे
|
அவர்கள்
|
वे
ऐसे लगते तो नहीं हैं |
அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை.
|
அட்டவணையில்
குறிப்பிட்டுள்ளதுபடி அவன், அவள், அது, நான் என பிரதிப் பெயர்ச்சொற்கள் குறிக்கின்ற
பொருளின் அமைப்பினை அறிந்து மொழிபெயர்க்க வேண்டும். உயர்திணை, அஃறிணை என்னும் வேறுபாடுகள்
தமிழ் மொழியில் இருப்பது போன்று இந்தி மொழியில் காணப்படுவதில்லை. எனவே வஹ (वह), யஹ (यह), போன்ற சொற்கள் தமிழ் மொழியில்
இது, இவன், இவள், அது, அவன், அவள், என்ற பொருளை உணர்த்துகின்றன. இதனை வினைச்சொல் வேறுபாட்டின்
அடிப்படையில் புரிந்து கொள்ளலாம்.
பால் வேறுபாடு
தமிழ்
மொழியின் இலக்கண அடிப்படையில் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை என இரு வகைப்படுத்தலாம்.
உயர்திணைப்பெயர் ஆண்பால் மற்றும் பெண்பால் என இருவகைப்படும். அஃறிணைக்கு ஆண், பெண்
என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் இந்தி மொழியின் இலக்கண அமைப்பில் ஆண்பால் மற்றும் பெண்பால்
ஆகிய இரண்டு பிரிவுகள் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகின்றன. உயர்திணை, அஃறிணை இரண்டிலும்
ஆண்பால் உயர்திணையாகவும் பெண்பால் அஃறிணையாகவும் விளங்குகின்றன. எனவே இவற்றினை மொழிபெயர்க்கையில்
தமிழ் இலக்கண முறைக்கு ஏற்ப மொழிபெயர்ப்பது அவசியமாகின்றது.
உதாரணமாக
ஆண்பால் பெண்பால்
वह जाता हौ । (जा
+ ता) वह जाती है । (जा + ती)
அவன் செல்கிறான் அவள்
செல்கிறாள்
இந்தி மொழியில் உள்ள சொற்களில்
ஆண்பால், பெண்பால் வேறுபாட்டினை அறிந்து கொள்ள முழுமையான வரையறை எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை. இருப்பினும் அவற்றினைப் புரிந்து கொள்ளும் விதமாக சில விதிமுறைகளைக் கூறலாம்.
இந்தி மொழியில் உள்ள ஆண்பால், பெண்பால் வேறுபாட்டிற்கு அச்சொற்களின் தன்மை மற்றும்
பயன்பாடு போன்றவை காரணமாகின்றன. இந்தி மொழியில் பெரியதான தோற்றம், வலிமை, கடுமை என்ற
பொருள் தரும் சொற்கள் ஆண்பாலாகவும் மென்மை, குறுமை, நளினம் போன்ற பொருள் தரும் சொற்கள்
பெண்பாலாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆண்பால்
|
ஒருமைச் சொல்லின் இறுதியில்
ஆ (aa) என முடிதல் வேண்டும்.
|
लडका
कमरा
|
லட்கா
கமரா
|
பையன்
அறை
|
பெண்பால்
|
ஒருமைச் சொல்லின் இறுதியில்
ஈ (ee) என முடிதல் வேண்டும்.
|
पहाड़ी
लडकी
|
பஹாடி3 லட்கீ
|
குன்று
பெண்
|
ஆண்பால்
|
பன்மைச் சொல்லின் இறுதியில்
ஏ (e) என முடிதல் வேண்டும்.
|
लडके
कमरे
|
லட்கே
கமரே
|
பையன்கள்
அறைகள்
|
பெண்பால்
|
பன்மைச் சொல்லின் இறுதியில்
இயா (iyaa) என முடிதல் வேண்டும்.
|
लडकियाँ
चिडियाँ
|
லட்கியா~
சிடியா~
|
சிறுமிகள் பறவைகள்
|
மேற்கண்ட
ஒருசில வரைமுறைகள் கூறப்பட்டாலும் இந்தி மொழிச் சொற்களில் பாலின வேறுபாட்டினை முழுமையாக
அறிந்து கொள்வதற்கு முறையான மொழிப்பயிற்சியே அவசியமாக இருக்கின்றது.
வேற்றுமை உருபுகள்
பெயர்ச் சொற்களுக்கும் வினைச் சொற்களுக்கும் இடையிலான பொருளை
வேறுபடுத்திக் காட்டுவன வேற்றுமை உருபுகள் எனப்படும். இவை சொற்களை இணைத்து வாக்கியமாக மாற்றுவதற்கு மிகவும்
உறுதுணையாக இருக்கின்றன. இதனை இந்தி மொழியில் விபக்தி
(विभक्ति) என்றழைப்பர். தமிழ் மொழியில் உள்ளது போல இந்தி மொழியிலும் வேற்றுமை உருபுகள்
உள்ளன. ஆனாலும் அவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்கின்ற பொழுது சூழலுக்கு ஏற்ப
சில இடங்களில் பொருள் மாற்றம் செய்வது அவசியமாகிறது. இத்தகைய மாற்றங்களைப் புரிந்துகொள்ளாமல்
மொழியாக்கம் செய்யின் சிக்கல்கள் உருவாகும்.
வரிசை
எண்
|
தமிழ் வேற்றுமை உருபுகள்
|
विभक्ति (விப4க்தி)
இந்தி வேற்றுமை
உருபுகள்
|
வேற்றுமைப் பொருள்
|
1
|
உருபு இல்லை
|
செயப்படுபொருள் குன்றா
வினை இறந்த காலத்தில் பயன்படும் போது எழுவாயுடன் நே (ने) சேர்க்கப்படுகின்றது.
|
எழுவாய் வேற்றுமை
(कर्ता कारक) கர்தா காரக்
मैनें काम किया ।
மைனே~ காம் கியா | நான்
வேலை செய்தேன்.
|
2
|
ஐ
|
கோ (को) राम को बुलाओ ।
ராம் கோ புலாஓ |
ராமனைக் கூப்பிடு.
|
செயப்படுபொருள் வேற்றுமை
(कर्म कारक) கர்ம காரக்
|
3
|
ஆல், கொண்டு
உடன், ஒடு
|
ஸே (से) कलम से लिको ।
கலம் ஸே லிகோ |
பேனாவால் எழுது.
|
கருவிப்பொருள் வேற்றுமை
(करण कारक) கரண் காரக்
|
4
|
கு
|
கோ (को) கே லியே (के लिये)
यह किताब राजा को धो ।
யஹ் கிதாப்3 ராஜா
கோ தோ4 |
இந்தப் புத்தகத்தை ராஜாவிற்குக்
கொடு.
|
கொடை வேற்றுமை
(संप्रदान कारक)
ஸம்ப்ரதா3ன் காரக்
|
5
|
இன்,
இருந்து
|
ஸே (से) पेड से पत्ता किर्ना
பேட் ஸே பத்தா கி3ர்னா
மரத்திலிருந்து இலை விழுந்தது.
|
நீங்கல் வேற்றுமை
(अपादान कारक)
அபாதா3ன் காரக்
|
6
|
அது,
உடைய
|
கா (का) கே (के)
கீ (की)
राजा का घर ।
ராஜா கா க4ர்
।
ராஜாவின் வீடு.
|
உடைமை
வேற்றுமை
(संबंध कारक)
ஸம்ப3ந்த்4
காரக்
|
7
|
இல்,
கண்
|
மே~ (में) पर (பர்)
हाथ में क्या है ?
ஹாத்2 மை~
க்யா ஹை? கையில் என்ன இருக்கிறது?
|
இடப்பொருள் வேற்றுமை
(अधिकरण कारक)
அதி4காரண்
காரக்
|
8
|
ஏ, ஓ (பெயர் அல்லது வினையுடன் சேர்ந்துவரும்)
|
ரே (रे) அரே (अरे)
ஓ (ओ)
हे राम !
ஹே ராம் !
ஓ ராமா !
|
விளி வேற்றுமை
(संबोधन कारक)
ஸம்போ3த4ன்
காரக்
|
இந்த அட்டவணையில்
ஒற்றுமைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் இந்தியில் உள்ள வேற்றுமை உருபுகள்
தமிழில் பொருள் மாறுபட்டு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பயன்பாடுகளின் வழி அறிந்து
கொள்ள முடியும்.
உதாரணமாக
मै बस से आया । மை~
பஸ் ஸே ஆயா |
நான்
பேருந்தில் வந்தேன்.
गाडि स्टेशन पर हैं । காடி3 ஸ்டேஷன் பர் ஹை~|
வண்டி ஸ்டேஷனில் நிற்கிறது.
இந்தி மொழியிலும் தமிழ்
மொழியிலும் வழங்கப்படுகின்ற வேற்றுமைகள் எட்டு வகைப்படும். இவற்றில் இரு மொழிகளிலும்
முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை. ஆனால் இந்தி மொழியில் செயப்படுபொருள் குன்றாவினை
பயன்படும் பொழுது எழுவாயுடன் நே (ने) எனும் உருபு பயன்படுகின்றது.
உதாரணமாக
बात
असल में यह है कि इन लोगों ने अपनी स्थिति
एक द्वीप जैसी बना रखी है
பா3த்
அஸல் மே~ யஹ் ஹை கி இன் லோகோ~ நே அப்னீ
ஸ்தி2தி ஏக் த்3வீப் ஜைஸீ ப3னா ரகீ2 ஹை
|
உண்மை இதுதான்.
இவர்கள் தங்களின் இருப்பை ஒரு தீவு போலச் செய்திருந்தனர்.
மேற்கண்ட வாக்கியத்தில்
இரண்டு செய்திகளைக் கவனிக்கலாம்.
1. எழுவாயுடன் நே (ने) சேர்க்கப்பட்டுள்ளது.
2. வினை செயப்படுபொருளுக்கு ஏற்பப் பெண்பாலாக மாறியுள்ளது.
எனினும் நே (ने) என்னும்
உருபிற்கு தனியான பொருள் ஏதும் கிடையாது.
தமிழ் மொழியில் இரண்டாம்
வேற்றுமைக்கு ‘ஐ’ உருபும் நான்காம்
வேற்றுமைக்கு ‘கு’ என்ற உருபும் பயின்று
வருகின்றன. ஆனால் இந்தியில் இரண்டாவது மற்றும் நான்காவது வேற்றுமைகள் இரண்டிலும் கோ
(को) எனும் ஒரு வேற்றுமை உருபு மட்டுமே பயின்று வருகின்றது.
உதாரணமாக
सदीश को बुलाओ । சதீஷ்
கோ புலாவோ | சதீஷைக் கூப்பிடு.
राजा को पूचो । ராஜா கோ பூச்சோ | ராஜாவைக் கேழு.
இவ்வேற்றுமை உருபுகளை மூலமொழியிலிருந்து
பெறுமொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்கின்ற பொழுது வேற்றுமை உருபின் பயன்பாடு பெறுமொழிக்கு
ஏற்றவாறு ‘ஐ’ எனவும் ‘கு’ எனவும் மொழிபெயர்ப்பது அவசியமாகின்றது.
இது போன்ற சிக்கல்கள் மூன்று மற்றும் ஐந்தாம் வேற்றுமை உருபுகளை மொழிபெயர்க்கையிலும்
ஏற்படுகின்றன. ஏனெனில் இந்தி மொழியில் மூன்று மற்றும் ஐந்தாம் வேற்றுமைகளில் வழங்கப்பட்டு
வருகின்ற வேற்றுமை உருபு ‘ஸே’ (से)
ஆகும். ஆனால் தமிழில் மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஒடு, அதன் சொல்லுருபுகள் கொண்டு
‘உடன்’ எனவும் ஐந்தாம் வேற்றுமை உருபுகள்
இன், இருந்து’ எனவும் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக
एक दिन मैंने ममी से कहा | ஏக் தி3ன் மை~னே மமீ ஸே கஹா |
ஒரு
நாள் நான் அம்மாவிடம் சொன்னேன்.
बाहर से
आए हैं | பா3கர்
ஸே ஆஏ ஹை~ | வெளியிலிருந்து வருகிறார்கள்.
இந்தி மொழியில் ஏழாம் வேற்றுமையில்
வருகின்ற உருபுகள் மே~ (में), பர் (पर) ஆகியவனவாகும். இவற்றில் ‘பர்’ எனும் வேற்றுமை உருபு சில நேரங்களில் இடைச் சொல்லாகாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இதைப் புரிந்து கொள்ளாமல் ஏழாம் வேற்றுமை உருபாக மொழிபெயர்த்தால் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்
தோன்றும்.
உதாரணமாக
मेज पर थैला है । மேஜ் பர் தை2லா
ஹை~ |
மேஜை மீது பேனா இருக்கிறது.
ममी की यह टोन मुझे अच्छी नहीं
लगी, पर मैं चुप ।
மமீ கீ
யஹ் டோன் முஜே2 அச்சீ2 நஹீ~ லகீ3, பர் மை~ சுப்
|
அம்மாவின்
அந்தத் தொனி எனக்கு நன்றாகப் படவில்லை.
ஆனால்
நான் அமைதியாகவே இருந்தேன்.
இடைச்சொற்களின் மொழிபெயர்ப்பு முறைமை
இடைச்சொற்கள்
தொடர்களை இணைக்கப் பயன்படுகின்றன. இவை சொற்களையோ! அல்லது வாக்கியங்களையோ! இணைக்கின்ற
இணைப்புப் பாலமாக மொழியில் பயன்படுகின்றன. இவற்றினை இந்தி மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு
மொழிபெயர்ப்பு செய்கின்ற பொழுது தேவையற்ற இடங்களில் இடைச்சொல் நீக்கி மொழிபெயர்ப்பது
அவசியம்.
உதாரணமாக
ये तो उन बातों और बहसों के टुकड़े हैं
யே தோ உன் பா³தோ~
ஔர் ப³ஹஸோ~ கெ டுகடே³ ஹை~
இவையனைத்தும் அவர்களின் பேச்சுக்களிலிருந்தும் விவாதங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட துணுக்குகள்.
சில இடங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையினைக்
குறித்து வருகின்ற வாக்கியத்தில் இடைச்சொல் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு வருவது சரியான
மொழிபெயர்ப்பாகும்.
உதாரணமாக
वहीं नियम - कायदे और अनुशासन के नाम पर उसके व्यक्तित्व को
कुंठित भी करते हैं
வஹீ~ நியம
– காயதே³ ஔர் அனுஸா2ஸன்
கெ நாம் பர் உஸ்கே வ்யாக்தித்வ கோ குன்டி²த் பீ⁴ கர்தே ஹை~
அங்கே
நிபந்தனை, கட்டுப்பாடு, மற்றும் ஒழுங்கு எனும்
பெயரால் அவனது ஆளுமையினைக் குன்றும்படியும் செய்கின்றன.
திரிசங்கு எனும் கதையில்
சில தொடர்களில் இடைச்சொற்களுக்குப் பதிலாக இரு சொற்களுக்கு இடையே (-) எனும் குறியீடு
பயன்படுத்தப் பட்டுள்ளது. இக்குறியீடு ‘மற்றும்’ அல்லது ‘உம்’ என்னும்
இடைச்சொற்களின் பொருளினை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
உதாரணமாக
स्कूल- कॉलेज ஸ்கூல் – காலேஜ் பள்ளிகளும்
கல்லுரிகளும்
भारी-भरकम பா⁴ரீ- ப⁴ரகம் நிபந்தனை மற்றும் கட்டுப்பாடு
रात-दिन ராத் – தி³ன் இரவும் பகலும்
ஒருமை (एकवचन ) பன்மை
(बहुवचन) : மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்
இந்தி இலக்கண அடிப்படையில் ஒருமையில் வருகின்ற வாக்கியத்தின்
ஆண்பால் வினை வடிவம் வினைச்சொல் + தா எனும் அமைப்பினைப் பெறுகின்றது.
वह जा+ ता है - அவன் செல்கிறான்.
அதே போல் ஒருமையில் பெண்பால்
வினை வடிவம் வினைச்சொல் + தீ எனும் இலக்கண அமைப்பினைப் பெறுகின்றது.
वह जा+ती है - அவள் செல்கிறாள்.
பன்மை வடிவத்தில் ஆண்பாலின்
வினை வடிவம் வினைச்சொல் + தே என மாறுகின்றது.
वे जा+ते हैं - அவர்கள் செல்கிறார்கள்
ஆனால் பன்மை வடிவத்தில்
பெண்பாலின் வினைவடிவம் மாறாமல் வினைச்சொல் + தீ என்பதாகவே இருக்கின்றது.
वे जा+ती हैं - அவள் செல்கிறாள்
வினை, துணை வினை
ஒரு வாக்கியத்தில்
இரண்டு வினைச்சொற்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வந்து ஒரே பொருளை உணர்த்துகின்ற நிலையில்
முதன்மையான பொருளைத் தருகின்ற சொல் முக்கிய வினை என்றும் அதற்கு வலு சேர்க்கும் வகையில்
பொருள் உணர்த்துகின்ற சொல் துணை வினை என்றும் அழைக்கப்படும்.
உதாரணமாக
घर
की चहार दीवारी आदमी को सुरक्षा देती है
க⁴ர் கி சஹார் தி³வாரி ஆத்³மி கோ சுரக்ஸா தே³தீ ஹை
வீட்டின்
நான்கு சுவர்கள் கொண்ட அமைப்பானது மனிதனுக்கு பாதுகாப்பினைத் தருகின்றது.
இதில் தே (दे)
என்னும் சொல் தருதல் என்ற பொருளை உணர்த்துகின்றது. அதோடு இணைந்து வருகின்ற தீ (ती)
என்னும் சொல் பெண் பாலை உணர்த்துகின்றது. அதனை அடுத்து வாக்கியத்தின் இறுதியில் வருகின்ற
ஹை (है) எனும் சொல் துணை வினையாக வந்து நிகழ் காலத்தினைக் குறித்து நிற்கின்றது. சில
இடங்களில் ஹை (है) என்னும் சொல் தனித்த பொருள் பெற்று வினைச் சொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக
टोन आज भी वही है ।
டோன் ஆஜ் பீ⁴ வஹீ ஹை |
தொனி இன்றும் அப்படியேதான் இருக்கின்றது.
மேற்கண்ட வாக்கியத்தின்
இறுதியில் பயின்று வந்துள்ள ஹை என்னும் சொல் தனித்து நின்று ‘இருக்கின்றது’ என்னும் பொருளை உணர்த்தும். இதனடிப்படையில் இச்சொல் முக்கிய வினையாகக்
கருதப்படுகின்றது.
வினா வாக்கியம்
ஏன், எதற்கு, எப்படி, எங்கே, யார் என வினாவினைச் சுட்டி நிற்கின்ற
சொற்களைக்கொண்டு சாதாரண வாக்கியத்திலிருந்து வினா வாக்கியத்தினை எளிதில் வேறுபடுத்திப்
பார்க்க முடியும். ஆனால் சில இடங்களில் சாதாரண வாக்கியத்தில் பயின்றுவரும் தொனி வினாவினை உருவாக்குவது போன்று
அமைந்துவிடும். இச்சூழலில் மொழிபெயர்ப்பாளன் கவனமாக மொழிபெயர்ப்பது அவசியம்.
உதாரணமாக
तुम इन्हें चाय पर बुलाओगी ?
தும் இன்ஹே~
சாய் பர் பு3லாஓகீ3 ?
நீ இவர்களைத்
தேநீர் விருந்திற்கு அழைக்கப் போகிறாயா?
तुम सचमुच ही इन लड़कों को बुलाने
जाओगी
தும் ஸச்முச்
ஹீ இன் லட்3கோ~ கோ பு3லானே ஜாஓகீ
நீ உண்மையாகவே இந்தப் பையன்களை
அழைக்கப் போகிறாயா ?
மேற்கண்ட வாக்கியங்களில்
வினாவினைக் குறிக்கின்ற சொற்கள் எதுவும் பயின்று வரவில்லை. இருப்பினும் தொனி வினாப்
பொருளை உணர்த்துகின்றது. ஆனால் தமிழில் உள்ள வினா எழுத்துக்கள் ஆ, ஏ, ஓ இவற்றில் ஏதேனும்
ஒன்று வாக்கியத்தின் இறுதியில் பயின்று வந்து வினாப் பொருளை உணர்த்துகின்றன.
காலத்தை குறிக்கும் சொற்கள் (काल)
ஒரு மொழியின்
வாக்கிய அமைப்பினைக் கற்றுக்கொள்கின்ற பொழுது முதலில் நிகழ்கால வாக்கியம், இறந்தகால
வாக்கியம், எதிர்கால வாக்கியம் என கால நிலைகளைக் குறிக்கின்ற வாக்கியங்களைக் கற்பது
அடிப்படையாக இருக்கின்றது. இதனை எளிதில் அறிந்து மொழிபெயர்த்து விடலாம். ஆனால் இந்தி
மொழியில் சில இடங்களில் இறந்த காலத்தையும்
எதிர் காலத்தையும் சுட்டுவதற்கு ஒரே சொல் பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக
कल
तो तुम लोग छुट्टियों में अपने घर चले जाओगे |
கல் தோ தும் லோக்3 சு2ட்டியோ~
மே~ அப்னே க4ர் சலே ஜாஓகே3
நாளைக்கு நீங்க எல்லோரும் விடுமுறைக்கு
அவரவர்களின் வீட்டிற்கு சென்று விடுவீர்கள்.
कल
शाम को इन लोगों को चाय पर बुला लेते हैं |
கல் ஸா2ம் கோ இன் லோகோ~ கோ சாய் பர் பு3லா லேதே ஹை~
நாளை சாயந்தரம் இவர்களை தேநீர்
விருந்துக்கு அழைத்து விடுகிறேன்.
மேற்குறிப்பிட்ட வாக்கியங்களில்
கல் (कल) என வரும் சொல்லானது நாளை என்ற பொருளை உணர்த்துவதோடு நேற்று என்ற பொருளையும்
உணர்த்துகின்றது. எனவே சூழலின் அடிப்படையில் இதனை நேற்றா? நாளையா? எனப் புரிந்துகொண்டு
மொழிபெயர்ப்பது நலம்.
உதாரணமாக
तुम कल कहाँ थे ? தும் கல்
கஹா ~ தே2 ?
நீ நேற்று எங்கே இருந்தாய் ?
அதே போன்று பர்ஸோ~ (परसों)
என்ற சொல்லும் நாளை மறுநாள் மற்றும் நேற்றைய முன்தினம் எனும் இருபொருள் உணர்த்தி வரும்.
உதாரணமாக
मैं परसों सिनेमा देखूँगा ।
மை ~ பர்ஸோ ~ ஸினேமா தேகூ~
கா |
நான் நாளை மறுநாள் சினிமா பார்ப்பேன்.
परसों हम घर में थे ।
பர்ஸோ~
ஹம் க4ர் மே~ தே2 |
நேற்றைய
முன்தினம் நாங்கள் வீட்டில் இருந்தோம்.
இது போன்ற சொற்கள் வாக்கியத்தில்
உள்ள காலத்திற்கு ஏற்ப பொருளை மாற்றும் தன்மை
உடையவை. இதனைப் புரிந்து மொழிபெயர்ப்பது அவசியமாகின்றது.
ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல்
இன்றையச்
சூழலில் பெரும்பான்மையான இந்திய மொழிகளில் ஆங்கிலச் சொற்கள் பெருவழக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலை தற்கால இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. திரிசங்கு என்னும் கதையின் பின்னணி
நகரத்தில் வாழுகின்ற நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மன நிலையினை விவரிப்பதாக
அமைந்துள்ளது. எனவே தற்கால மக்களின் மொழி வழக்கத்திற்கு ஏற்ப கதையில் ஆங்கிலச் சொற்கள்
பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகையச் சொற்களைக் கண்டறிந்து தமிழுக்கு ஏற்ப மொழிபெயர்ப்புச்
செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக
स्कूल- कॉलेज जहाँ
व्यक्ति के मस्तिष्क का विकास करते हैं ….|
ஸ்கூல்
– காலேஜ் ஜஹா~ வ்யக்தி கே மஸ்திஷ்க் கா
விகாஸ்
கர்தே ஹை~ ....|
பள்ளியும்
கல்லுரியும் எங்கே அறிவை, ஆற்றலை
வளம்பெறச்
செய்கின்றனவோ....
ब्याह को कोसेंगे तो फ्री - लव और फ्री - सेक्स को तो पोसना ही
पड़ेगा ।
ப்³யாஹ் கோ கோஸேங்கே³ தோ ப்2ரீ–லவ் ஔர் ப்2ரீ – ஸெக்ஷ் கோ
தோ போஸனா ஹீ படே³கா³ |
திருமணத்தைக்
கண்டித்தால், கட்டுப்பாடற்ற காதலையும் உடலுறவையும்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
जस्ट
फ़ॉर फन कुछ कर दिया वरना इस सबका कोई मतलब नहीं ।
ஜஸ்ட்
பா~2ர் ப2ன் குச்2 கர் தி3யா வர்னா இஸ்
ஸப்3கா கோஈ மத்லப்3 நஹீ~
|
வேடிக்கைக்காக
மட்டும்தான் கிண்டல் செய்தோமே தவிர வேறு எந்தவொரு
உள்நோக்கமும் கிடையாது.
மேற்கண்ட வாக்கியங்களில்
உள்ள ஸ்கூல், காலேஜ், ஃப்ரீ செக்ஸ், ஃப்ரீ லவ், போன்ற ஆங்கிலச் சொற்களைத் தமிழ் சூழலுக்கு
ஏற்ப மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சொற்கள் கதையில் ஆங்காங்கே பயின்று
வந்துள்ளன. அவையும் தமிழ் மொழிக்கேற்ப தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்க நகரத்தார்களின் மொழிப்பயன்பாட்டில்
கதை எழுத்தப்பட்டுள்ளதால் மம்மீ (ममी) எனும் சொல் கதையில் அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக
ममी से कहा | மமீ
ஸே கஹா |
அம்மாவிடம் சொன்னேன்.
ममी ने आश्चर्य
से पूछा । மமீ நே ஆஸ்2சர்ய ஸே பூசா2 |
அம்மா வியப்புடன் வினவினாள்.
மொழிபெயர்ப்புச் சிக்கல்களின் அடிப்படைகள்
மொழிபெயர்ப்புச்
சிக்கல்களை 1. மொழி சார்ந்த சிக்கல்கள் 2. மொழி சாராத சிக்கல்கள் என இருவகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் மொழி சார்ந்த சிக்கல் என்பது மொழியில்
ஒலியன், உருபன் மற்றும் தொடரன் என்னும் அடிப்படையில் மொழிபெயர்க்கின்ற பொழுது ஏற்படுகின்ற
சிக்கல்களைப் பற்றியது ஆகும். எனவே இதனை இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி மொழி சார்ந்த
சிக்கல் என்பர். மொழி சாராத சிக்கல் என்பது மொழி வழங்கக் கூடிய நிலம், பேசக்கூடிய மக்கள்,
அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கம், தட்ப வெட்பம் என சமூகம் சார்ந்த நிகழ்வுகளை மொழிபெயர்க்கின்ற
பொழுது ஏற்படுகின்ற சிக்கல்கள் ஆகும்.
மொழிப் பயன்பாடு சார்ந்த சிக்கல்கள்
மொழிபெயர்க்கின்ற
பொழுது மொழிபெயர்ப்பாளர் சந்திக்கின்ற முக்கியமான சிக்கல்கள் மொழிச்சூழல் சார்ந்த சிக்கல்கள்
எனலாம். ஏனெனில் ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய பொருள் அமைப்பினைக் கொண்டுள்ளது. தமிழ்
மொழியில் பயின்று வரும் மங்கல வழக்கு, குழூஉக் குறி, இடக்கரடக்கல் போன்றவை அம்மொழிக்கே
உரியவைகளாக விளங்குகின்றன. உதாரணமாகத் தமிழ் மொழியில் ‘சங்கு
ஊதிட்டாங்க’ என்று சொன்னால் ‘யாரோ
ஒருவர் இறந்து விட்டார்’ என்று பொருள்படுகின்றது. ‘நம்ப வச்சுக் கழுத்த அறுத்துப்புட்டான்’ என்பது
நம்பிக்கைத் துரோகத்தைக் குரிக்கின்றது. இது போன்று மேலும் பல பொருள் உணர்த்தும் சொல்
வழக்குகள் ஒவ்வொரு வட்டாரத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. மொழிபெயர்க்கின்ற பொழுது
மூலமொழி குறித்து முறையான புரிதல் இல்லையெனில் மொழிபெயர்ப்பு தவறானதாகிவிடும். பெரும்பாலும்
நாட்டுப்புறம் சார்ந்த பழமொழிகள், விடுகதைகள், பாடல்கள், மற்றும் குழூஉக் குறிகள் போன்றவற்றை
மொழிபெயர்க்கையில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உதாரணமாக
1) आप
लीक को दुलत्ती झाड़ते आइए, सिर-आँखों पर लीक
से चिपककर आइए, दुलत्ती खाइए ।
ஆப் லீக்
கோ துலத்தீ ஜா²ட்³தே ஆஇஏ, ஸிர் – ஆ~கோ² பர் லீக் ஸே சிபக்கர் ஆஇஏ, து³லத்தீ கா²இஏ |
நீங்கள்
பழமையை உதறித்தள்ளிவிட்டு வாருங்கள். மகிழ்ச்சியாக பழமையுடன் ஒட்டிக் கொண்டு வந்தால்,
உதைபடுங்கள்.
2)
वह यह कि जिस नाटक की हीरोइन उसे बनना
था, उसकी हीरोइन ममी बन बैठीं।
வஹ் யஹ் கி ஜிஸ் நாடக் கீ ஹீரோஇன் உஸே ப3ன்னா
தா2, உஸ்கீ ஹீரோஇன் மமீ ப3ன் பை3டி~2
|
அவள் எந்த நாடகத்திற்கு
தலைவியாக அங்கே நடிக்க இருந்தாளோ! அதற்குத் தலைவியாக அம்மா நடித்துக்கொண்டிருந்தாள்.
மேற்கண்ட வாக்கியத்தினைச்
சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் வாக்கியத்தின்
இறுதியில் வருகின்ற खाइए
(கா²இஏ) என்பதினைப் பொதுவான மொழிபெயர்ப்பில்
சாப்பிடுங்கள் என்றே மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் இது சரியான மொழிபெயர்ப்பாக இருக்காது.
எனவே உதைபடுங்கள் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் बैठीं। (பை3டி4~) என்பதை சொல்லுக்குச்
சொல் மொழிபெயர்ப்பின் அது ‘அமர்ந்தாள்’ என்ற
பொருளைத் தரும். ஆனால் அதனை நீக்கி தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப ‘நடித்தாள்’ என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
எண்ணிக்கை குறித்த சொல் வழக்குகள்
எண்ணிக்கையினைக் குறிக்கின்ற சொல் வழக்குகள் பயின்று வருகின்ற வாக்கியங்களை
இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கின்ற பொழுது மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனைத்
தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப மொழிபெயர்ப்புச்
செய்தல் அவசியமாகின்றது.
உதாரணமாக
1)
एक
झापड़
दूँगी तो सारा रोमांस झड़ जाएगा दो मिनट
में ....”
ஏக் ஜா2பட்3 தூ~3ங்கீ3
தோ ஸாரா ரோமா~ன்ஸ் ஜா2ட்3
ஜாஏகா3 தோ3 மினட் மே~ ….”
ஒரு அறை விட்டேன். ஒரு நொடியில் காதல்
கீதலெல்லாம் உதிர்ந்து போகும்.
2)
जैसे
ही हम लोग चालू होते पास – पड़ोस की खिड़कियों में
चार-छः
सिर और धड़ आकर चिपक जाते ।
ஜைஸே ஹீ ஹம் லோக்3 சாலூ ஹோதே பாஸ் – படோ3ஸ்
கீ கி2ட்கியோ~ மே~ சார் – ச2 ஸிர் ஔர் த4ட்3
ஆகர் சிபக் ஜாதே |
இவ்வாறு
நாங்கள் பேச ஆரம்பித்ததும் ஜன்னல்களில் நான்கைந்துத் தலைகள், உடல்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.
3)
चार-छः
दिन मे कभी आ गए, गपशप कर ली |
சார் – சஹ் தி3ன்
மே~ கபீ4 ஆ க3ஏ, க3ப்ஸ2ப் கர் ல
நான்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வந்தாலும் பரவாயில்லை.
இந்தியில் இரண்டு நிமிடத்தில்
என்று பயன்படுத்தப்பட்டுள்ள வழக்கு தமிழில் ஒரு நொடியில் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது வாக்கியத்தில் உள்ள சார் - சே2 (चार-छः)
என்பதினை நான்கு - ஆறு என மொழிபெயர்க்காமல் நான்கு - ஐந்து என தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பெறுமொழி வாசகர்களுக்குத் தெளிவினை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு
மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது.
[1] என். கிருஷ்ணன் – மொழிபெயர்ப்பியல், பக் – 04.
[2] மு. வளர்மதி- மொழிபெயர்ப்புக்கலை, பக் – 17.
[3] என். கிருஷ்ணன் – மொழிபெயர்ப்பியல், பக் - 07
[4] என்.கிருஷ்ணன்
– மொழிபெயர்ப்பியல்
[5] மு.
வளர்மதி – மொழிபெயர்ப்புக் கலை.
[6] மொழிபெயர்ப்பு முன்னோடிகள் – மு. வளர்மதி)