ஞாயிறு, மே 10, 2020

நம்ப மாட்டேளே - ஜெயகாந்தன்

          நம்ப மாட்டேளே மேகலா, 1984
கதாப்பாத்திரங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை. கதைத் தலைவியின் கூற்றாக கதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே இக்கதைச் சுருக்கமும் அமைகின்றது.) சின்ன விஷயங்கள் என்று எதையும் ஏளனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுவே பெரிய பிரச்சனையாகவும் மாறலாம் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்பாவிற்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். அம்மா முழுநேர கடவுள் நம்பிக்கை உடையவர். அக்கா பேங்கில் வேலை செய்கிறாள். நல்ல சம்பளம், கல்யாணம் என்ற பெயரில் ஒருவனிடம் அடிமைப்பட முடியாது என்று திருமணத்தை விட்டாள். சின்ன அக்கா திருமணம் செய்து அவதிப்படுவது கண்டு ஒருவேளை அவள் எச்சரிக்கையாயிருக்கலாம். நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக அடிமையாய் வாழவும் தயாராயில்லை. அப்பா இறந்த பிறகு வீடு முற்றிலும் மாறிவிட்டது. கேட்க ஆலில்லாமல் கிச்சு (தம்பி) படிப்பை நிறுத்திவிட்டான். சின்ன அக்காவை பார்க்க யாரும் செல்வதில்லை. நான் வீட்டிலிருப்பதையும் அக்கா ஜாடமாடையாக குத்திக்காட்ட ஆரம்பித்துவிட்டாள். ஹிந்தி படிக்கத் தொடங்கினேன். படித்தவுடன் டியூஷன் எடுத்ததில் மாதம் 50 ரூபாய் கிட்டியது. முதல் மாதச் சம்பளத்தில் எனது ஹிந்தி சாருக்கு சின்ன ட்ரீட் (டீ, சமோசா). அது நான்வெஜ் கடை என்பதால் நானும் அவருடன் சேர்ந்து நான்வெஜ் சாப்பிட்டதாக கிச்சு வீட்டில் கூறிவிட்டான். நான் சாப்பிடவில்லை என்றால் யாரும் நம்புவதாயில்லை. நானும் அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டேன். எனது சமைக்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி கேட்டரிங் படித்தேன். தற்பொழுது அசைவ சமையலில் வல்லுனராகவும் மாறிவிட்டேன். பிரபலமாகிவிட்டேன். அக்காவுக்கு நிகரான சம்பளமும் பெறத் தொடங்கினேன். எல்லோரும் என்னை நான்வெஜ் சாப்பிடுகிறவள் என்றே கருதத் துவங்கினர். ஆனால் நான் சைவம் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு சின்ன அக்காவைப் பார்க்கச் சென்றேன். அவள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தாள். அவளுடைய மாமியார் அவளை கொடுமைப்படுத்துகிறார். கணவனோ சுமையாகக் கருதுகிறார். அவர் இரண்டாவது மனைவி கட்டிக் கொள்ள அக்கா தடையாக இருக்கிறாளாம். இந்தக் கொடுமைகளைக் கேட்டு நான் வீடு திரும்பிய மூன்றாம் நாள் அக்கா இறந்து விட்டதாகச் செய்தியும் வந்தது. அம்மா எங்கோ ஒரு கோயிலுக்குச் சென்ற பொழுது அவருடைய தோழி செல்லம் என்பவளைச் சந்தித்தாளாம். அவருடைய மகனின் பெயர் மணி. அவன் நான்வெஜ் சாப்பிடுகிறவனாம். ஆனால் பிராமண வீட்டில் நான்வெஜ் சாப்பிடுகிற பெண்ணை எவ்வாறு கண்டிபிடிப்பது? என்று அம்மாவிடம் கேட்டாளாம் அவன் எனக்குப் பொருத்தமாக இருப்பாள் என அம்மா சிபாரிசு செய்தாள். சாப்பிடுவதை வைத்துப் பொருத்தம் பார்க்கும் இவர்களை நினைத்தால் சிரிப்பாகத்தான் வந்தது. அவனிடம் தனியாக பேசிய பிறகே சம்மதம் தெரிவிப்பேன் என்றேன். அக்காவும் அதற்கு ஆதரவு தெரிவித்தாள். நானும் திருமணம் செய்திருக்கலாமோ என அக்கா ஏங்குகிறாள் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் நன்றாக ஸ்கூட்டர் ட்டக் கற்றுக் கொண்டு விட்டேன். மணி என் வீட்டிற்கு வந்தபோது அனைவரும் நான் நான்வெஜ் சாப்பிடுபவள் என்றே அறிமுகம் செய்து வைத்தனர். ஆனால் நான் அன்று அனைவரின் முன்பாகவும் யாரும் அறியாத உண்மையாகிய சைவ உணவு சாப்பிடுபவள் என்பதைக் கூறினேன். அக்கா என்னைத் தட்டிக் கொடுத்து என்னதான் இருந்தாலும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் தலைமுறை தலைமுறையாக மாறுவதில்லை. அவை மேலும் வலுப்பெறவே செய்கின்றன என்றாள். அதற்கு ஒப்புதல் தெரிவிக்கின்ற விதமாக மணியும் அசைவம், சைவம் என்பதெல்லாம் அவரவர்களின் விருப்பத்தினைப் பொருத்தது. இது நல்லது, இது கேட்டது என்று எதையும் கூறிவிட முடியாது எனக்கூறி திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார். நானும் அக்காவும் அடுத்தவர்கள் உணவுப் பழக்கத்தில் நாம் தலையிடுவது நாகரீகம் அல்ல என்று கூறினோம். அதை அவரும் ஏற்றுக் கொண்டார். உணவு விஷயத்தில் மனிதர் உண்ணுகிற எல்லா உணவு வகைகளும் எனக்கு உகந்ததே.என்று கூறிய அப்பாவின் நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.