முனைவர் கு. ராஜா
1. “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருள்க” யார் கூற்று?
அ.
சாத்தனார் ஆ)
இளங்கோவடிகள்
இ. திருத்தக்கத் தேவர் ஈ.
நாதகுத்தனார்
விடை
– அ. சாத்தனார்
2.
இளங்கோவடிகள் - சேரன் செங்குட்டுவனின்
அ. அண்ணன் ஆ.
தம்பி
இ. மன்னன் ஈ. தந்தை
விடை
– ஆ. தம்பி
3.
‘உரையிடையிட்ட பாட்டுடைச்
செய்யுள்’
எக்காப்பியம்?
அ. சிலப்பதிகாரம் ஆ. மணிமேகலை
இ. சீவக சிந்தாமணி ஈ. குண்டலகேசி
விடை
– அ. சிலப்பதிகாரம்
4.
சிலப்பதிகாரத்திற்குக்
கிடைக்கும் பழைய உரை எது?
அ. அடியார்க்கு நல்லார்
உரை ஆ. நச்சினார்க்கினியர் உரை
இ. அரும்பத உரை ஈ. சேனாவரையர் உரை
விடை – இ. அரும்பத உரை
5.
கண்ணகி கோயிலின் முதல்
பூசாரி
அ. வயந்தமாலை ஆ. தேவந்தி
இ. மாதரி ஈ. மாதவி
விடை – ஆ. தேவந்தி
6.
சிலப்பதிகாரத்தில்
ஆயர்குலப் பெண்.
அ. வயந்தமாலை ஆ. தேவந்தி
இ. மாதரி ஈ. மாதவி
விடை
– இ. மாதரி
7.
முற்பிறவியில் கோவலன்
அ. சங்கரன் ஆ. மாடலன் இ.
பரதன் ஈ. மாசாத்துவான்
விடை
– இ. பரதன்
8.
நீலியின்
கணவன்
அ. சங்கரன் ஆ. மாடலன் இ.
பரதன் ஈ. மாசாத்துவான்
விடை
– அ. சங்கரன்
9.
மதுரைக்
காண்டத்தின் முதல் காதை
அ. மங்கல வாழ்த்து ஆ.
நாடுகான் காதை
இ. காடுகான் காதை ஈ.
வரந்தரு காதை
விடை – இ. காடுகான் காதை
10.
சல்லிகை
எவ்வகை இசைக் கருவி?
அ. துளைக் கருவி ஆ. நரம்புக் கருவி
இ. தோற் கருவி ஈ. காற்றுக் கருவி
விடை
– இ. தோற் கருவி
11.
பாலை நில மக்களைப் பாடுவது
அ. வேட்டுவ வரி ஆ. கானல்
வரி
இ. கந்துக வரி ஈ. ஆய்ச்சியர்
குரவை
விடை
– அ. வேட்டுவ வரி
12.
ஆணும் பெண்ணும் கைகோர்த்து
ஆடுவது
அ. துணங்கைக் கூத்து ஆ. வள்ளைப்
பாட்டு
இ. கொடுகொட்டி ஈ. பாண்டரங்கன்
விடை – அ. துணங்கைக் கூத்து
13. சூரனை வென்று முருகன் ஆடியது
அ. மல்லின் ஆடல் ஆ. துடி
ஆடல்
இ. பேடி ஆடல் ஈ.
பாவை ஆடல்
விடை – ஆ. துடி ஆடல்
14. அருகன் கோயில் உள்ள கோட்டம்
அ. ஊர்க்கோட்டம் ஆ. புறம்பணையான் கோட்டம்
இ. வேற்கோட்டம் ஈ. நிக்கந்தக் கோட்டம்
விடை – ஈ. நிக்கந்தக் கோட்டம்
15. "மாலை வாரார் ஆயினும் காலைகாண்குதும்” யார் கூற்று?
அ. வயந்தமாலை ஆ. தேவந்தி
இ. மாதரி ஈ. மாதவி
விடை
– ஈ. மாதவி
16.
‘திருத்தக்கத் தேவர் தமிழ்க்
கவிஞர்களுள் அரசர்’ என்று
கூறியவர்?
அ. ஜி.யு. போப் ஆ.
வீரமாமுனிவர்
இ. அடியார்க்கு நல்லார் ஈ. கவுந்தியடிகள்
விடை – ஆ. வீரமாமுனிவர்
17. திருத்தக்கத் தேவரின் ‘நரி விருத்தம்’
அ. திருமணம் பற்றியது ஆ. காமம் பற்றியது
இ. முக்தி பற்றியது ஈ.
நிலையாமை பற்றியது
விடை – ஈ. நிலையாமை பற்றியது
18. மதயானையை அடக்கி சீவகன் மணந்த பெண்
அ. காந்தர்வதத்தை ஆ.
குணமாலை
இ. பதுமை ஈ.
கேமசரி
விடை – ஆ. குணமாலை
19. கிழவன் வேடமணிந்து சீவகன் மணந்த பெண்
அ. விமலை ஆ. சுரமஞ்சரி
இ. இலக்கணை
ஈ. கோவிந்தை
விடை – ஆ. சுரமஞ்சரி
20. சீவகனின் ஆசிரியர்
அ. அச்சணந்தி ஆ. கந்துக்கடன்
இ. சச்சந்தன் ஈ. பதுமுகன்
விடை
– அ. அச்சணந்தி
21.
சூளாமணியின்
சருக்கங்களின் எண்ணிக்கை
அ. 3 ஆ. 6. இ.
9 ஈ. 12
விடை – ஈ. 12
22. “தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடன் இன்பம் மதித்தனை கொள் நீ” வரி இடம்பெறும் காப்பியம்
அ. சீவக சிந்தாமணி ஆ. சிலப்பதிகாரம்
இ. சூளாமணி ஈ. நீலகேசி
விடை
– இ. சூளாமணி
23.
சீர்திருத்தக் காப்பியம்
அ. சீவக சிந்தாமணி ஆ. மணிமேகலை
இ. சூளாமணி ஈ. நீலகேசி
விடை
– ஆ. மணிமேகலை
24.
மணிமேகலை
பிறந்த ஊர்
அ. பூம்புகார் ஆ. காஞ்சிபுரம்
இ. நாவலந்தீவு ஈ. சம்புத் தீவு
விடை – அ. பூம்புகார்
25. மணிமேகலைக்கு அமுத சுரபியில் முதன் முதலில் பிச்சையிட்டவள்
அ. சுதமதி ஆ. ஆதிரை
இ. காய சண்டிகை ஈ. சிந்தா தேவி
விடை – ஆ. ஆதிரை
26. மணிமேகலையின் தோழி
அ. சுதமதி ஆ. ஆதிரை
இ. காய சண்டிகை ஈ. சிந்தா தேவி
விடை
– அ. சுதமதி
27.
குடிபிறப்பு அழிக்கும் எது?
அ. நோய் ஆ. வறுமை இ. பசி
ஈ. முதுமை
விடை
– இ. பசி
28. “மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
அ. சீவக சிந்தாமணி ஆ. மணிமேகலை
இ. சூளாமணி ஈ. நீலகேசி
விடை – ஆ. மணிமேகலை
29.
தற்கொல்லியை முற்கொன்றவள் இடம்பெறும் காப்பியம்
அ. மணிமேகலை ஆ. வளையாபதி
இ. குண்டலகேசி ஈ. நீலகேசி
விடை
– இ. குண்டலகேசி
30. எது சரி?
அ. “பானையாம் தன்மை செத்தும்
ஆ. பாலனாம் தன்மை செத்தும்
இ. காலையாம் தன்மை செத்தும்
ஈ. காமுறும் இனிமை செத்தும்
விடை – ஆ. பாலனாம் தன்மை செத்தும்
31. இஸ்லாமியக் கம்பர் என அழைக்கப்படுபவர்
அ. கவிகளஞ்சியப் புலவர் ஆ. கடிகைமுத்துப் புலவர்
இ. உமறுப்புலவர் ஈ. முகமது நபி
விடை – இ. உமறுப்புலவர்
32.
சீறா என்பதன் பொருள்
அ. வாழ்க்கை ஆ. சிறப்பு
இ. புனிதம் ஈ. செல்வம்
விடை – அ. வாழ்க்கை
33.
விலாதத்து காண்டம் எதனை விவரிக்கிறது?
அ. நபியின் பிறப்பு ஆ. நபியின் வளர்ப்பு
இ. நபியின் முதுமை ஈ. நபியின் புகழ்
விடை – அ. நபியின் பிறப்பு
34. இஸ்லாமியத் தாயுமானவர் என அழைக்கப்படுபவர்
அ. கவிகளஞ்சியப் புலவர் ஆ. கடிகைமுத்துப் புலவர்
இ. உமறுப்புலவர் ஈ. குணங்குடி மஸ்தான் சாகிபு
விடை – ஈ. குணங்குடி மஸ்தான் சாகிபு
35.
கடவுளை அணுகி இருத்தல்
என்பது
அ. சலோகம் ஆ. சாமீபம்
இ. சாரூபம் ஈ. சாயுச்சியம்
விடை
– ஆ. சாமீபம்
36. எது சரியில்லை?
அ. “திருவினும் திருவாய்
ஆ. பொருளினும் பொருளாய்
இ. தெளிவினும் தெளிவாய் சிறந்த
ஈ. அனுவினுக்கு அனுவாய்
விடை – ஈ. அனுவினுக்கு அனுவாய்
37. திருமணிமாலை எனும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
அ. சேகணாப் புலவர் ஆ. சவ்வாதுபுலவர்
இ. வண்ணக் களஞ்சியப் புலவர் ஈ. செய்குத் தம்பி பாவலர்
விடை – அ. சேகணாப் புலவர்
38.
நிராமயக் கண்ணி பாடியவர்.
அ. சேகணாப் புலவர் ஆ. சவ்வாதுபுலவர்
இ. குணங்குடி மஸ்தான் சாகிபு ஈ. செய்குத் தம்பி பாவலர்
விடை – இ. குணங்குடி மஸ்தான் சாகிபு
39. சதாவதாணி
அ. சேகணாப் புலவர் ஆ. சவ்வாதுபுலவர்
இ. வண்ணக் களஞ்சியப் புலவர் ஈ. செய்குத் தம்பி பாவலர்
விடை – ஈ. செய்குத் தம்பி பாவலர்
40. நாகைக் கலம்பகம் எழுதியவர் யார்?
அ. சேகணாப் புலவர் ஆ. சவ்வாதுபுலவர்
இ. வண்ணக் களஞ்சியப் புலவர் ஈ. செய்குத் தம்பி பாவலர்
விடை – இ. வண்ணக் களஞ்சியப் புலவர்
41.
தேம்பாவணி பாவகை
அ. விருத்தப்பா ஆ.
கலிப்பா
இ. ஆசிரியப்பா ஈ.
வெண்பா
விடை – அ. விருத்தப்பா
42.
அகராதிகளின் முன்னோடி யார்?
அ. ஜி.யு. போப் ஆ. சீகன் பால்கு
இ. வீரமாமுனிவர் ஈ. கால்டுவெல்
விடை – இ. வீரமாமுனிவர்
43.
குட்டித் தொல்காப்பியம்
எனப்படுவது
அ. தொன்னூல் விளக்கம் ஆ. செந்தமிழ் இலக்கணம்
இ. கொடுந்தமிழ் இலக்கணம் ஈ. சதுரகராதி
விடை – அ. தொன்னூல் விளக்கம்
44. தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை என்று தேம்பாவணியை வாழ்த்தியவர்.
அ.
குன்றக்குடி
அடிகளார் ஆ. பூரணலிங்கம்பிள்ளை
இ. சுத்தானந்த பாரதியார் ஈ. மறைமலையடிகள்
விடை – இ. சுத்தானந்த பாரதியார்
45.
கிறித்தவர்களின் தேவாரம்
எனப்படுவது.
அ. அ. இயேசு காவியம் ஆ.
இரட்சண்ய யாத்ரிகம்
இ. இரட்சண்ய மனோகரம்
ஈ. திருக்காவலூர் கலம்பகம்
விடை – இ. இரட்சண்ய மனோகரம்
46.
கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்படுபவர் யார்?
அ.
ஹச். ஏ. கிருஷ்ணபிள்ளை ஆ.
பூரணலிங்கம்பிள்ளை
இ. சுத்தானந்த பாரதியார் ஈ. மறைமலையடிகள்
விடை – அ.
ஹச். ஏ. கிருஷ்ணபிள்ளை
47.
தத்துவப் போதகர் என்றழைக்கப்படுபவர் யார்?
அ. ஜி.யு. போப் ஆ. இராபர்ட்-டி-நொபிலி
இ. வீரமாமுனிவர் ஈ. கால்டுவெல்
விடை
– ஆ. இராபர்ட்-டி-நொபிலி
48.
எல்லப்பாவிடம் தமிழ் பயின்ற
ஆங்கிலேய அறிஞர் யார்?
அ. ஜி.யு. போப் ஆ. சீகன் பால்கு
இ. வீரமாமுனிவர் ஈ. கால்டுவெல்
விடை
– ஆ. சீகன் பால்கு
49.
சென்னைப் பல்கலைக் கழகம்
‘இலக்கிய வேந்தர்’ எனும்
பட்டத்தை யாருக்கு வழங்கியது?
அ. ஜி.யு. போப் ஆ. சீகன் பால்கு
இ. வீரமாமுனிவர் ஈ. கால்டுவெல்
விடை
– ஈ. கால்டுவெல்
50.
மொழிஞாயிறு என்று போற்றப்படுபவர் யார்?
அ. தேவநேயப் பாவாணர் ஆ. கால்டுவெல்
இ. சீகன் பால்கு ஈ. இராபர்ட்-டி-நொபிலி
விடை – தேவநேயப் பாவாணர்