வியாழன், மே 07, 2020

கைவிலங்கு - ஜெயகாந்தன்

கைவிலங்கு கல்கி, 1961.
ஆனைக்குளம் எனும் ஊரில் உள்ள சென்றல் ஜெயிலில் கைதிகளாக மாணிக்கம், சையது, சாமுண்டி போன்றோர் இருக்கின்றனர். ஜெயிலர் ராகவைய்யர். புதினத்தின் கதாநாயகன் மாணிக்கம். மாணிக்கத்தைப் போன்றே சையது மிகவும் நல்லவன். இன்னும் இருபது  நாட்களில் விடுதலையாகி விடுவான். சாமுண்டி மிகவும் முரண்டு பிடிப்பவன். தனக்குத் துரோகம் செய்த மனைவியையும் கள்ளக் காதலனையும் கொன்றுவிட்டு சிறைக்கு வந்திருக்கிறான். கொலைகாரன் என்ற பட்டத்துடன் வெளியில் சென்று வாழ விரும்பவில்லை. ஆனால் சாவதற்கு சிறையில் அனுமதி இல்லை. ராகவைய்யர் மற்றும் மனைவி அலமேலு அம்மாளுக்கும் வாரிசு இல்லை. எனவே கைதிகளுடன் அன்போடு பழகுவார் ராகவைய்யர். மாணிக்கத்தின் காதலி கோகிலா எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தினமும் அழுதுகொண்டிருந்தான் மாணிக்கம். கடிதத்தில் மாணிக்கத்தின் தாயார் உடல் நிலை சரியில்லாமல் இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அறிந்த ஜெயிலார் ராகவைய்யர் மாணிக்கத்தை தன்னுடைய பொறுப்பில் தாயைப் பார்க்க அனுப்பி வைத்தார். மாணிக்கத்தின் தந்தை செல்லையாவிற்கும் கோகிலாவின் தந்தை சங்கிலிப்பிள்ளைக்கும் வெகுநாள் பகை. செல்லையாவின் பசுவை சங்கிலிப்பிள்ளை கொன்றுவிடுகிறார். செல்லையா ஐயனார் கோவிலில் சென்று முறையிட சங்கிலிப்பிள்ளையின் மனைவி செங்கேணி இரத்தம் காக்கி இறந்துவிடுகிறாள். அந்த அல்லிக்குளம் கிராமத்திற்கு சின்னக் குப்பத்திலிருந்து சங்கிலிப் பிள்ளையின் இரண்டாவது மனைவியாக பூங்காவனம் வருகிறாள். ஊருக்குள் மைனராகச் சுற்றித் திரியும் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனைத் தீர்க்க மாணிக்கம் தன்னுடைய நிலத்தை வித்ரு அவனிடமே கூலி வேலை செய்கிறான். மாரிமுத்துவும் ஒரு வகையில் கோகிலாவிற்கு முறைப் பையன். கோகிலாவை மாரிமுத்துவிற்குக் கட்டித்தர செல்லையா சம்மதிக்கிறார். ஆனால் கோகிலா மாணிக்கத்தை விரும்புவதைக் கண்டு கோபம் கொண்ட மாரிமுத்து மானிக்கத்தை தீர்த்துக் கட்ட நினைக்கிறான். சந்தர்ப்ப சூழலில் மாணிக்கம் மாரிமுத்துவைக் கொன்று விடுகிறான். இதனால் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையிலிருந்து வந்து தாயைச் சந்தித்து விட்டு தனியாக கோகிலாவிடம் பேசிக்கொண்டிருக்கும் மானிக்கத்தைப் பார்த்த செல்லையா, தான் கையிலிருந்த சிலம்பக் கம்பால் அவனை அடித்து விடுகிறார். காயம் பட்டதில் மயங்கிய மானிக்கத்திற்கு பூங்காவனம் மருந்திடுகிறாள். மறுநாள் விடியலுக்குள் வந்துவிடும்படி கூறிய இராகவைய்யரின்வாக்கினைக் காப்பாற்ற முடியவில்லை. புதிய சூப்பிரிண்டண்ட் ராமன் நாயரிடமிருந்து தப்பிக்க மற்ற காவலர்கள் கேட்டுக் கொண்டதன் விளைவாக மாணிக்கம் சட்ட விரோதமாக தப்பிவிட்டான் என்று அறிவிக்கப்படுகிறது. கோகிலாவும் மானிக்கமும் எங்காவது சென்று வாழ முடிவு செய்கிற பொழுது காவல் துறையினர் இருவரையும் கைது செய்கிறது. மாணிக்கத்திற்கு ராகவைய்யரின் வாக்கினைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மெலிடுகிறது. அதனை ராகவைய்யர் பெருதுபடுத்தவில்லை. கோகிலா ஆறு மாதத்தில் விடுதலையாகிவிடுவாள். நான் விடுதலையாக இரண்டாண்டுகள் ஆகும். கோகிலா விடுதலையானவுடன் அவளை வீட்டிற்கு அனுப்பினால் சங்கிலிப்பிள்ளை வெறுயாருக்காவது திருமணம் முடித்து விடுவார். எனவே நான் விடுதலையாகும் வரை அவளை தங்களது வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு மாணிக்கம் இராகவைய்யரிடம் கேட்டுக் கொள்ள அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கிறார்.