ஞாயிறு, மே 10, 2020

இதய இராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் - ஜெயகாந்தன்

          இதய இராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் - இதயம் 1983
ஆல் இந்தியா ரேடியோவிலிருந்து சோமநாதன் புனித இதய மேரியை பேட்டி எடுக்கின்றார். புனித மேரியின் வயது 30. கேரளா, உண்மையான பெயர் லில்லி, இந்த மறுவாழ்வு இல்லத்திற்கு வந்த பிறகு பி.ஏ. முடித்திருக்கிறார். நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்றதற்கு யார் மீதும் நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் திருமணம் செய்யவில்லை என்றாள். வாழ்விழந்த பெண்கள் மட்டும் இங்கு இல்லை. என்பதற்கு இங்கிருக்கும் காஞ்சனா (வயது 22) ஓர் உதாரணம். அவளைப் பற்றிக் கேட்க காஞ்சனா விவரிக்கிறாள். இலட்சுமி நடித்து அதில் சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருது பெற்ற படம் ஒன்று (சில நேரங்களில் சில மனிதர்கள்) ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அதில் இலட்சுமியின் நடிப்பில் தன்னைப் பறிகொடுத்த காஞ்சனா தன்னையும் இலட்சுமியாகப் பாவித்துக் கொண்டாள். அதோடு அவளைப் பார்க்கின்ற பலரும் இலட்சுமி போல் இருப்பதாகவும் பேசுவதாகவும் கூறினர். இதனால் அப்படத்தின் தாக்கம் மேலும் வலுப்பெற்றது. இலட்சுமி பேருந்துக்காகக் காத்திருப்பது போன்று அவளும் 10 ஆம் நம்பர் பேருந்துக்காகக் காத்திருந்தாள். இலட்சிமியை பிரபு காரில் ஏற்றிச் செல்வது போன்று 10 ஆம் நம்பர் பேருந்தும் பிரபு போல பஸ் டிரைவரும் தெரிந்தனர். இது கற்பனை என்றாலும் அதை உண்மையாக நினைத்துக் கொண்டு பிரபுவால் கற்பழிஞ்சு இலட்சுமி போல தன்னையும் பாவித்துக் கொண்டு பொட்டை அழித்தும் உடைகளை கிழித்துக் கொண்டும் சகதியை உடலில் அப்பிக் கொண்டும் வீடு சென்றாள் காஞ்சனா. அவருடைய அம்மா இலட்சுமியின் அம்மா போலல்லாமல் காஞ்சனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். மருத்துவர்கள் காஞ்சனாவை யாரும் கற்பழிக்கவில்லை என்று சான்றழித்தனர். மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதையடுத்து மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டாள். தன்னைப்பற்றி குழந்தைத் தனமான குரலில் கூறினாள் காஞ்சனா. மேரியின் பெர்சனல் ரெக்கார்டைப் பார்த்த சோமநாதன் நீண்ட நாட்களாக தான் நினைத்திருந்த அதாவது வாழ்விழந்த பெண்ணிற்கு மறுவாழ்வு வழங்குவது என்ற விருப்பத்திற்கு ஏற்ப மேரியை திருமணம் செய்ய விரும்பினார். அதற்கு அனைவரும் ஒப்புதல் அழிக்கவே விரும்பினர். ஒப்புதலின் பேரில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் மேரியின் கடந்த கால வாழ்க்கையப் பற்றி சோமநாதன் கேட்க மேரி கூறத் துவங்கினாள். எனது 10 வது வயதில் அம்மா இறந்துவிட அப்பா மறுமணம் செய்துகொண்டார். தாய்மாமன் வீட்டில் வளர்ந்தேன். அவர்கள் என்னைப் பாரமாக நினைத்தார்கள். எனது 20 வயதில் வேலை தேடி தெருவெல்லாம் அலைந்ததுதான் மிச்சம். இறுதியாக ஒரு நாயர் வீட்டில் உள்ள பையனுக்கு டியூஷன் எடுக்க மாதம் ரூபாய் 50 என முடிவானது. வேலை கிடைத்துவிட்டது என்றவுடன் மாமனும் அவரது மனைவியும் என் மீது அன்பு செலுத்தினார். டியூஷன் படிப்பவனை விட நான் வயதில் சிரியவள் என்பதால் வெட்கத்தால் அவன் டியூசனுக்கு வரவில்லை. வேலையும் நின்றுவிட்டது. இதை வீட்டில் சொன்னால் மீண்டும் அவர்கள் கொடுமைப் படுத்தத் துவங்குவர். செய்வதறியாது வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு பார்க்கில் வந்திருந்துவிட்டு மாலை வீடு திரும்புவேன். மாதம் இறுதியில் சம்பளம் கேட்பார்களே என்ற பயம் பார்க்கில் அறிமுகமான பெண் ஒருத்தி இஸ்பேடு ராஜாக்களின் வழி பணத்திற்கு வழி செய்தாள். வீட்டில் உள்ளவர்களுக்கு பணம்தான் முக்கியம், அது எப்படி வந்தால் என்ன? இவ்வாறு மூன்று ஆண்டுகள் கடந்தன. ஆங்கிலம் பேசத் தெரியும் என்பதால் உயர்தர மக்களுக்கே விற்கப்பட்டேன். அவ்வாறு ஒருநாள் கோயம்பத்தூரில் உள்ள ஓட்டலில் பிடிபட்டேன். என்னுடன் இருந்தவனை நான் காதலிப்பதாகப் பொய் கூறினேன். அதை நம்பிய காவலாளி அவன் என்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி அவனை விரட்டி விட்டு என்னை தான் மகளாகக் கருதி மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விட்டார். அவர் நம்முடைய திருமணத்திற்கும் வந்திருந்தார்.என்றாள். இதைக் கேட்டு சோமநாதன் கண் கலங்கி விட்டான். நான் எதையும் மறைக்கவில்லை. நான் உங்களுக்கு அருவருப்பாகத் தோன்றினால் நீங்கள் கூறும்படி நடந்து கொள்கிறேன் என்றாள் மேரி. நான் கூறியது எல்லாம் இந்த டைரியில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் படித்தால் நான் அருவருப்பாகவே தெரியலாம் ஆகையால் இதை எரித்துவிட விரும்புகிறேன். சோமநாதன் தன்னுடைய இதய இராணி மேரியை மனமார ஏற்று அந்த டைரியை எறித்திவிட்டான். இருவரின் மனமும் ஒன்றிப் புதுவாழ்வு வாழத்துவங்கினர்.