ஞாயிறு, மே 10, 2020

மூங்கில் காட்டு நிலா - ஜெயகாந்தன்

            மூங்கில் காட்டு நிலா கல்பனா, 1981
மூங்கில் காடு என்னும் ஊரில் உள்ள எங்கள் (கதைத் தலைவன்) ஊர், எங்கள் குடும்பம் மிகவும் பெரியது. நாங்கள் ஐந்து அண்ணன் தம்பிகள். அதில் இருவர் இறந்துவிட்டனர். அவர்கள் இறப்பில் மற்ற இருவருக்கும் பங்குண்டு. இது சொத்து குறித்த சதித்திட்டம். எங்கள் ஊரை ஒட்டியே மூங்கில் காட்டு பறைச் சேரியும் உள்ளது. எங்கள் குடும்பத்தில் நான் கடைக்குட்டி கல்லூரி சென்று படிக்க மனமின்றி, திருமணத்திலும் ஈடுபாடின்றி வீட்டில் நானும் ஒருவனாய் இருந்து வருகிறேன். வீட்டிற்கு வரும் அனைவரும் எனக்கு வணக்கம் வைப்பது போல அடிமையாக வேலை செய்யும் மருதையனும் (50 வயது) வணக்கம் வைப்பது வழக்கம். அவருக்கும் 10 வயது சிறுமி நிலாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. சிறுவயதில் அவள் என் நெருங்கியத் தோழி. அவள் ஞாபகமாக கல்லூரியில் கதை எழுதியிருக்கிறேன். அதில் அவளை முத்தமிட்டதையும் செர்த்து எழுதியிருக்கிறேன். நிலாவின் திருமணம் பற்றி மருதையனிடம் கேட்ட போது அது எங்கள் குல வழக்கம் என்றார். நிலாவின் பெற்றோர் சிறுவயதில் இறந்துவிட்டதால் நிலாவிற்கு ஆதரவு தரவேண்டி அவளைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினான். மற்றபடி அவள் என் பேத்தி மாதிரி என்று கூறினான். நிலாவின் தந்தை மருதையனிடம் பெற்ற கடனே அவளைத் திருமணம் முடிக்கக் காரணம் என்றான். நான் அவனுக்குக் கடனைச் செழுத்தி விட்டேன். அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தேன். இன்று அவள் அந்தப் பள்ளியாசிரியர்களில் ஒருத்தி. அதோடு அவள் அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொண்டு சேரி மக்களின் பிரதிநிதியாக உருவெடுத்து வருகிறாள். சேரி மக்களில் ஒருசிலர் குறுகிய விவசாய நிலங்களைக் கொண்டிருக்கின்றனர். அதைப் பறிக்கச் சதித் திட்டம் தீட்டும் உயர்சாதியினர், சிமெண்ட் தொழிற்சாலை கட்டுவதன் பேரில் அவர்களின் நிலங்களைப் பரிக்கத் திட்டமிட்டிருந்தனர். இதனை எதிர்த்து சேரிமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு நிலா தலைமை தங்கி வருகிறாள். சேரி மக்களின் குடிசைகளை எரிக்க என் அண்ணனும் அவனது கூட்டத்தாரும் திட்டம் தீட்டினர். இதனை நான் நிலாவிடம் தெரியப்படுத்தவே என்னை அவர்கள் அடித்து, நான் பைத்தியம் என்ற படத்தையும் மருத்துவமனையில் பெற்றுவிட்டனர். வெகுநீண்ட நாட்களுக்குப் பிறகு மூங்கில் காட்டுக் குடிசையில் நிலா என்னை வந்து சந்தித்தாள். அப்பொழுது என் அண்ணன் தான் வேலையை பல்வேறு காரணங்கள் கூறி பறித்து விட்டதாகக் கூறினாள். நான் அவளைத் திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவித்தேன். தன்னுடைய கூட்டத்தில் கேடு பதில் கூறுவதாகக் கூறினாள். மீண்டும் ஒருமுறை என்னைச் சந்திக்கின்ற பொழுது தனக்கு வேலை கிடைத்து விட்டதாகவும் சேரி மக்களின் நிலம் கையக்கப்படுத்தப் படாது என்றும் என் அண்ணன் கூறிவிட்டதாகத் தெரிவித்தாள். அது வருகின்ற தேர்தலை ஒட்டி அவன் நடத்துகிற நாடகம் என்றேன். எவ்வளவு முயற்சித்தும் தேர்தலில் அண்ணன் தோற்றுவிட்டான். தோற்றுவிட்ட வெறியில் சேரி மக்களைப் பலிவாங்கத் துணிந்துவிட்டான். அவர்களின் நிலங்களைப் பரிக்கத் திட்டமிட்டான். உயர்சாதியினரின் நிலங்களுக்கு வேலைக்குச் செல்ல மறுத்த சேரி மக்களை எதிர்த்து வெளியூர் வாசிகளைக் கொண்டு வேலை செய்ய முடிவெடுத்த தகராறில் சேரியில் உள்ள ஆண்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நிலா தலைமையில் பெண்கள் குழு போராட்டத்தில் இறங்கியது. போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு அதிகாரி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் சுட்டதில் மூன்று பெண்கள் நிலா உட்பட இறந்துவிட்டனர். சாகிறதுதான் சாகிறோம் போராடிச் சாவோமே என்று அவள் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. முடிவாக நிலா ஜெயித்து விட்டாள். தொழிற்சாலை கட்டுவதில் சேரிமக்களின் நிலம் பரிக்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துவிட்டது. மறைந்துவிட்ட நிலாவின் நினைவில் பைத்தியக் காரனாகிவிட்டேன் நான்.