ஞாயிறு, மே 10, 2020

ஓ அமெரிக்கா - ஜெயகாந்தன்

            ஓ அமெரிக்கா மேகலா, 1983
கமலாலயம் கல்லூரியின் முதல்வர் கமலம்மாளுக்கு கணவர் தங்கராஜூவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. இந்தக் கல்லூரி கமலம்மாளின் அப்பா வித்தியாசாகர் சிறிய அளவில் தொடங்கியது. இன்று வளர்ந்து பெரிதாகிவிட்டது. கடிதத்தில் அமெரிக்கத் துறவி இறந்துவிட்டார். நான் குறிப்பிட்ட தேதியன்று வீடு திரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்னாள் தன்னைப் பிரிந்த கணவன் மீண்டும் வருகிறார் என்பது கமலாம்மாளுக்கு மகிழ்ச்சியே வீட்டிற்குச் சென்று தான் மகனான அரவிந்திற்குத் தெரிவித்தாள். மாலை நரேன் வந்ததும் அவனுக்கும் தெரிவித்தாள், அவன் ஒரு நாடக நடிகன். அவனுடைய மனைவி அர்ச்சனா (மாடர்ன் பெண்) இருவரும் பிடிக்காமல் விலகி இருக்கின்றனர். கணவன் வரயிருப்பதை போன்மூலம் அர்ச்சனாவிற்கும் தெரிவித்துவிட்டாள். இந்த இருபது ஆண்டுகளில் இரண்டு தடவை வீட்டிற்கும் அவர் வந்ததாக ஞாபகம். கடைசியாக அவர் வந்தது நரேனின் திருமணத்திற்குத்தான். கமலாலயத்தின் பிள்ளைகளை கண்டித்த அளவிற்குக் கூட தான் பிள்ளைகளைக் கண்டித்ததில்லை கமலம்மாள். அவள் முன்பு சகஜமாக தண்ணியடிப்பதும் தம் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது அவர்களுக்கு நரேந்திரனைப் பெட்டியெடுக்க பத்திரிக்கையாளர்கள் வந்தனர். அவர்களை இன்னும் சில தினங்களில் என் கணவர் வந்துவிடுவார். அவர் வந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாள். அரவிந்தனுக்கு அமெரிக்க மோகம். எதற்கெடுத்தாலும் அமெரிக்காவையே உதாரணம் காட்டுவான். அமெரிக்காவில் வேலை செய்வதும். வாழ்வதுமே அவனது இலட்சியம் எனலாம். தங்கராஜை வரவேற்க அனைவரும் ஸ்டேஷன் சென்றனர். அவரைப் பார்த்ததும் கமலம்மாள் காலில் விழுந்து வணங்கிவிட்டாள். இன்று அவர் உண்ணாவிரதம் இருப்பதாக துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தார். அன்று ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தங்கராஜ் பேசவில்லை. அன்றைய விருந்தில் அனைவரும் கலந்து கொண்டனர். பிள்ளைகள் தண்ணியடிப்பதும் கண்டு அவர்கள் முறையாக வழி நடத்தப்படவில்லை என்பதை தங்கராஜ் உணர்ந்து கொண்டார். மறுநாள் தங்கராஜ் பேசத் துவங்கியதும் கமலாம்பாள் அவரை கல்லூரிக்கு அழைத்துச் சென்று அனைவரிடத்திலும் அறிமுகம் செய்து வைத்தால். கல்லூரி முன்பிருந்ததை விட வளர்ந்திருப்பதைக் கண்டு உளம் மகிழ்ந்தார். கல்லூரிக்கு விடுதி ஒன்று புதிதாகக் கட்டுவதற்கான திட்டம் உள்ளதை தங்கராஜூவிடம் தெரிவித்தால் புதிதாக ஒன்றைக் கட்டுவதை விட நம் வீட்டின் ஒரு பகுதியை விடுதியாக  மாற்றிவிடலாம் என்றார். அதற்கு அனைவரும் ஒப்புதளித்தனர். விடுதிகட்டும் திட்டமாக பத்திரிக்கையாளர்கள் தங்கராஜூவை பேட்டிகான வந்த பொழுது வீட்டின் முன்பகுதி விடுதியாகப் போவதாகவும், தான் அந்த விடுதியின் காப்பாளர் எனவும் அறிவித்தார். மேலும் அமெரிக்காதான் பெரியது ஓ அமெரிக்காஎன வியந்துகொண்டு அமெரிக்காவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாழுகின்ற அரவிந்தனையும் சுட்டிக் கூறினார். அமெரிக்கர்கள் கடின உழைப்பினால் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளனர். உழைப்பிற்கு முக்கியத்துவம் தருகின்ற நாட்டில் வேலை எதுவுமின்றி நீண்ட காலத்திற்கு குழந்தைகள் பெற்றோருடன் இருப்பதில்லை. பெற்றோரும் உடனிருப்பதை விரும்புவதில்லை. எனவே அமெரிக்காவை நினைத்து கனவு கான்பதை விட அமெரிக்காவைப் போல உழைத்து முன்னேறக் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே அரவிந்தன் இன்றுமுதல் வேலைக்குச் செல்லும்வரை விடுதியில் பணிபுரிய வேண்டும் என்றார். மேலும் நரேனும் அர்ச்சனாவும் சேர்ந்து வாழ்வதையே நான் விரும்புகிறேன் என்கிறார். சிலபல தேவையற்ற காரணங்களுக்காக ஒழுக்கச் சீர்கேடுகளுக்காக அமெரிக்காவை உதாரணம் காட்டுவதைவிட நல்ல வழியில் முன்னேறுவதற்கு அமெரிக்காவை உதாரணமாக எடுத்துக் கொள்வதே சரியானது என்கிறார். இத்தகைய தங்கராஜூவின் கருத்திற்கு அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். தங்கராஜூவின் பொறுப்புணர்வு கண்டு கமலம்மாள் மிகவும் பெருமை கொண்டார்.