ஒரு குடும்பத்தில் நடக்கிறது – மேகலா, 1983
ஈஸ்வரன் பிள்ளை கணக்குப் பிள்ளையாக வேலை செய்தாலும் கடின உழைப்பில் இரு
பிள்ளைகளையும் படிக்க வைத்து அகிலாவை டீச்சராகவும் ஆறுமுகத்தை ஏர்போர்ஸ் இராணுவ
வீரனாகவும் மாற்றிவிட்டார். அகிலாவின் திருமணம் முடிந்து கணவன் பாலசுந்தரத்துடன்
அனுப்பி வைக்க குடும்பத்துடன் ஸ்டேஷனில் இரயிலுக்காகக் காத்திருக்கின்றனர். மகள்
கணவனுடனும், மகன் வேலைக்கும் சென்றுவிடுவர். மீண்டும் அதே இளமைக்கால
தனிமை வாழ்க்கையை நினைத்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர் ஈஸ்வரன்
பிள்ளையும் பார்வதியம்மாளும். அகிலாவின் டீச்சர் வேலை,
கணவன் ஊரான சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டது. அங்கு
சென்றவுடனேயே அகிலாவிற்குத் தெரிந்துவிட்டது. கணவனுக்கு குடிப்பழக்கமும்
புகைக்கும் பழக்கமும் இருப்பது குறித்து நிரந்தர வருமானம் இல்லாமல்தான் இவ்வாறு
செய்கிறார் என்று தன்னை தேற்றிக் கொண்டாள் அகிலா. இறைவனால் அகிலாவின் அந்தரங்கம்
குறித்துக் கனவுகள் பொய்யாய் போவதும் கணவன் குடித்துவிட்டு உறங்கி விடுவதும்
வழக்கமாகிவிட்டது. கணவன் அங்குள்ள சீட்டுக் களிப்பில் நாள் முழுக்க சீட்டாடுவது
வழக்கம் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. இதைப்பற்றி யாரிடமும் கூறிக்கொள்ள
வில்லை. ஆனால் பாலசுந்தரம் அகிலாவிற்கு உறுதுணையாக எல்லாவிதமான வேலைகளும் செய்து
வந்தான். பள்ளியில் சென்று விடுவது, மீண்டும் அழைத்து வருவது என இருப்பினும் இரவுகளில்
தூக்கமின்றி தவித்தும் வந்தான். அவனுடைய அம்மா கமலாம்பாள்,
மனைவி வந்த பிறகு திருந்தி விடுவான் என்றே எதிர்பார்ப்பும்
தற்பொழுது இல்லாமல் போய்விட்டது. மனைவி கொடுத்த ஒரு மாதச் சம்பளத்தை பெற்ற
மகிழ்ச்சியில் தண்ணியடித்துவிட்டு அகிலாவிடம் தன் மனதில் இருக்கின்ற உண்மையைக் கூறிவிட விரும்பினான். அதைக்
கூறும் முன்பாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். “எனக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கிறது. நான் கல்லூரியில்
படித்துக் கொண்டிருக்கிற பொழுது அப்பா இறந்துவிட்டார். படிப்பைக் கூட முடிக்க
இயலவில்லை. அப்பொழுது கல்லூரி முன்பாக கடை வைத்திருந்த டேவிட் என்பவர் அவ்வப்போது
பாலசுந்தர் படிப்பதற்கும் தங்குவதற்கும் உதவிகள் பல செய்து வந்தவர். இரண்டாம்
உலகப் போரில் நாடுகள் பல சுற்றி வந்தவர். தள்ளாத வயதில் 50 வயதுக்கு மேல் இந்தக்
கடையை நடத்தி வருகிறார். மாணவர்கள் என்றால் கடனாகவே கொடுத்துவிடுவார். அவ்வாறு கொடுத்ததில் பழக்கம் ஏற்பட்டு 20 வயது
பெண்ணான அமிர்தத்தைத் திருமணம் செய்ய நேர்ந்தது. திடீரென ஒரு நாள் வயதின்
முதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு அமிர்தத்தால்
தனிமையில் தங்கமுடியாத நிலையில் உடனிருக்க வேண்டியிருந்தது. அப்பொழுது அவள் தன்னை
மனைவியாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டாள். இடையே டேவிட்டும் நான் இறந்துவிட்டால்
என்னிடத்திலிருந்து அமிர்தத்தைக் கவனித்துக் கொள் என்றார். இதை மறுக்க இயலாமல் டேவிட்
இறந்த பிறகு கடையை நானே ஏற்று நடத்தினேன். அது தோல்வியில்தான் முடிந்தது.
வறுமையின் இக்கட்டான சூழல். இதையறியாத என் அம்மா திருமணம் செய்யும்படிக் கூறினாள்.
அமிர்தமும் இதற்கு ஒப்புதல் அளித்தாள். இதற்குள் அமிர்தத்திற்கு மேலும் 2 குழந்தைகள்
பிறந்து விட்டன. இத்தகைய வறுமைச் சூழலில் உன்னை
ஏமாற்றும்படி நடந்துவிட்டது நமது திருமணம்”
என்று புலம்பி அழுதான் பாலசுந்தரம். இதையெல்லாம் பொறுமையோடு
கேட்ட அகிலா என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாள். சண்டையிடுவதும் கோபப்படுவதும்
தீர்வாகாது என்றறிந்திருந்தாள். இதைப் பற்றி கமலாம்பாளிடம் கூறவே “உன் வாழ்க்கையை வீனடித்து விட்டேன் அகிலா.”
அவனை விட்டுவிடு, வீட்டை விட்டே அவனை விரட்டி விடுகிறேன் என்றார். அவள் அதை
மறுத்த அகிலா அண்ணன் ஆறுமுகத்திடம் இதை விளக்கினாள். அவன் டைவர்ஸ்
செய்துகொள்ளும்படிக் கூறினான். இவர்கள் கூறும் எதுவும் தீர்வாகாது. என்பதை அறிந்து
அண்ணனிடம் “நீ சமூகத்திற்கு வெளியே போராடுகிறாய். நான்
சமூகத்திற்குள்ளாகப் போராடுகிறேன். இருப்பினும் போராட்டம் ஒன்றுதான். நீங்கள்
ஆயுதத்தைப் பயன்படுத்துகிறீர்கள். நான் அன்பைப் பயன்படுத்துகிறேன் என்று அகிலா
பேசியது கண்டு அண்ணன் பெருமிதம் கொண்டான்.