நம்பியகப்பொருள்
அகத்திணையியல்
– சுருக்க அறிமுகம்
முப்பொருள்கள்
(தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் பாடக் குறிப்பு)
அகத்திணைகள் மொத்தம்
ஏழு;
1. கைக்கிளை (1) - ஒரு தலைக் காமம்
2. ஐந்திணை (5) - குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை
3. பெருந்திணை (1) - பொருந்தாக் காமம்
ஐந்திணைக்கும் உரிய பொருள்கள்
(1) முதற்பொருள்:
நிலமும், நிலத்துக்குரிய பொழுதுகளும்
(2) கருப்பொருள்:
நிலத்தில் உள்ள பொருள்கள்
(3) உரிப்பொருள்:
நிலத்துக்குரிய ஒழுக்கம்
முதற்பொருள்
மலைமலையும், அதைச்
சார்ந்த இடமும் - குறிஞ்சி
மணல் மணலும் அதைச்
சார்ந்த இடமும் - பாலை
காடு காடும், காடு
சார்ந்த இடமும் - முல்லை
வயல்வயலும் அதைச் சார்ந்த
இடமும் - மருதம்
கடல்கடலும், அதைச்
சார்ந்த இடமும் - நெய்தல்
திணையும்
பொழுதும்
பொழுது என்பது காலத்தைக் குறிக்கும்.
அது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும்.
சிறுபொழுது
(5) - ஒரு நாளின் சிறுபிரிவு:
(1) மாலை
(2) யாமம்
(நள்ளிரவு)
(3) வைகறை
(அதிகாலை நேரம்)
(4) எற்படு
காலை (சூரியன் மறையும் நேரம்)
(5) நண்பகல்
பெரும்பொழுது
- ஓர் ஆண்டின் உட்பிரிவு.
(1) இளவேனில்
(சித்திரை, வைகாசி மாதங்கள்)
(2) முதுவேனில்
(ஆனி, ஆடி மாதங்கள்)
(3) கார்காலம்
(ஆவணி, புரட்டாசி மாதங்கள்)
(4) கூதிர்காலம்
(ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்)
(5) முன்பனிக்காலம்
(மார்கழி, தை மாதங்கள்)
(6) பின்பனிக்காலம்
(மாசி, பங்குனி மாதங்கள்)
ஐந்து
திணைகளுக்கும் உரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள்
நிலம்
(அல்லது)திணை
|
சிறுபொழுது
|
பெரும்பொழுது
|
குறிஞ்சி
|
யாமம்
|
கூதிர்,
முன்பனி
|
பாலை
|
நண்பகல்
|
வேனில்,
பின்பனி
|
முல்லை
|
மாலை
|
கார்
|
மருதம்
|
வைகறை
|
கார்காலம்
முதலான ஆறும்
|
நெய்தல்
|
எற்படு
காலை
|
கார்காலம்
முதலான ஆறும்
|
கருப்பொருள்கள் (14) - ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்களில் வாழும் உயிரினங்களும்
வழங்கும் பொருள்களும் ‘கருப்பொருள்’
1. ஆரணங்கு (தெய்வம்), 2. உயர்ந்தோர்,
3. உயர்ந்தோர் அல்லோர் 4. புள் (பறவை),
5. விலங்கு, 6. ஊர், 7. நீர்,
8. பூ, 9. மரம், 10. உணவு, 11. பறை, 12. யாழ், 13. பண்,
14. தொழில்
கருப்
பொருள்கள்
|
குறிஞ்சி
|
பாலை
|
முல்லை
|
மருதம்
|
நெய்தல்
|
|
1
|
ஆரணங்கு
(தெய்வம்)
|
முருகன்
|
கொற்றவை
|
திருமால்
|
இந்திரன்
|
வருணன்
|
2
|
உயர்ந்தோர்
|
பொருப்பன்,
வெற்பன்,
சிலம்பன்,
குறத்தி,
கொடிச்சி
|
விடலை,
மீளி,
எயிற்றி
|
குறும்பொறை
நாடன்
தோன்றல்,
கிழத்தி
|
ஊரன்,
மகிழ்நன்,
மனைவி
|
சேர்ப்பன்
|
3
|
தாழ்ந்தோர்
|
கானவர்,
குறவர் –
குறத்தியர்
|
எயினர்-
எயிற்றியர்,
மறவர் –
மறத்தியர்
|
இடையர்
–
இடைச்சியர்,
ஆயர் –
ஆய்ச்சியர்
|
உழவர்
–
உழத்தியர்
கடையர்-
கடைசியர்
|
நுளையர்-
நுளைச்சியர்
பரதர்-பரத்தியர்
|
4
|
புள்
(பறவை)
|
கிளி,
மயில்
|
புறா,
பருந்து
|
காட்டுக்கோழி
|
அன்னம்,
நாரை
|
கடல்
காகம்
|
5
|
விலங்கு
|
புலி,
யானை,
கரடி,
சிங்கம்
|
செந்நாய்
|
மான்,
முயல்
|
எருமை,
நீர்நாய்
|
சுறாமீன்
|
6
|
ஊர்
|
சிறுகுடி
|
குறும்பு
|
பாடி
|
பேரூர்,
மூதூர்
|
பாக்கம்,
பட்டினம்
|
7
|
நீர்
|
அருவி
நீர்,
சுனை
நீர்
|
---------
|
குறுஞ்சுனை,
காட்டாறு
|
ஆறு,
கிணறு,
குளம்
|
உவர்நீர்க்
கேணி
|
8
|
பூ
|
குறிஞ்சிப்
பூ,
காந்தள்
பூ,
வேங்கைப்
பூ
|
குரவம்
பூ
மரவம்
பூ
|
முல்லை,
பிடவம்,
தோன்றி
|
தாமரை,
குவளை
|
நெய்தல்,
தாழை
|
9
|
மரம்
|
சந்தனம்,தேக்கு,
அகில்,
மூங்கில்
|
உழிஞை,
பாலைஓமை
|
கொன்றை,
குருந்தம்,
|
காஞ்சி,
வஞ்சி,
மருதம்
|
புன்னை,ஞாழல்
|
10
|
உணவு
|
மலைநெல்,
தினை,
மூங்கில்
அரிசி
|
வழிப்பறி,
கொள்ளையிட்டவை
|
வரகு,
சாமை,
முதிரை
|
நெல்லரிசி
|
மீனும்
உப்பும்
விற்றுப்
பெற்ற உணவுப்
பொருள்
|
11
|
பறை
|
தொண்டகப்
பறை
|
துடி
|
ஏறுகோட்
பறை
|
நெல்லரி,
கிணை,
மண
முழவு
|
மீன்கோட்
–
பறை,
நாவாய்ப் பம்பை
|
12
|
யாழ்
|
குறிஞ்சி
யாழ்
|
பாலை
யாழ்
|
முல்லை
யாழ்
|
மருத
யாழ்
|
விளரி
யாழ்
|
13
|
பண்
|
குறிஞ்சிப்
பண்
|
பஞ்சுரம்
|
சாதாரி
|
மருதப்
பண்
|
செவ்வழிப்
பண்
|
14
|
தொழில்
|
வெறியாடல்,
தினையும்
மலை
நெல்லும்
விதைத்தல்,
தேன்
அழித்தல்,
கிழங்கு
எடுத்தல்
அருவி
நீர்
ஆடல்
|
போர்,
பகற்சூறை
ஆடல்
|
சாமை,
வரகு
விதைத்தல்
களை
கட்டல்,
கடா
விடல்,
குழலூதுதல்
குரவை
ஆடுதல்,
கொல்லேறு
தழுவுதல்
|
வயல்
களை-
கட்டல்;
அரிதல்
கடா
விடல்,
விழாச்செய்தல்,
புதுநீர்
ஆடுதல்
|
உரிப்பொருள்
1.
குறிஞ்சி - புணர்தலும், அதன் நிமித்தமும்
2.
பாலை - பிரிதலும், அதன் நிமித்தமும்
3.
முல்லை - இருத்தலும், அதன் நிமித்தமும்
4.
மருதம் - ஊடலும், அதன் நிமித்தமும்
5.
நெய்தல் - இரங்கலும், அதன் நிமித்தமும்