முனைவர் கு. ராஜா
பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
v முதல் நிலை – பேச்சு மொழி – பேசுவதும் கேட்பதும்
v இரண்டாம் நிலை – எழுத்து மொழி – எழுதுவதும் படிப்பதும்
v பேச்சு மொழி – ஒலி வடிவம்
v எழுத்து மொழி – வரி வடிவம்
பேச்சு மொழியில் ஏற்ற இரக்கத்தால்
பொருள் மாறுபடும்.
எ.கா – 1. குழந்தையைக் கவனி –
பாதுகாப்பு
2. கவனமாகச் செல் – எச்சரிக்கை
3. உன்னைக் கவனிக்கும் விதத்தில்
கவனிக்கிறேன் – தாக்குதல்
எ.கா – போக முடியாது – வலிந்து
சொல்லல் – மறுப்பு
போக முடியாது – மென்மையாக சொல்லல்
– இயலாமை
v பேச்சு வழக்கு மாறும் விதம்:
எ.கா – இருக்கின்றது – இருக்கிறது
– இருக்குது – கீது
v வெண்ட்ரியே கூற்று – “பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது, எழுத்து
மொழி ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது.”
v பேச்சு மொழியில்தான் ஒரு மொழி தோன்றி பிறகு எழுத்து மொழியாக
வளர்கின்றது.
v ஒலிக் குறிகளும் சைகைகளும் பேச்சு மொழியின் தொடக்க நிலையாகும்.
v கோடுகளும் ஓவியங்களும் எழுத்து மொழியின் தொடக்க நிலையாகும்.
v தனிமொழி உருவாக்கம்
பேச்சு மொழி வட்டாரம் சார்ந்தும்,
படித்தவர், படிக்காதவர், கிராமம், நகரம் மேலும் மற்ற சமூக குழுக்கள் சார்ந்து மாறுபட்டுக்
காணப்படும். அம்மாறுபாட்டின் வளர்ச்சியில் கிளைமொழிகள் உருவாகும். அதன் தொடர்ச்சியில்
தனக்கென தனித்த எழுத்து வடிவத்தினைப் பெற்று தாய் மொழியிலிருந்து தனிமொழியாகப் பிரிந்து
ஒரு தனி மொழி உருவாகும்.
எ.கா. – தமிழ் – மலையாளம்,
தெலுங்கு, கன்னடம்
v தொல்காப்பியர் மொழியை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என இருவகைப்
படுத்தியுள்ளார்.
உலக வழக்கு – பேச்சு மொழி
செய்யுள் வழக்கு – எழுத்து மொழி
v எழுத்து
வடிவ மாற்றங்கள்
v எழுத்து வகை
1. உருவெழுத்து (பட எழுத்து, ஓவிய
எழுத்து, சித்திர எழுத்து)
2. உணர்வெழுத்து (எண்ண எழுத்து)
3. ஒலியெழுத்து – இருவகைப்படும்
1. அசை எழுத்து முறை
2. அகர எழுத்து முறை
v பட எழுத்து முறை - உலக மொழிகளில் முதன் முதலில் தோன்றிய எழுத்து
முறை.
v அசை எழுத்து முறையினைப் பின்பற்றும் மொழிகள்
சுமேரியன்,
ஏலமைட், எகிப்தியம், ஹிட்டைட், சீனம், கிரேக்கம்.
v திருநாதர் கல்வெட்டு – கி.பி 5 ஆம் நூற்றாண்டு
தமிழ் எழுத்துக்களைப் பற்றிய செய்து
உள்ளது.
ஆப்பு
வடிவ எழுத்து முறை – சுமேரியர்களின் எழுத்து முறை
v எழுத்துக்கள்
1. பிராமி எழுத்து 2. கிரந்த எழுத்து
3. தமிழ் எழுத்து 4. வட்டெழுத்து 5. நாகரி எழுத்து 6. மராட்டிய மோடி எழுத்து
v மொழி என்பது கருத்துப் பரிமாற்றக் கருவி
v மொழி இரண்டு வகைப்படும்
1. பேச்சு மொழி 2. எழுத்து மொழி
v திராவிட மொழிகளின் எண்ணிக்கை – 22
v வரிவடிவமுடைய திராவிட மொழிகள் – தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
இம்மொழிகளை கால்டுவெல் திருந்திய மொழிகள் என்கிறார். மற்றவை திருந்தாத மொழிகளாகக் கருதப்படுகின்றன.
v துளுவின் வரிவடிவம் – முதலில் மலையாள எழுத்து, தற்பொழுது கன்னட
எழுத்து
v கூயி மொழியின் வரிவடிவம் – ஒரிய மொழி எழுத்து
v தெலுங்கு மொழி எழுத்து வடிவம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து
கிடைக்கின்றது.
v கன்னட மொழியின் எழுத்து வடிவம் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டிலிருந்து
கிடைக்கின்றது.
v உலக அளவில் பழமையான நாகரிகங்களைக் கொண்ட நாடுகள் – 1. எகிப்து,
2. சீனா 3. இந்தியா
v மொழியியல் அறிஞர் ‘தானி’ கூற்று – இந்தியத் தொல் வரிவடிவ இயல்
பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு அம்சமே வடிவடிவ மாற்றம்.” என்கிறார்.
v உலக அளவில் எழுத்து முறையின் பிரிவுகள்
1. கிரேக்க எழுத்து முறை 2. ரோமன் எழுத்து முறை
3. அரேபிய எழுத்து முறை 4. சீன எழுத்து முறை
5. எகிப்து எழுத்து முறை 6.ஹீரோகிளிபிக் எழுத்து முறை
7. எத்தியோபியா எழுத்து முறை 8.பீனிசிய எழுத்து முறை
9. ஆரமய்க் எழுத்து முறை 10. இந்திய எழுத்து முறை
v கிரேக்க எழுத்து முறை
v மேற்கத்திய எழுத்து முறைக்கு அடிப்படை
v பீனிசிய எழுத்து முறை – கிரேக்க எழுத்திற்கு முந்திய வடிவம்
v கிரேக்க எழுத்து முறையினைப் பின்பற்றும் மொழிகள்
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்,
ஸ்பானிஸ், போர்த்துகீசு, சிலாவானிக், பின்னி, ஹங்கேரியன், மலாய்.
v சிரியாவிற்கு மேற்கே – கிரேக்க எழுத்துமுறை
v சிரியாவிற்கு கிழக்கே – ஆரமய்க் எழுத்துமுறை
v ஆரமய்க் எழுத்து முறையினைப் பின்பற்றும் மொழிகள்
பிராமி, பெர்சியன், துருக்கி,
மாங்கோல்
v ஹீரோகிளிப்பிக் எழுத்து முறை – எகிப்து நாட்டில் பின்பற்றப்படுகிறது.
தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள்
v தமிழகத்தில் 4 வகை எழுத்துமுறை
1. பிராமி (தமிழ்)
2. கிரந்தம் (வடமொழி)
3. வட்டெழுத்துக்கள் (தமிழ் –
பாண்டிய, சேர நாடு)
4. பண்டைய தமிழ் எழுத்து (தமிழ்
– சோழ நாடு)
v கிரந்த எழுத்து - பல்லவர்
காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
v நாகரி எழுத்து – சோழர் காலத்தில் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டது.
v பிராமி எழுத்து
v பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தவர்கள்
1. கீழவளவு கல்வெட்டு – வெங்கோபராவ்
2. மருகால் தலைக் கல்வெட்டு –
கெமைட்டு (ஆங்கிலேயர்)
3. அரிச்சநல்லூர் கல்வெட்டு –
இராசு
4. திருவாதவூர் கல்வெட்டு – ஐராவதம்
மகாதேவன்
5. அழகரை, உறையூர், காஞ்சி கல்வெட்டு
– சென்னைப் பல்கலைக் கழக தொல்லியல் துறை
6. கொற்கைக் கல்வெட்டு – தமிழ்நாடு
தொல்பொருள் ஆய்வுத்துறை.
v பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய அறிஞர்கள் கூற்று
1. நாராயணராவ் – பிராமி கல்வெட்டுக்கள்
பிராகிருதச் சொற்களைக் கொண்ட பிராகிருதக் கல்வெட்டு
2. கே.கே. பிள்ளை – பிராமிக் கல்வெட்டுக்கள்
தமிழும் பிராமியும் கலந்த விளங்காத மொழியைக் கொண்ட கல்வெட்டுக்கள்
3. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்,
ஐராவதம் மகாதேவன், கே. வி. சுப்பிரமணி அய்யர் – எழுத்து
பிராமி எனினும் மொழி தமிழே.
4.
டாக்டர் நாகசாமி – பிராமி கல்வெட்டுகள் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளன.
5.
மெகஸ்தனிஸ் (பயணி) – இந்தியர்களுக்கு எழுத்து வடிவம் கிடையாது.
6.
சுநித்குமார் சட்டர்ஜி – பண்டைத் தமிழ் பிராமி எழுத்துக்களைப் பெற்றிருந்தது.
7.
ஹீராஸ் பாதிரியார் – ‘சிந்துவெளியின் சித்திர எழுத்துக்களே திராவிடப் பெருங்குடி மக்களது
எழுத்துக்களின் மூல வடிவம்.
v பிராமி எழுத்தின் வகையும் காலமும்
1. அசோக பிராமி – கி.பி. 1 ஆம்
நூற்றாண்டிற்கு முன்பு
2. சூசான் பிராமி - கி.பி. 1 ஆம்
நூற்றாண்டிற்கு பிறகு
3. குப்த பிராமி – கி.பி. 4 ஆம்
நூற்றாண்டு
4. சித்தமாத்ரிகா பிராமி - கி.பி.
7 ஆம் நூற்றாண்டு
v நாகரி, குடில வடிவம் – கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
v நாகரி எழுத்து வடிவத்தினைப் பின்பற்றும் மொழிகள்
வங்காளி, அசாமி, மைதிலி, ஒரியா,
காஷ்மீரி
v டேவிட் டிரின்ஜர், தானி
கூற்று: ஆரமய்க் வடிவத்திலிருந்து பிராமி தோன்றியது.
v பிராமி எழுத்து – இந்திய மொழி வடிவங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது.
v பிராமி இரண்டு வகைப்படும் – வட பிராமி, தென் பிராமி
v பாபு இராஜேந்திரலால் கூற்று: பிராமியில் எழுதப்பட்ட தென்னிந்திய
மொழிகளைத் ‘திராவிடி’ என்றழைக்கின்றார்.
v பிராமி எழுத்தில் தொல்காப்பியர் குறிப்பிடும் எகர ஒகரக் குறில்கள்
காணப்படுகின்றன.
v விகுதிகள் – அன், ஆன் – ஆண்பால்
ஓம் – பலர்பால்
v நடனகாசிநாதன் கூற்று: 1. பிராமி எனும் தமிழ் எழுத்தில்தான் சங்க
இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
2. தமிழிற்குரிய ழ, ள, ற, ந போன்ற
எழுத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
v ஐராவத மகாதேவன் கூற்று:
பிராமி எழுத்து வடிவத்தில்
1. மெய்யெழுத்தைக் குறிக்க புள்ளி
பயன்படுத்தவில்லை.
2. எகர, ஒகர குறில், நெடில் வேறுபாடில்லை
v பிராமி எழுத்துக் காலம் – கி.மு. 3 முதல் கி.பி 4 வரை
டி.வி. மகாலிங்கம் கூற்று: பிராமி
எழுத்துக் காலம் கி.மு. 3 முதல் கி.பி. 4 வரை
ஐராவத மகாதேவன் கூற்று – கி.மு. 1 முதல் கி.பி
4 வரை
v கிரந்த எழுத்து
v கிரந்த எழுத்து – வடமொழி – பல்லவர் காலத்தில் தோன்றியது.
v தமிழகத்தில் கிரந்த எழுத்துக்கள் கண்டறியப்பட்ட இடங்கள் – கல்வெட்டுக்கள் - ஆனைமலை, அழகர்மலை, திருமயம்,
குடுமியான் மலை
v செப்பேடுகள் - வேள்விக்குடி, சின்னமனூர், தளவாய்புரம்
v கிரந்த எழுத்துக்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட காலம் – விஜயநகரப்
பேரரசு மற்றும் நாயக்கர் காலம்
v கிரந்த லிபி எழுத்து முறை என்பது – தமிழ் எழுத்துக்களோடு கிரந்த
எழுத்துக்களை சேர்த்து எழுதும் முறை ஆகும்.
v தமிழ் எழுத்து
v தொன்மையான தமிழ் எழுத்து வடிவம் – ‘தமிழி’
v தமிழும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ள கல்வெட்டு – அரிச்சநல்லூர்
கல்வெட்டு.
v முதன் முதலில் முழுவதும் தமிழில் எழுதப்பட்டதாகக் கண்டறியப்பட்ட
கல்வெட்டு – கி.பி. 7 மகேந்திரவர்மனின் கல்வெட்டு.
v பாண்டியர்களது கல்வெட்டுகள் தமிழிழும் கிரந்தத்திலும் காணப்படுகின்றன.
செப்பேடுகள் வட்டெழுத்தில் காணப்படுகின்றன.
v தமிழ், கிரந்தம் இரண்டிலும் ஒன்றுபோல் இருக்கும் எழுத்துக்கள்
– உ, ஊ, க, ங், த, ந, ய, வ
v கிரந்தம் தமிழ் இரண்டிலும் வேறுபட்டுக் காணப்படும் வரிவடிவங்கள்
– அ, ஆ, ஈ, ஒ, ஔ, ட, ற, ர, ல, ள
v எல்லீஸ் கூற்று: ‘ஆரியர் தமிழ் வரிவடிவத்தை ஏற்று வடமொழிக்குரிய
எழுத்துக்களை இணைத்து கிரந்தம் எனப் பெயரிட்டனர்.
v தி. நா. சுப்பிரமணியன் கூற்று: ‘கிரந்த வரிவடிவத்தையும் தமிழ்
வரிவடிவத்தையும் தென்னிந்தியாவில் புகுத்தியவர்கள் பல்லவர்களே ஆவர்.
v கி.பி 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 11 வரை தமிழ் எழுத்துக்கள்
அடைந்த மாற்றங்கள்: மெய்யெழுத்துக்களில் சில மேலே கிடைக்கோடும், இடது பக்கம் குத்துக்கோடும்
பெற்றன.
எ.கா க, ங, ச, த, ந, ர
11 ஆம் நூற்றாண்டில் வடிவம் –
ஞ, ண, ல, ள போன்றவை சுழிகளோடு காணப்படுகின்றன.
v தமிழ் வரிவடிவ எழுத்து மாற்றங்கள் குறித்து ‘சாசனமும் தமிழும்’
எழுதியவர் ஆ. வேலுப்பிள்ளை.
v கல்லெழுத்துக் கலை – நடனகாசிநாதன்
v பண்டைத் தமிழ் எழுத்துக்கள் - தி.நா. சுப்பிரமணியம்
v வட்டெழுத்து தமிழ் எழுத்து
வடிவம்
v கல்லில் வெட்டியதால் வெட்டெழுத்து என்று அழைக்கப்பட்டு பின்னர்
வட்டெழுத்து என்று அழைக்கபடுகிறது.
v குற்றாலக் கல்வெட்டு வட்டெழுத்தை ‘வட்டம்’ எனும் சொல்லால் குறிக்கின்றது.
v தி.நா.சுப்பிரமணியம், டி.ஏ. கோபிநாதராவ், டாக்டர். பூலர் ஆகியோர்
வட்டெழுத்து பிராமியிலிருந்து தோன்றியது என்கின்றனர்.
v ஹரிபிரசாத் சாஸ்திரி – வட்டெழுத்து கரோஷ்டி எழுத்திலிருந்து
தோன்றியது என்கிறார்.
v டாக்டர் பர்னல்
1. பிராமி எழுத்தின் மூலமாக பீனிஷிய
எழுத்திலிருந்து வட்டெழுத்துக்கள் தோன்றின.
2. வட்டெழுத்து பிராமியிலிருந்து
தோன்றவில்லை என்கிறார்.
v மு. வரதராசனார் – தொல்காப்பியர் குறிப்பிடும் எழுத்து வடிவங்கள்
வட்டெழுத்துக்களைத்தான் என்கிறார்.
v இளங்கோவடிகள் வட்டெழுத்துக்களை கோலெழுத்து, கண்ணெழுத்து எனக்
குறிப்பிடுகின்றார்.
v வி.ஆர். இராமமூர்த்தி தீட்சிதர் – ‘அசோகர் காலத்து பிராமி எழுத்துக்களுக்கு
முன்பிலிருந்தே வட்டெழுத்துக்கள் தமிழகத்தில் வழக்கிலிருந்து வருகின்றன.
v சிவராம மூர்த்தி –
1) ‘தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக்
கொண்டு வட்டெழுத்துக்கள் தோன்றின. வட்டெழுத்திலிருந்துதான் கிரந்த எழுத்துக்களும் இக்காலத்
தமிழ் எழுத்துக்களும் தோன்றின.
2)
பீனிஷிய எழுத்துக்கள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் நோக்கி எழுதப்பட்டவை.
வட்டெழுத்து
இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் நோக்கி எழுதப்படுபவை. ஆகையால் பீனிஷிய எழுத்திலிருந்து
வட்டெழுத்துக்கள் தோன்றவில்லை.
v ‘கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள்’
– தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
v தி.வை.சதாசிவ பண்டாரத்தார் – தமிழ் எழுத்துக்கள் தமிழ்நாட்டிலேயே
தோன்றி தனி எழுத்துக்களாகும்.
v ஹீராஸ் – சுமேரிய எழுத்துக்கள் மொஹஞ்சதரோ எழுத்துக்களிலிருந்து
தோன்றியவை.
v திரு. நடன காசிநாதன் – தமிழின் பழைய எழுத்து வகையிலிருந்துதான்
வட்டெழுத்துக்களும் இன்றைய தமிழ் எழுத்துக்களும் தோன்றின.
v கி.பி 6 முதல் 8 – பல்லவர் கல்வெட்டுக்களில் வட்டெழுத்துக்கள்
காணப்படுகின்றன.
v கி.பி. 8,9 ஆம் நூற்றாண்டு – பாண்டியர் செப்பேடுகள் முழுமையும்
வட்டெழுத்துக்களால் ஆனவை.
v மலையாளம் – தமிழும் கிரந்தமும் இணைந்து மலையாள வரிவடிவம் தோன்றியது.
v மொழியியல் அறிஞர் ‘தானி’ கூற்று
1. பல்லவர்கள் கிரந்தத்தைப் புகுத்திய
பின்பு வட்டெழுத்துக்கள் வழக்கொழிந்தன.
2. தமிழும் வட்டெழுத்தும் தமிழகத்தின்
வெவ்வேறு பகுதிகளில் தோன்றி வளர்ந்தவை.
v அ.மு. பரமசிவானந்தம் – வட்டெழுத்தின் திருந்திய வடிவமே இன்றைய
தமிழ் எழுத்து வடிவம்.
v திரு. நாகசாமி – கி.பி. 4 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுக்களில்
தமிழும் வட்டெழுத்துக்களும் கலந்து எழுதப்பட்டு வந்தன.
v கே. எஸ். ராமசாமி சாஸ்திரி –
1.வட்டெழுத்து தமிழகத்திலேயே தோன்றி
வளர்ந்த சிறப்புடையது.
2.மெய்யெழுத்தின் மேல் புள்ளியிட்டு
எழுதுவது தமிழிற்கே உரிய சிறப்பாகும்.
3. தெலுங்கு, கன்னடம் பிராமியிலிருந்து
தோன்றியவை.
v தி. நா. சுப்பிரமணியன் – வட்டெழுத்துக் காலம் மூன்று வகைப்படும்.
1. கி.பி. 700 முதல் 950 வரை
2. கி.பி. 950 முதல் 1350 வரை
3. கி.பி 1350 க்குப் பின்பு
v நாகரி எழுத்து - ‘தேவ நாகரி’
கி.பி 6 இல் இந்தியாவின் வடபகுதியில்
சமஸ்கிருதத்தை எழுத வழங்கப்பட்ட எழுத்து வகை ஆகும்.
v மு. வரதராசனார் – ‘குப்த அரசர்கள் காலத்தில் பிராமி எழுத்திலிருந்து
தேவ நாகரி எழுத்துக்கள் தோன்றின.
v இரண்டாம் நரசிம்ம வரிமனின் கல்வெட்டு – கிரந்த எழுத்திலும் நாகரி
எழுத்திலும் காணப்படுகின்றது.
v கி.பி 8 ஆம் நூற்றாண்டு ‘வேணாட்டை’ ஆண்ட ‘கருநந்தடக்கன்’ செப்பேடு
நாகரி எழுத்தில் உள்ளன.
v சோழ அரசர்களான உத்தமச் சோழன், ராஜராஜ சோழன், கங்கை கொண்ட சோழனின்
பெயர்கள் காசுகளில் நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
v மராட்டிய
மோடி எழுத்து
தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டமையால்
அவர்கள் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் மோடி எழுத்தாலான கல்வெட்டுக்கள் தஞ்சைப் பெரிய
கோயிலில் காணப்படுகின்றன.
v 19 ஆம் நூற்றாண்டு வரை மோடி எழுத்துக்களே இருந்தன.
v அச்சுப் பதிப்பிற்குப் பிறகு மராட்டிய மொழி நாகரி எழுத்து வடிவிற்கு
மாற்றிவிட்டனர்.
v தொல்காப்பியம்
v எழுத்து - வரிவடிவத்தையும் ஒலிகளின் மாத்திரைகளையும் குறித்து
வருவது.
v எழுத்து – அகரம் முதல் னகரம் வரை
“எழுத்தெனப்படுப
அகரமுதல
னகர இறுவாய் முப்பஃதென்ப.” எழுத்து – 1.
v மெய்யெழுத்து – “மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்”
எழுத்து 15.
v எ. ஒ வடிவம் “எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.”
எழுத்து 16
v மெய்யெழுத்தின் வடிவ மாற்றம்
”புள்ளி யில்லா எல்லா மெய்யும்
உருவுருவாகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவுதிரிந்து உயிர்த்தலும்
ஆயீரியல உயிர்த்தலாறே.” எழுத்து
– 71
v அகரம் – “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்”
எழுத்து 46
எ, ஒ மேலே புள்ளியிட்டால் குறில் புள்ளி நீக்கினால்
நெடில்
v மு. அருணாச்சலம் கூற்று:
”தாண்டவராய முதலியார் எழுதிய சேந்தன்
திவாகரம் என்ற நூலில் எகர, ஒகரங்கள்
புள்ளியிட்டு எழுதப்பட்டிருந்தன.”
v கடைச்சங்க காலம்
“கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன்”
– சிலப்பதிகாரம்
v கண்ணெழுத்தும் வட்டெழுத்தும் ஒன்றென்பாரும் உளர்.
v நன்னூல்
“மொழிமுதற் காரணமா அணுத்திரளொலி
எழுத்து முதல்சார்பென இருவகைத்தே”
“தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண்டு
எய்து எகர ஒகர மெய்ப்புள்ளி.”
v வீரமாமுனிவர் எழுத்து மாற்றம்
v எ, ஒ (மேலே புள்ளி – குறில்) புள்ளி நீக்கி ஏ எனவும் ஓ எனவும்
மாற்றினார்.
v எ. ஒ (நெடில்) – எ, ஒ குறில் - ஏ, ஓ நெடில் என மாற்றினார்.
v உயிர் மெய்யில் எகர ஒகரங்களுக்கு ஒற்றைக் கொம்பு (எ) குறியைப்
பயன்படுத்தினார்.
எ.கா – கெ, கொ
v சோழர்காலம்
v வட்டெழுத்து வழக்கொழிந்து தற்போதைய தமிழ் எழுத்துக்கள் இடம்பெறத்
தொடங்கின.
v முதன் முதலில் கி.பி 10ஆம் நூற்றாண்டில் திருமந்திரத்தில் ஹ,
க்ஷ, ஸ, ஸ்ரீ ஆகிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.
v கி.பி. 15 முதல் கிரந்த எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ,
க்ஷ ஆகிய ஆறு எழுத்துக்களும்
பரவலாகக் காணக் கிடக்கின்றன.
v ஈ. வே. ராமசாமி
எழுத்துச் சீர்திருத்தம் – ஆசிரியர்
செ.வை. சண்முகம்
1. பிராமி – வட்டெழுத்து – தமிழ்
வடிவம் என்பாரும் உளர்.
2. மொஹஞ்சதரோ – ஹரப்பாவின் சித்திர
எழுத்துக்களிலிருந்து தோன்றியது என்பாரும் உளர்.
3. கண்ணெழுத்துக்கள்தான் பண்டையத்
தமிழ் எழுத்துக்கள் என்பாரும் உளர்.
திராவிட மொழிகளின் தனித்தன்மை
v வான்சிலேகல் (ஜெர்மனிய மொழியறி– ஒப்பிலக்கணம் என்ற சொல்லை முதன்
முதன் முதலில் பயன்படுத்தியவர்.
v ரஸ்க், பாப், கிரீம்
- ஒப்பு மொழியியலுக்கும் வரலாற்று மொழியியலுக்கும் வித்திட்டவர்கள்.
v பாப் – இந்தோ – ஐரோப்பிய இலக்கணம் குறித்து ஆய்ந்தவர்.
v அடெலுங் & பல்லாஸ் – பல்வேறு மொழிகளிலிருந்து சொல் அட்டவனைகளைத்
தயாரித்தனர்.
v வில்லியம் ஜோன்ஸ் (1896) – “சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தின்
ஆகியவை மொழிகள் ஒரே சினத்தைச் சார்ந்தவை.
v கால்டுவெல் (1856) – 1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
2. திராவிட மொழிகள்
v கால்டுவெல் – திராவிடமொழிகள் திருந்திய மொழிகள் மற்றும் திருந்தாத
மொழிகள் என இருவகைப் படுத்தலாம்.
v திராவிட மொழிகள் மூன்று மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. தென் திராவிட மொழிகள்: தமிழ்,
மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா.
2. நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு,
கோண்டி, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டி, நாடக்கி, பெங்கோ, மண்டா.
3. வடதிராவிட மொழிகள்: குருக்,
மால்டோ, பிராகூய் (ஒராவன்)
v தென் திராவிட மொழிகள்
v தமிழ் பேசும் நாடுகள் – இந்தியா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர்,
பீஜித்தீவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் கயானா, மடகாஸ்கர், திரிணிடால்.
v மலையாளம்: கேரளா, லட்சத்தீவு
v கன்னடம்: கர்நாடகம்
v இலக்கிய வளமில்லா மொழிகள் – குடகு, துளு
v துளு – கர்நாடகத்தில் மங்களூர் பகுதியில் பேசப்பட்டு வருகின்றது.
v குடகு – கொடகு, கூர்க்கி, கோதகி (வேறுபெயர்கள்)
v தோடா, கோத்தா மொழிகள் – தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர்
பேசுகின்றனர்.
v பணிய மொழி, பெட்ட குறும்பா மொழி - தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில்
பழங்குடியினர் பேசுகின்றனர்.
v இருளர் மொழி - தமிழின்
கிளைமொழி
v முள்ளு குறும்பர் – மலையாளத்தின் கிளைமொழி
v கசவர் மொழி, காட்டு நாயக்கர் மொழி – கன்னடத்தின் கிளைமொழி
v டாக்டர். சங்கரபட் – கர்நாடகத்தில் பேசப்படும் ‘கொரகா’ மொழியை
ஆராய்ந்துள்ளார்.
v நடு திராவிட மொழிகள்
v தெலுங்கு மொழி பேசப்படும் பகுதிகள்– ஆந்திரப்பிரதேசம், தென்னாப்பிரிக்கா
v தெலுங்கு - திராவிட மொழிகளில் அதிக மக்கள் பேசும் மொழி
v நடுதிராவிட மொழிகளில் தெலுங்கு மட்டுமே இலக்கிய வளம் மிகுந்த
மொழியாகும்.
v கோண்டி மொழி – ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா,
மகாராஷ்டிரம்.
v திராவிடப் பழங்குடி மொழிகளுள் அதிக மக்கள் பேசும் ஒரே மொழி கோண்டி
மொழியாகும்.
v கூயி மொழி – ஒரிஸ்ஸா (இம்மொழி பேசுவோர் ‘கோந்த்’ மக்கள் என்றழைக்கப்படுவர்.
v கூவி மொழி – ஒரிஸ்ஸா, ஆந்திரப்பிரதேசம்
v பிட்ஜெரால்டு – கூவி மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது
என்றார்.
v கூயி, கூவி இரண்டும் இலக்கண அடிப்படையில் நெருங்கிய தொடர்புடையன.
v கோலமி மொழி – ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம்
v பர்ஜி மொழி – பேசுவோர் பர்ஜாஸ் மக்கள் எனப்படுகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் ‘பஸ்தார்’
மாவட்டத்தில் பேசுகின்றனர்.
v கோண்டா (அல்லது) கூபி – கொண்டதொரா (அல்லது) கூபி மக்கள் பேசுகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், ஒரிஸ்ஸாவில் கோரபுட் மாவட்ட மக்கள்
பேசுகின்றனர்.
v கூபி, கூயி, கூவி ஆகியவை ஒவ்வொன்றும் தொடர்புடையன
v கதபா – ஆந்திரப்பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பேசுகின்றனர்.
வேறுபெயர் ‘கொண்கொர் கதபா.’
v நாயக்கி – மகாராஷ்டிராவிலுள்ள பந்தா, பெரார் பகுதியில் பேசுகின்றனர்.
v பெங்கோ – ஒரிஸ்ஸாவைச் சார்ந்த கோரபுட் மாவட்டம், தசமந்தபூர்,
காலஹண்டி பகுதியில் பேசுகின்றனர்.
v மண்டா – ஒரிஸ்ஸாவில் உள்ள கோரபுட் மாவட்டத்தில் பேசுகின்றனர்.
v வட திராவிட மொழிகள்
v குருக் (அ) ஒரோவன் – பீஹார், மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா, சோட்டா
– நாக்பூர் பகுதியில் பேசுகின்றனர்.
v மால்டோ (அல்லது) ராஜ்மகால் – பேசுவோர் ‘மாலர்’ எனப்படுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள இராஜ்மகால் குன்றுப் பகுதி, பீகாரிலுள்ள ‘சந்தால் பர்ஹானா பகுதியிலும்
பேசுகின்றனர்.
v பிராகூய் – மேற்குப் பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் பகுதியில்
பேசுகின்றனர்.
v மொழியியல் அறிஞர் எமனோ – தொல்திராவிட ஒலியின அமைப்பு குறித்து
ஆய்ந்தனர்.
v தொல்திராவிட உயிர் ஒலியன்கள்
v அ – எல்லா மொழிகளிலும் அ என்றே ஒலிக்கப்படுகிறது. (தோடா மொழியில்
சில சொற்களில் ஒ அகரத்தைக் குறிக்கிறது.
பர்ஜி மொழியில் சில சொற்களில்
எ அகரத்தைக் குறிக்கிறது.)
v ஆ – எல்லா மொழிகளிலும்
ஆ என்றே ஒலிக்கப்படுகிறது.
(தோடா மொழியில் சில சொற்களில்
ஓ ஆகாரத்தைக் குறிக்கிறது.)
பர்ஜி மொழியில் சில சொற்களில்
ஏ ஆகாரத்தைக் குறிக்கிறது.
v பிராகூய் மொழியில் எ, ஒ குறில் ஒலிகள் இல்லை.
v திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி – தொல்திராவிட மொழிக்கும் இன
மொழிகளுக்குமான உறவை ஆராய்வதற்குப் பயன்படுகிறது.
v வாயைத் திறத்தலால் – அ, ஆ
v வாயை விரித்தலால் – இ, ஈ, எ, ஏ
v வாயைக் குவித்தலால் – உ, ஊ, ஒ, ஓ
v தொல்திராவிட மெய்யொலியன்கள்
v தமிழில் உப்பு என்பது தொல்திராவிட மொழியில் சுப்பு என்றிருந்தது.
சகரம் நீங்கி உப்பு என்றானது.
v திராவிட மொழிகளில் யகரம் தமிழ் மொழியில் மட்டுமே மொழிக்கு முதலில்
வந்துள்ளது.
v திராவிட மொழிகளில் ழகரம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில்
மட்டுமே காணப்படுகின்றது.
v ழகரம் - கி.பி 9ஆம்
நூற்றாண்டு வரை தெலுங்கிலும் கி.பி 10 வரை கன்னடம் மொழியிலும் இருந்திருக்கிறது.
v பெரும்பான்மையான திராவிட மொழிகளில் சகரமாக மாறியுள்ளது.
v தோடா, தெலுங்கு, கோண்டி பிராகூய் ஆகிய மொழிகளில் ரகரமாக மாறியுள்ளது.
v தென் திராவிட மொழிகளில் – உயர்திணையில் ஆண்பால், பெண்பால் வேறுபாடு
உண்டு. அஃறிணையில் பால் வேறுபாடு இல்லை.
v நடுத்திராவிட மொழிகளில் ஆண்பால், ஆண்பாலல்லன என்ற வேறுபாடு உள்ளது.
v எமனோ – தமிழும் மலையாளமும் மிகவும் பிற்காலத்தில் பிரிந்தால்
இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.
v எல்.வி. ராமசாமி அய்யர் – குடகு மொழி தமிழ், மலையாள மொழியுடன்
நெருங்கிய தொடர்புடையது.
v டாக்டர் கிருஷ்ணமூர்த்தி – துளு நடுதிராவிட மொழிக்குடும்பத்தைச்
சார்ந்தது.
v டாக்டர் பி. எஸ். சுப்பிரமணியம் – துளு தென்திராவிட மொழிக்குடும்பத்தைச்
சார்ந்தது.
v கன்னடமும் தமிழும்
தொல்திராவிட
மொழி – மரத்தது – மரம் + அத்து+ அது
தமிழ்
– மரத்து – மரம்+ அத்து
கன்னடம்
– மரத
v கொடகும் தமிழும்
எமனோ
(அறிஞர்) – தொல்திராவிட மொழி தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளோடு நெருங்கிய தொடர்புடையது.
எண்ட்டு – தொல்திராவிட மொழிச்
சொல்
எண்டு – கன்னடம்
எட்டு – தமிழ், மலையாளம், கோத்தா,
தோடா, கொடகு
v தமிழும் தோடா கோத்தா மொழிகளும்
நால்கு - தொல்திராவிடம்
நால்கு – தமிழில் பெரும்பாணாற்றுபடை
(489)
அகநானூறு (104)
நான்கு – லகரம் னகரமாக மாறி நான்கு
என்றானது.
v தென் திராவிட மொழியின்
சிறப்பியல்புகள்
v தமிழ், மலையாளத்தில் வரும் இ, உ ஆகியவை தெலுங்கு கன்னடத்தில்
எ, ஒ வாக மாறியுள்ளது.
v ஆ – தொல்திராவிடத்தில் எதிர்மறை விகுதி
v த், ந்த், த்தி, இ – தொல்திராவிடத்தில் காலங்காட்டும் இடைநிலையாக
இருந்து தென் திராவிடத்திற்கு வந்துள்ளது.
v நீன் – தொல்திராவிடம்
v நீ – ‘ன்’ நீங்கிய தமிழ்
v தொல்திராவிடத்தில் காலப்பிரிவு 1. இறந்த காலம் 2. இறப்பில்லா
காலம் எனும் இருவகைத்தது.
v தமிழ் மொழியானது மற்ற தென் திராவிட மொழிகளை ஒப்பிடுகையில் வடமொழித்
தாக்கம் மிகக் குறைந்து காணப்படுகிறது.
v அவன் செய்து – தொல்திராவிட மொழி (காலமறிவது சிக்கல்)
v அவன் செய்தான் – தமிழ் (இறந்தகாலம்)
v ன், ல் – நுனியண்ண வெடிப்பொலி
v ண், ள் – நாவளை வெடிப்பொலி
v தொல் திராவிட மொழிமாற்றம்
v மொழி முதல் ஞகரம், நகர மெய்யாக மாறியது.
எ.கா – ஞாண் – நாண், ஞெகிழ் –
நெகிழ்
v கன் – தொல்திராவிட மொழியில் ஆண்பால் விகுதி
எ.கா – முதுக்கன் (மலையாளம்)
முதியன் (தமிழ்)
முதுவன் (தமிழ் – திருக்குறள்
715வது குறள்)
கன் என்பது வன் என்று மாறியிருக்கின்றது.
நிம் – மலையாளம்
நும் – தமிழ் – தொல்திராவிடத்தில்
இகர உயிர் உகரமாக மாறியுள்ளது.
v பழமையான கல்வெட்டு எழுத்தின்
தன்மைகளும் மாற்றங்களும்
v தமிழில் மிகப்பழமையான கல்வெட்டுக்கள் பிராமியில் உள்ளன.
அவை மூன்றாம் நூற்றாண்டின.
v கண்டறியப்பட்ட இடங்கள் – கீழ வளைவு, மறுகால் தலை, ஆனைமலை, அழகர்மலை,
மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்ன வாசல், திருவாதவூர், விக்கிரமங்கலம், திருப்பரங்குன்றம்,
மாங்குளம், கருங்காலக்குடி, புகழூர், அரசலூர், மாமண்டூர்.
v இவற்றில் மாங்குளம் கல்வெட்டு காலத்தால் முந்தையது.
v புகழூர் கல்வெட்டு சேர மன்னர்கள் பற்றிய செய்தி உள்ளது.
v கி.மு 3 அசோகர் ஆட்சிகாலம்
v கி.மு. 3 சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் பரவிய காலம் இவர்களின்
மொழி பிராகிருதம் எழுத்து பிராமி.
v ஔகாரம் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை.
v ஏகார, ஓகார நெடில் உயிர் எழுத்துக்களுக்கு தனி வரிவடிவம் இல்லை.
v எல்லா உயிர்களும் – சொல்லின் முதலிலும் இடையிலும் வருகின்றன.
v ஈ, எ, ஒ – தவிர ஏனைய உயிர்கள் இறுதியில் வருகின்றன.
v ஃ ஆயுத எழுத்து கல்வெட்டுக்களில் காணப்படவில்லை.
v ஙகரமும் கல்வெட்டுகக்ளில் இல்லை.
v க், ச், த், ந், ப், ம், வ், ய் ஆகிய எட்டும் மொழிக்கு முதலாகும்.
v ண், ம், ய், ர், ல், ழ், ள், ன் ஆகிய எட்டும் மொழிக்கு இறுதியாகும்
v ர, ழ இரண்டும் இரட்டிக்காது.
v யகரம் ஆகாரத்தோடு மொழிக்கு முதலில் வரும்
எ.கா – யாற்றூர் (புகழூர் கல்வெட்டுச்
செய்தி)
v சகரம் மொழிமுதலாக வருகிறது.
எ.கா – சந்தன், சழியன், சடிகன்
v வ – உ, ஊ, ஒ, ஓ தவிர பிறவற்றோடு மொழிமுதலாகிறது.
v ற, ட, ர, ல – மொழிமுதல் ஆகாது.
v க, ச, ட, த, ப, ற – வல்லினம் (வெடிப்பொலிகள்)
v க, ச, த, ப – மொழி முதலாகின்றன.
v மெய் மயக்கங்கள் மொழி முதலிலோ (அ) இறுதியிலோ வருவதில்லை. இடையில்
மட்டுமே வருகின்றன.
v கல்வெட்டில் சிறப்பு ழகரம் டகரமாக மாறியுள்ளது.
எ.கா – கழு – கடு (அழகர்மலைக்
கல்வெட்டு)
v ஒகரம் உகரமாக மாறியது
எ.கா – கொட்டுப்பித்த – குட்டுபித்த
v இன்று வகரம் இருக்கின்ற இடங்களில் அன்று பகரம் பயின்று வந்துள்ளது.
எ.கா – கொட்டுவித்த – கொட்டுபித்த
v உயிர் ஈற்றுப் பிறமொழிச் சொற்கள் மகர ஈறு பெற்று தமிழாக மாறின.
எ.கா – காஞ்சனா – காஞ்சனம்
v ஆண்பால் விகுதி – அன், ஆன்
v பலர்பால் விகுதி – ஓம்
v சுட்டுச் சொல் – உவன் (மாங்குளம் கல்வெட்டில் உள்ளது)
v பள்ளி - வாழுமிடம்
v அதிட்டானம் – படுக்கையறை
v கல்வெட்டுத் தமிழ்
v தமிழ்நாட்டில் கிடைக்கும் கல்வெட்டு எழுத்துக்கள்
1. தமிழ், கிரந்தம், வட்டெழுத்து
v குகைக் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களால் ஆனவை.
v கிரந்தம், தமிழ் எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.பி 6க்குப் பிறகு
கிடைக்கின்றன.
v கல்வெட்டுக்கள் பேச்சு வழக்கினை மிகுதியாகக் கொண்டுள்ளன.
v கல்வெட்டுக்களில் வடமொழி பகுதியை கிரந்தத்திலும் தமிழ் பகுதியை
வட்டெழுத்திலும் எழுதி வந்துள்ளனர்.