ஞாயிறு, ஜூன் 20, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 3

 

கடைக்கு வெளியி சைக்கிள் பெல் சத்தம் கேகுது. மணி துக்காகவே  காத்திருந்த மாதிரி வேகவேகமாக எழுந்திருச்சு போயி நியூஸ் பேப்பர் வாங்கிட்டு வந்தாரு. வந்தவுடனேயே ஆளுக்கு ஒரு பேப்பரை வாங்கிக்கிடுவாங்க, அவங்க அவங்களுக்கு கிடைச்ச பக்கத்தை படிச்சு முடிச்சிட்டா ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்திடுவாங்க. ஒரு மணி நேரத்திற்கு அந்த நியூஸ் பேப்பர் அங்கிட்டும் இங்கிட்டும் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருக்கும். அதுக்குள்ள கசங்கி போயிடும் அப்புறம் என்ன? யாருமே சீண்டி பாக்காத அனாதையா ஒரு மூலையில் கெடக்கும். ஏய் எனக்கு அந்த தலைப்பு செய்தி பக்கத்த கொடுங்கப்பா! ஏய் எனக்கு உள்ள ஒரு செய்திய கொடுங்கப்பா! ஏய் எனக்கு காய்கறி மார்க்கெட் விலை போட்டு இருக்காங்க இல்ல அத கொடுங்கப்பா! என ஒவ்வொருவரும் அவங்க அவங்களுக்கு இருக்கிற ஆர்வத்துக்கு ஏற்ப அந்தந்த பக்கத்தை தேடுவாங்க. மணிக்கு எப்பவுமே அனையோட நீர்மட்டம் பார்க்கிறதும், ஆத்துல தண்ணி திறக்கிறது பத்தி ஏதாச்சும் போட்டிருக்காய்ங்களா   அப்படின்னு தான் முதல்ல பாப்பாரு. ஆத்துல தண்ணி வராத காலத்தில அந்த ரு பாலவனந்தான். ஆத்துல தண்ணி வந்தாதான் அந்த ஊரு சோலைவனம். விவசாயம் செய்யுற காலத்துல அந்த ஊரே சொர்க்க பூமியாத்தான் இருக்கும். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆத்துல ஓடுற தண்ணி வாய்க்கால் வழியாக வயலுக்கு ஓடுற அழகு பார்க்க பார்க்க மனம் கொள்ளாது. வயக்காட்டு பக்கம் போயிட்டா வீட்டுக்கு வர மனசே வராது. பச்சை பசேலுனு வயக்காடு குளுகுளுனு காத்தும் இருக்குறப்ப அதுக்கு மேல வேற ஒன்னும் வேணாம் அப்படிங்கற மாதிரி இருக்கும். அதுவே ஆத்துல தண்ணி நின்னு போச்சுனா கட்டாந்தரையில் காஞ்சு போன க்காடும் வெப்பக் காத்தும்தான் இருக்கும். கால தரையில் வைக்க முடியாது. குளம் குட்டைகூட தண்ணி இருக்காது. ஆடு மாடு தண்ணி குடிக்கணும்னாகூட எங்கேயாச்சும் அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்கிற கிணத்து தண்ணிதான். ஆறு மாசத்துக்கு சொர்க்கபூமி ஆறு மாசத்துக்கு நரக பூமி அப்படித்தான் அந்த ரு. ஆத்துல தண்ணி ஓடுவதுதான் அந்த ஊருக்கே அழகு. கேரளாவுல மழை விழுந்தா தான், இந்த ஊருக்கு தண்ணீர் பாசனம் கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது மழைப்பொழிவு தொடரும் பட்சத்தில் பத்து நாட்களில் தமிழக விவசாயத்திற்கு நீர் பாசனம் திறந்து விடப்படும்’. என வந்திருக்கும் செய்தியைப் பாத்ததும் மணி மனசுல மகிழ்ச்சி தாங்கல. ஏய் கேளுங்கப்பா! இன்னும் பத்து நாள்ல தண்ணி வந்துரும் ஆமப்பா பேப்பர்ல போட்டிருக்கு என உற்சாகத்துடன் பேசினார் மணி. எல்லோருக்கும் சந்தோசம் தாங்க முடியல வேகவேகமா அந்தப் பக்கத்தை வாங்கிப் பார்த்தனர். அட ஆமாம்பா அப்படித்தான் போட்டிருக்கு கடந்த ரெண்டு வருஷமா கேரளாவுல சரியான மழை இல்லை. அதனால ஆத்துல தண்ணி வரல நிறைய பேரு தண்ணி வந்துருமுனு முந்திக்கிட்டு நட்டதெல்லாம்  சாவியாத்தான் போச்சு. முன்னாடிலாம் வருஷத்துக்கு ரெண்டு போகம் தண்ணி வரும். இப்ப என்னடான்னா ஒரு போகத்துக்கு தண்ணி ர்ரதே பெரும் பாடா இருக்குது. போன ரெண்டு வருஷமா தண்ணி வராதுனா ஒரு சில பேரு வயக்காட்ட வித்துட்டாய்ங்க. ஒரு சில பேரு ஒத்திவச்சுப்புட்டு அதையும் வாங்கி தின்னுபுட்டு அனாமத்தா திரியுறாய்ங்க. அப்படித்தானப்பா மணி, நீயும் ஒரு ஏக்கரை அந்த ஊர்க்காரன்கிட்ட த்திக்கு வாங்கினேனு கேட்டார் மார்க்ஸ். அட ஆமாங்கயா எவன் மூஞ்சியில முழிச்சிட்டு போயி ஒத்திக்கு எடுத்தேனோ தெரியல. எடுத்த வருஷத்துல இருந்து இன்னும் ஒரு தடவை கூட வயல்ல நெல்லு போட்டு வெளஞ்ச பாடில்லை. துக்குப் பதிலா அந்தக் காசை வட்டிக்கு விட்டிருந்தா கூட ஏதோ நல்லா இருந்திருக்கும் போல தோணுது என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அட என்னடா எதுக்கு இப்படி சலிச்சுக்கிற இந்த வருஷம் நீ நெல்லு வேலைய வச்சிருவடா கவலைப்படாதடா என ருதல் கூறினார் மார்க்ஸ். டீய குடிச்சுப்புட்டு பேப்பரையும் படிச்சு முடிச்ச பெறகு ஆத்துல தண்ணி வந்துரும்கிற சந்தோசத்துல  அவங்க அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க. சரசு காலையில எந்திரிச்சி வாச தெளிச்சு கோலம் போட்டு ஒல வச்சுக்கிட்டிருந்தா. மணி வீட்டுக்கு வந்தவுடன் சரசுகிட்ட ஆத்துல தண்ணி வர போகுதுன்னு சொன்னாரு. ஒருபக்கம் சரசுக்கு சந்தோசம்தான் இருந்தாலும் அதோடு சேர்ந்து பயமும் ஒட்டிக்கிடுச்சு. ஏங்க! ஏற்கனவே போன ரெண்டு வருஷமா தண்ணி இல்லாம போனதால தண்ணி வந்துருமுனு நம்பி கடைசியில வெளையாம போனதுதான் மிச்சம். துக்குபட்ட கடன இன்னும் கட்ட முடியாம முழிச்சுக்கிட்டு இருக்கோம். இந்த வருஷம்  என்ன நடக்கப் போகுதுன்னு நினைக்கிறப்ப ரொம்ப பயமா இருக்குங்க என புலம்பத் துவங்கிட்டாள் சரசு. என்ன ன்றது? வேலை செஞ்சாச்சும் வெள்ளாம நட்டுதானே ஆகனும். இந்த வருஷம் கேரளாவுல மழை நிறைய பேஞ்சிகிட்டு இருக்குதாம். 2 போகாம வரவேண்டிய தண்ணி ஒரு போகமா வரும் போல. ரெண்டு போகமுனா போன மாசமே தண்ணி வந்திருக்கனும். இனிமேதான் தண்ணி வருமுனா அது ஒரு போகம் தான். ஒரு போகம்னா எப்படியும் வெளஞ்சிடும். நீ வேணா பாரு இந்த வருஷம் வெளஞ்சா அதுல நாம வாங்கின கடனையும் அடச்சது போக இனிமே நமக்கு வீட்டு அரிசி சாப்பாடுதான். ரேஷன் அரிசியை மாவா அரச்சு. இட்லி தோசைக்கு மட்டும் வச்சுக்குவோம். சாப்பாட்டுக்கு வீட்டுக்கு அரிசிய சமச்சு சாப்பிட்டுக்கிருவோம்.  தொடர்ந்து ரெண்டு மூணு வருஷத்துக்கு விவசாயம் பண்ணிட்டோமுனா நமக்கு இருக்கிற கஷ்டமெல்லாம் கொறஞ்சிடும். அப்புறம் எப்பவுமே வீட்டரிசிச்சோறு சாப்பிடலாம்னு மணி சரசுவின் சந்தோஷத்துக்கு விளக்கம் கொடுத்துக்கிட்டிருந்தார்.  

           

சொல்றது கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. பாருங்க! அந்த கடைசி வாண்டு சரவணன் சோறு சரியா திங்க மாட்டேங்குது. கேட்டா ரேஷன் அரிசி பிடிக்கலையாம். வீட்டு அரிசிதான் வேணுமாம். இல்லனா கடையில அரிசி விக்கிறாங்க வாங்கி சமைனு சொல்றான். கடையில வாங்கி சமைக்கிற அளவுக்கா நம்ம நிலைமை இருக்குது. சலித்துக்கொண்டாள் சரசு. என்னம்மா ன்றது? வயசுப்பசங்களா வந்துட்டாய்ங்க. வாய்க்கு ருசியா சாப்பிடணும்னு பசங்களுக்கு தோனத்தான் செய்யும். அப்படித்தான் இனிமே வீட்டு அரிசி சாப்பிட வேணுமுன்னு தானே அந்த வயக்காட்ட ஒத்திக்கு புடிச்சம். நம்ம நேரமோ என்னமோ ஒத்திக்குப் புடிச்ச வருஷத்துல இருந்து விவசாயம் சரி வரல. பாப்போம் இந்த வருஷம் நல்லது நடக்குதா? எங்க இவய்ங்கன்னமா தூங்குறாய்ங்க. கொஞ்சம் வெள்ளனா எந்திரிச்சு கடையை தொறந்து வெச்சதானே டவுனுக்குள்ள வேலைக்கு போற ஆளுங்க எல்லாம் ஜெராக்ஸ் எடுப்பாங்க. இப்படித் தூங்கினா எப்படி பொழப்பு நடத்துறது. அதுல கெடைக்கிற அஞ்சு பத்த வச்சுதான் அப்பப்ப வீட்டு செலவு அடயிது. அதை ஏன் இப்படி அடைச்சு போட்டுட்டு வீட்டில் இருந்தா சரிவருமா? விய்ங்கள எழுப்பு என்றார் மணி. ஆமா நானும் காலையிலயிருந்து தொண்டைத் தண்ணி போக கத்திக்கிட்டுதான் இருக்கேன். இந்த இங்க கெடக்கே உன் புள்ள கடைசியா பெத்தது. பொம்பள புள்ள வேணும் பொம்பள புள்ள வேணுமுன்னு நாலும் ஆம்பளப் புள்ளையா போச்சு. கடைசியாவது பொம்பள புள்ளையா பொறக்கும், கைக்கு தாச்சும் ஒத்தாசைக்கு இருக்குமுன்னு நினைச்சேன். அதுவும் ஆம்பளப் புள்ளையா வந்து பொறந்திருச்சு. இப்ப என்னடான்னா கடுகு வாங்கிட்டு வர்றதுக்கு கடைக்கு போயிட்டு வாடானா போக மாட்டேன்னு கிடக்குது. எம்புட்டு சவடால் பேசுதுனு நினைக்கிறீங்க. எல்லாம் அப்பன மாதிரிதானே இருக்கும் என தன்னுடைய ஆதங்கத்தை கூறிக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள் சரசு. இவ என்னடி  ஆ ஊனா என்னையவே கொற சொல்றவ. நானுந்தான் பொம்பள புள்ள வேணுமுனு நெனச்சேன். அதுக்கு என்ன ன்றது. வயசுப் பசங்க தோளுக்கு மேல வளந்த பிள்ளைகளை இனி போய் கை நீட்டினா நல்லாவா இருக்கும்? இந்த வயசுல கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாய்ங்க. நீ கொணமா சொல்ற விதமா சொன்னா கேப்பாய்ங்க. நீ காலங்காத்தால நாய் குரைக்கிற மாதிரி விழுந்திருப்ப தான் எகத்தாளம் பேசி இருப்பாய்ங்க. இப்ப என்ன ஆயிப்போச்சு? என்ன வாங்கனும்னு சொல்லு! நான் போயி வாங்கிட்டு வர்றேன்னு பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்கத் தொடங்கினார். மணிக்கு நான்கு பிள்ளைகளும் நாலு தங்கங்கள்தான். யாரையும் கடுமையா பேசமாட்டார். தேவையில்லாம பசங்ககிட்ட கோபத்த காட்டமாட்டார் அதனாலேயே ரசுக்கும் ணிக்கும் அடிக்கடி சண்டை ர்ரதுண்டு.