திங்கள், நவம்பர் 21, 2022

TRB வினா விடை

                 முனைவர் கு. ராஜா

        1.   “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது

அடிகள் நீரே அருள்க” யார் கூற்று?

அ. சாத்தனார்             ஆ) இளங்கோவடிகள்

இ. திருத்தக்கத் தேவர்     ஈ. நாதகுத்தனார்

விடை – அ. சாத்தனார்

2.   இளங்கோவடிகள் - சேரன் செங்குட்டுவனின்

அ. அண்ணன்            ஆ. தம்பி 

இ. மன்னன்              ஈ. தந்தை

விடை – ஆ. தம்பி

3.   ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எக்காப்பியம்?

அ. சிலப்பதிகாரம்          ஆ. மணிமேகலை

இ. சீவக சிந்தாமணி       ஈ. குண்டலகேசி

விடை – அ. சிலப்பதிகாரம்

4.   சிலப்பதிகாரத்திற்குக் கிடைக்கும் பழைய உரை எது?

அ. அடியார்க்கு நல்லார் உரை ஆ. நச்சினார்க்கினியர் உரை

இ. அரும்பத உரை         ஈ. சேனாவரையர் உரை

விடை – இ. அரும்பத உரை

5.   கண்ணகி கோயிலின் முதல் பூசாரி

அ. வயந்தமாலை ஆ. தேவந்தி இ. மாதரி ஈ. மாதவி

விடை – ஆ. தேவந்தி

6.   சிலப்பதிகாரத்தில் ஆயர்குலப் பெண்.

அ. வயந்தமாலை ஆ. தேவந்தி இ. மாதரி ஈ. மாதவி

விடை – இ. மாதரி

7.   முற்பிறவியில் கோவலன்

அ. சங்கரன் ஆ. மாடலன் இ. பரதன் ஈ. மாசாத்துவான்

விடை – இ. பரதன்

8.   நீலியின் கணவன்

அ. சங்கரன் ஆ. மாடலன் இ. பரதன் ஈ. மாசாத்துவான்

    விடை – அ. சங்கரன்

9.   மதுரைக் காண்டத்தின் முதல் காதை

அ. மங்கல வாழ்த்து            ஆ. நாடுகான் காதை

இ. காடுகான் காதை            ஈ. வரந்தரு காதை

விடை – இ. காடுகான் காதை

10. சல்லிகை எவ்வகை இசைக் கருவி?

அ. துளைக் கருவி              ஆ. நரம்புக் கருவி

இ. தோற் கருவி                ஈ. காற்றுக் கருவி

விடை – இ. தோற் கருவி

11. பாலை நில மக்களைப் பாடுவது

அ. வேட்டுவ வரி               ஆ. கானல் வரி

இ. கந்துக வரி                  ஈ. ஆய்ச்சியர் குரவை

விடை – அ. வேட்டுவ வரி

12. ஆணும் பெண்ணும் கைகோர்த்து ஆடுவது

அ. துணங்கைக் கூத்து          ஆ. வள்ளைப் பாட்டு

இ. கொடுகொட்டி               ஈ. பாண்டரங்கன்

விடை – அ. துணங்கைக் கூத்து

13. சூரனை வென்று முருகன் ஆடியது

அ. மல்லின் ஆடல்             ஆ. துடி ஆடல்

இ. பேடி ஆடல்                      ஈ. பாவை ஆடல்

                                விடை – ஆ. துடி ஆடல் 

14. அருகன் கோயில் உள்ள கோட்டம்

அ. ஊர்க்கோட்டம்         ஆ. புறம்பணையான் கோட்டம்

இ. வேற்கோட்டம்         ஈ. நிக்கந்தக் கோட்டம்

விடை – ஈ. நிக்கந்தக் கோட்டம்

15. "மாலை வாரார் ஆயினும் காலைகாண்குதும்” யார் கூற்று?

அ. வயந்தமாலை          ஆ. தேவந்தி

இ. மாதரி                  ஈ. மாதவி

        விடை – ஈ. மாதவி

16. ‘திருத்தக்கத் தேவர் தமிழ்க் கவிஞர்களுள் அரசர்’ என்று கூறியவர்?

அ. ஜி.யு. போப்                 ஆ. வீரமாமுனிவர்

இ. அடியார்க்கு நல்லார்         ஈ. கவுந்தியடிகள்

விடை – ஆ. வீரமாமுனிவர்

17. திருத்தக்கத் தேவரின் ‘நரி விருத்தம்

    அ. திருமணம் பற்றியது            ஆ. காமம் பற்றியது

    இ. முக்தி பற்றியது                ஈ. நிலையாமை பற்றியது

விடை – ஈ. நிலையாமை பற்றியது

18. மதயானையை அடக்கி சீவகன் மணந்த பெண்

அ. காந்தர்வதத்தை              ஆ. குணமாலை

இ. பதுமை                      ஈ. கேமசரி

விடை – ஆ. குணமாலை

19. கிழவன் வேடமணிந்து சீவகன் மணந்த பெண்

அ. விமலை                    ஆ. சுரமஞ்சரி  

இ. இலக்கணை                      ஈ. கோவிந்தை

விடை – ஆ. சுரமஞ்சரி

20. சீவகனின் ஆசிரியர்

அ. அச்சணந்தி                  ஆ. கந்துக்கடன்

இ. சச்சந்தன்                    ஈ. பதுமுகன்

விடை – அ. அச்சணந்தி

21. சூளாமணியின் சருக்கங்களின் எண்ணிக்கை

அ. 3      ஆ. 6.     இ. 9            ஈ. 12

                                விடை – ஈ. 12

22. “தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடன் இன்பம் மதித்தனை கொள் நீ” வரி இடம்பெறும் காப்பியம்

அ. சீவக சிந்தாமணி       ஆ. சிலப்பதிகாரம்

இ. சூளாமணி              ஈ. நீலகேசி

    விடை – இ. சூளாமணி

23. சீர்திருத்தக் காப்பியம்

அ. சீவக சிந்தாமணி       ஆ. மணிமேகலை

இ. சூளாமணி              ஈ. நீலகேசி

விடை – ஆ. மணிமேகலை

24. மணிமேகலை பிறந்த ஊர்

அ. பூம்புகார்               ஆ. காஞ்சிபுரம்

இ. நாவலந்தீவு            ஈ. சம்புத் தீவு

விடை – அ. பூம்புகார்

25. மணிமேகலைக்கு அமுத சுரபியில் முதன் முதலில் பிச்சையிட்டவள்

அ. சுதமதி                 ஆ. ஆதிரை

இ. காய சண்டிகை         ஈ. சிந்தா தேவி

விடை – ஆ. ஆதிரை

26. மணிமேகலையின் தோழி

அ. சுதமதி                 ஆ. ஆதிரை

இ. காய சண்டிகை         ஈ. சிந்தா தேவி

விடை – அ. சுதமதி  

27. குடிபிறப்பு அழிக்கும் எது?

அ. நோய் ஆ. வறுமை இ. பசி ஈ. முதுமை

    விடை – இ. பசி

28. “மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

           உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

அ. சீவக சிந்தாமணி       ஆ. மணிமேகலை

இ. சூளாமணி              ஈ. நீலகேசி

விடை – ஆ. மணிமேகலை

29. தற்கொல்லியை முற்கொன்றவள் இடம்பெறும் காப்பியம்

அ. மணிமேகலை          ஆ. வளையாபதி

இ. குண்டலகேசி          ஈ. நீலகேசி

விடை – இ. குண்டலகேசி

30. எது சரி?

அ. “பானையாம் தன்மை செத்தும்

ஆ. பாலனாம் தன்மை செத்தும்

           இ. காலையாம் தன்மை செத்தும்

ஈ. காமுறும் இனிமை செத்தும்

                விடை – ஆ. பாலனாம் தன்மை செத்தும்

31. இஸ்லாமியக் கம்பர் என அழைக்கப்படுபவர்

அ. கவிகளஞ்சியப் புலவர் ஆ. கடிகைமுத்துப் புலவர்

இ. உமறுப்புலவர்          ஈ. முகமது நபி

விடை – இ. உமறுப்புலவர்

32. சீறா என்பதன் பொருள்

அ. வாழ்க்கை             ஆ. சிறப்பு     

இ. புனிதம்                ஈ. செல்வம்

விடை – அ. வாழ்க்கை    

33. விலாதத்து காண்டம் எதனை விவரிக்கிறது?

அ. நபியின் பிறப்பு         ஆ. நபியின் வளர்ப்பு

இ. நபியின் முதுமை       ஈ. நபியின் புகழ்

விடை – அ. நபியின் பிறப்பு

34. இஸ்லாமியத் தாயுமானவர் என அழைக்கப்படுபவர்

அ. கவிகளஞ்சியப் புலவர் ஆ. கடிகைமுத்துப் புலவர்

இ. உமறுப்புலவர்          ஈ. குணங்குடி மஸ்தான் சாகிபு

விடை – ஈ. குணங்குடி மஸ்தான் சாகிபு

35. கடவுளை அணுகி இருத்தல் என்பது

அ. சலோகம்                    ஆ. சாமீபம்    

இ. சாரூபம்                     ஈ. சாயுச்சியம் 

விடை – ஆ. சாமீபம்

36. எது சரியில்லை?

அ. “திருவினும் திருவாய்

ஆ. பொருளினும் பொருளாய்

     இ. தெளிவினும் தெளிவாய் சிறந்த

ஈ. அனுவினுக்கு அனுவாய்

                விடை – ஈ. அனுவினுக்கு அனுவாய்

37. திருமணிமாலை எனும் காப்பியத்தை இயற்றியவர் யார்?

அ. சேகணாப் புலவர்            ஆ. சவ்வாதுபுலவர்  

இ. வண்ணக் களஞ்சியப் புலவர் ஈ. செய்குத் தம்பி பாவலர்

                           விடை – அ. சேகணாப் புலவர்

38. நிராமயக் கண்ணி பாடியவர்.

அ. சேகணாப் புலவர்            ஆ. சவ்வாதுபுலவர்  

இ. குணங்குடி மஸ்தான் சாகிபு  ஈ. செய்குத் தம்பி பாவலர்

விடை – இ. குணங்குடி மஸ்தான் சாகிபு

39. சதாவதாணி

அ. சேகணாப் புலவர்            ஆ. சவ்வாதுபுலவர்  

இ. வண்ணக் களஞ்சியப் புலவர் ஈ. செய்குத் தம்பி பாவலர்

விடை – ஈ. செய்குத் தம்பி பாவலர்

40. நாகைக் கலம்பகம் எழுதியவர் யார்? 

அ. சேகணாப் புலவர்            ஆ. சவ்வாதுபுலவர்  

இ. வண்ணக் களஞ்சியப் புலவர் ஈ. செய்குத் தம்பி பாவலர்

விடை – இ. வண்ணக் களஞ்சியப் புலவர்

41. தேம்பாவணி பாவகை

அ. விருத்தப்பா                 ஆ. கலிப்பா    

இ. ஆசிரியப்பா                 ஈ. வெண்பா

விடை – அ. விருத்தப்பா

42. அகராதிகளின் முன்னோடி யார்?

அ. ஜி.யு. போப்                 ஆ. சீகன் பால்கு

இ. வீரமாமுனிவர்               ஈ. கால்டுவெல்

விடை – இ. வீரமாமுனிவர்

43. குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது

அ. தொன்னூல் விளக்கம்       ஆ. செந்தமிழ் இலக்கணம்

இ. கொடுந்தமிழ் இலக்கணம்    ஈ. சதுரகராதி

விடை – அ. தொன்னூல் விளக்கம்

44. தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை என்று தேம்பாவணியை வாழ்த்தியவர்.

அ. குன்றக்குடி அடிகளார்        ஆ. பூரணலிங்கம்பிள்ளை

இ. சுத்தானந்த பாரதியார்        ஈ. மறைமலையடிகள்

விடை – இ. சுத்தானந்த பாரதியார்

45. கிறித்தவர்களின் தேவாரம் எனப்படுவது.

அ. அ. இயேசு காவியம்         ஆ. இரட்சண்ய யாத்ரிகம்

இ. இரட்சண்ய மனோகரம்       ஈ. திருக்காவலூர் கலம்பகம்

விடை – இ. இரட்சண்ய மனோகரம்

46. கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்படுபவர் யார்?

அ. ஹச். ஏ. கிருஷ்ணபிள்ளை   ஆ. பூரணலிங்கம்பிள்ளை

இ. சுத்தானந்த பாரதியார்        ஈ. மறைமலையடிகள்

விடை – அ. ஹச். ஏ. கிருஷ்ணபிள்ளை

47. தத்துவப் போதகர் என்றழைக்கப்படுபவர் யார்?

அ. ஜி.யு. போப்                 ஆ. இராபர்ட்-டி-நொபிலி

இ. வீரமாமுனிவர்               ஈ. கால்டுவெல்

விடை – ஆ. இராபர்ட்-டி-நொபிலி

48. எல்லப்பாவிடம் தமிழ் பயின்ற ஆங்கிலேய அறிஞர் யார்?

அ. ஜி.யு. போப்                 ஆ. சீகன் பால்கு

இ. வீரமாமுனிவர்               ஈ. கால்டுவெல்

விடை – ஆ. சீகன் பால்கு

49. சென்னைப் பல்கலைக் கழகம் ‘இலக்கிய வேந்தர்’ எனும் பட்டத்தை யாருக்கு வழங்கியது?

அ. ஜி.யு. போப்                 ஆ. சீகன் பால்கு

இ. வீரமாமுனிவர்               ஈ. கால்டுவெல்

விடை – ஈ. கால்டுவெல்

50. மொழிஞாயிறு என்று போற்றப்படுபவர் யார்?

அ. தேவநேயப் பாவாணர்       ஆ. கால்டுவெல்

இ. சீகன் பால்கு                ஈ. இராபர்ட்-டி-நொபிலி

விடை – தேவநேயப் பாவாணர்