முன்னைப்போல, மகுடம் – 1991.
மனோன்மனி, மாதவி இருவரும் சமூகச் சேவகிகளாக இருந்து வருகின்றனர். அதோடு மாதவி சேர்ந்து இயங்கி வரும் மகளிர் குழு ஒன்றில் தானும் சேர்ந்து சேவை செய்யும்படிக் கூறுகிறாள். ஆனால் மனோன்மனி எப்போதும் தனிமையையே விரும்புகிறாள் என்பதையும் உணர்கிறாள். அதற்கான காரணத்தை அறிய விரும்புகிறாள். மனோன்மனியின் தந்தை நாட்டுக்காக உழைத்து உயிர் நீத்தவர் ஆவார். அவர் இறந்த பிறகு தனித்து வாழ்ந்து வந்த போது காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக இருந்த அண்ணாமலை அறிமுகமானான். அறிமுகம் நாளடைவில் காதலானது. ஒருநாள் அண்ணாமலையின் தாத்தா இறந்துவிடவே அதற்கு ஊர் செல்ல வேண்டியிருப்பதால் திரும்பி வந்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் செல்கிறான். போன இடத்தில் தாத்தாவின் விருப்பப்படி உறவுக்காரப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்ய வேண்டிய நிலையில் அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். அந்தத் தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றுவிடுகிறான். அமைச்சராகிறான். மனோன்மணிக்கு வாக்குக் கூறிச் சென்றவன் திரும்பி வருவான் என்ற ஏக்கத்தில் காலத்தைக் கடத்துகிறாள். ஆண்டுகள் பல உருண்டோடின. ஒரு நாள் தன்னுடைய ஊரில் கட்சி ஒன்றில் அமைச்சர் ஒருவர் பேச இருப்பதை அறிந்து பார்க்கச் செல்கிறாள் மனோன்மணி. பேசுவது தன்னுடைய காதலன் என்பதை அறிந்து என்ன செய்வதென்று தெரியாமல், தன்னை ஏமாற்றி விட்டானே என்ற வருத்தத்துடன் வீடு திரும்புகிறாள். பேசி முடித்துவிட்டு மனோன்மணி வீட்டை நோக்கி வரும் அண்ணாமலை, நடந்த விசயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான். செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறான். காதலித்துத் திருமணம் செய்து கொள்ளாததற்கு பரிகாரமாக திருமணம் செய்து கொள்ளாத மனைவியாக வைத்துக் கொள்வதாகக் கூறுகிறான். கோபமடைந்த மணோன்மணி அவனை வீட்டை விட்டு வெளியேறும்படிக் கூறிவிடுகிறாள். வழக்கம்போல சமூகச் சேவகியாக செயல்படவேண்டும் என விரும்பி மாதவி கூறிய மகளிர் குழுவில் சேர்ந்து தொண்டாற்றத் துவங்குகிறாள்.