ஞாயிறு, ஜூன் 20, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 4

 

நீங்க ஒன்னும் கிழிக்க வேணாம். மூத்தவன் கடைக்கு போயிருக்கான். பிள்ளைகளை கண்டிச்சு க்கல, அதை விட்டுவிட்டு இப்படி வலுவட்டயா பிள்ளைகளை வளத்தா குடும்பம் வெளங்கிடும். அப்புறம் எப்படி இருக்கும் உங்கள மாதிரிதான் அடங்கா இருக்குமுன்னு டிந்துகொண்டாள் சரசு. அட  யாருடா இவ? என்னைய குறை சொல்லுவதிலேயே குறியா இருக்கா. நான் இங்க உக்காந்ததுக்குப் பதிலா வயக்காட்டுக்குப் பக்கமா போயிருக்கலாம் போல. சரி, நான் மம்பட்டியும் கடப்பாரையும் எடுத்துக்கிட்டு வயலுக்கு போறேன். மூத்தவன் ந்ததும் பசங்கள கூட்டிகிட்டு வயலுக்கு வரச்சொல்லு. வயல்ல கருவை மண்டிக்கெடக்கு. எல்லாத்தையும் வேரோடு பிடுங்கி எறியனும். கஞ்சி கொண்டுக்கிட்டு நீயும் அப்புறமா வந்து சேரு.  ருக்களையும் மண்டிக்கெடக்கு. வேர்கட்டைகள தோண்டனும் இன்னைக்கு ஆரம்பிச்சாதான் முடிக்கிறதுக்கு மூனு நாளாச்சும் ஆகும் என்று சொல்லிக்கிட்டே மெல்ல நகர்ந்தார். பாலு காய வச்சிருக்கேன் ஒரு மடக்கு குடிச்சிட்டு போறதுன்னு சரசு முனுமுனுத்தாள். நான் இப்பதான் கடையில டீ குடிச்சேன். பசங்க எந்திரிச்ச ஒடனே  குடிக்கச் சொல்லுனு சொல்லிக்கிட்டே கடப்பாரையும் ம்மபட்டியும் எடுத்துக்கிட்டு வயலை நோக்கி நடக்க ஆரம்புச்சாரு. மா நீங்க குடிச்சுட்டாலும்னு சொல்லிக்கிட்டு   சோத்த வடிச்சுட்டு குழம்பு வைக்கிற வேலையில மும்முரமாக ஈடுபட தொடங்கினாள். கடுகு வாங்கிக்கொண்டு வேந்தன் வந்ததும் மணி வயலுக்கு கிளம்புறதைப் பார்த்துட்டு என்னப்பா மம்பட்டிய தூங்கிகிட்டு காலங்காத்தால எங்கே கிளம்பிட்டீங்க?  வயலுக்கா? என்றான் வேந்தன். அட ஆமாம்பா காத்தால தானே பேப்பர்ல பார்த்தேன். சீக்கிரமாவே ஆத்துல தண்ணி வந்துருமுனு போட்டு இருந்துச்சு. அதான் நம்ம வயல்ல கருவ வளர்ந்து கிடைக்கல அதை தோண்டி போடலாம்னு  கிளம்புறேன்னு துண்ட தோளில போட்டுக்கிட்டு மம்பட்டிய கையிலெடுத்தார். சரி நானும் வரேன் நாம ரெண்டு பேரும் முதல்ல  போவோம் அப்புறம் தம்பிகளை கூட்டிக்கிட்டு அம்மா பின்னாடி வரட்டும் என்று அவனும் ஒரு மம்பட்டிய கையில எடுத்தான். அப்பாவ தனியா அனுப்புறதுல அவனுக்கு இஷ்டமில்ல. ஒரு ஆளா வெட்டுவதற்கு இரண்டு பேர் சேர்ந்து வெட்டுனா ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கும்லனு சொல்லிக்கிட்டு அப்பாவுடன் கிளம்பினான் வேந்தன்.

மணியின் மூத்த மகனான வேந்தன ஏதாவது வேல சொல்லனுமுனா மணிக்கு மனசே வராது. அப்பாவ தனியா அனுப்புறதுக்கு வேந்தனுக்கு மனசே வரல. வேந்தனோட படிப்பு விசயத்துல அவரு எப்பவுமே பெரும பட்டுக்குருவாறு, சில நேரங்கள்ல வேந்தன் பற்றி யாருக்கிட்ட யாச்சும் பெருமையா பேசும்போது சொல்லுவாரு. கலைஞரு என்ன கலைஞரு அவரவிட நாந்தான் பெரியாளுனு சொல்லுவாரு. அப்படி என்னயா கலைஞர விட நீ பெரியாளுனு யாராச்சும் கேட்டா, என்னாதன் சி.எம் இருந்தாலும் நான் எம்புள்ளய படிக்க வச்ச அளவுக்கு அவரு ஒன்னும் அவரோட புள்ளைகள படிக்க வைக்கலேல. அப்பனா அவரவிட நாந்தானெ பெரியாளுனு சொல்லீட்டு சிரிப்பாரு. கேக்குறவுங்களும் நீ அப்படி சொல்ல வர்ரியா? படிப்பு விசயத்துல உன் புள்ள படிச்ச அளவுக்கு இந்த சுத்துப்பட்டி ஊருலயே யாரும் படிக்கலையா? எம்புட்டு பெரிய படிப்பு படிச்சிருக்காரு, அம்புட்டு தூரம் போயி படிச்சிட்டு வந்திருக்காரு. அவரு மட்டும் வெலைக்குப் போயிட்டாப்புலனா உனக்கென்னா ராஜாமாதிரி உக்காந்துட்டே சாப்பிடலாம். அதுக்கப்புறம் உன்ன புடிக்க முடியுமா? மணி. என்று யாராச்சும் சொல்லீட்டாங்கனா மணிக்கு தலைகால் புரியாது. என்ன பன்றது என்னதான் படிக்க வச்சாலும் இந்தக் காலத்துல கவர்மெண்டு வேல கெடைக்கிறது குதிர கொம்பாட்டம் இருக்குது. நாடே லஞ்சத்துல மூழ்கிக் கெடக்குது. ஒரு காலத்துல எட்டாப்பு படிச்சிருந்தாலே தேடித் தேடி பிடிச்சு வேல கொடுத்தாங்க. இப்ப என்னடானா வேலைக்கு ஏத்தாபுல படிச்சிருந்தா மட்டும் போதாது அதுக்கு ஏத்தாப்புல காசும் வச்சிருக்கனும் அப்பத்தான் வேலை கெடைக்குது. அதுவும் கொஞ்சம் நெஞ்சமா கேக்கிறானுக. ஒரேதா பல லட்சரூபாயில கேக்குறானுக. இப்பெல்லாம் காசு இருக்கிறவந்தான் படிக்கனும் அப்பத்தான் வேலையும் கெடைக்குது. தெறமைக்கு வேலை, ஒழைப்புக்கு ஊதியமுங்குற காலமெல்லாம் மலையேறிப்போச்சு. காசு இருக்குறவந்தான் இப்பெல்லாம் காசு சேர்த்துக்கிட்டு இருக்கான். இல்லாதவன் கடைசிவரைக்கும் இல்லாதவனா போய்க்கிட்டுதான் இருக்கான் என்று புலம்பத் துவங்கிவிடுவார். அவரு சத்துக்கு இதுவே பெரிய சாதனையா நெனைக்குறாரு இதுக்கு மேலையும் காசு கட்டுனாதான் வேலைனா அவரு எங்க போவாரு பாவம். இந்த மாதிரி இக்கட்டான நிலமைலதான் அவருக்கு கடவுளோட நெனப்பே வரும். அவருக்கு தெரிஞ்ச கடவுள் எல்லாருக்கிட்டேயும் சொல்லி   புலம்புவாரு. அதுக்கப்புறம் வழக்கம்போல அவரோட வேலையப் பாக்கத் துவங்கிருவாரு. வேந்தனும் மணியும் ஆத்துக் கரையில நடந்து போய்க்கொண்டிருந்தப்போ தூரத்துல  கருப்பு உருவமும் வெள்ளைக் கோவனுமுமா ஒரு பெரி மனுசன பார்த்து ஏம்பா அது நம்ம மார்க்ஸ் ஐயாதானே. எப்படிப்பா இவ்வளவு வெள்ளனா, நமக்கு முன்னாடி வந்து இங்க என்னப்பா பன்றாறுன்னான் மணி.

என்னதான் வியாக்ஞானம் பேசினாலும் அவருக்கு பொலப்புனு பார்த்தா நம்மல மாதிரி வெவசாயந்தானப்பா. அவரு வயசுக்கு இந்நேரம் காரியமா பொலச்சிருந்தாருனா இந்த ஏரியாவுலயே பெரிய ஆளா ஆயிருப்பாரு. பெரிய பெரிய பதிவிக்குப் போயிருப்பாரு. இப்படி வயலுல வந்து நின்னிருக்க மாட்டாரு. உண்மையான கம்யூனிசம் பேசுனாவே இப்படித்தாம்பா நடக்கும் போலித்தனமா ஊருக்குள்ள ஒன்னு, உள்ளுக்குள்ள ஒன்னு பேசுனவிங்களெல்லாம் இப்ப பெரிய ஆளா ஆயிட்டாய்ங்க. இவரு உண்மையா இருக்கேன்னு சொல்லிக்கிட்டு இன்னும் இந்த நிலத்தோட மல்லுக்கட்டிக்கிட்டு கெடக்குறாரு. உலகம் போர போக்க பாத்தா உண்மைக்கு இடமில்லப்பானு” பெருமூச்சு விட்டுகிட்டு வந்தாரு மணி. உலகம் ரொம்ப கெட்டுக்கிடக்கு நீயாச்சும் கொஞ்சம் சூதானமா பொலச்சுக்கப்பா. நல்லவனெல்லாம் நோவுறான் கெட்டவனெல்லாம் வாழுறானு சொல்லிக்கிட்டே மார்க்சின் வயலைக் கடந்து ரெண்டுபேரும் போனாங்க.  

என்னப்பா மணி! உன் பிள்ளைய கூட்டிக்கிட்டு எங்க கெளம்பிட்ட. வயலுல கருவ மண்டிக்கெடக்குயா, அத தோண்டிப்புடலாமுனு போரோம்.  அட ஆமாம்பா இங்கேயும் அதே நெலமதான். ஒரு காலத்துல எங்க தாத்தன் சொல்லுவாரு. ஆறு மாசம் வயல ஒன்னும் பன்னாம போட்டுட்டோமுனா எருக்கல செடியும், கொழிஞ்சிச் செடியும் தும்பச் செடியுமா மண்டிப் போயிடுமுடா. ஆத்துல தண்ணி வர்ர நேரமா பாத்து அந்த செடியெல்லாத்தையும் அப்படியே அமுக்கி உழுது போட்டோமுனா வையி. வயலுக்கு வேர ஒரமே தேவயில்லடா. மண்ணுக்கு தெரியுமுடா எப்படி தன்ன வளப்படுத்திக்கிடனுமுனு. இப்ப என்னடானா எந்தச் சீமையில் ருந்து கொண்டாந்தாய்ங்களோ தெரியல எலவு, த் எந்த செடியையும் வளரவிடாம இதுமட்டும் கெடமாட அவுத்துவிட்டமாதிரி மடமடனு வளர்ந்துகிட்டு வருதுடா. இது வளர ஆரம்பிச்ச உடனே மண்ணு செத்துப் போச்சு. அதுக்கப்பறம் இப்பெல்லாம் ஏதோ மூட்ட மூட்டையா கொட்டுறானுகளே அப்பவே மிச்சம் உள்ள உசுரும் போச்சு. அப்பறம் என்ன மயித்துக்கு செத்த பொனத்தோட மல்லுக்கட்டிக்கிட்டு கெடக்குறானுகனு தெரியலப்பாம்பாரு. அதத்தானே இப்ப நாம செஞ்சிக்கிட்டு இருக்கோம். என்ன அரசே உங்களுக்குத் தெரியாதா என்ன? என்று கூறிவிட்டு வேந்தனை நிமிர்ந்து பார்த்தார். வேந்தனை அவர் ப்பவுமே அப்படித்தான் கூப்பிடுவாரு. அதற்கு அவரைப் பார்த்து சரி என்பதுபோல் சிரித்துக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினான். மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மார்க்சை வேந்தனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய நேர்மை. பாரபட்சம் பாக்காத வெள்ளந்தியான பேச்சு. பாசிக்கிட்டு இருக்கும் போதே அவருக்கே உரிய தொனியில வருகிற சிரிப்பு. துக்கத்தையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்துற போது ஏற்படுகிர உடல்மொழி என மார்க்ஸ் து பேசினாலும் ரசிச்சு கேப்பான் வேந்தன். அவரு தெரியாம ஏதாவது தவறா சொன்னாகூட அத அவனுக்கு மறுத்துப் பேச தோனாது. சரினுதான் தலையாட்டுவான். அது அவரோட அறியாமைனு விட்டுடுவான். அவருக்கிட்ட அவனுக்குப் பிடிச்ச விசயமே அந்த நிலையிலேயும் அவரோட கொள்கைக்காக அவரு வாழனுமுனு நெனைக்கிறதுதான். இந்த மாதிரி வாழ்றதே ஒரு கெத்துதானு நெனச்சுக்குவான்.

சரி, சரி சீக்கிரம் போங்க, வெயிலு ஏறுறதுக்குள்ள வேலைய ஆரம்பிச்சாத்தான் நல்லது. அப்பறம் உச்சி வெயிலு மண்டய பொலந்துகிட்டு அடிக்கும். செடியின் வேரை நோக்கிக் குத்தத் துவங்கினார் மார்க்ஸ். மணியும் வேந்தனும் மார்க்சின் வயலைக் கடந்து அவர்களது வயலை நோக்கி நடந்து சென்றனர்.