ஒவ்வொரு கூரைக்கும் கீழே – கல்பனா, 1981
பங்குஜம் மாமி மொட்டை மாடியில் வைத்திருந்த வற்றலை காவல்
காத்துக் கொண்டிருந்தாள் மாலதி (22 வயது) அம்மா இல்லை. அப்பா ரத்தினம் பிள்ளை,
அவர்கள் வாழும் வீடுகளின் சொந்தக்காரரான நாயக்கரிடம்
கணக்குப் பிள்ளையாக வேலை செய்கிறார். மாலதியை அம்மா மாதிரி அக்கறை காட்டுபவர் பள்ளித் தமிழாசிரியை பாக்கிய லெட்சுமிதான்.
மாலதிக்கும் அதே அப்பாட்மெண்டில் இருக்கும் சிவகுருநாதன் என்பவனுக்கும் திருமணம்
செய்து வைப்பதாக பேச்சு அவனுடைய அம்மா பங்கஜத்திடம் அவ்வப்போது விசாரிப்பது உண்டு, மாலதிக்கு சம்மதமா என்று நாயக்கரின் மகன் ராஜூ,
அவர் எவ்வளவோ முயன்றும் ராஜூவிற்கு படிப்பு ஏறவில்லை. அந்தத் தெருவிலேயே ஒரு மெக்கானிக் செட் போட்டுக் குடுத்து விட்டார். அதோடு சேர்த்து 18 வயதிலேயே அவனுடைய முறைப் பொண்ணு உண்ணாமுலையைத் திருமணம்
செய்து வைத்துவிட்டார். தற்போது இரண்டு குழந்தைகளும் ஆகிவிட்டன. மாலதி எங்கு
சென்றாலும் அவளை இவன் உற்றுப் பார்ப்பான். பல நேரங்களில் அவன் பார்க்கிறானா என்று
மாலதியும் பார்ப்பது உண்டு. பங்குஜம் மாமிக்கு பால்வாங்க தினமும் மாலை 5 மணியளவில் ராஜ்வினுடைய மெக்கானிக் செட்டைக் கடந்துதான் செல்ல
வேண்டும். 5 மணியானாள் போதும். ராஜூ எங்கிருந்தாலும் செட்டிற்கு
வந்துவிடுவான். பால் வாங்குவதற்காக மாலதி காத்திருக்கின்ற போதெல்லாம் ராஜூ அவளைப்
பார்த்துக் கொண்டேதானிருப்பான். அன்று மாலை மழை பொழிகிறது. குடையுடன் பால் வாங்க
மாலதி வருகிறாள். பால்காரன் இன்னும் வரவில்லை. குடையக் கொடு காபி குடித்துவிட்டு
வருகிறேன் என்று சொல்லிவிட்டு மாலதியை செட்டில் இருக்கச் சொல்லிச் சென்றவன் இரண்டு தம்ளரில் காபி
வாங்கி வந்து பால்காரன் வருவதற்குள் இதைக் குடித்துவிட்டு போ என்றான். தன்னுடைய
திருமணம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் அவளின் தோளில் கையை வைத்து அவளின்
சம்மதத்தை எதிர் பார்த்தவன் போல் ஏங்கி நின்றான். தனக்கும் இத்தனை வயதாவதை
நினைத்து சம்மதம் தெரிவிப்பதாக சிரித்துவிட்டுச் சென்றாள். அவர்களின் மறைமுகச்
சந்திப்பு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டே சென்றது. இறுதியாக சிவகுருநாதனை
திருமணம் செய்வது உறுதியாகிவிட்ட நிலையில் குற்ற உணர்ச்சியால் ராஜூவின் நட்பை
விளக்கிக் கொண்டாள். இருந்தாலும் மனசாட்சி உறுத்தியது. இந்த உறுத்தலிலிருந்து
தெளிவுபெற ஆசிரியை பாக்கியலெட்சுமியிடம் சான்றாள். அங்கு ஆசிரியரின் முதல் கணவர்
இறந்ததைத் தொடர்ந்து 2ஆம் திருமணம் செய்து நாராயணா சர்மாவுடன் வாழ்வதை அவளின்
மகள் கௌரி ஏற்றுக் கொள்ள வில்லை என்பதையும் அறிந்தாள். மாலதி தன்னுடைய குற்ற
உணர்ச்சியக் கூறியதும் ஆசிறையை இதுபோன்ற தவறுகளை மறந்து புதுவாழ்வை தொடங்கும்படிக்
கூறி அனுப்பிவிட்டாள். இருப்பினும் சமாதானம் அடைய முடியாமல் மொட்டை மாடியில்
தனிமையிலிருந்த சிவ குருநாதனைச் சந்தித்து தன்னுடைய மன உறுத்தலை விளக்கினாள். அதற்கு அவன் நீ இதையெல்லாம் எப்பொழுது
மறந்துவிட்டாய்தானே என்று கேட்டான். மேலும் நீ செய்த தப்பை விட அதை வெளிப்படையாகச்
சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு உயர்வானதாகத் தெரிகிறது.
என்று கூறி மாலதியை திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்தான்.