கழுத்தில் விழுந்த மாலை – குங்குமச் சிமிழ், 1984
சங்கரபுரத்தில் உள்ள சங்கரலிங்கேசுவரர் ஆலயத் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
மடங்களில் பரமேஸ்வரனும் பார்வதியுமாக பிராமணக் குழந்தைகள் விளையாடுவது போல
ஜெயலெட்சுமியும் ஜெயராமனும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அப்பையாக்
குருக்கள் அவர்களை விசாரிக்க, “நான் ஹெட்மாஸ்டர் சபேசய்யர் மகள்,
அவன் லோக்கநாத அய்யரின் மகன் என அறிமுகம் செய்கிறாள் ஜெயலெட்சுமி இவ்விருவரின்
ஒற்றுமையைப் பார்த்து இவர்கள் இணைந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காதவர் இல்லை. இச்செய்தி கேட்டு லோகநாத அய்யர் ஜெயராமன் ஜேஜே
சுவாமிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டானாகையால் அவனுக்குத் திருமணம் நடைபெறாது
என்கிறார். சிறுபருவத்தில் சுவாமிகள் பற்றி அறியாத இருவரும் அதனை விளையாட்டாக
எடுத்துக் கொண்டனர். குறிப்பிட்ட சில வருடங்களிலேயே மடம் அவனைத் தத்தெடுத்துக்
கொண்டது. போகும்போது நாம் எல்லோருக்கும் சாமியாகப் போகிறேன் என்ற பெருமையோடு சென்றாலும் சில நாட்களிலேயே அனைவரையும் பிரிந்துவிட்ட துன்பம்
ஜெயராமனுக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஜெயலெட்சுமியின் ஞாபகம் தொடர்ந்தது. பெரியவனான பிறகு திரும்பி வந்து உன்னைத் திருமணம்
செய்து கொள்வேன் என்ற ஜெயராமனின் வாக்குக் கேட்டு அவன் வருகைக்காக காத்திருந்தாள்
ஜெயா. பெரியவளாகிவிட்டாள், பள்ளிப்படிப்பு முடித்து அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிகிறாள். ஜெயா இன்னும்
ஜெயராமன் கூறிய வாக்கினை நினைத்துக் கொண்டு திருமணம் வேண்டாம் என்கிறாள்
என்பதையறிந்து அவளது தந்தை ஜூனியர் ஜேஜே சுவாமிகளை (ஜெயராமன்) சந்தித்து,
ஜெயா திருமணம் செய்ய மருப்பதைப் பற்றிக் கூறினார். அதற்கு
சுவாமிகள் கூடிய விரைவில் நல்ல வரன் கிட்டும் என்று கூறிவிட்டார். ஜெயாவுடன் பணியாற்றிய
ஆசிரியை ரெஜினாவின் காதலன் விக்டரும் இவ்வாறு திருச்சபையில் பாதரக வேண்டிய சூழலில்
ரெஜினாவின் நினைவுகள் அவனைத் துரத்தவே திருச்சபையில் மன்னிப்புக் கேட்டுவிட்டு
அதிலிருந்து மீண்டு வந்து ரெஜினாவைத் திருமணம் முடித்தான். இதுபோன்று இந்து
மதத்திலும் இருந்தால் நல்லா இருக்குமே என்று ஜெயலெட்சுமி விரும்பினாள். தந்தையின்
துணையோடு ஜெயரமனைப் பார்த்துப் பேசுகையில் ஜெயராமன் தன்னை மறந்து பேசுவதைக்
கண்டாள். இருப்பினும் சுவாமிகள் எனும் நிலையில் தன் ஆசைகளை மறைத்து அவளுக்கு ஆசி
வழங்கினான். மீண்டுமொருமுறை ஜெயராமனே கனவில் வந்து கூறியதாகக் கூறி தந்தையின்
துணையோடு ஜெயரமனைச் சந்தித்துப் பேசினால். “என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய வாக்கு
என்னவாயிற்று? என கேட்டுவிட்டு என்றைக்கேனும் நீங்களே என் கணவர் என
ஜெயராமனுக்கு மாலை அணிவித்தாள். ஜெயராமன் அவளுக்கு மாலையிட நினைக்கையில் சுவாமிகள்
ஒரு பெண்ணிற்கு மாலையிடுவதை ஏற்காத சமூகத்தினர் அதனைத் தடுத்து ஜெயலெட்சுமியை
அவ்விடத்திலிருந்து விலக்கினார். அடிகளும் உதைகளும் ஜெயலெட்சுமிக்குக் கிடைக்கவே
செய்தன. தன்னை சுவாமி என்று உணர்ந்துவிட்ட ஜெயராமன் மதச் சடங்குகளுக்குள்
கட்டுண்டு, ஆசைகளைக் கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தான். அழைத்து வந்த
ஜெயலெட்சுமியை தூக்கிச் செல்லும் அளவிற்கு ஆகிவிட்டது அவளது தந்தையின் நிலை. மதச்
சடங்குகள் காதலின் உணர்வுகளை விழுங்கிவிட்டது. அதன் பிறகு ஜெயலெட்சுமியின் நிலை
என்னவானது என்று யாருக்குத் தெரியும்?.