புதன், ஏப்ரல் 14, 2021

நாம் தமிழர்

 

நான் உங்கள் தமிழாசான் பேசுகின்றேன். ஏன் நாம் தமிழர் கட்சி தேவை?

ஏனென்றால் நாம் எல்லோரும் தமிழர். ‘நாம் தமிழர்’ என்பதை நினைவு கூறுவதற்கே இங்கு ஒரு கட்சி தொடங்கி உணர்த்த வேண்டியிருக்கின்றது. அந்த அளவிற்குத் தமிழனின் அடையாளங்கள் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

·         தமிழ் என்பது தனி மொழி மட்டுமல்ல உலகில் பல மொழிகள் உருவாவதற்கு மூலமாக விளங்கும் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி ஆகும்.

·         தமிழ் மொழி பல நாடுகள் ஒருங்கிணைந்த கண்டங்களில் (குமரிக்கண்டம்) பேசப்பட்டு வந்த மொழி. ஆனால் இன்று தமிழகத்தில்கூட சரிவர பேசமுடியாத அளவிற்கு மொழிப் போர்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

·         தமிழர் என்பது ஒரு இனமட்டுமல்ல உலகில் பல இனங்கள் தமிழர் இனத்திலிருந்துதான் உருப்பெற்றிருக்கின்றன என்பது வரலாற்று உண்மை.

·         உலகம் போற்றும் இனமாக பல நாடுகளில் வாழ்ந்து வந்த தமிழர் இனத்தை ஒரு மாநிலத்திற்குள் கூட வாழ விடாமல் அழிக்கும் முயற்சி இன்று நடந்து வருகின்றது. 

·         தமிழ் என்பது தனி மதம், தமிழிற்கு என்று தனிக் கடவுள்கள் இருக்கின்றனர். தமிழருக்கு என்று தனி வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. தமிழருக்கென்று வாழ்வியல் நெறிமுறைகளை இலக்கியங்கள் வகுத்திருக்கின்றன. இங்கே தமிழரின் மதங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழரின் கடவுளர்கள் மாற்றப்பட்டு விட்டனர். வழிபாட்டு முறைகளும் சிதைக்கப்பட்டு விட்டன. தமிழரின் வாழ்வியல் கேள்விக்குறியாக உள்ளது.

·         தமிழகத்தில் தமிழனால் தமிழர்கள் வழிபடுவதற்காகத் தமிழர்களைக் கொண்டு தமிழ் மொழிப்பற்றோடு கட்டப்பட்ட கோயில்களில்கூட தமிழ் மொழியில் வழிபாடு செய்ய முடியவில்லை.

·         இன்றைய இளந்தலைமுறையினர் தமிழ் மொழியினை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும்கூட தடுமாறும் அளவிற்குப் பிற மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழை அழித்து வருகின்றனர்.

·         உலகிற்கே நாகரிகத்தைக் கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள் (கீழடி ஆய்வு). அத்தகைய தமிழர்களின் பெருமைகளை மீட்டுருவாக்கம் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.

·         தமிழ் மொழி உயிரும் உடம்புமாக (மெய்) இயங்கும் வல்லமை பெற்றதை தமிழின் எழுத்துக்களே நமக்கு அடையாளப்படுத்துகின்றன.

·         சுருங்கச் சொன்னால் தமிழரின் மொழி, இனம், மதம், வரலாறு, கடவுள்கள், வழிபாட்டு முறைகள், வாழ்வியல் நெறிகள், வாழ்விடங்கள் என ஒன்றுவிடாமல் அத்தனையையும் அழிப்பதற்கான போர் நடந்து கொண்டிருக்கும் காலம் இது.  இந்தப் போரிலே எதிரிகளுக்குக் கைக்கூலிகளாக தமிழரின் மானத்தை அடமானம் வைத்து, திராவிடத்திற்குள் ஒழிந்துகொண்டு, பதவி ஆசையோடு பலர் எலும்புத் துண்டுகளுக்காக அலைகின்றனர். 

·         இந்தப் போரிலே நாம் வெற்றிபெற்று, நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ள, நம் அடையாளத்தை மீட்க, நம் இனத்தைக் காக்க, நமக்கு ஒரு மிகப்பெரிய ஆயுதம் தேவைப்படுகின்றது. அந்த மிகப்பெரிய ஆயுதமாக, தமிழனைக் காக்கும் மாற்று சக்தியாக உருவாயிருக்கும் கட்சிதான் நாம் தமிழர் கட்சி.

·         உரிய நேரத்தில் விழித்துக்கொண்டால் உரிமையை மீட்டு விடலாம், இழந்ததைப் பெற்று விடலாம், பெருமையை அடைந்து விடலாம், உலகம் போற்ற வாழலாம்.