செவ்வாய், ஆகஸ்ட் 17, 2021

பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் நினைவேந்தல் உரை

  பேராசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். மொழிபெயர்ப்பாளர் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குடும்பத்தில் நானும் ஒருவனாக இருந்து அவரை இழந்து வாடுகிறேன் என்பதை இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன். நான் அமெரிக்கன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் படிக்கின்ற பொழுது கோபிசந்த் நாரங்க் எழுதிய அந்த அமைப்பு மையவாதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல் புத்தகத்தை படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது மொழிபெயர்ப்பாளர் என்ற இடத்திற்குக் கீழே பாலசுப்பிரமணியம் என்ற ஒரு பெயர் இருந்தது. எனக்கு அது குறித்த அந்த அளவிற்கு ஒரு முக்கியத்துவமாக எனக்குத் தெரியவில்லை அவர் பெயர் நினைவில் இருந்தது. பாலசுப்பிரமணியம் எனும் பெயர் மூளையில் ஒரு ஓரமாக இருந்தது. 2011 ஜே.என்.யு இல் எனக்குப் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது நான் இளம் முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு இரு இந்தி பெண்ணியச் சிறுகதைகள் மொழிபெயர்ப்பும் சிக்கல்களும். அதில் இரண்டு பெண்ணிய சிறுகதை எழுத்தாளர்களை எடுக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டது அதில் ஒன்று மன்னுபண்டாரி அவருடைய திரிசங்கு.  நாச்சிமுத்து ஐயா அவர்கள் எனக்கு ஒரு சொன்னாங்க. அய்யா நீங்கள தயவுசெய்து மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று வழிகாட்டினார். ஆனால் நான் ஒரு ஆர்வத்தின் காரணமாக ஐயாவிடம் தர்க்கம் செய்து, ஐயா முடியாது நீங்கள் சொல்வதைப் போல நான் வேண்டுமென்றால் ஒரு சிறுகதை மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதையை எடுத்துக்கொள்கிறேன். கண்டிப்பாக நான் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்தே தீருவேன் என்று நான் வாதம் செய்தேன். அதற்கு அவர் இது மிகவும் கடினமான செயல் என்று சொல்லினார் இருந்தாலும் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னார். ஆனால் மொழிபெயர்ப்பிலே ஈடுபடுகின்ற போது சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. ஏதோ அவசரப்பட்டு ஒரு ஆர்வத்துல நாம் இறங்கி விட்டோமோ! ஆனால் மிகவும் கடினமானதாக இருக்கிறதே. மொழிபெயர்ப்பான சிறுகதையை தமிழிலேயே படித்து விட்டு மீண்டும் இந்தியிலேயே சென்று படிக்கின்ற பொழுது அது ஒரு எளிமையான ஒரு புரிதலை கொடுக்கும். அதிலிருந்து  மொழிபெயர்ப்பு செய்வது என்பது நமக்கு எளிமையாக இருக்கும். ஆனால்   ஆங்கிலத்தில்கூட மொழிபெயர்ப்பு ஆகாத சிறுகதையை எப்படி மொழிபெயர்ப்பு செய்வது என்பது ஒரு பெரிய தயக்கம் இருந்தது. அப்பொழுது தான் நாச்சிமுத்து ஐயா அவர்கள் எனக்கு பாலசுப்பிரமணி ஐயா அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். இவர்களுடைய உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். இவர் மிகச் சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாளர். அப்பொழுதுகூட பாலசுப்பிரமணியம் என்ற பெயர் எனக்கு நினைவிற்கு வரவில்லை. அவரை தொடர்பு கொண்டேன். அவர் மிக நெருங்கிய நண்பர் போல என்னிடம் நெருங்கிப் பழகினார். அதைத் தொடர்ந்து சுசீலா டாக்போரே எழுதிய அந்த பத்துக் கதைகள் அடங்கிய நூல் தொகுப்பு என் கையில் கிடைத்தது. அந்த கதைகளை எப்படி வாசிப்பது? அந்த ஆசிரியரை பற்றி குறிப்புகளை எப்படி தயார் செய்வது? இதில் எந்த கதையை தேர்வு செய்து நான் வந்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்? என்ற தயக்கம் இருந்தது. அந்த நூலை வாங்கி வந்தேன். எனக்காக அந்த நூலை வாங்கிச் சென்று, அந்த நூல் முழுக்க எல்லா கதைகளையும் வாசித்து ஐயா அவர்கள் வந்து அதிலே மிகச்சிறிய அழகான ஒரு கதை இருக்கிறது. அந்த சுசிலா டாக்போரே அவர்கள் அவருடைய வாழ்க்கை அனுபவத்தை அழகாக எழுதி இருக்கிறார்கள் என்று சொல்லி அந்தக் கதையை என்னிடம் கொடுத்தார். இந்தக் கதையை மொழிபெயர்ப்புச் செய்யத் துவங்குங்கள் என்று சொன்னார். கதையை சுருக்கமாக எனக்கு அறிமுகம் செய்தார்கள். எனக்கு அந்தக் கதையை முழுவதும் தமிழில் வாசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. 

  அந்த உணர்வோடு அந்த கதையை வந்து என்னால் இயன்ற அளவிற்கு மொழிபெயர்ப்பு பணியிலே வந்து ஈடுபட்டேன். அதைத்தொடர்ந்து அய்யா அவர்கள் பல்கலைகழகத்திற்கு வருகின்ற பொழுதெல்லாம், அப்போதுதான் என்னிடம் ஒரு கார் இருந்தது. ஐயா எப்பொழுது பல்கலைகழகத்திற்கு வந்தாலும் அலைபேசியில் ஒரு அழைப்பு விடுப்பார். நண்பரைப் போல வந்து உரிமையோடு பல்கலைக் கழகத்திற்கு வந்து விட்டேன். நீங்கள் வாருங்கள் நாம் துறைக்குப் போயிட்டு வேலை முடித்துவிட்டு கையோட கூட்டிட்டு போவாரு. வேலை முடிச்சுட்டு அப்படியே கூடவே வருவார். நான் உங்கள் அறைக்கு வருகிறேன். நீங்கள் ஏதோ மொழிபெயர்ப்பு வைத்திருப்பதாகச் சொன்னீர்களே! உங்கள் அறையில் இருந்து பார்ப்போம் என்று அவர் என்னை அழைத்துக் கொண்டு வருவார். அதை எனக்கு எப்படி சொல்வது என்று வியப்பாக இருக்கிறது. தானாக முன்வந்து கூடவே அழைத்துக்கொண்டு செல்வதும். மீண்டும் தன்னுடைய அறைக்கு வந்து அந்த மொழிபெயர்ப்புப் பணிகளில் எனக்கு உதவி செய்வதும். சில நேரங்களில் வெகுதூரம் பயணித்து வந்தேன். கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று என்னிடம் அனுமதி கேட்பார். அந்தவொரு செயல் எனக்கு இன்னும் வியப்பைத் தரக்கூடியதாக இருக்கிறது. சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் எழுந்து முகம் கழுவிவிட்டு பணியை தொடங்குவோமா? என்று அப்போதும் அனுமதி கேட்பார். இப்படி ஒரு மனிதரை நான் இதுவரை சந்தித்ததில்லை. இனிமேல் சந்திப்பேனா என்ற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. தொடர்ந்து என்னுடைய அந்த இரண்டு சிறுகதைகளையும் அதில் ஒரு திரிசங்கு சிறுகதை கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பக்கங்களுக்கு குறையாமல் இருக்கக்கூடியது. அதை முழுக்க வரிக்குவரி வாசித்துத் திருத்திக் கொடுத்தார். அப்ப நான் அந்தக் கதையை மொழிபெயர்ப்பது ஒரு எளிமையாக இருந்தது. ஏன்னா தமிழ்ல ஏற்கனவே வரிக்குவரி வாசித்துவிட்டு இந்தியிலும் வாசித்துவிட்டு அதற்கு ஏற்ப இதில் இன்னும் செறிவாக மொழிபெயர்க்க முடியும். அதில் இன்னொரு சிறுகதை சுசீலா டாக்போரே அவர்கள் எழுதியது. அவர்கள் ஒரு தலித் பெண்ணியச் சிறுகதையாளர். ஐயா அவர்கள் அதில் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். அதைத்தான் நான் மொழிபெயர்ப்பு செய்தேன். ஐயா அவர்கள் அதை மொழிபெயர்ப்பு செய்த பிறகுதான் தெரிந்தது. அதில் நான் செய்தது ஒரு கால்பகுதி மொழிபெயர்ப்புகூட கிடையாது என்று. அதனை அவர்கள் மொழிபெயர்ப்பு செய்த பிறகுதான் அது முழுமை அடைந்தது. ஒரு ஆர்வத்தில் ஒரு களத்தில் இறங்கி கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது இடையில் அய்யா அவர்கள் தான் வந்து நின்று நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியது உதவியாய் இருந்தது. முழுக்க கிட்டத்தட்ட அது ஐயாவினுடைய மொழிபெயர்ப்பு என்று சொல்லும் அளவிற்கு அவருடைய உழைப்பு அதில்   இருந்தது. இல்லையென்றால் அதில் நான் ஒரு மன அழுத்தத்திற்கு போயிருப்பேன். அந்த இளம் முனைவர் பட்டத்தை முடிப்பது என்பதே ஒரு கேள்விக்குறியாக இருந்திருக்கும். அதே போல வந்து அந்த கதைகளை மொழி பெயர்த்ததோடு என்னை விட்டு விடவில்லை. ஐயா வந்து மீண்டும் மீண்டும் நேரம் இருக்கும்போதெல்லாம் என்னை அழைப்பார். நேரம் இருக்குபோதெல்லாம் எனக்கு சக தோழர் போல, தானாக முன்வந்து  எனக்கு இப்பொழுது இரண்டு மணி நேரம் இருக்கிறது. நீங்க கொஞ்சம் ப்ரீயா இருந்தா வரீங்களா? மொழிபெயர்ப்போம். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் வேணா வரேன் அப்படின்னு கேட்டு எனக்கு உதவி செய்வார். அதை இன்னும் இன்னும் நான் நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அதேபோல் எனக்காக அவர் மெனக்கெட்டு பல்கலைக் கழகத்திற்கு வந்த நாட்களெல்லாம் இருக்கிறது. அதை கண்டு இன்னும் நான் வந்து வியக்கிறேன். அதனை தொடர்ந்து எனக்கு ஆய்வு முழுக்க ஒவ்வொரு வரியாக வாசித்துத் திருத்திக் கொடுத்தவர் கொடுத்தவர் வந்து பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள். அதுல சில இடங்களில் குறிப்பிடுகின்ற பொழுது கூட நான் ஒரு இந்துத்துவத்தை பற்றி எழுதுகின்ற பொழுது சுசீலாடாக்போரே அவர்களின் வலிகளை எழுதுகின்ற போது இந்துத்துவம் சாதி அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து மனிதர்களைப் பிரித்திருக்கிறது என்று எழுதிய வாசகத்தைப் பார்த்து விட்டு சற்று நிமிர்ந்து என்னை பார்த்து சிரித்தார். சிரித்துவிட்டு ஐயா வந்து ஒரு பதிவு செய்தார் ஒரு குறை இருக்கிறது என்பதற்காக அதை பூதாகரமாக நாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந்து மதம் இந்த சமூகத்திற்கு எவ்வளவோ நன்மைகளை செய்து இருக்கிறது. அதையும் சற்று பேசுங்கள் என்று அவர் இப்போது புன்சிரிப்போடு அதை வந்து பதிவு செய்தார். புன்சிரிப்போடு செய்யக் கூடிய மனநிலையில் அதை நான் சில இடங்களில் திருத்தியும் கொண்டேன். முதல் படியை நான் எடுத்துக்கொண்டு சந்திரசேகர் அய்யா அவர்களிடம் கொடுக்க சென்றபோது ஐயா அவர்கள் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். நீங்கள் யாரிடமாவது இதுக்கு முன்னாடி உங்களுடைய சீனியரிடம் கொடுத்து சரி பாத்தீர்களா? என்று கேட்டார்கள். நான் ஒரு பதில்தான் சொன்னேன். பாலசுப்பிரமணிய ஐயா அவர்களிடம் கொடுத்து வரிக்குவரி அவர் திருத்தி கொடுத்த படிதான் இது என்றேன். அவர் சொன்னார் இதற்குமேல் இதை திருத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். நீங்கள் பதிவு செய்த வந்துவிடலாம் என்று கருத்துக் கூறினார். எந்த அளவிற்கு அவருடைய மனதிலும் சுப்பிரமணியம் ஐயா அவருடைய ஆளுமை நிறைந்திருந்தது என்பதை என்னால் பார்க்க முடிந்தது.  வேறு யாரிடமும் இதைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு அது சரியாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை எல்லோருடைய மனதிலும் இருந்தது. அந்த ஆண்டில் ஒரு வேளை அவருடைய துணை இல்லையென்றால் பட்டத்தை வாங்காமல் கூட வந்திருப்போமோ என்கிற ஐயம் இருந்தது. அந்த இடத்தில் நடுக்கடலில் தத்தளிக்கும் போது ஒரு படகில் ஏற்றிக்கொண்டு கொண்டு விட்டார் என்றால் அதை எப்படி நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியும். அந்த அளவிற்கு அவருடைய உதவி எனக்கு பேருதவியாக இருந்தது. அந்த ஓராண்டு காலம் என்னுடைய சக தோழனாக, நண்பனாக, என்னுடைய தந்தையாக அவர் என்னுடன் பயணித்த ஒரே ஒருமுறை நான் அவருடைய வீட்டிற்குச் சென்று வைக்கிறேன் அந்த ஒரு முறையும் அவர் வந்து உடல்நலம் சரியில்லாத பொழுது என்னால் வர இயலாமல் இருக்கிறேன் மருத்துவர் ஓய்வெடுக்கச் சொல்லி இருக்கிறார். ஐயா நீங்கள் வருகிறீர்களா என்று என்னிடம் அனுமதி கேட்டார். அப்பொழுதுகூட என்னிடம் அனுமதி கேட்டார். ஐயா நீங்கள் எப்பொழுது கூப்பிட்டாலும் நான் வந்துவிடுவதாகத்தான் இருந்தேன் ஆனால் நீங்கள் இங்கு வந்துவிடுகிறீர்கள் என்றேன். இல்லை இல்லை ஆய்வு மாணவர்களை அலைய விடுவது எனக்கு நோக்கமில்லை. நான் வந்துவிடுகிறேன். நீங்கள் அங்கிருந்து ஆய்வு செய்யுங்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். எந்த ஒரு எதிர்பார்ப்புமே இருக்காது. எனக்கு பல நிலைகளில் உறுதுணையாக இருந்தவர். இன்றைக்கு வந்து இளம் முனைவர் பட்டம், முனைவர்பட்டம் முடித்து இந்த இடத்திலேயே இருக்கிறோம் என்றால் அதற்கு ஒரு மிக முக்கியமான ஒரு பங்கு வகிப்பவர் செய்ய பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள். அதைத் தொடர்ந்து முனைவர்பட்டத்தில் திரைமொழி என்கிற ஒரு பகுதிக்கு அய்யா சந்திரசேகரன் ஐயா என்னை வழிகாட்டினார்.  இருந்தாலும் அந்த வழியில் செல்ல முடியாமல் கடைசில ஒரு புதினம் ஒப்பாய்வு என்கிற ஒரு தளத்திற்குள் என்னுடைய ஆய்வை முடிக்க வேண்டிய  இக்கட்டான நிலையில் இருந்ததனால் அந்த வழியிலும் பயணிக்க முடியாமல், ஐயா மொழிபெயர்ப்பாளர் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் வழியிலும் பயணிக்க முடியவில்லை என்கிற ஆழ்ந்த வருத்தம் மனதிற்குள்ள இன்றும் இருக்கின்றது.  அவர்களுடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் நாம் எல்லோரும் இருக்கின்றோம். வாய்ப்பு அளித்தமைக்கு அனைவருக்கும் நன்றி.