சனி, பிப்ரவரி 04, 2023

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - காப்பியம்

 காப்பியம்

இரட்டைக் காப்பியம்

1.    முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரிதே

அடிகள் நீரே அருள்க.                                              சாத்தனார்

சிலப்பதிகாரம்

1.    ஒரு முலை அறுத்த திருமா உண்ணி                       (நற்றிணை)

2.    கொலையுண்ட கணவன் நிலைகண்டு

கதறும் பத்தினிச் செய்யுளும்                                   (யாப்பருங்கல விருத்தி)

3.    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

4.    குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து

பாலையென்பதோர் படிவம் கொள்ளும்.

5.    முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வந்து விளையும்

6.    பசியும் பினியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்கென வாழ்த்துவர்

7.    பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டது.

8.    நம்மை மறந்தாரை நாம் நாம் மறக்க மாட்டமால்           

9.    மாலை வாராராயினும் காலை காண்குதும்

10. முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகுக

11. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

பாலை என்பதோர் படிமம் கொள்ளும்

12. இவளோ

கொங்கச் செல்வி குடமலையாட்டி

தெந்தமிழ்ப் பாவை செய் தவக்கொழுந்து

ஒருமா மணியாய் உலகில் தோன்றிய

திருமாமணி.

மணிமேகலை

1.    ”காணார் கேளார் கால்முடப் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணி நடுக்கிற்றோர்

யவரும் வருகவென்று இசைத்துடன் ஊட்டி”

2.    மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

3.    அறமெனப்படுவது யாதெனக் கேட்டின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்.

4.    குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங்கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாணனி களையும் மாணெழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி யென்னும் பாவி.

5.    இளமையும் நில்லா யாக்கையும் நில்லா

வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறவே விழுத்துணை ஆவது.

சீவக சிந்தாமணி

வளையாபதி

1.    பொறையிலா அறிவு, போகப் புணர்வு இலா இளமை மேவல்

துறையிலா வசன வாவி, துகிலிலாக் கோலத் தூய்மை

நறையிலா மாலை, கல்வி இலாப் புலமை நன்னர்ச்

சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செலவம் அன்றே.

குண்டலகேசி

1.    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ்வியல்பு மின்னே! மேல்வரும் மூப்புமாகி

நாளும் நாட்சாகின்றோமால்; நமக்கு நாமழாததென்னெ!.

 

சிறுகாப்பியங்கள்

உதயன குமார காவியம்

நாககுமார காவியம்

யசோதர காவியம்

சூளாமணி

1.    ஆனை துரப்ப அரவுரை ஆழ்குழி

நானவிர் பற்றுபு நாலும் ஒருவன்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம் மதித்தனை கொள் நீ”

நீலகேசி

---