சனி, பிப்ரவரி 04, 2023

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - சங்க இலக்கியம்

 தமிழ்ச் சங்கம்

1.    நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க ஏறி

நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன்காண்.     தேவாரம் – திருநாவுக்கரசர்

2.    நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்துத்

    தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி          தொல்காப்பியப் பாயிரம்

3.    தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின்

மகிழ் நனை மறுவின் மதுரை                                  சிறுபாணாற்றுப்படை

4.    இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே                  புறநானூறு

5.    தென்தமிழ் நன்நாட்டு தீதுதீர் மதுரை                   சிலப்பதிகாரம்

6.    பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள                சிலப்பதிகாரம்

7.    பொதியில் தென்றல் போலாது ஈங்கு

மதுரைத் தென்றல் வந்தது காணீர்                         சிலப்பதிகாரம்

8.    ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன்

பாடுதமிழ் வளர்த்த கூடல்

9.    தலைச் சங்கப் புலவனார்தம் முன்                           பெரிய புராணம்

10. சங்கத் தமிழ் மூன்றும் தா                                         ஔவையார் – தனிப்பாடல்.

அகத்தியம்

1.    இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாகில் எண்ணையும் இன்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே எடுபடு மிலக்கணம்

சங்க இலக்கியம்

பதினெண் மேல்கணக்கு

1.    ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா

ஐவகை பாவும் பொருள்நெறி மரபின்

மதுராபுரிச் சங்கம் வைத்தும்

மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்

தொகுக்கப் படுவது மேற்கணக்காகும்.

எட்டுத்தொகை

1.    நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்ற

இத்திறத்த எட்டுத் தொகை

நற்றிணை

1.    விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

2.    நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;

சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே               210

3.    சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின்

பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்,

மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே          397

4.    கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென

கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்        11

5.    இரவில் விருந்துவரின் உவக்கும் பண்பும்             142

6.    முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்                                355

7.    நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்

என்றும் என் தோள் பிரிபு அறியலரே

தாமரைத் தண் தாது ஊதி மீ மிசைச்

சாந்தின் தொடுத்த தீம்தேன் போல

புரைய மன்ற புரையோர் கேண்மை

நீரின்றி அமையா உலகம் போலத்

தம்மின்று அமையா நம்நயந்து அருளீ

நறுநுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ செய்பு அறியலரே?

8.    ஒருமுலை அறுத்த திருமா உண்ணி  -                    மதுரை மருத இளநாகனார்

குறுந்தொகை

1.    கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே                                   02

2.    அணிற்பல் அன்ன கொங்கு முதிர்

முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என் கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே                     அம்மூவனார்

3.    யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே                   40

4.    முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்

கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்

தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவ னுண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 107

5.    வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்

மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்                125

6.    கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல,

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.           08

7.    இடிக்கும் கேளிர் நும்குறை ஆக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமற்று இல்லை

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே         58        வெள்ளிவீதியார்

8.    வேரல் வேலி வேர்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யார் அறிந்து இசினோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே                                  கபிலர்.

9.    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல்

கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன்

இளைக்கும் நாடனொடு நட்பே

10. கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்

பழன வாளை ஊரன்

எம்மில் பெருமொழி கூறி

தம்மில் கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவை போல மேவன செய்யும்

தன் புதல்வன் தாய்க்கே.

11. தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்து இன்புறார் ஆயினும் கையின்

ஈர்த்து இன்புறும் இளையோர்

உற்று இன்புறேம் ஆயினும் நற்றேர்

பொய்கை ஊரன் கேண்மை

செய்து இன்புற்றெனம் செறிந்தன வளையே

12. யாரும் இல்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

திணைத்தால் அன்ன சிறுபசுங்கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே.               25

13. அகவன் மகளே அகவன் மகளே

மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டே

இன்னும் பாடுக பாட்டே அவர்

நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே                       23

14. கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

நல்லான் தீம்பால் நிலத்துக்கும் ஆகாது

எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என் மாமைக் கவினே                 27 வெள்ளிவீதியார்

15. முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்

ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு

ஆஅ ஒல் எனக் கூவுவேன்கொல்

அலமரல் அசைவளி அலைப்ப என்

உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

16. துறுகல் அலயலது மாணை மாக்கொடி

துஞ்சு களிறு வரும் குன்ற நாடன்

நெஞ்சு களனாக நீயலென் யானென

நற்றோள் மணந்த ஞான்றை மற்று அவன்

தாவா வஞ்சினம் உரைத்தது

நோயோ தோழி நின் வயினானே.

17. கான மஞ்ஞை யறையீன் முட்டை

வெயிலொடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை என்றும்

நன்றுமன் வாழி தோழி உண்கண்

நோரோடு ஓராங்கு தனப்ப

உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.

18. காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து

சாறுகொள் ஊரில் புகல்வேன் மன்ற

அத்த நண்ணிய அம்குடிச் சிறூர்

மக்கள் போகிய அணிலாடு முன்றில்

புலப்பில் போல் புல்லென்று

அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.

19. கருங்கால் வேங்கை வீ உகுதுறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றும்

காட்டிடை எல்லி வருநர் களவிற்கு

நல்லை யல்லை நெடுவெண்ணிலவே

20. கூர்முண்டகக் கூர்பனி மாமலர்

நூலறு முத்திற் காலொடு பாறித்

துறைதொறும் பரக்கும் தூமணற் சேர்ப்பனை

யானும் காதலென் யாயும் நனி வெய்யள்

எந்தையும் கொடீஇயர் வேண்டும்

அம்பல் ஊரும் அவனொடு மொழிமே                               51 குன்றியனார்

21. யானே ஈண்டையேனே என்னலனே

ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்

கான யானை கைவிடு பசுங்கழை

மீனெறி தூண்டிலினிவக்கும்

கானக நாடனொடு ஆண்டொழிந்தன்றே                         54 மீனெறி தூண்டிலார்

22. கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்

கைம்மை உய்யா காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி

ஓங்குவரை அடுக்கத்துப்பாய்ந்துயிர்

செகுக்கும் சாரல் நாட நடுநாள்

வாரல் வாழியோ வருந்துதும் யாமே.                     69 கருந்தோட்கர வீரனார்

23. வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென

நமக்கு உரைத்தோரும் தாமே

அழாஅல் தோழி அழுங்குவர் செலவே      135 பாலை பாடிய பெருங்கடுங்கோ

24. காமம் காமம் என்ப காமம்

அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே யானை

குளகு மென் தாள் மதம் போல

பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே         136

ஐங்குறுநூறு

1.    மருதமோரம்போகி, நெய்தலம்மூவன்

கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய

பாலை ஓதலாந்தைபனிமுல்லைபேயனே

நூலை ஓது ஐங்குறு நூறு

2.    அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்

தேன் மயங்கு பாலினும் இனிய – அவர் நாட்டு

உவலைக் கூவற் கீழ

மான் உண்டு எஞ்சிய கலுழி நீரே                          203

அகநானூறு

1.    இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,

மறுமை உலகமும் மறு இன்று எய்துப,

செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர்'' எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்                    

வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி         

2.    யவனர் தந்த வினைமான் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

கலித்தொகை

1.    பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,

மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்

நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்

கல்விவலார் கண்ட கலி.

2.    உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்

கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்

பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும்

புதுவது அன்றே புலனுடை மாந்திர்!                                              22

3.    'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;

'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;

'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;

'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;

'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;

'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;

'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;

'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;

'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;                    16

4.    பலவுறு நருஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்

சீர்கெழு வெண்முத்தும் அணிபவர்க்கு அல்லதை

நீரிலே பிறப்பினும் நீருக்கு அவைதாம் என்செய்யும்

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை

யாழுளே பிறப்பினும் யாழுக்கு அவைதாம் என்செய்யும்

நினையுங்கால் நும்மகள் ஆங்கனையளே.

5.    சுடர்தொடி கேளாய் – தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில்

காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து வரிப்பந்து கொண்டு ஓடி

நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்

அன்னையும் யானும் இருந்தேமா, இல்லீரே

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை

அடர் பொன் சுரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்

உண்ணு நீர் ஊட்டி வா என்றாள்; என யானும்

தன்னை யறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,

அண்ணாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்

உண்ணு நீர் விக்கினார் என்றேனா அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொள்வாஅன் நோக்கில்நகைக் கூட்ட்ம்

செய்வான் அக்கள்வன் மகன்.

6.    கயமலர் உண் கண்ணாய் காணாய் ஒருவன்

வய மான் அடித் தேர்வான் போல தொடைமாண்ட

கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு

முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற

நோய் உரைக்கல்லான் பெயரும்மன் பல் நாளும்

பாயல் பெறேஎன், படர் கூர்ந்து ஆயிடைக்

கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்

பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூம்

காணான், கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என்

தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர்

நாண் இன்மை செய்தேன் நறு நுதலால் ஏனல்

இனக் கிளியாம் கடிந்து ஓம்பும் ஞான்று வந்தானை

ஐய சிறிது என்னை ஊக்கி எனக் கூறத்

தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு

பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில் வாய்யாச் செத்து

ஒய்யென ஆங்கே எடுத்தனன், கொண்டான் மேல்

மெய்ய் அரியாதேன் போல் கிடந்தேன்மன், ஆயிடை

மெய்யரிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென

ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின்

அங்கண் உடையன் அவன்.

பரிபாடல்

1.    மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

            பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்

            இதழகத் தனைய தெருவம் இதழகத்

            தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

பதிற்றுப்பத்து

-----

புறநானூறு

1.    நெல்லும் உயிரென்றே நீரும் உயிரென்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.

2.    உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும் இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்

அன்ன மாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன் தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

3.    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே       குடபுலவியனார்

4.    அறநெறி முதற்றே அரசின் கொற்றம்                   மருத இள நாகனார்

5.    வாழ்தல் வேண்டிப்

பொய் கூறேன் மெய் கூறுவேன்                            மருத இள நாகனார்

6.    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்                                     நரிவெரூஉத் தலையார்

7.    ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை.               இடைக்குன்றூர்க் கிழார்

8.    குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்

ஆஅள் அன்று என்று வாளின் தப்பார்.      - சேரமான் கனைக்கால் இரும்பொறை

9.    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே.                         189

10. யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே,

வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே

முனிவின் இன்னா தென்றலும் இலமே

மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது

திறவோர் காட்சியில் தெளிந்தனம்

ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே                                   192

11. நாடா கொன்றோ, காடா கொன்றோ,

அவலா கொன்றோ; மிசையா கொன்றோ,

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே!                                      187

12. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

பிறப்போரன்ன உடன் வயிற்று உள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

13. சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்

யாண்டு உளனோ? என வினவுதி என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

14. காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்

நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே

வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

15. உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்

அன்ன மாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோந்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே                கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

16. படைப்பு பல படைத்துப் பலரோடு

உண்ணும் உடைப்பெருஞ் செல்வர்

ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து

சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும் கவ்வியும்

துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட

விதிர்த்தும் மயக்குறு மக்களை

இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்

வாழும் நாளே.

17. யாண்டுபல வாக, நரையில ஆகுதல்

யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அவன் தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.

18. வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி

நெடிய என்னாது சுரம்பல கடந்து

வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்

பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி

ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? 

19. ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

20. களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர் எதிர்ந்து

எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்

எண் தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால் அன்னோனே.                                  ஔவையார்

21. வாயிலோயே வாயிலோயே

வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழி வித்தித் தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன் அறியலன்கொல்? என்னறியலன்கொல்?

அறிவும் புகழும் உடையோர் மாந்தென

வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்

காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

22. சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே

பெரியகட் பெறினே

யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே.

23. நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே தொல்நிலைப்

பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

24. இவ்வே, பீலி அணிந்து மாலைசூட்டிக்

கண் திரள் நோன்காச் திருத்தி, நெய் அணிந்து

கடியுடை வியன்நகரவ்வே, அவ்வே

பகைவர் குத்திக் கோடுநுதி சிதைத்து

கொல்துறைக் குற்றிலமாதோ என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல் எம் கோமான், வைந்நுதி வேலே.

25. ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்

பன்னாள் பயின்று பலரோடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ

அணிபூண் யானை இயல்தேர் அஞ்சி

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்

நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்

கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத்தது அது; பொய்யாகாதே

அருந்தே மாந்த நெஞ்சம்

வருந்த வேண்டா; வாழ்க அவன் தாளே.

26. பாரி பாரி என்று பல ஏத்தி

ஒருவர்ப் புகழ்வர் செந்நா புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே.                      கபிலர்

27. அளொதோ தானே பாரியது பறம்பே

நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்

உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழக் ஊழ்க்கும்மே

மூன்றே கொழுன்கொடு வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணிநிற ஓரி பாய்தலின், மீது அழிந்து

திணி நெடுங் குன்றம் தேன் சொறியும்மே.

வான்கண் அற்று அதன் மலையே வானத்து

மீன்கண் அற்று அதன் சுனையே ஆங்கு

மரந்தோறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்

புலந்தோறும் பரப்பிய தேரினிர் ஆயினும்

தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்

யான் அறிகுவென் அது கொள்ளும் ஆறே

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரையொழி கூந்தல் விறலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.

28. கடந்து அடுதானை மூவிரும் கூடி

உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே

முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்

யாமும் பாரியும் உளமே

குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே.

29. அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்

எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே.

30. நின் நயந்து உறைக்குநர்க்கும் நீ நயந்து உறைக்குநர்க்கும்

பன்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்

கடும்பின் கடும்பசி தீர யாழநின்

நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்

இன்னோர்க்கும் என்னாது, என்னோடு சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி – மனைகிழவோயே

பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.                            பெருஞ்சித்தனார்

பத்துப்பாட்டு

1.    முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலைகடாந் தொடும் பத்து

ஆற்றுப்படை

1.    கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்.

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

கூத்தராற்றுப்படை

முல்லைப்பாட்டு

1.    நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது

பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

பட்டினப்பாலை

1.    முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய

வாரேன் வாழிய நெஞ்சே.                                       218-220

 

2.    வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,

கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,

வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு   185–193

3.    புள் தேம்பப் புயல் மாறி

வான் பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத் தலைய கடற்காவிரி

வேலினும் வெய்யக் கானம் – அவன்

கோலினும் தண்ணிய தடமென் தோள்

காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கி

குறிஞ்சிப் பாட்டு

மதுரைக் காஞ்சி   

1.    தரையிடு மணலினும் பயிரே உரை செல

மலர்தலை உலகமாண்டு கழிந்தோரே

2.    ஆறுகிடந்தன்ன அகன் நெடுந்தெரு       

நெடுநல்வாடை

1.    வேம்புதலையாத்த நோன்கால் எஃகம்