எனக்காக அழு – ஆனந்த விகடன், 1962.
செட்டியார்,
(கடை
முதலாளி) கனகசபை பல ஆண்டுகளாக அவரது கடையில் வேலை செய்து வருகிறான். கனகசபையின் நண்பன் வைரவன். பேங்கில் கட்டுவதற்காக கனகசபையிடம் கொடுத்த 4000 ரூபாய் எடுத்துக் கொண்டு சென்னை சென்று பிழைத்துவிடலாம் என்று
சொல்ல நினைக்கையில் வைரவன் அவனைத் தடுத்து பாண்டிச் சேரிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு தங்கியிருந்த ஹோட்டலில் கனகசபை முதன் முதலாகக் குடிக்கத் துவங்குகிறான். இருவரும் போட்ட சத்தத்தில்
ஹோட்டல் முதலாளி போலீஸிடம், சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கின்றார். செட்டியாரின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் இவர்கள்தான் என்றுணர்ந்த காவலர்கள் இருவரையும் விசாரிக்கின்றனர். இதில் வைரவன் தவறுகள் அனைத்தும் தானே
செய்ததாக ஒப்புக் கொள்கின்றான். வைரவனின் தியாக உணர்வை எண்ணி கனகசபை வருந்துகிறான். செட்டியார் மற்றும் அங்குள்ள அனைவரும் வைரவனைத் திட்டித் தீர்க்கின்றனர். ஆனால் கனகசபையின் உள்ளமோ அவனைப் பாராட்டுகிறது. ஊரில் நடக்கும் தீமைகளுக்காக அழுதவன் வைரவன். ஆனால் அவனைத் திட்டிவிட்டு எனக்காக அழுகிறது இந்த உலகம் என வருந்தினான் கனகசபை.