சமயங்களில் பெண்ணியம்
மதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் பெரியார் மதம் ஒரு வெங்காயம்
என்பார். அதன் பொருள் என்னவென்றால் வெங்காயத்தின் இதழ்களை ஒவ்வொன்றாக நீக்கினால் இறுதியில் ஒன்றும் இருப்பதில்லை என்பதைத்தான் குறிக்கின்றது.
அது போலத்தான் மதமும். ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னுடைய இருப்பை உயர்நிலையில் தக்க
வைத்துக் கொள்வதற்காக சாதிய அமைப்பு முறையினை உருவக்கியது என்பதும் அதற்கு ஏற்றவாறே
மதத்தினை வடிவமைத்துக் கொண்டது என்பதும் சமூகத்தின் செயல்பாட்டினை உற்று நோக்கின் அனைவரும்
உனரக் கூடிய ஒன்றுதான்.
இயற்கையில்
உயிரின் இயல்பு, தன் இனத்தை உற்பத்தி செய்வது
பெண் உயிரியாகவும் அதற்குத் துணைபுரிவது ஆண் உயிரியாகவும் இருக்கின்றன. இவ்வியற்கைக்கு
முரணாக ஆணாதிக்கச் சிந்தனையில் தோன்றிய மதங்கள் அனைத்தும் கடவுளின் உயிருகளைப் படைத்த்து
குறித்து குறிப்பிடுகையில் ஆணைப் படைத்ததாகவும் அவனிலிருந்து பெண்ணைப் படைத்ததாகவும்
கூறுகின்றது. முதன்மைக் கடவுள் ஆண் என்றுதான் மதங்கள் சித்தரிக்கின்றன. ஆணைப் பெற்றெடுப்பவள்
பெண் என்பதனை அறிந்த பின் தற்பொழுது அனைவரின் மனதிலும் எளிதில் ஒரு கேள்வி தோன்றும்,
அந்த ஆண் கடவுளைப் பெற்றெடுத்த பெண் கடவுள் எங்கே? என்று.
கிறித்துவமும் பெண்ணியமும்
இயேசு என்பவர் ஆண் அவர் தூதுவர், அவருக்கும் மேலானவரே கடவுள்
(பரம்பொருள்) இவரையும் நாம் இறைவன் என்கிற ஆண் பதத்திலேதான் அழைகின்றோம். தூதுவரிடம்
முறையிட்டால் இறைவனைச் சென்றடையும் என்பது கிறித்துவத் தத்துவம். இங்கு இறைவன் உயிரினங்கள்
அனைத்தையும் படைத்துவிட்டு ஆதாம், ஏவால் என இருவரைப் படைக்கின்றார். இதில் ஆதாமை முதலிலும்
அவனின் விலா எழும்பிலிருந்து ஏவாலையும் படைத்ததாகக் கதை கூறுகின்றனர். இங்குதான் ஒரு
ஆண் முதலில் ஆணை படைத்தப் பின்பு அவனிலிருந்து பெண்ணை உருவக்கினான் என்கிற மதம் சார்ந்த
முதல் ஆணாதிக்கக் கருத்து விதைக்கப் படுகின்றது.
”மனைவிகளே,
கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல
உங்கள்
சொந்தப் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்” எபே 5. 22
”கிறிஸ்து
சபைக்குத் தலையாயிருக்கிறது போல
புருஷனும்
மனைவிக்குத் தலையாயிருக்கிறான்
அவரே சரீரத்திற்க்கும்
இரட்சகராயிருக்கிறார்” எ.பே 5. 23
ஆகையால்
சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்படிகிறது போல
மனைவிகளும்
தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு
எந்தக்
காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்” எ.பே 5. 24
"மனைவியும்
புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக் கடவது” எ.பே
5.33
இவ்வாறு
கிறித்துவ மதம் பெண்ணை ஆணுக்குக் கடமைப் பட்டவளாகவும் அடிபணிபவளாகவும் கற்பித்துள்ள
ஆணாதிக்கச் சிந்தனையை உணர முடிகின்றது. பக்தி என்று கூறி கடவுளின் பெயரில் பெண்களின்
அடிமைப்படுத்துவதற்காக ஆண்களால் உருவாக்கப்பட்ட ஆயுதமாகவே மதம் செயல்பட்டு வருகின்றது.
ஆண் இறைவனைச் சரணடைந்து உள்ளது போல் பெண் என்பவள்
தன்னை ஆணிற்கு முழுநேர அடிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறது மதம். பெண்களின்
உடல், உயிர், உணர்வுகள் அனைத்தும் ஆணின் அதிகாரத்திர்க்குள் கட்டுப்பட்டவைகளாகவே மதங்கள்
சித்தரிக்கின்றன. அவ்வாறின்றி தன்னிலை மாறி சுய சிந்தனை கொண்டு சுதந்திரமாகச் செயல்படுபவளாக
இருந்தால் அவளின் நடவடிக்கைகளைக் குற்றப்படுத்தி சமூகத்திற்குப் புறம்பானவளாகக் கருதுகின்றது
ஆணாதிக்கச் சமூகம்.
”இருட்டோடு
எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுத்து” நீதி 31. 15
என பைபிளின் வரிகள் வீட்டில் உள்ளவர்கள் எழுந்தரிக்கும் முன்பாக
எழுந்து, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு, உணவு சமைத்து அனைவருக்கும் பரிமார
வேண்டும் என்பதாகக் கூறுகின்றது. வீடு என்பது பெண்ணிற்கானது என்றும் நாடு என்பது ஆணிற்கானது
என்றும் ஆனால் இவ்விரு இடங்களிலும் அதிகாரம் கொண்டவன் ஆண் என்பதாகத்தானே மதங்கள் கட்டமைத்து
வந்துள்ளன.
முஸ்லீம் மதமும் பெண்ணியமும்
ஆணாதிக்கச் செயல்பாடானது காலந்தோறும் வெற்றிபெறுவதற்கு மதங்கள்
ஒரு முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன. இவ்வகையில் இசுலாமிய மதத்தினைப் பார்க்கின்ற
பொழுது இம்மதம் பெண்களை ஒரு ஜடப்பொருளாகத்தான் பார்க்கிறது. ஏனெனில் மற்ற மதக் கோட்பாடுகளை
வைத்துக் கொண்டு ஒப்பிடுகையில் அவற்றினை பின்பற்றும் முறையில் இசுலாமியர்கள் காட்டும்
தீவிரத்தன்மையே இதனை நமக்குப் புலப்படுத்தும். அவர்களின் உணவுமுறை, வழிபாட்டுமுறை உடையனிவதில்
பின்பற்றப்படும் மதக்கோட்பாடுகள் மற்ற சமூகத்திலிருந்து இயல்பாகவே தனித்துக் கட்டுகின்றது.
”அது ஒரு
தூய்மையற்ற நிலை, ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டு விலகியிருங்கள்…. தூய்மையடைந்துவிட்டால்
அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்… உங்கள் மனைவியர் உங்களுக்குரிய
விளை நிலங்களாவர். எனவே நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். மேலும் உங்களுடைய வருங்காலத்துக்காக
முன் கூட்டியே எதாவது செய்து கொள்வதில் அக்கறை கட்டுங்கள்”
திருக்குர்
ஆன் – அத்தியாயம் 2: 222 – 223
அறிவியல்
முறைப் படி இதனை நோக்குவோமேயானால், மாதவிடாய் என்பது குழந்தைப் பேற்றுக்காக உருவான
அண்டம் ஆண் விந்தனுவிடம் இணையாத சூழலில் முதிர்ச்சியடைந்து, உடைந்து வெளிவருவதினைக்
குறிக்கும். அதன் பின்னர் மீண்டும் கருப்பையினுள் அண்டம் தொன்றி வளரத்தொடங்கும். இது
ஆண் விந்தணுவுடன் இணையாத வரை வளர்வதும் வெளியேறுவதும் இயற்கை, அதனைப் புரிந்து கொள்ளாமல்
தூய்மற்ற நிலை என்பது மூடத்தனம். பெண்களை விளை நிலத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவது என்பதனை
நாம் இலக்கியங்களிலும் காண முடியும். போரில் வென்ற அரசன், தோற்ற அரசனின் விளை நிலங்களை
பாழ்படுத்துவது என்பது அந்நாட்டுப் பெண்களைச் சீரழிப்பதாகவே கட்டமைக்கப்பட்டு வந்த்து.
அதைத்தான் அனைத்து மதங்களும் இலக்கியங்களும் போதித்து வந்துள்ளன. அதன்படிதான் இஸ்லாம்
மதமும் கூறியுள்ளதை மேற்கண்ட திருக்குர் ஆண் வரிகள் எடுத்துக் கட்டுகின்றன. இங்கு நிலம்
என்பது பெண் என்று எடுத்துக் கொண்டால் ஆணிற்கு அவள் உடமைப் பொருளாகவும் அவன் விருப்பம்
போல் பயன்படுத்துகின்ற ஒரு ஜடப்பொருளாகத்தானே ஆணாதிக்கச் சமூகம் சித்தரித்து வந்துள்ளது.
ஒரு வகையில்
கிறித்துவ மற்றும் இந்து மதங்களை விட சற்று முற்போக்குத் தன்மையுடன் இசுலாமிய மதம்
செயல்படுவதை நாம் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அவை விதவைப் பெண்களுக்கு மறுமணத்தினை
ஆதரிக்கின்றது. மேலும் சொத்துக்கள் பிரிப்பில் இருவருக்கும் சம உரிமை கோருகின்றது.
ஆனால் இவை நடைமுறையில் பின்பற்றப்படுகின்றனவா என்று நோக்கினால் அவை கேள்விக்குரியாகத்தான்
இருக்கும்.
”ஆண்கள்
பெண்களை நிர்வகிப்போர் ஆவர், இதற்குக் காரணம் அல்லாஹ், அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும்
ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். என்வே ஒழுக்கமான
பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள்”
திருக்குர்
ஆன் – அத்தியாயம் 4. 34,35
குறியீடுகளோ மறைமுக சொல்லாடல்களோ இன்றி திருக்குர் ஆன் வரிகள்
பெண்களை அடிமைகள் என்று சுட்டுவது ஆணாதிக்கத்தின் வெறிச் செயலைத்தான் கட்டுகின்றது.
ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் என்றும் அதற்குக் காரணத்தையும் கூறுகின்றது. ஆண்கள் தங்களுடைய
செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்றும் ஆணகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள்தான்
ஒழுக்கமான பெண்கள் என்றும் பெண்ணடிமைத்தனத்தினை நிலை நாட்டுகின்ற மதமாக உள்ளது. இசுலாமிய
மதம் ஆணாதிக்க மதம் என்று கூறுவதற்கு இதற்கு மேல் வேறு என்ன சான்று வேண்டும்.
”இறை நம்பிக்கை
கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய
வெட்கத் தளங்களைப் பாதுகாக்கட்டும். தங்களுடைய அழகை வெளியில் காட்ட்திருக்கட்டும்.
அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர ! மேலும் தங்களுடைய மார்புகள் மீது
தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்”
திருக்குர்
ஆன் அத்தியாயம் – 24. 25,26
மேற்கண்ட வரிகள்
வெளிப்படையாகவே சமூக மக்களால் எளிதில் கண்டு தெளியக் கூடியவை, இயல்பாகவே முஸ்லீம் பெண்கள்
பர்தா அணிவது புழக்கத்தில் உள்ளது. தங்களுடைய அழகை வெளியில் கட்ட்திருக்கட்டும் என்று
கூறும் மதம் ஆண்களுக்கு மட்டும் சுதந்திரமாக தங்களின் தோற்றத்தினை வெளிக்காட்டுவதற்கு
உரிமை வழங்கியுள்ளது எனில் இதனை ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட மதம் என்றுதானே சொல்ல வேண்டும்.
இது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்ப்பதற்காகவே பெண்ணிய நோக்கில் திருக்குர்
ஆன் வாசிக்கப் பட வேண்டிய அவசியம் உள்ளது. மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது.