இல்லாதவர்கள் – ராணிமுத்து, 1983
பொன்னகரம் சென்னையிலுள்ள சேரி. சேரியின்
வர்ணனையைத் தொடர்ந்து டோனி அறிமுகப் படுத்தப்படுகிறான். 25 வயது வாலிபன். அந்தப் பகுதி M.L.A முன்பிருந்த கட்சியிலிருந்து வேறுகட்சிக்கு மாறி
விட்டதால் அந்தச் சேரியிலுள்ள பழைய கட்சியின் கொடியை மாற்றி புதிய கட்சியின்
கொடியை நடும்படி கூறியுள்ளார். இந்தச் செய்தியறிந்த டோனி கொடியை மாற்ற விடக்கூடாது
என்கிறான். ஆனால் அவனரியாமலே இரவோடு இரவாக மாற்றிவிட்டனர் என்பதை அவனுடைய நண்பன்
கபாலி தண்ணியடித்துக் கொண்டிருக்கும்போது உளறிவிட்டதைக் கேட்டு தனது சக
நண்பர்களுடன் சேர்ந்து டோனி புதியக் கொடியக் கிழித்து எறிந்துவிட்டான். புதிய
கொடியை நட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் இதனைக் கண்டு டோணியைத் தாக்க முன்வந்தனர்.
இவ்விரு கும்பலுக்கும் இடைப்பட்ட தகராறில் பலர் பாதிக்கப்பட்டனர்.
இச்செய்தியறிந்து போலீஸ் வருவது கண்டு அனைவரும் தப்பியோடி விட்டனர்.
இப்பிரச்சினைக்கு முக்கியக் காரணம் டோனி என்பதறிந்து கூரையில்லாத குடிசை
வீட்டிற்கு காவல் போட்டனர். தலைமறைவாக செல்ல நினைத்த டோனிக்கு அம்மாவிடம் சென்றால்
காசு கிடைக்கும் என்ற எண்ணம் வந்தது. டோனியின் அம்மா அம்ஸலை தியேட்டரில் கூட்டிப்
பெருக்கும் தொழில் செய்கிறாள். மக்களை நம்பிப் பயனில்லை. திருமணம் செய்யவும்
மறுத்து தருதலையாகச் சுற்றித் திரிகிறான் என்ற வருத்தம் டோனி அம்மாவைப் பார்க்க
செல்ல நினைத்த போது அங்குக் காவல் துறையினர் இருப்பது கண்டு திரும்பிவிட்டான்.
அவன் நீண்ட நாட்களாகக் குறிவைத்திருந்த வீட்டில் திருட முடிவெடுத்தான். வீட்டில்
இரண்டு முதியவர்கள் மட்டும்தான். மகளின் பிரசவத்திற்காக கிழவி சென்றுவிட்டாள்.
டோனி வீட்டிற்குள் நுழைந்ததும் கிழவன் இரவு தூக்கமின்றி எலிக்குப் பொறி வைப்பதும்
பிடிபட்டதைக் கொள்வதுமாக இருப்பதைக் கண்டான். திருடன் வீட்டில் நுழைந்து விட்டதை
அறிந்த கிழவன் டோனி இருந்த அறையை வெளியே பூட்டிவிட்டான். டோனி மாட்டிக் கொண்ட
பயத்தால் கிழவனிடம் தன்னை விட்டு விடும்படிக் கெஞ்சினான். கிழவனுக்குப் பொழுது
போக்க வேண்டி டோனியுடன் சன்னல் வழியே சீட்டாடினான். அதனிடையே அவனைப் பற்றித்
தெரிந்தும் கொண்டான். திருட்டுத் தொழிலை விட்டுவிடு நான் கணக்கு வேலை வாங்கித்
தருகிறேன் என்றார் கிழவர். மறுநாள் விடிந்ததும் தான் மகனைப் பார்க்க கிழவன்
சென்றுவிட்டு பேரன் பிறந்திருப்பதாகக் கூறி டோனிக்கு இனிப்பு வழங்கினான்.
இதற்கிடையில் டோனி குளித்துவிட்டு தன் உடைகளோடு சேர்த்து கிழவன் கிழவியின் உடைகளையும்
துவைத்துவிட்டு பிரிஜில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுமிருந்தான். மீண்டும்
இருவரும் சீட்டாடினர். அன்று வெளியான செய்தியில் மணி என்பவரை கொலை செய்துவிட்டு
ரௌடி டோனி தலைமறைவு என வாசித்த கிழவன் வெளியே சென்ற நேரம் பார்த்து தப்பிக்கும்
வழியையும் கண்டுபிடித்திருந்தான் டோனி. அன்றிரவு தூங்கிய பிறகு டோனி
தப்பித்துவிட்டான். என்பதை மறுநாள் விடியலில் அறிந்தார் கிழவர். பொருள்கள் திருடு
போகவில்லை. கிழவரிடம் சீட்டில் ஜெயித்த 433 ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றதாக கடிதம் எழுதி வைத்திருந்தான்.
ஓரிரு நாட்களில் ரௌடி டோனி பிடிபட்டுவிட்டதை அறிந்தார் கிழவர். அவன் நல்லவனாக மாறி
வருவேன் என்றும் காவல் துறையில் காட்டிக் கொண்டால் நான் குற்றவாளி இல்லை என்று
நீங்கள் விரும்பினால் கூறலாம். என்றும் எழுதிச் சென்ற கடிதத்தை நினைத்து கிழவர்
வருந்தினார். இவ்வாறு நடந்தது என டோனி பற்றி கிழவர் அவரது மனைவியிடம் கூட கனவு
கண்டு உளறாதீங்க என்று கூறினாள்.