யாருக்காக அழுதான் – ஆனந்த விகடன், 1962.
புதினத்தின் கதாநாயகன் சோசப். ஹோட்டலின் முதலாளி ரத்தினவேலு முதலியார். செவ்வாய்க் கிழமை விடுமுறையில் அனைவரும் சினிமாவிற்குச் சென்று விட்டனர். சமையல் மாஸ்டர் கோவிந்தசாமியும் சோசப்பும் பேசிக் கொண்டிருக்கும் பொது சோசப் தனது முந்தைய காலத்தைப் பற்றிக் கூறலானான். பார்வதியைத் திருமணம் முடித்த ஒரு மாதத்தில் அவனது தாய் இறந்து விட்டாள்.
முருகேசனாக இருந்த சோசப் நண்பன் மாரிமுத்துவால் கிறித்துவனாக மாற்றப்பட்டான். பார்வதிக்கும் மாரிமுத்துவிற்குமிடையே
இருந்த கள்ளக் காதலை அறிந்த சோசப் அவர்களை சேர்த்து வைத்துவிட்டு இந்த ஓட்டலில் வந்து வேலை செய்து வருகிறான். இருந்தாலும் தன்னை நம்பித்தான் பார்வதியை திருமணம் செய்து வைத்தனர் என்பதற்காக அவளுக்குப் பணம் சேர்த்து வைத்து வந்தான். ஒருநாள் ஹோட்டலில் தங்க வந்த ‘சேட்’ ஒருவன் மூவாயிரம் ரூபாய் உடைய பர்சை முதலியாரிடம் கொடுத்து வைத்ததை மறந்துவிட்டான். அந்த விஷயம் சோசப்பிற்கும் தெரியும். மறுநாள் பணத்தைக் காணவில்லை என்று முதலாளியிடம் முறையிட்டதை அறிந்த முதலாளி, இவன் நம்மிடம்
கொடுத்ததை மறந்து விட்டான். எனவே நாம் மறைத்து விடலாம் என்று எண்ணினார். ஆனால் சேட் சோசப்பின் மீது சந்தேகம் கொண்டு அவனை அடிக்கத் துவங்கினான். பக்கத்து அரையிலிருந்த இருவரும் சென்று ஆதரவாகப்
பேசினர். ஊருக்குச் சென்று விட்டு திரும்பிய கோவிந்தசாமி நாயுடு போலீஸிடம் கம்ப்லைண்ட் பன்ன வேண்டும்
என அறைகளைப் பூட்டும்படிக் கூறினார். முதலாளி என்ன செய்வதென்று தெரியாமல் சேட்டின் ரூமை பூட்டுவது போல உள்ளே சென்று பர்சை வைத்து விட்டார். உள்ளே சென்ற சேட், பணம் கிடைத்து விட்டதாகக் கூற,
அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். சோசப் முதலாளியை காட்டிக் கொடுக்க வில்லை என்றாலும் அவரது செய்கையை எண்ணி அழுதான்.