பகலில் ஒரு வேஷம் – இதயம், 1986
ஸ்ரீரங்கத்தில் பிறந்து வெளியுலகம் தெரியாத சீதா முதல் முறையாக ஊரைவிட்டு
சென்னை செல்கிறாள். இனிமேல் ஊர் திரும்பப் போவதில்லை. இரயில் பயணம் புதிது,
சென்னை புதிது, நகரமும் புதிது என இனிமேல் சீதாவின் வாழ்வே புதியதுதான்.
இரயில் செல்லுகின்ற பொழுது அவளது கடந்தகால ஸ்ரீரங்கத்து விளைவுகள் தொடரவே செய்தன.
இளம் வயதில் தாயை இழந்துவிட்டவள். குமாஸ்தாவான அப்பாவின் வருமானத்தில் காலம்
கழிந்தது. திறமைசாலி என்றாலும் அப்பாவின் வருமானத்தில் படிப்பினைத்
தொடரமுடியவில்லை. அப்பாவின் சொல் கேட்கும் பிள்ளை என்பதால் அவரே பார்த்துத் திருமணம் முடித்த ஒருவனே அவளின் கணவன். அவன்மீது இறக்கப்பட்டு அங்கீகாரம்
கொடுத்தார் அப்பா. ஆனால் அவன் வீட்டிலே நண்பர்களை அழைத்து குடிப்பதும்
சீட்டாடுவதும் மனைவியை அதிகாரம் செய்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தான். அதோடு
மட்டுமல்லாமல் தனது பதவி உயர்விற்காக மேலதிகாரி ஒருவனிடம் மனைவியை சல்லாபிக்கவும்
பணித்தான். இத்தகைய கொடுமையிலிருந்து விடுபட நினைத்த சீதா இதழில் வெளியான ரிஷி
எனும் எழுத்தாளரின் பேட்டியக் கண்டு எழுதிய கடிதத்திற்குப் பதில் வந்தது. அதை எடுத்துக் கொண்டு கணவனை வெறுத்து சென்னை
சென்று கொண்டிருக்கிறாள். ஸ்டேஷன் வந்ததும் இந்திரா நகருக்கு ஆட்டோவில் சென்றாள்.
ரிஷியை சந்தித்ததில் அவரது கெஸ்ட் ஹௌசில் தங்கும் அனுமதி பெற்று அலுவலக வேலைகளைத்
தொடங்கினாள். ரிஷியின் மனைவி இறந்துவிட்டாள். அவள் இருந்தபொழுது ரிஷி
சொல்வதையெல்லாம் எழுதுவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருந்தாள். அவ்வாறு
எழுதுவதற்காகவே சீதா அழைக்கப்பட்டிருந்தாள். ரிஷியின் அலுவலகக்தில் வேலை செய்பவர்
வாசு. ரிஷியின் படைப்புக்களால் ஈர்க்கப்பட்டவர். மறுநாள் பொழுதில்
மூவரும் கடற்கரை சொன்றனர். சீதா அப்பொழுதுதான் முதல் முறையாக கடலைப் பார்க்கிறாள்.
மூவரும் இலக்கியம், அரசியல், ஆன்மீகம், வாழ்க்கை என பல்வேறு செய்திகளைப் பற்றி விவாதித்துள்ளனர்.
ரிஷி ஒருமுறை தனது நாவலில் உங்களது மனைவியை,
காதலியை, சகோதரியைத் தேட வேண்டுமென்றால் அதலபாதாளத்தில் சென்று தேடுங்கள் என்றார். அதைப் படித்த வாசு
அதலபாதாளத்தில் சென்று ஒரு பெண்ணைக் கண்டறிந்து திருமணம் செய்து விட்டார். அவள்
குறிப்பிட்ட காலத்திற்குல்லாகவே யாருடனோ ஓடிவிட்டாள் என்ற செய்தியறிந்து காதல்
என்பது வெறும் பொய் என்ற அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்துவிட்டார் வாசு. சீதா வந்து சேர்ந்து ஐந்தாண்டுகளில் ஆண்டிற்கு ஒன்று
வீதம் ஐந்து பகுதிகளாக அவரது வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு இந்திய மொழிகள்
பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. சீதாவும் தன்னுடைய வாழ்க்கையில்
நிகழ்ந்த கசப்பான சம்பவங்களைப் பற்றி ரிஷியிடம் விளக்கினாள். நம்முடைய வாழ்வின்
கசப்பான சம்பவங்கள் நாம் செய்த தப்பினாலோ நம்முடைய சூழல் காரணமாகவோ
நேர்ந்திருக்கலாம். அதற்காக அப்படியே தங்கிவிடுவது முடிவாகாது என அவர் கூறிய
வார்த்தைகள் சீதாவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. அந்த நம்பிக்கை எழுத்தாளர்
ரிஷியின் மீதான காதலை ஏற்படுத்தியது. வெளியுலகத்திற்கு நண்பர்களாகவும் தங்களுக்கு
மட்டும் அறிந்த அந்தரங்கத்தோடும் வாழத் தொடங்கினார். ரிஷி தனது சொத்துக்கள்
அனைத்தையும் சீதாவிற்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். அவர் மறைந்த பிறகு
சீதாவிற்கு பொறுப்புகள் அதிகரிக்கவே செய்தன. ரிஷியின் வளர்ப்பில் வளர்ந்த சீதாவின்
குணவியல்புகளால் ஈர்க்கப்பட வாசு தன் காதலை சீதாவிடம் வெளிப்படுத்தினார். இதனை
ரிஷி அறிந்தால் மிகவும் வரவேற்பார் என்று சீதாவிற்குத் தெரியும் எனினும் சீதாவின்
மனம் காதலின்பால் செல்வதைவிட அவர் விட்டுச் சென்ற பணிகளைச் செவ்வனே செய்வதில்தான் திருப்தியடைந்தது. எனவே வாசுவிடம் நாம்
நல்ல நண்பர்களாகவே இருப்போம் என்ற தனது விருப்பத்தை சீதா தெரிவித்துவிட்டாள்.
வாசுவும் அதற்காக மரியாதையாளித்தான்.
(ரிஷி எழுதிய
நாவல்களில் விவாதிக்கப்பட்டுள்ள வாழ்க்கை,
காதல், திருமணம், வேலை முதலியவை குறித்து உணர்ந்த இளைஞர் பலர் திருமணம்,
வேலை என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தனியாக வாழ்கின்றனர்.
இப்பகுதி வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து,
அந்த அக்காவைத் தேடி என்ற இரு குறும்புதினங்களையும்
இணைத்துப் பேசுகிறது. பைரவி, மாலா, மிஸ்.ஜே, கண்ணன், சுரேஷ், ரவி, கோபால், ராஜினா, வாணி போன்றோர் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர்.)