ஞாயிறு, மே 10, 2020

இன்னும் ஒரு பெண்ணின் கதை - ஜெயகாந்தன்

         இன்னும் ஒரு பெண்ணின் கதை ராணி, 1986
15 வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்து கன்னுசாமி படையாச்சியிடம் சேர்ந்தான் மாதவன். அவரிடமிருந்த லாரியில் வேலை செய்து இப்போது லாரி ஓட்டுனர் என்ற தகுதியைப் பெற்றுவிட்டான். அவளது நண்பன் சாமிநாதன் மதுக்கடை நடத்தி வருகிறான். அதில் தினமும் குடிப்பது வழக்கம். கன்னுசாமி கடையில் குடிக்க மாட்டார். அதனால் வீட்டிற்கு வாங்கி வந்து குடிப்பார். குடித்துவிட்டு தெருவில் மாதவன் கிடப்பதை விரும்பாத அவனுடைய மனைவி வெள்ளையம்மாள் கன்னுசாமி மாதிரி வீட்டில் வந்து குடிக்கும்படிக் கேட்டுக் கொண்டாள். அதன் விளைவாக மாதவனின் வற்புறுத்தலின் பேரில் தானும் குடிக்கக் கற்றுக் கொண்டாள். நெல்லிக் குப்பத்திலிருந்து ஓடிவந்து 10 வருஷமான மாதவனுக்கு கன்னுசாமி அனாதையாக இருந்த தனது தங்கை மகளான வெள்ளையம்மாளைத் திருமணம் முடித்தான். வெள்ளையம்மாளின் அழகு மாதவனுக்கு உண்மையாக இருந்தாள். வயதான காரணத்தால் லாரியின் அச்சு முறிந்து விட்டது. அதன் பாகங்களாகச் சுழற்றி விற்றுவிட்ட கன்னுசாமிக்கும் வயசானதால் அச்சு முறிந்து விட்டது. தன்னை நம்பியிருந்த குப்பம்மாவையும் நகரத்திற்கு செல்லும்படி கூறிவிட்டு தன்னிடம் இருப்பதை மாதவனுக்கு, குப்பமாளுக்கும் கொடுத்து விட்டு இறந்துவிட்டார். தொழிலுக்கு என்ன செய்வது என்றெண்ணுகையில் வடிவேலு என்பவர் வைத்திருந்த பலகாரக் கடை கிடைத்தது. வடிவேலுவின் மகன் கோயம்புத்தூரில் தங்கிவிட்டதால் இவரும் கடையை விட்டுவிட்டு மகனிடமே சென்றுவிட்டார். கடையில் வேலை செய்த அஞ்சலையும் அவளது குழந்தை அழகம்மாளும் அங்கேயே தங்கிவிட்டனர். தாலி கட்டிக் கொள்ளாமல் பிள்ளை பெற்றுக் கொண்ட அஞ்சலையைப் பார்த்தால் வெள்ளையம்மாளுக்கு அருவருப்பாகத்தான் வரும். இரயில் செல்வதற்காக கேட்டில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், அந்த நேரத்தின் அலுப்பைப் போக்கிக் கொள்ள டீ, பலகாரம் சாப்பிடுவது வழக்கம். அதனால் மாதவனின் பலகார வியாபாரம் பெருகியது. கையில் பணமும் கழுத்தில் நகையும் சேர்ந்தது. பயணிகள் அதிக நேரம் காத்துக் கிடக்க வேண்டியதால் நேரம் விரயம் ஆவதைத் தடுக்க மேம்பாலம் கட்டும்பணி துவங்கியது. மேம்பாலம் கட்டிய பின்னர் நின்று பலகாரம் சாப்பிட்ட அனைவரும் நிற்காமல் சென்றனர். பலகார வியாபாரமும் முடங்கியது. இதனிடையே ஒருநாள் அஞ்சலை அழகம்மாளை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டாள். அழகம்மாள் வெள்ளையம்மாளுக்கு ஒரு சுமையாகவே ஆகிவிட்டாள். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாதவனின் நண்பன் சாமிநாத கிரமணியிடம் உதவி கேட்டுச் சென்றான் மாதவன். கடைகள் அதிகரித்து விட்டதனால் விலைவாசி உயர்ந்து விட்டது. எனவே இங்கு கடை போடுவது சாதாரண விஷயம் இல்லை. என்று கூறிய இரமணி மதுக்கடையின் முன்பாக மாரியின் மனைவி பார்வதியம்மாள் கடையை ஒரு வாரத்திற்குள் காலிசெய்து விடுவாள். அந்தக் கடையை உன் மனைவியை நடத்தச் சொல் என்றான். அதைக் கேட்டு மாதவனுக்கு கோபம் வந்தாலும் வெளிக்காட்ட முடியாமல் திரும்பி வந்துவிட்டான். அவளைப் போன்று உடலைக் காட்டிக் கொண்டு வாழ்வதை விட சாவதே மேல் என வெள்ளையம்மாளிடம் சொல்லிப் புலம்பினான் மாதவன். அவள் வழக்கமாகக் கூறுவது போல நீ சாரினா, நானும் சரிதான் என்றாள். அன்றிரவே இருவரும் விஷம் குடித்து இறந்துவிட்டனர். காலையில் எழுந்த அழகம்மாள் வயிற்றுப் பசியால் கதறி அழுதது கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரும் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பெற்றவள் எங்கோ ஓடிவிட்டாள், வளர்த்தவர்களோ இறந்துவிட்டார்கள் யாருமற்ற அனாதையாகி விட்டாள் அழகம்மாள்.