தமிழ்
சினிமா தோன்றி ஒரு நூற்றாண்டு ஆகிவிட்ட நிலையில் இன்றைய சினிமா தளத்திலிருந்து, நாம்
தமிழ் சினிமாவின் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். அவ்வாறு வரலாற்றை
திரும்பிப் பார்க்கின்ற பொழுதுதான் இன்றைய சினிமாவின் நிலைப்பாட்டை உணர முடியும். பொதுவாக
சினிமா வளர்ச்சி என்பது தொழில்நுட்ப வளர்ச்சியினையே
குறிக்கும் அதனைத் தவிர்த்து இன்றைய சூழலில் தமிழ் சினிமா எவ்வாறு வளர்ந்துள்ளது அல்லது
மாறியுள்ளது என்பதுதான் முக்கியமானது.
தொடக்க
காலகட்டத்தில் புராணக் கதைகளும் இதிகாசங்களும் திரைக்கதைகளாக எடுக்கப்பட்டு கடவுளர்களும்
கடவுளுக்கு தொண்டு செய்வோர்களும் தமிழ்த் திரை உலகின் முக்கியக் கதை மாந்தர்களாக இருந்து
வந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து மன்னர்கள், வள்ளல்கள், பெரும் நிலக்கிழார்கள், படைத்
தலைவர்கள் மண்ணில் வாழ்ந்த உயர்குடித் தன்மை கொண்டவர்கள் என தன்னிகரற்ற தலைவர்களாய்
திரை உலகில் வளம் வந்தனர்.
1980களுக்குப்
பிறகு மேற்கண்ட நிலமைமாறி முதலாளியை எதிர்க்கும் துணிவு கொண்ட தொழிலாளிகளின் தலைவன்,
கூலி வேலை செய்தாலும் மக்களுக்கு தொண்டு செய்யும் தலைவன்போராட்ட குணமுடையபு ரட்சியாளர்களைத்
தமிழ் சினிமா அவ்வப்போது காண்பித்து வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பக்தி காலூன்றத்
தொடங்கியது. அம்மன், காளி என கண்ணில்பட்ட தெய்வங்களின் மகிமைகள் எல்லாம் திரை உலகின்
ஊடாக மக்களுக்குப் பறைசாற்றப்பட்டன. மேலும் அவ்வப்போது உள்ளூர் அரசியல்வாதிகளைப் பிடிப்பதற்கும்
வெளிநாட்டு தீவிர வாதிகளைப் பிடிப்பதற்கும் அதிகாரம் படைத்த வீரனாக மாறுவது தமிழ்த்திரையில்
கதாநாயகர்களின் வழக்கமாக இருந்து வந்தது. இதுவே கிட்டத்தட்ட 2000 வரை இருந்தது என்றால்
மிகையாகாது.
தமிழ்
சினிமாவில்அரை நிர்வாண ஆட்டங்களும் அதிரடிச் சண்டைகளும் இரத்தமும் சதையுமாக கலந்து கிடப்பது எல்லோரும் அறிந்த
ஒன்று. இது இல்லாத இயக்குனர்களும் இல்லை, பார்வையாளர்களும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு
தமிழக மக்கள் கற்பனையிலும் ஏக்கத்திலும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையிலிருந்து இந்தி, தெலுங்கு போன்ற மற்ற மொழித்
திரைப்படங்கள் விடுபட முடியாமல் இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமா மட்டும் 2011க்குப் பிறகு தனக்கான
கதைத் தளத்தினை மாற்றியுள்ளது மிகவும் போற்றுதற்குறியது.
சில
காலங்களுக்கு முன்பு நவீனத் தமிழ் இலக்கியங்களில் நடைபெற்ற புதுமைகள் இன்று தமிழ் சினிமாவில்
நிகழ்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எதையும் கதையாக்கி யாரையும் கதைத் தலைவனாக்கும்
யதார்த்த வாழ்க்கையின் பிரதி பிம்பத்தை இன்றைய தமிழ் சினிமா மக்களுக்கு காட்டுகின்றது.
இன்றைய சமூகத்தில் எதுவும் எங்கேயும் நடைபெறலாம். மக்களையும் அவர்களின் குணாதிசியங்களையும்
இன்னது என ஒரு சட்டத்திற்குள் அடக்க இயலாது. உன்னதமான மனிதன் என்பவன் உலகில் எவரும்
இல்லை. தீய குணங்களும் நற்குணங்களும் இரண்டறக் கலந்த ஒருவனே மனிதன். இதற்காக ஏழையாகவோ,
பணக்காரனாகவோ, குறிப்பிட்ட சமூகத்தைச் சர்ந்தோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சுறுக்கமாக
சொல்ல வேண்டுமென்றால் மனிதன் வாழும் சூழல் அவனைத் தீர்மானிக்கின்றது. அதற்கு ஏற்ப அவன்
செயல் படுகின்றான். சமூகத்தில் நிகழ்கின்ற கொலை, கொள்ளை, பொய் இவை யாவும் மனிதன் வாழ்கின்ற
வாழ்வியல் சூழலிலிருந்து தோன்றுபவை. இவற்றில் புனைவுகளோ கவர்ச்சிகளோ தேவையில்லை. இது
இன்றைய தமிழ் சினிமாவின் அடிநாதமாக கேட்கின்றது.
இன்றைய தமிழ் சினிமா பற்றி சிந்திக்கையில் ஒரு எழுத்தாளனின் வாசகம் நினைவிற்கு
வருகின்றது. ‘என் எழுத்துக்களைப் படித்து விட்டு, ஏன் இப்படியெல்லாம் சமூகத்தில் நடக்கின்றது
என்று வேண்டுமானால் கேளுங்கள். இவன் ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறான் என்று கேட்காதீர்கள். ஏனென்றால் சமூகத்தில் இல்லாத ஒன்றை நான் கூறி விடவில்லை.’
இதைத்தான் இன்றைய சினிமாவிர்க்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். இதனைக் கூறுவதற்காக
சில சினிமா விமர்சனங்களைப் படிக்க நேரிட்டது. பாவம் பழமை விரும்பிகள் பலர் இன்னும்
புதுமைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகின்றது.
அதுவும் சமூகத்தில் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இருப்பதைச் சொல்வதற்கு என்ன
வேண்டியிருக்கின்றது வெட்கம்.
வாழ்க
தமிழ் சினிமா