பதிணென் கீழ்க்கணக்கு
1.
அடிநிமிர்பில்லாச்
செய்யுட் தொகுதி
அறம் பொருள்
இன்பம் அடுக்கி யவ்வகைத்
திறம்பட உரைப்பது
கீழ்க்கணக்காகும் பன்னிரு
பாட்டியல் 248
2.
நாலடி
நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால் கடுகங்
கோவை பழமொழி, மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட
னேலாதி யென்பனவும்
கைந்நிலையும்
ஆம்கீழ்க் கணக்கு
ஐந்திணை
ஐம்பது
1.
சுனைவாய்ச்
சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி
துண்ண வேண்டிக்கலைமாத்தன்
கள்ளத்தின்
ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த
நெறி’ 38
2.
ஐந்திணை
ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ்
சேராதவர்
ஐந்திணை
எழுபது
1.
புல்லுநர்
இல்லார் நடுங்க, சிறு மாலை,
கொல்லுநர் போல
வரும் 17
திணைமொழி
ஐம்பது
1.
பவளமும்
முத்தும் பளிங்கும் விரைஇப்
புகழக் கொணர்ந்து
புறவெடுக்கும் முன்றில்
திணைமாலை
நூற்றைம்பது
1.
ஒருகை
இருமருப்பின் மும்மதமால் யானை
பருகுநீர் பைன்சுணையில்
காணாது
கார்
நாற்பது
1.
செல்வர்
மனம்போல் கவின் ஈன்ற நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற
காடு
கைந்நிலை
1.
பொன்னினர்
வேங்கைப் புனம் சூழ்மலைநாடன்
மின்னின் அனைய
வேல் ஏந்தி இரவினில்
இன்னே
வரும் கண்டாய் தோழி; இடையாமத்து
என்னை இமைபொருமாறு
களவழி
நாற்பது
இன்னா
நாற்பது
1.
ஈன்றாளை
ஓம்பாவிடல் இன்னா
தீமையுடையார்
அருகில் இருத்தல் இன்னா
கள்ள
மனத்தார் தொடர்பு இன்னா
இனியவை
நாற்பது
1.
பிச்சை
புக்காயினும் கற்றல் மிக இனிதே
கயவரைக்
கைகழிந்து வாழ்தல் இனிதே
மானம்
அழிந்தபின் வாழாமை முன்னினிதே
வருவாய்
அறிந்து வழங்கல் இனிதே
2.
தடமென்
பனைத்தோள் தளிரியலாரை
விடமென்றுணர்தல்
இனிது
திரிகடுகம்
1.
தன்னை
வியந்து தருக்கலும் தாழ்வின்றி
கொன்னே
வெகுளி பெருக்கலும் – முன்னிய
பல்பொருள்
வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம்
உடைக்கும் படை.
2.
நெஞ்சம்
அடங்குதல் வீடாகும்
3.
வேளாளன்
என்பான் விருந்திருக்க உண்ணாதான்
4.
தாளாளன்
என்பான் கடன் பட வாழாதான்
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
1.
தானத்தால்
போகம் தவத்தால் சுவர்க்கமாம்
ஞானத்தால் வீடாகும்
நாட்டு 34
2.
மயிர்
வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்,
உகிர் வனப்பும்,
காதின் வனப்பும், செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும்
வனப்பு அல்ல, நூற்கு இயைந்த
சொல்லின் வனப்பே
வனப்பு 35
3.
படைதனக்கு
யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு
நுண்மை வனப்பாம் – நடைதனக்கு
ஓடா
மொழி வனப்புக்கு ஓற்கதுவே சேவகர்க்கு
வாடாத
வண்கண் வனப்பு.
ஆசாரக்
கோவை
நான்மணிக்கடிகை
1.
இன்னாமை
வேண்டின் இரவெழுக
மன்னுதல் வேண்டின்
இசைநடுக
செல்வது வேண்டின்
அறஞ்செய்க
வெல்வது வேண்டின்
வெகுளிவிடல். 15
2.
மனைக்கு
விளக்கம் மடவாள்
மடவாளுக்கு
விளக்கம் புதல்வர்
புதல்வர்க்கு
விளக்கம் கல்வி
கல்விக்கு
விளக்கம் புகல்சால் உணர்வு (ஒழுக்கம்)
3.
நிலத்துக்கு
அணி நெல்லும் கரும்பும்
குளத்துக்கு
அணி தாமரை
பெண்ணுக்கு
அணி நாணம்
4.
இளமைப்
பருவத்துக் கல்லாமை குற்றம்
5.
ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல்
6.
கொண்டானில்
சிறந்த கேளிர் பிறர் இல்
முதுமொழிக்
காஞ்சி
1.
ஆர்கலி
உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின்
சிறந்தன்று ஒழுக்கமுடைமை
பழமொழி
1.
மாய்வதன்
முன்னே வகைப்பட்ட நல்வினையை
ஆய்வின்றிச்
செய்யாதார் பின்னை வழிநினைந்து
நோய்காண் பொழுதின்
அறம்செய்வார்க் காணாமை
நாய்காணின்
கல்காணா வாறு.
2.
உரைமுடிவு
காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள்
உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான்
சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம்
படும்.
21
3.
அடக்கம்
உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும்
வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட
உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம்
கொக்கு
"
4.
கற்றறிந்தார்
கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து
தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற
அறைகல்
அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர் தளும்பல் இல்"
5.
நெறியால்
உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியரால்
என்று - பெரியாரைத்
தங்கள்நேர்
வைத்துத் தகவல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத்
தற்று.
6.
பொல்லாத
சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே
தன்னைத் துயர்ப்படுக்கும்-நல்லாய்!
மணலுள்
முழுகி மறைந்துகிடக்கும்
நுணலுந்தன்
வாயால் கெடும்.
ஆத்திசூடி
1.
அறம்
செய விரும்பு
ஆறுவது
சினம்
இளமையில்
கல்
கொன்றை
வேந்தன்
1.
அன்னையும்
பிதாவும் முன்னறி தெய்வம்
2.
குற்றம்
பார்க்கின் சுற்றம் இல்லை
3.
திரைகடல்
ஓடியும் திரவியம் தேடு
மூதுரை
1.
நெல்லுக்கு
இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும்
ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லாருக்கும்
பெய்யும் மழை.
2.
உடன்பிறந்தார்
சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே
கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையில்
உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து
போல்வாரும் உண்டு.
நல்வழி
1.
சாதி
இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்
நீதி
வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார்
பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில்
உள்ள படி
2.
ஆன
முதலின் அதிகம் செலவானால்
மானம்
அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும்
கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும்
பொல்லனாம் நாடு
வேற்றிவேற்கை
1.
கற்கை
நன்றே கற்கை நன்றே
பிச்சை
புகினும் கற்கை நன்றே
2.
பொய்யுடை
ஒருவன் சொல்வன்மையினால்
மெய்
போலும்மே மெய் போலும்மே
மெய்யுடை
ஒருவன் சொலமாட்டாமையினால்
பொய்
போலும்மே பொய் போலும்மே
விவேக
சிந்தாமணி
1.
ஆபத்துக்கு
உதவாப் பிள்ளை
அரும்பசிக்கு
உதவா அன்னம்
தாகத்தைத்
தீராத் தண்ணீர்
தரித்திரம்
அறியாப் பெண்டிர்
கோபத்தை
அடக்கா வேந்தன்
குருமொழி
கொள்ளாச் சீடன்
பாவத்தைத்
தீராத் தீர்த்தம்
பயனில்லை
ஏழும் தானே.
நாலடியார்
அறத்துப்பால்
செல்வம்
நிலையாமை
1.
துகள்தீர்
பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு
நடந்தகூழ் பல்லாரோடு உண்க
அகடுற
யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்
கால் போல வரும்
இளமை
நிலையாமை, யாக்கை நிலையாமை, அறன் வலியுறுத்தல், தூய்தன்மை, துறவு, சினமின்மை, பொறையுடைமை,
பிறர் மனை நயவாமை, ஈகை, பழவினை, மெய்ம்மை,
தீவினையச்சம்
2.
பெரியவர்
கேண்மை பிறைபோல நாளும்
வரிசை
வரிசையா நந்தும் – வரிசையால்
வானூர்
மதியம் போல் வைகலும் தேயுமே
தானே
சிறியார் தொடர்பு
பொருட்பால்
கல்வி
3.
குஞ்சியழகும்
கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும்
அழகல்ல – நெஞ்சத்து
நல்லையாம்
என்னும் நடுவு நிலைமையால்
கல்வி
அழகே அழகு.
4.
களர்நிலத்துப்
பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து
நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோர்
ஆயினும் கற்றறிந்தோரைத்
தலைநிலத்து
வைக்கப்படும்.
5.
கல்வி
கரையில கற்பவர் நாள்சில
6.
கல்லாராயினும்
கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு
நாளுந் தலைப்படுவர்
குடிப்பிறப்பு,
மேன்மக்கள், பெரியாரைப் பழியாமை, பெருமை, தாளாண்மை, சுற்றந்தழால்
நட்பாராய்தல்
7.
யாணை
யனையவர் நண்பொரீஇ நாயணையார்
கேண்மை
கெழீஇக் கொளல் வேண்டும் – யானை
அறிந்தறிந்தும்
பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா
வால் குழைக்கும் நாய்.
நட்பில்
பிழை பொறுத்தல்
8.
நல்லார்
எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை
அல்லார்
எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கும்
உமியுண்டு, நீர்க்கும் நுரையுண்டு
புல்லிதழ்
பூவிற்கும் உண்டு.
கூடா
நட்பு, அறிவுடமை, அறிவின்மை, நன்றியில் செல்வம், ஈயாமை, இன்மை, மானம், இரவச்சம், அவையறிதல்,
புல்லறிவாண்மை
பேதைமை
9.
ஆகாது
எனினும் அகத்து நெய்யுண்டாகின்
போகாது
எறும்பு புறஞ்சுற்றும்; யாதும்
கொடாஅர்
எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர்
உலகத் தவர்.
கீழ்மை,
கயமை
பொதுமகளிர்
10. விளக்கொளியும்
வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற
நாடின் வேறல்ல – விளக்கொளியும்
நெய்யற்ற
கண்ணே அறுமே அவரன்பும்
கையற்ற
கண்ணே அறும்.
திருக்குறள்
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் பூட்டிக்
குறுகத் தறித்த குறள்.
அறத்துப்
பால்
கடவுள்
வாழ்த்து
1.
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு
2.
கற்றதனால்
ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின்
3.
பிறவிப்
பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி
சேராதார்
வான்
சிறப்பு
4.
கெடுப்பதூஉம்
கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம்
எல்லாம் மழை
5.
தானம்
தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம்
வழங்கா தெனின்.
6.
நீர்
இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று
அமையாது ஒழுக்கு
நீத்தார்
பெருமை
7.
செயற்கரிய
செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய
செய்கலாதார்
8.
அந்தணர்
என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை
பூண்டொழுகலான்
அறன்
வழியுறுத்தல்
9.
சிறப்பு
ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம்
எவனோ உயிர்க்கு.
10. மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல
நீர பிற
11. அழுக்காறு அவா
வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா
இயன்றது அறம்
12. அறத்தாறு இதுவென
வேண்டா சிவிகை
பொறுத்தானோடு
ஊர்ந்தான் இடை
இல்
வாழ்க்கை
13. அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது
14. வையத்துள் வாழ்வாங்கு
வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள்
வைக்கப்படும்.
வாழ்க்கைத்
துணைநலம்
15. தெய்வம் தொழாஅல்
கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப்
பெய்யும் மழை
மக்கட்பேறு
16. அமிழ்தினும்
ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகை
அளாவிய கூழ்
17. குழல் இனிது
யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச்
சொல் கேளாதவர்
18. தந்தை மகற்கு
ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி
இருப்பச் செயல்
19. ஈன்ற பொழுதில்
பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக் கேட்ட தாய்
20. மகன் தந்தைக்கு
ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான்
கொல் எனும் சொல்.
அன்புடமை
21. அன்பிலார் எல்லாம்
தமக்குரியர் அன்புடையார்
என்பும்
உரியர் பிறர்க்கு
22. என்பிலதனை வெயில்போலக்
காயுமே
அன்பிலதனை
அறம்
23. அன்பகத்தில்லா
உயிர்வாழ்க்கை வன்பாற்கன்
வற்றல்
மறந்தளிர்த் தற்று
24. அன்பின் வழியது
உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல்
போர்த்த உடம்பு
விருந்தோம்பல்
25. மோப்பக் குழையும்
அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக்
குழையும் விருந்து.
இனியவை
கூறல்
26. பணிவுடையன்
இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல
மற்று பிற
27. அல்லவை தேய
அறம் பெருகும் நல்லவை
நாடி
இனிய சொலின்
28. இனிய உளவாக
இன்னாத கூறல்
29. கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று
செய்ந்நன்றி
அறிதல்
30. செய்யாமல் செய்த
உதவிக்கு வையகமும்
வானகமும்
ஆற்றல் அறிது
31. காலத்தினால்
செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின்
மாணப் பெரிது
32. திணைத்துணை
நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர்
பயன் தெரிவார்
33. நன்றி மறப்பது
நன்றன்று நன்றல்லது
அன்றே
மறப்பது நன்று
34. எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி
கொன்ற மகற்கு
நடுவுநிலமை
அடக்கமுடைமை
35. அடக்கம் அமரருள்
உய்க்கும் அடங்காமை
ஆரிருள்
உய்த்து விடும்
36. யாகாவாராயினும்
நாகாக்க காவாக்கால்
சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு
37. தீயினால் சுட்டபுண்
உள்ளாறும் ஆறாதே
நாவினால்
சுட்ட வடு
ஒழுக்கமுடைமை
38. ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம்
உயிரினும்
ஓம்பப் படும்
39. நன்றிக்கு வித்தாகும்
நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும்
இடும்பை தரும்
40. உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலாதார்
பிறனில்
விழையாமை
41. பிறன்மனை நோக்காத
பேராண்மை சான்றோர்க்கு
அறன்
ஒன்றோ ஆன்ற ஒழுக்கு
பொறையுடைமை
42. அகழ்வாரைத்
தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வாரைப்
பொறுத்தல் தலை
43. ஒருத்தார்க்கு
ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும்
துனையும் புகழ்
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
44. புறங்கூறிப்
பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும்
ஆக்கம் தரும்
45. ஏதிலார் குற்றம்
போல் தன் குற்றம் காண்கில் பின்
தீதுண்டோ
மன்னும் உயிர்க்கு
பயனில
சொல்லாமை
46. சொல்லுக சொல்லில்
பயனுடைய சொல்லற்க
சொல்லில்
பயனிலாச் சொல்
தீவினை
அச்சம்
47. மறந்தும் பிறன்கேடு
சூழற்க சூழின்
அறம்
சூழும் சூழ்ந்தவன் கேடு
ஒப்புரவு
அறிதல் – ஒருவருக்கொருவர்
உதவி செய்தல்
ஈகை
48. வறியார்க்கு
ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை
நீரது உடைத்து.
49. ஆற்றுவார் ஆற்றல்
பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார்
ஆற்றலின் பின்
புகழ்
50. ஈதல் இசைபட
வாழ்தல் அதுவல்லது
ஊதியம்
இல்லை உயிர்க்கு
51. தோன்றின் புகழோடு
தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று
அருளுடமை
52. அருட்செல்வம்
செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார்
கண்ணும் உள
53. அருள் இல்லார்கு
அவ்வுலகம் இல்லை பொருள்
இவ்வுலகம்
இல்லாகியாங்கு
புலால்
மறுத்தல்
54. உண்ணாமை வேண்டும்
புலாஅல் பிறிதுஒன்றன்
புண்
அது உணர்வார்ப்பெறின்
55. கொல்லான் புலாலை
மறுத்தானைக் கைகூப்பி
எல்லா
உயிரும் தொழும்
தவம்
கூடா
ஒழுக்கம்
கள்ளாமை
56. உள்ளத்தால்
உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற்
கள்வேம் எனல்.
வாய்மை
57. வாய்மை எனப்படுவது
யாதெனின் யாதொன்றும்
தீமை
இலாத சொலல்
58. பொய்மையும்
வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை
பயக்கும் எனின்
59. தன்நெஞ்சு அறிவது
பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே
தன்னைச் சுடும்.
60. புறத்தூய்மை
நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால்
காணப்படும்
61. எல்லா விளக்கும்
விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா
விளக்கே விளக்கு
வெகுளாமை
62. செல்லிடத்துக்
காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்
என் காவாக்கால் என்
63. மறத்தல் வெகுளியை
யார்மாட்டும் தீய
பிறத்தல்
அதனான் வரும்
64. தன்னைத் தான்
காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே
கொல்லும் சினம்
65. சினத்தைப் பொருளென்று
கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான்
கைபிழையாது அற்று
இன்னா
செய்யாமை
66. இன்னா செய்தாரை
ஒறுத்தல் அவர்நான
நன்னயம்
செய்து விடல்
67. அறிவினால் ஆகுவது
உண்டோ பிறிதின் நோய்
தன்
நோய்போல் போற்றாக் கடை
68. பிறர்க்கின்னா
முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல்
தாமே வரும்
கொல்லாமை
69. பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள்
எல்லாம் தலை
நிலையாமை
70. உறங்குவது போலும்
சாக்காடு உறங்கி
விழிப்பது
போலும் பிறப்பு
துறவு
71. பற்றுக பற்றறான்
பற்றினை அப்பற்றைப்
பற்றுக
பற்று விடற்கு
மெய்
உணர்தல்
- உண்மையறிதல்
72. எப்பொருள் எத்தன்மைத்து
ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு
அவா
அறுத்தல்
ஊழ்
73. நுண்ணிய நூல்
பல கற்பினும் மற்றும் தன்
உண்மை
அறிவே மிகும்.
பொருட்பால்
இறைமாட்சி
– அரசின் தன்மை
1.
அஞ்சாமை
ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை
வேந்தர்க்கு இயல்பு
2.
இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்லது அரசு
3.
காட்சிக்கு
எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும்
மன்னன் நிலம்
4.
முறைசெய்து
காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று
வைக்கப்படும்
கல்வி
5.
கற்க
கசடற கற்பவை கற்றபின்
நிற்க
அதற்குத் தக
6.
எண்
என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண்
என்ப வாழும் உயிர்க்கு
7.
கண்ணுடையார்
என்போர் கற்றோர் முகத்திரெண்டு
புண்ணுடையர்
கல்லாதவர்
8.
தொட்டனைத்து
ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து
ஊறும் அறிவு
9.
ஒருமைக்கன்
தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும்
ஏமாப்பு உடைத்து
10. கேடு இல் விழுச்செல்வம்
கல்வி ஒருவற்கு
மாடு
அல்ல மற்ற யவை
கல்லாமை
கேள்வி
11. செல்வத்துள்
செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள்
எல்லாம் தலை
12. செவிக்கு உணவு
இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும்
ஈயப் படும்
13. கற்றிலன் ஆயினும்
கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின்
ஊற்றாம் துணை
அறிவுடமை
14. சென்ற இடத்தால்
செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால்
உயிப்பது அறிவு
15. எப்பொருள் யார்யார்வாய்க்
கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு
16. அஞ்சுவது அஞ்சாமை
பேதமை அஞ்சுவது
அஞ்சல்
அறிவார் தொழில்
17. எதிரதாக் காக்கும்
அறிவினார்க்கு இல்லை
அதிர
வருவதோர் நோய்
18. அறிவுடையார்
எல்லம் உடையார் அறிவிலார்
என்னுடைய
ரேனும் இலர்.
குற்றம்
கடிதல்
19. தினைத்துணையாம்
குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர்
பழி நாணுவார்
20. வருமுன்னர்
காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு
போலக் கெடும்
பெரியாரைத்
துணைக்கோடல்
சிற்றினம்
சேராமை
தெரிந்து
செயல்வகை
21. எண்ணித் துணிக
கருமம் துணிந்தபின்
எண்ணுவம்
என்பது இழுக்கு
வலியறிதல்
22. பீலிபெய் சாகாடும்
அச்சிறும் அப்பண்டம்
சால
மிகுத்துப் பெயின்
23. அளவறிந்து வாளாதான்
வாழ்க்கை உளபோல
இல்லாகித்
தோன்றாக் கெடும்
காலமறிதல்
24. பகல் வெல்லும்
கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு
வேண்டும் பொழுது
25. காலம் கருதி
இருப்பர் கலங்காது
ஞாலம்
கருது பவர்.
இடனறிதல்
தெரிந்து
தெளிதல்
26. குணம் நாடி
குற்றமும் நாடி அவற்றும்
மிகை
நாடி மிக்க கொளல்
27. பெருமைக்கும்
ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே
கட்டளைக் கல்
28. தேரான் தெளிவும்
தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா
இடும்பை தரும்
தெரிந்து
வினையாடல்
29. இதனை இதனால்
இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை
அவன்கண் விடல்
சுற்றந்தழால்
30. பற்றற கண்ணும்
பழமை பாராட்டல்
சுற்றத்தார்
கண்ணே உள
பொச்சாவாமை
செங்கோன்மை
கொடுங்கோன்மை
31. நாள்தொறும்
நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும்
நாடு கெடும்
வெருவந்த
செய்யாமை – வெறுக்கும்படியான
செயல்
கண்ணோட்டம்
ஒற்றாடல்
ஊக்கம்
உடைமை
32. ஊக்கம் உடைமை
உடைமை பொருளுடைமை
நில்லாது
நீங்கி விடும்
33. ஆக்கம் அதர்வினாய்ச்
செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை
34. வெள்ளத் தனையது
மலர் நீட்டம் மாந்தர்தன்
உள்ளத்
தனையது உயர்வு
35. உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளம் மற்றது
தள்ளினும்
தள்ளாமை நீர்த்து
36. பரியது கூர்ங்கோட்டது
ஆயினும் யானை
வெரூஉம்
புலி தாக்குறின்.
மடியின்மை
ஆள்வினையுடைமை
37. முயற்சி திருவினையாக்கும்
முயற்சியின்மை
இன்மை
புகுத்தி விடும்
38. தெய்வத்தான்
ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக்
கூலி தரும்
இடுக்கண்
அழியாமை
39. இடுக்கண் வருங்கால்
நகுக அதனை
அடுத்தூர்வது
அஃதொப்பது இல்
40. இடும்பைக்கு
இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை
படாஅதவர்
41. இன்பம் விழையான்
இடும்பை இயல்பென்பான்
துன்பம்
உறுதல் இலன்
42. இன்பத்துள்
இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம்
உறுதல் இலன்
அமைச்சு
சொல்வன்மை
43. கேட்டார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும்
வேட்ப
மொழிவதாம் சொல்
44. திறனறிந்து
சொல்லுக சொல்லை அறனும்
பொருளும்
அதனினூஉங்கு இல்
45. சொல்லுக சொல்லைப்
பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல்
இன்மை அறிந்து
46. சொல் வல்லன்
சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல்
யார்க்கும் அரிது
வினைத்
தூய்மை
47. துணைநலம் ஆக்கம்
தரும் வினைநலம்
வேண்டிய
எல்லாம் தரும்
48. ஈன்றாள் பசிகாண்பான்
ஆயினும் செய்யற்க
சான்றோர்
பழிக்கும் வினை
வினைத்
திட்பம்
49. வினைத்திட்பம்
என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய
எல்லாம் பிற
50. சொல்லுதல் யார்க்கும்
எளிய அரியவாம்
சொல்லிய
வண்ணம் செயல்
51. எண்ணிய எண்ணியாங்கு
எய்துப எண்ணியார்
திண்ணியராகப்
பெறின்
வினை
செயல்வகை, தூது, மன்னரைச் சேர்ந்தொழுகல், குறிப்பறிதல், அவையறிதல், அவை அஞ்சாமை
நாடு
52. தள்ளா விளையுளும்
தக்காரும் தாழ்விலாச்
செல்வரும்
சேர்வது நாடு
53. உறுபசியும்
ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது
இயல்வது நாடு
அரண்
பொருள்
செயல்வகை
54. பொருளல்லவரைப்
பொருளாகச் செய்யும்
பொருளல்லது
இல்லை பொருள்
55. இல்லாரை எல்லாரும்
எள்ளுவர் செல்வரை
எல்லாரும்
செய்வர் சிறப்பு
56. அறனீனும் இன்பமும்
ஈனும் திறனறிந்து
தீதின்றி
வந்த பொருள்
படை
மாட்சி
படைச்
செருக்கு
57. என்னைமுன் நில்லன்முன்
தெவ்விர் பலர் என்னை
முன்நின்று
கல் நின்றவர்
நட்பு
58. நவில்தோறும்
நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர்
தொடர்பு
59. நகுதல் பொருட்டன்று
நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று
இடித்தற் பொருட்டு
60. முகநக நட்பது
நட்பன்று நெஞ்சத்து
அகநக
நட்பது நட்பு
61. உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே
இடுக்கண்
களைவதாம் நட்பு
நட்பாராய்தல்
62. நாடாது நட்டலில்
கேடில்லை நட்டபின்
வீடில்லை
நட்பாள் பவர்க்கு
பழைமை,
தீ நட்பு, கூடா நட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகைமாட்சி, பகைத்திறம் தெரிதல்,
உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண் வழிச் சேறல், விரைவின் மகளிர்,
கள்ளுண்ணாமை
63. துஞ்சினார்
செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார்
கள்ளுண்பவர்
சூது
64. சிறுமை பல செய்து
சீரழிக்கும் சூதின்
வறுமை
தருவதொன்று இல்
மருந்து
65. மருந்தென வேண்டாவாம்
யாக்கைக்கு அருந்தியது
அற்றது
போற்றி உணின்
66. நோய்நாடி நோய்முதல்நாடி
அதுதணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச் செயல்
குடிமை – குடிப்பெறுமை
67. அடுக்கிய கோடி
பெறினும் குடிபிறந்தார்
குன்றுவ
செய்தல் இலர்
மானம்
68. மயிர்நீப்பின்
வாழாக் கவரிமா அன்னார்
உயிர்
நீப்பார் மானம் வரின்
பெருமை
69. பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான்
70. மேலிருந்தும்
மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார்
கீழல் லவர்
71. பணியுமாம் என்றும்
பெருமை சிறுமை
அணியுமாம்
தன்னை வியந்து
சான்றாண்மை
72. இன்மை ஒருவருக்கு
இளிவன்று சால்பென்னும்
திண்மையுண்டாகப்
பெறின்
பண்புடைமை
73. அன்புடைமை ஆன்ற
குடிபிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை
என்னும் வழக்கு
74. அரம்போலும்
கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு
இல்லாதவர்
நன்றியில்
செல்வம்
நாணுடைமை
குடிசெயல்வகை
உழவு
75. சுழன்றும் ஏர்ப்பின்னது
உலகம் அதனால்
உழந்தும்
உழவே தலை
76. உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு
பின் செல்பவர்
நல்குரவு
இரவு
– பிச்சை எடுத்தல்
இரவச்சம்
77. இரந்தும் உயிர்வாழ்தல்
வேண்டின் பரந்து
கெடுக
உலகியற்றி யான்
கயமை
காமத்துப்பால்
தகையணங்குறுத்தல்
1.
அணங்குகொல்
ஆய்மயில்கொல்லோ கனங்குழை
மாதர்கொல்
மாலும் என் நெஞ்சு
குறிப்பறிதல்
2.
யான்
நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான்
நோக்கி மெல்ல நகும்
3.
கண்ணொடு
கண்ணினை நோக்கொக்கில் வாய்ச்சொற்கள்
என்ன
பயனும் இல
புணர்ச்சி
மகிழ்தல்
நலம்
புனைந்துரைத்தல்
4.
நன்னீரை
வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ்
பவள்
5.
காணின்
குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை
கண்ணொவ்வேம் என்று
6.
மதியும்
மடந்தை முகனும் அரியா
பதியிற்
கலங்கிய மீன்
7.
அனிச்சமும்
அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு
நெருஞ்சிப் பழம்
காதல்
சிறப்புரைத்தல்
நாணுத்
துறவுரைத்தல்
8.
கடலன்ன
காமம் உழந்தும் மடலேராப்
பெண்ணின்
பெருந்தக்கது இல்
அலர்
அறிவுறுத்தல், பிரிவாற்றாமை, படர் மெலிந்து இரங்கல், கண் விதுப்பு அழிதல், பசப்புறு
பருவரல், தனிப்படர் மிகுதி, நினைந்தவர் புலம்பல், கனவுநிலை உரைத்தல்,
பொழுதுகண்டு
இரங்கல்
9.
காதலர்
இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர்
போல வரும்
10. காலை அரும்பிப்
பகலெல்லாம் போதாகி
மாலை
மலரும் இந்நோய்
உறுப்பு
நலன் அழிதல், நிறையழிதல், அவர் வயின் விதும்பல், குறிப்பரிவுறுத்தல்
புணர்ச்சி
விதும்பல்
11. உள்ளக் களித்தலும்
காண மகிழ்தலும்
கள்ளுக்கில்
காமத்திற்கு உண்டு
12. தினைத் துணையும்
ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம்
நிறைய வரின்
13. ஊடற்கண் சென்றேன்மன்
தோழி அதுமறந்து
கூடற்கண்
சென்றது என் நெஞ்சு
14. மலரினும் மெல்லிது
காமம் சிலர் அதன்
செவ்வி
தலைப்படுவார்
நெஞ்சொடு
புலத்தல்
புலவி
நுணுக்கம்
15. பெண்ணியலார்
எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன்
பரத்த நின் மார்பு
16. கோட்டுப்பூச்
சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய
சூடினீர் என்று
17. யாரினும் காதலம்
என்றேனா ஊடினாள்
யாரினும்
யாரினும் என்று
18. இம்மை பிறப்பிற்
பிரியலம் என்றேனாக்
கண்ணிறை
நீர் கொண்டனள்
19. உள்ளினேன் என்றேன்
மற்று என் மறந்தீர் என்றென்னைப்
புல்லாள்
புலத்தக் கனள்
20. வழுத்தினார்
தும்மினேனாக அழித்தழுதாள்
யாருள்ளித்
தும்மினீர் என்று
ஊடல்
வகை
21. ஊடுதல் காமத்திற்கு
இன்பம் அதற்கின்பம்
கூடி
முயங்கப் பெறின்