பிரம்மோபதேசம் – ஆனந்த விகடன், 1962.
சங்கரசர்மா சுத்த பிராமணன், சமையல்காரர். தன் மகள் மைத்திரேயியை தன்னைப் போன்ற சுத்த பிராமணனுக்கே திருமணம் செய்து வைக்க எண்ணினார். சர்மாவின் நண்பர் ராயர் அவரது மனைவி கங்காபாய். ராயரின் மூலமாக சர்மாவிடம் வேலைக்குச் சேர்த்தவன் சேஷாத்திரி. ராயரும், சேஷாத்திரியும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள். சேஷாத்திரி பிராமணன் என்றாலும் நாத்திகன் ஆவான். சேஷாத்திரியும் மைத்திரேயும் ஒருவரை ஒருவர் விரும்புவதை உணர்ந்த கங்காபாய் இவர்களின் திருமணம் பற்றி சர்மாவிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். இதற்கிடையில் மைத்திரேயி, சேஷாத்திரி பேசிக் கொண்ட காதல் மொழியைக் கேட்ட சர்மா. சேஷாத்திரியை அழைத்துப் பேசினார். சேஷாத்திரி தன் மகளின் மனதை மாற்றி குற்றம் புரிந்துவிட்டதாகக் கூறினார். பிராமணனுக்கு பிராமண வழியில் பதிலளிக்க எண்ணிய சேஷாத்திரி வயதிற்கு வந்த பெண்ணிற்கு மூன்று ஆண்டுகளுக்குள் தந்தை திருமணம் செய்து வைக்காவிட்டால் பெண், தான் விரும்பிய ஆடவனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனுவின் கருத்தினை எடுத்துரைக்க அது உண்மையாயினும் அதனை என் மனம் ஏற்க மறுக்கிறது என்றார் சர்மா. தன்னுடன் பலகாலமாகப் பழகி வந்த சதானந்தன் என்ற இளைஞனை சர்மா மந்திரங்கள் கூறி பிராமணனாக்கினார். மைத்திரேயி தூய பிராமணத்திலிருந்து விலக சதானந்தன் பிராமணனாக்கப்பட்டதை எண்ணி மகிழ்ந்தார். அவனை மகனாக ஏற்றுக் கொண்டார். மைத்திரேயி சேஷாத்திரியை மணந்து கொண்டாள்.