சனி, பிப்ரவரி 04, 2023

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - சிற்றிலக்கியம்

 சிற்றிலக்கியம்

அந்தாதி

1.    முப்பதுடனெடுத்து மூங்கில் இலைமேலே

முங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே

தூங்கும் பனிநீரே வாங்கும் கதிரோனே

வாங்கும் கதிரோனை.

தூது

1.    பஞ்சுபடா நூலே, பலர் நெருடாப் பாவே கீண்

டெஞ்சி அழுக்கேறா வியற்கலையே – விஞ்சு நிறம்

தோயாத செந்தமிழே, சொல்லேருழவரகம்

தீயாது சொல்விளையும் செய்யுளே.                                  தமிழ் விடு தூது

உலா

கோவை

கலம்பகம்

தமிழ்விடு தூது

1.    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

பரணி

1.    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவனுக்கு வகுப்பது பரணி

2.    பரணியில் பிறந்தவன் தரணியாள்வான்

3.    எடுமெடு மெடுவென வெடுத்ததோர்

இகலொலி கடலொலி யிகக்கவே

விடுவிடு விடு பரிகரிக்குழாம்

விடும் விடுமெனுமொலி மிகைக்கவே.

பிள்ளைத் தமிழ்

1.    குழவி மருங்கினும் கிளவதாகும்                                         தொல்காப்பியம்

2.    குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்                                                            திருக்குறள்

3.    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டும்

தொட்டும் கௌவியும் துழந்தும் நெய்யுடை

அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை                        அறிவுடை நம்பி

பள்ளு

குறவஞ்சி

1.    ஓடக் காண்பது பூம்புணல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யொகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது சூலுளை சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே.

2.    வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.

3.    செங்கையில் வண்டு கலின்கலின் என்று

செயம் செயம் என்றாட – இடை

சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு

தண்டை கலந்தாட – இரு

கொங்கை கொடும்பகை வென்றனம் என்று

குழைந்து குழைந்தாட – மலர்ப்

பைங்கொடி நங்கை வசந்த சவுந்திரி

பந்து பயின்றாளே.