காத்திருக்க ஒருத்தி – கல்பனா, 1981
அழகம்மாள் பிரகாசத்தின் தாய், 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது கணவர் வயலின் வித்துவான்
ராமதுரையைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றாள். பிரகாசத்திற்கு 25 வயதாகிறது. மெடிக்கல் பார்மசி வைத்து நடத்தி வருகிறான்.
அவனது கடைக்கு எதிரே உள்ள பேங்கில் வேலை செய்பவள் நளினி. இவ்விருவரும் காதலர்கள்.
நளினியின் தாய் பார்வதியம்மாள், தந்தை கோபால் மேனன் துபாயில் உள்ள ஓட்டலில் மேனேஜர். இவர்கள் மலையாளக் குடும்பத்தினர். நளினியை விரும்புகின்ற
செய்தியை நேரடியாக தாயிடம் கூறக் கூச்சப்பட்டு பார்வதியம்மாளைக் கூரும்படிக் கூற,
பார்வதியம்மாள் அழகம்மாளிடம் விருப்பத்தைக் கேட்க,
அழகம்மாள் பார்வதியம்மாளிடம் எதுவும் தெரியாதது போல்
காட்டிக் கொண்டு பிரகாசம் வந்ததும் உன்னுடைய தந்தையை அழைத்து அவர் தலைமையில்
திருமணத்தை நடத்தலாம் என தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றாள். அழகம்மாளின்
வாக்கிற்கிணங்க தன் தந்தை ராமதுரையைத் தேடிச் செல்கிறான் பிரகாசம். ராமதுரை வயலின்
வாசிக்கும் இசையில் ஆர்வம் கொண்டு அழகம்மாளை அவளது தந்தை ராமதுரைக்குத் திருமணம்
முடித்து வைத்தார். திருமணமான சில ஆண்டுகளிலேயே குடிப்பழக்கதத்திற்கும் தகாத
பெண்களின் உறவும் கொண்ட ராமதுரையை வீட்டில் உங்களுக்கு இடமில்லையென்று அழகம்மாள்
திருப்பியனுப்பி விட்டாள். அன்று வீட்டை விட்டுச் சென்றவர்தான். இன்னும் வீட்டிற்கு வரவில்லை. இதனிடையே
ராமதுரைக்கு புஸ்பம் என்ற மனைவி இருந்து சமீபத்தில் இறந்து விட்டாள். அவள் ஞாபகமாக அவள் பாடிய பாடல்கள் சிலவற்றை
இன்னும் இராமதுரை வைத்துள்ளார். பிரகாசம் இராமதுரையை சந்தித்து தனக்குத் திருமணம்
என்றும் அதற்கு நீங்கள்தான் தலைமையேற்று நடத்தித் தர வேண்டும் என்று
கேட்டுக்கொண்டதை ராமதுரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். கோபால் மேனனும்
துபாயிலிருந்து வந்து திருமண வேலைகளைத் தொடங்கிவிட்டார். அடிக்கடி இராமதுரையை சந்தித்த
பிரகாசத்திற்கு அப்பா குடிகாரர் என்றாலும் சிறந்த குணமுடையவர் என்பதில் அவரைப்
பிடித்திருந்தது. குறித்த தேதியில் திருமணமும் நடந்து முடிந்தது. திருமணத்தில்
ராமதுரையின் வயலின் கச்சேரியும் அரங்கேறியது. வீட்டிற்குள் வர மறுக்கப்பட இராமதுரை
தற்பொழுது வீட்டின் மத்தியில் கச்சேரி நடத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டது.
அவருக்கு மகிழ்ச்சியே கோபால் மேனன் குடும்பத்தினர் மலையாளிகள் ஆதலால் மணமக்களை
தேநீலாவிற்கு கேரளாவிற்கு அழைத்துச் சென்றனர். அனைவரும் சென்றுவிட்ட நிலையில்
அழகம்மாளும் ராமதுரையும் தனிமைப் படுத்தப்பட்டனர். இனிமேல் ராமதுரை இங்கே
தங்குவார் என நினைத்தாலும் அழகம்மாள் ஏதாவது குறித்து நினைப்பாளோ என்ற எண்ணம்
ராமதுரைக்கு இங்கேயே தங்குவது என்றாலும் முன்புபோல் இயல்பாகக் குடிக்க இயலாது என்ற
பய உணர்வில் தான் மீண்டும் பழைய இடத்திற்கே செல்வதாகவும் பையன் வந்தபிறகு அடிக்கடி
வந்துபோவேன். என்றும் அழகம்மாளிடம் தெரிவிக்கின்றார். ராமதுரை இங்கு தங்குவதில்
விருப்பமிருந்தாலும் இன்னும் இவர் குடிக்கும் பழக்கத்தை விடாதிருப்பது குறித்து
அழகம்மாளுக்கு மன வருத்தம்தான். இராமதுரை ஆங்கு செல்வதற்கும் இங்கு வருவதற்கும்
அனுமதி வழங்கிய அழகம்மாள் அவரைப் பார்த்து இன்னும் சில ஆண்டுகள் கழித்து வயோதிக
முதிர்ச்சியில் உங்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய சூழலில் நான் வந்தால் ஏற்றுக்
கொள்வீர்களா என்று கேட்டதற்கு சூழலில் நான் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று
கேட்டதற்கு நான் உன்னை எதிர்பார்த்திருப்பேன். என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அந்தக் காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள் அழகம்மாள்.