புதன், ஆகஸ்ட் 25, 2021

இலக்கியத் திறனாய்வு ஒரு மதிப்பெண் வினா வங்கி

 இலக்கியத் திறனாய்வு                                             வினாத் தயாரிப்பு: பேரா. R. பழனிச்சாமி

ஒரு மதிப்பெண் வினா வங்கி


அலகு 1

1.      இலக்கியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளச் செய்பவர் யார்?

அ. படைப்பாளர்                               ஆ. கவிஞர்

இ. திறனாய்வாளர்                           ஈ. நூலகம்                                     விடை: இ

2.      நீதிமன்றத்தில் வழக்குகளை ஆராய்வது போல் இலக்கியத்தை விமர்சிப்பவர் யார்?

அ. திறனாய்வாளர்                           ஆ. நடுவர்                                         

இ. எழுத்தர்                                        ஈ. வழக்கறிஞர்                              விடை: அ

3.      திறனாய்வு வகைகள் எத்தனை?

அ. 9                ஆ. 8               இ. 7                ஈ. 10                                  விடை: ஈ

4.      ஒரு படைப்பை அதன் அடிப்படை கொண்டு ஆராய்வது எது?

அ. அடிப்படைத் திறனாய்வு           ஆ. படைப்புவழித் திறனாய்வு

இ. விதிமுறைத் திறனாய்வு             ஈ. மரபுவழித் திறனாய்வு                 விடை: ஆ

5.      பழந்தமிழ் இலக்கியத்திற்கு முதன்மை அளிக்கும் திறனாய்வு எது?

அ. விளக்கமுறைத் திறனாய்வு,      ஆ. படைப்புவழித் திறனாய்வு

இ. விதிமுறைத் திறனாய்வு             ஈ. மரபுவழித் திறனாய்வு               விடை: ஈ

6.      மறுமலர்ச்சி இலக்கியக் காலத்தில் இங்கிலாந்தில் தோன்றிய திறனாய்வு வகையைத் தேர்க

அ. ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு,    ஆ. படைப்புவழித் திறனாய்வு

இ. விதிமுறைத் திறனாய்வு             ஈ. மரபுவழித் திறனாய்வு                 விடை: இ

7.     இலக்கியத்தின் வெவ்வேறு பொருளைத் தொகுத்தும் வகுத்தும் சொல்லும் முறை எது?

அ. ஒப்பீட்டு முறை                           ஆ. விளக்கமுறை

இ. விதிமுறை                                    ஈ. கவிஞர் முறை                           விடை: ஆ

8.     பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தோன்றிய முதல் காப்பியம் எது?

அ. சிலப்பதிகாரம்                             ஆ. வளையாபதி                              

இ. சீவகசிந்தாமணி                          ஈ. குண்டலகேசி                             விடை: அ

9.     இலக்கியத்தின் அழகுத் தன்மையை விவரிக்கும் திறனாய்வைக் கண்டறிக.

அ. முருகியல் முறைத்திறனாய்வு   ஆ. மதிப்பீட்டுத்திறனாய்வு

இ. விளக்கமுறைத் திறனாய்வு       ஈ. மூலபாடத் திறனாய்வு                விடை: அ

10.  இலக்கியத்தின் பயன் யாது?

அ. வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைத்தல்

ஆ. ஆரம்பகாலம் தொழல்

இ. இலக்கியப் போக்கை அறிதல்

ஈ. வாழ்க்கையை ஒப்பிடுதல்                                                                   விடை: அ

11.  தற்காலக் கவிதை இலக்கிய வடிவத்தைத் தேர்க?

அ. புதுக்கவிதை                                ஆ, மரபுக்கவிதை

இ. செய்யுள்                                       ஈ. வெண்பா                                  விடை: அ

12.  புதிய சிந்தனைகளைக் கொண்டு வருவதற்கு அடிப்படை எது?

அ. உவமை                                        ஆ. உருவகம்

இ. கற்பனை                                      ஈ. அரங்கேற்றம்                            விடை: இ

13.  கற்பனையின் வகைகள் எத்தனை?

அ. 2                ஆ. 3               இ. 5                ஈ. 4                                   விடை: ஆ

14.  இலக்கியத்தை அழகுற அமைக்கப் பயன்படுத்தப்படுவது எது?

அ. திறனாய்வு                                   ஆ. உத்திகள்

இ. கற்பனை                                      ஈ. உணர்வு                                   விடை: ஆ

15.  இலக்கிய உத்திகளில் ஒன்று எது?

அ. கற்பனை                                      ஆ. அரங்கேற்றம்

இ. உவமை                                        ஈ. இயைபு                                     விடை: இ

16.  கடவுளும் கந்தசாமிபிள்ளையும் என்னும் சிறுகதையின் உத்தியைக் குறிப்பிடுக.

அ. அங்கதம்                                      ஆ. உவமை

இ. நனவோடை                                ஈ. பின்னோக்கு முறை                   விடை: அ

17.  இலக்கியத்தின் தரத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் செயல்பாட்டு முறை எது?

அ. பயன்பாட்டு முறை                     ஆ. இலக்கியத் திறனாய்வு

இ. படைப்புக் கற்பனை                   ஈ. இலக்கணம்                                விடை: ஆ

18.  திறனாய்வின் காலம் என அறிஞர்களால் குறிப்பிடப்படுவது?

அ. கிபி. 17                                         ஆ. கி.பி. 18, 19        

இ. கி.பி. 10                                        ஈ. கி.பி. 15, 16                             விடை: ஆ

19.  தொடக்கக் காலத் தமிழ் இலக்கியத் திறனாய்வின் வடிவம் யாது?

அ. கவிதை                                         ஆ. கட்டுரை

இ. உரைநடை                                   ஈ. அரங்கேற்றம்                            விடை: ஈ

20.  உள்ளத்தின் கோணங்களை ஆராய்கிற அறிவியல் முறை எது?

அ. உளவியல்                                    ஆ. இயற்பியல்

இ. நுண்ணுயிரியல்                          ஈ. வாழ்வியல்                                  விடை: அ

21.  ஒரு கவிதையின் மையக்கருத்து என்று சொல்லப்படுவதைத் தேர்க?

அ. மனநிலை                                     ஆ. கவிதை

இ. உள்ளடக்கம்                               ஈ. உருவம்                                       விடை: ஈ

22.  பிராய்டு காட்டும் உளவியல் மனநிலையில் முதன்மையானது எது?

அ. ஒடிபஸ் மனநிலை                      ஆ. பண்பாட்டு மனநிலை

இ. இலக்கிய மனநிலை                   ஈ. அடிமனநிலை                            விடை: அ

23.  சங்ககாலக் கவிதை எதனால் கட்டப்பட்டது?

அ. கட்டுதல்               ஆ. யாப்பு       இ. அணி        ஈ. மனநிலை            விடை: ஆ

24.  தலைமாந்தர்களின் காதல் வாழ்வை குறிப்பிடும் முறைமை எது?

அ. புறம்         ஆ. உருவகம்             இ.அகம்         ஈ. உவமம்                 விடை: இ

25.  உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியன எக்காலத்தைச் சார்ந்தன?

அ. தற்காலம்                                                 ஆ. சங்ககாலம்

ஆ. இடைக்காலம்                             ஈ. பல்லவர்காலம்                          விடை: ஆ

26.  எஸ்.வையாபுரிப்பிள்ளை வெளியிட்ட நூல்களில் முதன்மையானது எது?

அ. நிகண்டுகள்                                 ஆ. தமிழ் அகராதி

இ. இலக்கணம்                                 ஈ. காவியம்                                    விடை: ஆ

27.  கம்பராமாயணத்தின் சிறப்பினைக்கூறும் நூலினைத் தேர்க.

அ. சூறாவளி                                                 ஆ. ஊரும் பேரும்

இ. காவிய காலம்                             ஈ. கம்பன் காவியம்                          விடை: ஈ

28.  எஸ். வையாபுரிப்பிள்ளை எத்தனை நூல்களைப் பதிப்பித்துள்ளார்?

அ. 30             ஆ, 35             இ. 42             ஈ. 52                                   விடை: இ

29.  க.நா.சு நூல்களில் இன்றளவும் பேசப்படக்கூடியது எது?

அ. சோம்பானம்                                ஆ. பொய்த்தேவு

இ. திறனாய்வு வரலாறு                   ஈ. சூறாவளி                                    விடை: ஆ

30.  மு.வ. எழுதிய புதினத்தைத் தேர்க.

அ. அகல்விளக்கு                              ஆ. இயற்கை

இ. முல்லை                                        ஈ. எளிமை                                    விடை: அ 

31.  மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராய் பணியாற்றிய திறனாய்வாளர் யார்?

அ. டாக்டர் சிவசிப்பிரமணியன்     ஆ. டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

இ. டாக்டர் மு. வரதராசன்              ஈ. டாக்டர். நெ. து. சுந்தரவடிவேலு

விடை: இ

32.  அரைமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை படிக்கப்படக்கூடிய இலக்கிய வடிவம் எது?

அ. நாவல்       ஆ. சிறுகதை             இ. கவிதை     ஈ. காவியம்              விடை: ஆ

33.  கதை மாந்தர் பலரைக் கொண்டு படைக்கப்படுவது?

அ. கவிதை     ஆ. புதினம்    இ. சிறுகதை              ஈ. ஹைக்கூ             விடை: ஆ

34.  கற்பனை வகைகளைக் கூறிய அறிஞர் பெயரைச் சுட்டுக.

அ. கவிமணி                                      ஆ. பாரதியார்

இ. வின்சென்டர்                               ஈ. ஆலன்போ                                 விடை: இ

35.  நல்ல கற்பனை, வெற்றுக் கற்பனை – இவற்றிடையே உள்ள வேற்றுமையைக் கூறியவர் யார்?

அ. சேம்ஸ்                                          ஆ. கோல்ரிட்ஜ்

இ. வின்சென்டர்                               ஈ. தொல்காப்பியர்                         விடை: ஆ

36.  இலக்கிய விமர்சனங்களை எவ்வாறு அழைக்கலாம்?

அ. படைப்பு                                       ஆ. திறனாய்வு

இ. கவிதை                                         ஈ. தத்துவம்                                   விடை: ஆ

37.  மிகச்சிறந்த இலக்கியத் திறனாய்வாளர் யார்?

அ. எங்கெல்ஸ்                                  ஆ. டால்ஸ்டாய்

இ. பெஞ்சமின்                                  ஈ. பிராய்டு                                     விடை: அ

38.  உள்ளங் கவர்ந்ததையும் கண்ட காட்சிகளையும் வெளிப்படுத்துவது எது?

அ. இலக்கியம்                                  ஆ. கவிதை

இ. உரைநடை                                   ஈ. காவியம்                                    விடை: அ

39.  தமிழ்த் தினாய்வுக்கு முன்னோடியாக எவற்றைக் குறிப்பிடலாம்?

அ. இலக்கண நூல்கள்                     ஆ. இலக்கிய நூல்கள்

இ. உரை நூல்கள்                             ஈ. கவிதை நூல்கள்                        விடை: இ

40.  இன்றும் ஓர் அமர காவியமாய் விளங்கும் நூலினைத் தேர்க.

அ. நீலகேசி                                       ஆ. குண்டலகேசி     

இ. சூளாமணி                                    ஈ. கம்பராமாயணம்                        விடை: ஈ

41.  பல நூல்களைக் கற்றுச் சிறந்த புலமை உடையவராக இருப்பவர் யார்?

அ. விமர்சகர்                                                 ஆ. திறனாய்வாளர்

இ. அறிஞர்                                        ஈ. கவிஞர்                                     விடை: ஆ

42.  திறனாய்வுக்குத் தேவையானவற்றுள் ஒன்றைத் தேர்க.

அ. படைப்பாளுமை                         ஆ. கற்பனை வளம்

இ. குறைக்கண்                                 ஈ. பன்மொழிப் புலமை                  விடை: ஈ

43.  ஒரு படைப்பின் அடிப்படை அமைப்பைக் கொண்டு ஆராயும் முறை எது?

அ. மதிப்பீட்டு முறை                       ஆ. வரலாற்று முறை

இ. படைப்புவழிமுறை                     ஈ. விதிமுறை                                   விடை: இ

44.  இலக்கியத்திற்கு முதன்மை அளிக்கும் திறனாய்வைத் தேர்க.

அ. படைப்புவழித் திறனாய்வு        ஆ. முருகியல் திறனாய்வு

இ. வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு                 விடை: அ

45.  ஆய்வு செய்வோருக்கு உரிய செய்திகளை எடுத்துச் சொல்வது

அ. படைப்புவழித் திறனாய்வு        ஆ. முருகியல் திறனாய்வு

இ. வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு                 விடை: ஈ

46.  திறனாய்வு வகைகளில் காலத்தால் முந்தியது எது?

அ. படைப்புவழித் திறனாய்வு        ஆ. விதிமுறைத் திறனாய்வு

இ. வரலாற்று முறைத் திறனாய்வு             ஈ. மரபுவழித் திறனாய்வு        விடை: ஆ

47.  விதிமுறைத் திறனாய்வைப் போற்றியவர் யார்?

அ. ஹாரஸ்                                        ஆ. எங்கல்ஸ்

இ. வின்சென்டர்                               ஈ. ரூசோ                                        விடை: அ

48.  அழகு, கற்பனை கொண்டு ஆராயும் திறனாய்வு எது?

அ. படைப்புவழித் திறனாய்வு        ஆ. முருகியல் திறனாய்வு

இ. வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு                 விடை: ஆ

49.  19ஆம் நூற்றாண்டில் இலக்கிய முருகியல் துறையின் முன்னோடியாக விளங்கியவர்.

அ. ரிஸ்கி       ஆ. எல்டர்      இ. கோல்ட்ரிஜ்         ஈ. ரிக்காட்ஸ்             விடை: இ

50.  இன்றைய ஆய்வு உலகில் பெரும்பாலும் பின்பற்றப்படும் திறனாய்வு வகை எது?

அ. விளக்கமுறைத் திறனாய்வு       ஆ. முருகியல் திறனாய்வு

இ. வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு                 விடை: அ

51.  இலக்கியத்தின் தரத்தையும் தகுதியையும் குறிப்பிடும் திறனாய்வு எது?

அ. படைப்புவழித் திறனாய்வு        ஆ. முருகியல் திறனாய்வு

இ. மதிப்பீட்டு முறைத் திறனாய்வு            ஈ. மரபுவழித் திறனாய்வு        விடை: இ

52.  மானுடம் வென்ற வரலாற்றைக் கூறும் காப்பியம்?

அ. சிலப்பதிகாரம்                             ஆ. கம்பராமாயணம்

இ. வளையாபதி                                ஈ. மணிமேகலை                            விடை: ஆ

53.  இலக்கியத்தை வாழ்க்கையின் வெளியீடு என்று கூறியவரைத் தேர்க.

அ. ஹட்சன்                                        ஆ. ரெனிவெல்லக்   

இ. டால்ஸ்டாய்                                ஈ. வின்சென்டர்                              விடை: அ

54.  வாழ்க்கையின் பிரதிபலிப்பாக விளங்குவது எது?

அ. இலக்கியம்                                  ஆ. கண்ணாடி

இ. வாழ்வுநிலை                                ஈ. கலை உணர்வு                          விடை: அ

55.  இலக்கியப் படைப்பிற்கு மூலகாரணமக விளங்குவது எது?

அ. மனிதநேயம்                                ஆ. மனிதனின் துடிப்புகள்

இ. கற்பனை                                      ஈ. வடிவம்                                     விடை: ஆ

56.  மனிதத் துடிப்புகளாக ஹட்சன் குறிப்பிடும் வகைகள் எத்தனை?

அ. 2                ஆ. 3               இ. 4                ஈ. 5                                   விடை: இ

57.  தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கிய உணர்ச்சிகள் எத்தனை?

அ. 8                ஆ. 9               இ. 7                ஈ. 10                                 விடை: அ

58.  பழகுவோரிடம் செல்லும் ஒருவகைப்பற்று எவ்வாறு அழைக்கப்படும்?

அ. அடக்கம்                                      ஆ. நலிதல்    

இ. அன்பு                                           ஈ. சூழ்ச்சி                                      விடை: இ

59.  எள்ளல், இளமை, பேதைமை, மடைமை ஆகியவை காரணமாக எழுவது

அ. அழுகை                                        ஆ. மருட்கை

இ. அச்சம்                                           ஈ. நகை                                          விடை: ஈ

60.  வின்செஸ்டர் இலக்கிய உணர்ச்சிகளை எத்தனை வகைப்படுத்துகிறார்?

அ. 5                ஆ. 4               இ. 3                ஈ. 6                                   விடை: அ

61.  கலை உலகில் பெரிதும் போற்றப்படும் திறம் எது?

அ. கற்பனை                                      ஆ. நடைமுறை

இ. வாழ்க்கை                                                ஈ. வடிவம்                         விடை: அ

62.  காட்சி, உணர்ச்சி, கருத்து ஆகியவற்றால் தோன்றுவது

அ.படைப்புக் கற்பனை                    ஆ. இயைபுக் கற்பனை

இ. கருத்து விளக்கக் கற்பனை        ஈ. வெறுங் கற்பனை                        விடை: ஆ

63.  இயற்கையாக நடப்பதில் தன் கற்பனையை ஏற்றி, தன் கருத்தைக் கூறும் கற்பனை எது?

அ.படைப்புக் கற்பனை                    ஆ. இயைபுக் கற்பனை

இ. கருத்து விளக்கக் கற்பனை        ஈ. வெறுங் கற்பனை                         விடை: இ

64.  கலைப்படைப்புகளில் தலையாய பகுதி எது?

அ. இயற்கை, மனித வாழ்க்கை      ஆ. கற்பனை, நடைமுறை

இ. உணர்ச்சி, மனநிலை                  ஈ. எதுவுமில்லை                             விடை: அ

65.  மனித வாழ்க்கையின் குறியீடாக இருப்பதைத் தேர்க.

அ. இயற்கை                                                 ஆ.செயற்கை

இ. பண்பு                                           ஈ. அறிவு                                       விடை: அ

66.  கவிதையை பா முறையில் அமைந்த ஒன்று எனக் குறிப்பிட்டவர் யார்?

அ. வோர்ட்ஸ் வொர்த்                     ஆ. ஜான்ஸன்

இ. டொய்ஸி                                    ஈ. மேத்யூ அர்னால்டு                      விடை: ஆ

67.  பொதுவாகக் கவிதை என்பது கற்பனையின் வெளியீடு என்று கூறியவர்

அ. ஜான்ஸன்                                    ஆ. டொய்ஸி

இ. ரஸ்கின்                                        ஈ. ஷெல்லி                                    விடை: ஈ

68.  கவிதைக் கூறுகளுள் முதன்மையானது எது?

அ. ஒலிநயம்                                      ஆ. மரபு

இ. புதுமை                                         ஈ. கற்பனை                                  விடை: அ

69.  கவிதைப் பற்றிய அடிப்படைக் கட்டமைப்பைக் கூறும் நூலைக் குறிப்பிடுக.

அ. தண்டியலங்காரம்                       ஆ.யாப்பருங்கலக்காரிகை

இ. நன்னூல்                                       ஈ. சின்னூல்                                  விடை: ஆ

70.  இன்றைய உலகில் வளர்ச்சி பெற்ற இலக்கியத்தின் ஒரு வகையாகக் குறிக்கப்படுவது.

அ. கட்டுரை                                       ஆ. புதினம்

இ. கவிதை                                         ஈ. பக்தி இலக்கியம்                      விடை: ஆ

71.  புதினக் கதை மாந்தரை இருவகையாகக் குறிப்பிட்டவர்.

அ. ஈ.எம். பாஸ்டர்                           ஆ. டொய்ஸி

இ. ரஸ்கின்                                        ஈ. ஷெல்லி                                    விடை: அ

72.  சிறிய அளவில் அமையும் கதைகளை எவ்வாறு குறிப்பிடலாம்?

அ. சிறுகதை                                      ஆ. புதினம்

இ. குறுங்கதை                                  ஈ. கவிதை                                      விடை: அ

73.  எழுதும் ஆசிரியர் எண்ணித்துணியும் வண்ணம் சிறுகதை அமையலாம் என்று கூறியவர் யார்?

அ. ஹெச்.இ. பேட்ஸ்                        ஆ. ஈ.எம்.பாஸ்டர்

இ. ஜான்ஸன்                                    ஈ. மேத்யூ அர்னால்டு                     விடை: அ

74.  ஒரு நாடகத்தின் உயிராக விளங்குவது

அ. வருணனை                                  ஆ. கதைக்கோப்பு

இ. இசை                                            ஈ. ஒளியமைப்பு                            விடை: ஆ

75.  நாடகம் மேற்கொள்ளுகின்ற செயல்பாட்டின் ஒருமையை வலியுறுத்தியவர் யார்?

அ. அரிஸ்டாட்டில்                           ஆ. வின்செஸ்டர்

                    இ. காரல்மார்க்ஸ்                             ஈ. ரூசோ                                          விடை: அ