சனி, பிப்ரவரி 04, 2023

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - பக்தி இலக்கியம் - சைவம், சித்தர் மரபு

 பக்தி இலக்கியம்

நாயன்மார்கள்

திருஞான சம்பந்தர்                                     

1.    வலம்வந்த மடவார்கள் நடமாட

முழவதிர மழையென்றஞ்சி

சிலமந்தி அலமந்து மரமேறி

முகில் பார்க்கும் திருவையாறே

2.    காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேத நான்கினு மெய்ப்பொருளாவது

நாத நமச்சிவாயவையவே

3.    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை

4.    சிறையாரும் மடக்கிளி…

திருநாவுக்கரசர்

1.    நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக் கிழி தருமிக்கருளினோன் காண்

2.    மாசில் வீணையும் மலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

3.    குனித்த புருவமும் …

4.    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சும்

5.    இன்பமே எந்நாளும் துன்பமில்லை

6.    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.

7.    என் கடன் பணி செய்து கிடப்பதே

8.    ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே

9.    சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்

சுந்தரர்

1.    பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

மாணிக்கவாசகர்                      திருவாசகம்

1.    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.

2.    வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே             (இராமலிங்கடிகள்)

3.    திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்

கருங்கல் மனமும் கரைந்து உக

கண்கள் தொடுமணர் கேணியிற் சுரந்து நீர்பாய             நால்வர் நான் மணி மாலை

4.    நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க

5.    தென்னாடுடைய நிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

திருமூலர்

1.    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந் துய்ம்மினே.

2.    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

3.    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்.

4.    மரத்தை மரைத்தது மாமதை வனி

5.    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.

6.    ஊரெல்லாம் கூடி ஒழிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டுச்

சூரியங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழுந்தார்களே

காரைக்கால் அம்மையார்

1.    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்

உன்னை என்றும் மறவாமை வேண்டும்.

2.    அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்

அப்பொருள் தானே அவன்.

சேக்கிழார்

---

சித்தர்கள்

சிவ வாக்கியார்

1.    ஓடி ஓடி ஓடி ஓடி

உட்கலந்த சோதியை

நாடி நாடி நாடி நாடி

நாட்களும் கழிந்து போய்

வாடி வாடி வாடி வாடி

மாண்டு போன மாந்தர்கள்

கோடி கோடி கோடி கோடி

எண்ணிலாத கோடியே                                                                   

2.    நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?                              

3.    பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா

இறைச்சி தோல் எலும்னிலும் இலக்கமிட்டிருக்குதோ

குதம்பைச் சித்தர்

1.    மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பார்க்குத்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி? குதம்பாய்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்

பட்டயம் ஏதுக்கடி? குதம்பாய்

வஞ்சம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்

சஞ்சலம் ஏதுக்கடி? குதம்பாய்

அந்தரம் தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத்

தந்திரம் ஏதுக்கடி? குதம்பாய்

தாவரம் இல்லை தனக்கொரு வீடில்லை

தேவாரம் ஏதுக்கடி? குதம்பாய்!                                                     

கடுவெளிச்சித்தர்

1.    நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி,

கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

2.    பாவம் செய்யாதிரு மனமே – நாளை

கோபம் செய்யாதே எமன் கொண்டோடிப் போவான்

இடைக்காட்டுச் சித்தர்

1.    ஆடுமயிலே! நடமாடு மயிலே! எங்கள்

ஆதியணி சேடனைக் கண்டு ஆடுமயிலே

2.    மனம் என்னும் மாடு இறந்தால் தாண்டவக் கோனே

முத்தி என்று எண்ணடா தாண்டவக் கோனே

சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே – யாவும்

சித்தியென்றே நினையோடா தாண்டவக் கோனே!       

பாம்பாட்டிச் சித்தர்

1.    நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே

பாதலத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே!                           

2.    மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் வாயில்மட்டே

இனமான சுற்றமும் மயானம் மட்டே வழக்கேது துணை?

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே!