சனி, பிப்ரவரி 04, 2023

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - நாட்டுப்புறப் பாடல்கள்

 நாட்டுப்புறப் பாடல்கள்

குழந்தைப் பாடல்

1.    என்ன ஊர்?

மயிலப்பூர்

என்ன மயில்?

காட்டு மயில்

என்ன காடு?

ஆற்காடு

என்ன ஆறு?

பாலாறு

என்ன பால்?

கள்ளிப் பால்

என்ன கள்ளி?

இலைக் கள்ளி

என்ன இலை?

மா இலை

என்ன மா?

அம்மா.

தொழில் பாடல்

2.    மண்ணை நம்பி – ஏலேலோ

மரம் இருக்க - ஐலசா

மரத்தை நம்பி – ஏலேலோ

கிளையிருக்க – ஐலசா

கிளையை நம்பி – ஏலேலோ

கோல் இருக்க - ஐலசா

கோலை நம்பி – ஏலேலோ

இலை இருக்க - ஐலசா

இல்லையை நம்பி – ஏலேலோ

பூ இருக்க - ஐலசா

பூவை நம்பி – ஏலேலோ

பிஞ்சு இருக்கு - ஐலசா

பிஞ்சை நம்பி – ஏலேலோ

காயிருக்க - ஐலசா

காயை நம்பி – ஏலேலோ

பழம் இருக்க – ஐலசா

பழத்தை நம்பி – ஏலேலோ

நீ இருக்க – ஐலசா

உன்னை நம்பி – ஏலேலோ

நான் இருக்கேன் – ஐலசா.