வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து – மேகலா, 1985
பைரவி ராகம் பிடிக்கும் எனபதற்காக அம்மா எனக்கு இப்பெயர் சூட்டினாள். அது
போலத்தான் வசந்தாவின் பெயரும். அப்பா பெரிய கம்பெனியில் அக்கவுண்டண்ட்.
அம்மாவிற்கு நல்ல பிள்ளை என்றாள் அது வசந்தாதான். அப்பா என்னுடைய கட்சிதான்
என்றாலும், நான் வேலை செல்லவில்லை என்ற வருத்தம் அவருக்கு. பெண் உரிமை
பற்றி அப்பா விரிவாகப் பேசுவார். அப்பா என்னுடைய கருத்திற்கு உடன்படுவார். ஆனாலும்
சில நேரங்களில் எதிரிப்பு தெரிவிப்பார். எனது நண்பர்கள் குழு ஆண்,
பெண், பாரபட்சமற்றது. நாங்கள் இணைந்து பல விஷயங்கள் பற்றி
விவாதிப்போம் நான் படிப்பை முடித்ததும் வேலைக்குச் செல்லவில்லை என்பது அப்பாவின்
வருத்தம். வேலைக்குச் செல்லவில்லை, வெட்டியாக நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறேன். குறிப்பாக
ஆண்களுடன் சுற்றுகிறேன் என்ற தொடர் குற்றச்சாட்டு வசந்தா எனக்கு எதிர்மாறானவள்.
அவளைத்தான் உதாரணம் காட்டுவர். எனது நண்பர் குழுவில் சுரேஷ் பள்ளிப்
பருவத்திலிருந்து எனது நண்பன். அவனுடன் வெளியில் செல்வதை அவர்கள் விரும்பவில்லை.
அப்படித்தான் ஒரு நாள் நண்பர்கள் கூட்டத்திற்காக கிளம்புகின்ற பொழுது பிரச்சினை
கிளம்பியது. சுரேசுடன் செல்லக்கூடாது என
தடுத்தனர். சுரேஷ் வந்தவுடன் அவனை அம்மா திட்டிவிட்டாள். நான் வீட்டை விட்டே
கிளம்பி விடுவதாகக் கூறிவிட்டு அவனுடன் சென்றுவிட்டேன். அன்றைய நண்பர்கள்
கூட்டத்தில் நான் வாணியின் வீட்டில் தங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. மேலும்
வாடகைக்குத் தனி வீடு ஒன்று எடுத்து அனைவரும் தங்குவது என்று தீர்மானித்தோம். ஒரு
சில தினங்களில் வீடும் தயாராகியது. புது வீடு வந்து ஓராண்டு வந்துவிட்டது. ரோஜா
செடி வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். வீட்டில் வளர்த்த செடி எண்ணானது என்று
தெரியவில்லை. அதைப் பறித்து வர வீடுவரை சென்றேன். அவர்கள் குடும்பத்தோடு வேறு
வீட்டிற்குச் சென்றுவிட்டனர் என்பது பக்கத்து வீட்டு மாமி சீதாலெட்சுமி கூறி
அறிந்து கொண்டேன். என் விருப்பத்தை ஏற்று சுரேஷ் அவனுடைய வீட்டிலிருந்து ரோஜா செடிகளைக்
கொண்டுவந்தான். அவன் வரைந்த ஓவியங்களையும் கொண்டு வந்திருந்தான். எங்கள் குழுவில்
இன்னும் ஒரு சில நண்பர்கள் இணைந்தனர். அதில் கண்ணன் என்பவனும் ஒருவன். அவன்
அடிக்கடி வீட்டிற்கு வருவான். நிறைய பேசுவான். அதற்குக் காரணம் அவனுக்கு என்மீது
விருப்பம் இருக்கிறது அதுதான். அவன் விருப்பத்தை அறிந்து,
நம் கொள்கைக்கு புறம்பானது என்று கூறி விட்டேன். அதோடு என்
தங்கையைத் திருமணம் செய்து கொள்ளும்படி சிபாரிசு செய்தேன். அவனும்
பெண்கேட்டுவிட்டு வந்தபிறகு, தங்களுக்கு ஒரு மகள்தான் என்று அவர்கள் கூறியது கேட்டு
வியந்தேன். ஒரு நாள் அவளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவள் என்னைக்
கண்டதும் குற்ற உணர்ச்சியால் வந்த வழியாகவே திரும்பி ஓடி விட்டாள். அன்று அவருக்காக ஏற்பாடு செய்த விருந்தில் நான் கண்ணனைத் திருமணம்
செய்து கொள்ளப் போவதாக அறிவித்தேன். அனைவரும் திகைத்தனர். அனைவருக்கும் புரியும்படி
30 வயதில்தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றேன். யாருடைய 30
வயதில் என்ற வினாவும் எழவே செய்தது.