சனி, பிப்ரவரி 04, 2023

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - பக்தி இலக்கியம் - வைணவம்

 ஆழ்வார்கள்

பொய்கையாழ்வார்

1.    வையம் தகளி வார்கடலே நெய்யாக

வெய்யக் கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் நாரனற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்

பூதத்தாழ்வார்

1.    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.

2.    நாடினும் நின்னடியே நாடுவன், நாடோறும்

பாடினும் நின்புகழே பாடுவன் – சூடினும்

பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு

என்னாகில் என்னே எனக்கு.

பேயாழ்வார்

1.    திருக்கண்டேன், பொன்மேணி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறம் கண்டேன் – செருக்கிளரும்

பொன் ஆழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்

என் ஆழி வண்ணன்பால் இன்று.

திருமழிசை ஆழ்வார்

1.    கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய

செந்நாப் புலவன் போகின்றேன், நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

2.    கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டும் – துணிவுடைய

செந்நாப் புலவன் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய் விரித்துக்கொள்.

3.    அறியார் சமணர் அயந்தார் பௌத்தரும்

சிறியார் சிவப்பட்டார் செப்பில் – வெறியாய்

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்

ஈனவரே ஆதலால் இன்று.

நம்மாழ்வார்

1.    வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்.

2.    மேகங்களே உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்

யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்.

3.    இதுவோ திருநகரி ஈதோ பொருநை

இதுவோ பரமபதத்து எல்லை – இதுவோதான்

வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை

ஓதும் சடகோபன் ஊர்.

4.    உயர்வற உயர்நலம் உடையவன் எவன்? அவன்

மயர்வற மதிநலம் அருளினன் எவன்? அவன்

அயர்வுறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே.

5.    அற்றது பற்றெனில் உற்றது வீடு

6.    உண்ணும் சோறும் பருகும் நீரும்

தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்

 

மதுரகவியாழ்வார்

1.    கண்ணி நுன் சிறுதாம்பினால் கட்டுண்ணப்

பண்ணிய பெருமாயன்

குலசேகராழ்வார்

1.    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன்போல், மாயத்தால்

மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மா நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

2.    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

3.    அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள் நினைத்து அழுங்குழவியது போன்று

இருந்தேனே.

பெரியாழ்வார்

1.    மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்

பேணியுனக்குப் பிரமன் வீடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ

வையம் அளந்தானே தாலேலோ

2.    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

            மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்

                                                            சேவடி செவ்வி திருக்காப்பு

ஆண்டாள்

1.    வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

2.    கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?

மருப்பு ஒசித்த மாதவந்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே

3.    மாணிடவர்க்கு என்று பேச்சுப் படின்

வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே

4.    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்நாளால்

தொண்டரடிப் பொடியாழ்வார்

1.    பச்சைமாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதோ! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே!.

திருப்பாணாழ்வார்

1.    கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணவே!.

திருமங்கையாழ்வார்

1.    ஓடினேன் ஓடி உயர்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம் தெரிந்து

நாடினேன் நாடிநான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

2.    குலந்தரும் செல்வம் தந்திடும், அடியார்

படுதுயர் ஆயினவெல்லாம்

நிலம் தரஞ்செய்யும், நீள்விசும்பு அருளும்

அருளொடு பெருநிலமளிக்கும்

வலந்தரும், மற்றும் தந்திடும் பெற்ற

தாயினும் ஆயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

3.    பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவே

ஊரார் இகழினும் ஊராது ஒழியேன் நான்

வாரார் பெண்ணை மடல்.

கம்பராமாயணம்

1.    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

2.    வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

வில்லிபாரதம்

1.    பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்

திருப்பிலே யிருந்து, வைகை யேட்டிலே தவழ்ந்து பேதை

நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்தோரேன

மருப்பிலே பயின்ற பாவை, மருங்கிலே வளருகின்றாள்.