ஆயுத பூசை – கல்பனா, 1982
(கதை ஆசிரியர் கூற்றாகவே கதைத் தலைவன் வழி அமைந்துள்ளது)
என்னுடைய அப்பா போலீஸ்காரர். நானும் அவரைப் போல ஆக வேண்டும் என்பதை அவர்
விரும்பவில்லை. அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. ஒரு கூட்டத்திற்குக் காவல்
சென்றபோது அங்கு நடந்த குண்டு வெடிப்பில் அவர் இறந்துவிட்டார். அதனால் நான்
எதிர்பார்க்காமலேயே போலீஸ் வேலை எனக்குக் கிடைத்தது. அப்பா ராமலிங்க வள்ளலாரின்
பக்தர், அவர் இறந்ததற்குக் காரணமான பொன்னுசாமி பல ஆண்டுகள்
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு என்னிடம் அது குறித்து வருந்தி அழுதார். ஏனோ
அவர்மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்பா சென்ற சில ஆண்டுகளிலேயே அம்மாவும்
இறந்துவிட்டாள். போலீஸ் வேலை ஏற்ற ஐந்து ஆண்டுகளிலேயே வேலையை விட்டு நின்று நானும் தங்கையும் வள்ளலாரின் பேரில் இல்லம் தொடங்கினோம். நாங்கள் திருமணம்
செய்துகொள்ள வில்லை. இல்லம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளுக்குள்ளாக 50 பேர் கொண்ட ஒன்றாக மாறியது. அதில் அனைவரும் அனாதைகள்தான்.
மாடு வளர்ந்து பால் கரப்பது, செக்கு ஆட்டுவது போன்ற பல்வேறு வேலைகளின் வழி அனைவரும் குடும்பமாக வாழ்ந்து வந்தோம்.
அவர்கள் அனைவருக்கும் தாயாக என் தங்கை இருந்து வந்தாள். அவளை அக்கா என்றும் என்னை
அப்பா என்றும் அனைவரும் அழைத்தனர். எனக்கு திருவருட்பா தவிர வேறு நூல்கள்
பரிட்சியமில்லை. நாள் முழுவதும் பசுக்களுக்குப் புல் அறுத்துப் போடுவதாகவே என் பணி
நிறைவடைகிறது. இங்கு குறிப்பிடத் தக்கவர்களாக ஜோதி,
சுடர்வண்ணன், அருளாளன், அம்பலவாணன் போன்றோரைக் குறிக்கலாம். இவர்கள் பெரியவர்களாகி
விட்டதால் இவர்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப உள்ள வளர்ச்சியும் மாறுபடும் என்பதால்
இவர்கள் இங்கேயே தங்கியாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவர்களின் அம்பலவாணன்
திருமணம் செய்து வெளியில் வாழ்கிறான் என்றாலும் அவனது 2 குழந்தைகள் இங்குதான் வளர்கின்றனர். மேலும் இங்கு வந்து செல்பவர்கள் கால்நடை மருத்துவர்
கந்தசாமியும் பின்னுசாமியும்தான். ஆயுத பூசையன்று அறிவாளுக்குக் குறுக்கே
சுத்தியலும் செம்பருத்திப் பூக்களும் வைத்திருந்ததைப் பார்த்த போலீஸ்காரர் இது
ரஷ்யாவின் சின்னமாச்சே இதை யார் செய்தது என்று என்னை விசாரிக்கும்படி கூறினார்.
ஜோதி, சுடர்வண்ணன், அருளாளன் ஆகிய மூவரும் வெளியில் சென்ற பொது கந்தசாமியை
சந்தித்து கம்யூனிசத்தைக் கற்றுக் கொண்டதாகவும் இதை நாங்கள்தான் செய்தோம் என்றும்
இல்லத்திலிருந்து வெளியேறுவதாகவும் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். இதை போலீஸ்காரரிடம் தெரிவித்த போது அவர்களை ஏன்
அனுப்புனீர்கள் என்று கடிந்து கொண்டு எங்கள் நூலகத்திலிருந்து 2 கம்யூனிச நூல்களையும் எடுத்துச் சென்றார். இந்தக்
கம்யூனிசம் நமது தேசத்திற்குப் புறம்பானது என்றும் இவர்களை கூண்டோடு ஒழிக்கும்
திட்டத்தின் வழி அழித்து வருகிறோம் என்றும் கூறினார். அவர்கள் மீண்டும் இங்கு
வந்தால் தகவல் தெரிவிக்கும்படிக் கூறிச் சென்றார். குறிப்பிட்ட காலத்திற்குள் இம்மூவரும் பல்வேறு கொலை,
கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அதில் ஜோதியை
அந்தக் காவல் அதிகாரி சுட்டுக் கொன்றதாகவும் மற்ற இருவரும் மறைந்து வாழ்வதாகவும்
அறிந்தேன். இல்லத்தில் பசு கன்று ஈனுவதற்காக கத்தியவுடன் கையில் உரைபோட்டுக்கொள்ள
சென்ற போது அறையில் சுடர்வண்ணன் ஒழிந்திருந்தான். தான் போலீசில் சரணடைய
விரும்புவதாகக் கூற நானும் காவல் துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு வரவழைத்தேன்.
அவர் இல்லத்திற்குள் நுழைவதைக் கண்ட சுடர்வண்ணன் அப்பா என்னை மன்னித்து விடுங்கள்
என்று கூறிவிட்டு போலீஸ் அதிகாரியை சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டு
இறந்துவிட்டான். இல்லத்தில் உள்ள பசு காளங்கன்று இன்றுவிட்டதாக கந்தசாமி ஓடி வந்து
கூறினார்.