ஞாயிறு, மே 10, 2020

அந்த அக்காவைத் தேடி - ஜெயகாந்தன்

         அந்த அக்காவைத் தேடி குங்குமச் சிமிழ், 1985
(‘நம்ப மாட்டேளேகுறும்புதினத்தின் தொடர்ச்சியாகவும் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்துகுறும்புதினத்தையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளது.)
(நம்ப மாட்டேளே கதையினை சுருக்கமாக அறிமுகம் செய்து விட்டு பின்னர் இக்கதையைத் தொடங்குகிறார்.) மணி மொரிசியசில் வேலை கிடைத்து 5 ஆண்டு ஒப்பந்தத்தில் சென்றுவிட்டார். நாங்கள் ஒன்றும் பிரிவதற்காக வருந்தும் காதலர்கள் இல்லை. மணி சென்ற பின்பு ஒரு வெறுமை இருந்தாலும் அது பெரிதும் என்னைக் கஷ்டப்படுத்தவில்லை. கடிதத்தின் வழி தொடர்பு கொண்டோம். திருமணம், சடங்குமுறை இல்லற வாழ்க்கை குறித்து இருவருமே ஒருமித்த கருத்துக்களே கொண்டிருந்தோம். பெண்கள் அடிமைகளாக இருப்பதை அவர் விரும்புவதில்லை. ஒரு நாள் எதேர்ச்சையாக அப்பாவின் டைரியை பார்த்த பொழுது ஒரு போட்டோவைப் பார்த்தேன். அவள் பெயர் ஜானகி (அக்கா) பெரியப்பாவின் மகள். என்னைப் போல மற்றவர்களும் ஞாபகம் வைத்திருப்பார்களா என்பதை அறிய அனைவரிடமும் காட்டினேன். அதைப்பார்த்த கிச்சு இது நாடகத்தில் வருகிற மாலா மாதிரியே இருக்கு என்றதும் அவர்களாகத்தான் இருக்கும் என மாலாவைத் தேடிச் சந்தித்தேன். அவள் கூறியபடி அவள் இருக்கிற இடத்திற்கும் சென்றேன். நீண்ட உரையாடலுக்குப் பின் என் விருப்பப்படி வீட்டிற்கு வர சம்மதம் தெரிவித்தாள். வீட்டில் அணைவரும் அன்புடன் அவளை வரவேற்றனர். நான் மணி பற்றி அவளிடம் கூறினேன். அதற்கு அவள் மணியை தனக்கும் தெரியும் என்றாள். இருப்பினும் எங்களுடைய கொள்கையில் உடன்பாடு இல்லாதவர் என்றாள். எங்கள் நண்பர்கள் குழுவின் அனைவரும் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். சமூகச் சீர்கேடுகளை அகற்றுவதற்காகப் போராடி வருகிறோம். இவ்வாறான எங்களது வாழ்வைத் தொடங்கி வைத்தவள் பைரவிஎன்பவள்தான். மேலும் ரவி, சுரேஷ், கோபால், கண்ணன், மணி எங்கள் கொள்கையோடு உடன்படாதவர் என்றாலும் மிகவும் நல்லவர். உன் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று வாழ்த்து தெரிவித்தாள். டிவியில் Impossible dream எனும் படம் ஓடுகிறது. இதில் பெண் நாள் முழுக்க வேலை செய்கிறாள். வீட்டு வேலை, அலுவலக வேலை என வேலை தினமும் தொடர்கிறது. ஒரு நாள் தூங்குகையில் கனவு காண்கிறாள். அதில் அவருடைய வேலைகளை அவளுடைய கணவனும் குழந்தைகளும் பகிர்ந்து கொள்கின்றனர். அதனால் அவள் மிகவும் சந்தோமாக இருக்கிறாள். விடிந்தவுடன் தூக்கம் களைகிறது. அதோடு காணவும் களைந்து நிஜ வாழ்வுக்கு திரும்புகிறாள். மீண்டும் அதே வேலைப் பலுக்கள் அவளைத் துரத்துகின்றன. இதைக் கண்டு ஆண்கள் இவ்வாறு ஏன் இருக்கின்றனர் என நான் புலம்பவே ஆரம்பித்து விட்டேன். மாலாவை பற்றியும் அவர்களின் நட்பைப் பற்றியும் மணி அவர்களுக்கு விரிவாகக் கடிதம் எழுதினேன். அவரும் மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து மாலாவின் நண்பர்கள் பலரும் எனக்கும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். மணியிடமிருந்து வந்த கடிதம் ஒன்றை கிச்சு என்னிடம் கொடுத்தான். அதில் மொரீசியசில் நான் பெரிய வேளையில் இருக்கிறேன். எனக்குக் கீழ் பலரும் வேலை செய்கின்றனர். ஆகையால் நீ வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. உன் கேட்டரிங் வேலையை விட்டு வீடு. திருமணம் முடிந்ததும். நீ இங்கு வந்துவிடலாம்.இதைக் கேட்டதும் அம்மா, அக்கா, கிச்சு அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் எனக்கு அது மகிழ்ச்சி தரவில்லை. எல்லா ஆண்களும் இப்படித்தான் என்ற முடிவில் தங்களுடைய கருத்து எனக்கு உடன்பாடில்லை எனவும் வேறு பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறி கடிதம் எழுதிவிட்டேன். அம்மா எவ்வளவோ தடுத்தாள். ஆனால் என் மனம் ஒப்புதல் அளிக்கவில்லை. யார் என்ன சொன்னாலும் உன் மனதிற்கு சரி என்று படுவதை துணிந்து செய்என்று அப்பா கூறியவைதான் மனதிலிருக்கின்றன. சமூகத்தோடு சிக்கிக் கொண்டு வாழும் இவர்களுடன் வாழ்வதை விட சமூகக் கட்டுக்களிலிருந்து விடுபட்டு வாழும் மாலா அக்காவுடன் செல்வது என்று தீர்மானித்தேன். அவர்களின் கொள்கைப்படி சேர்ந்து வாழ்வதற்கு என் வேலை தடையாக இருக்குமெனில் அதை விட்டுவிடுவது என்று தீர்மானித்து விட்டேன். நான் எங்கும் ஓடிப்போகப் போவதில்லை. ஒரு அக்காவிடமிருந்து இன்னொரு அக்காவைத் தேடித்தானே செல்கிறேன்.