வியாழன், ஜூன் 24, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 7

 

இதெயெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த மணி, நீ நம்ம ஊருல இருந்து வளந்தது இல்லப்பா. படிப்பு படிப்புனு வெளியில தங்கியே படிச்சுட்டு வந்ததுனால ஊருக்குள்ள ஆளுக எப்படி இருப்பாங்கனு தெரியாது. அந்த ஊருக்காரய்ங்கள பத்தியும் தெரியாது. நம்ம சாதிக்கார பசங்கள கூட்டம் சேர்க்கவும் முடியாது. அந்த ஊருக்காரய்ங்க அடாவடித் தனத்த கொரைக்கவும் முடியாது. நம்ம ஆளுக ஒன்னுகூடி வரமாட்டாய்ங்கப்பா. அவிய்ங்க சரக்குனா ஆளும்பேருமா கம்பும் கடியுமா தூக்கிகிட்டு வருவாய்ங்க, இவிய்ங்கள நம்பி நாம போனமுனா நம்மல நட்டாத்துல விட்டுப்புட்டு போயிடுவாய்ங்கப்பா. நாமலே இப்பத்தான் ஏதோ வெள்ளாம போடாலாமுனு ஆரம்பிச்சிருக்கோம். வந்தவுடனயே பிரச்சனையை வளத்துக்கிட்டோமுனா நமக்கு வயக்காடு விட்டவன், இந்த கம்மாய குத்தக எடுத்தவன் எல்லாருமே ஒரே சாதிக்காரப் பயலுகப்பா. அவிய்ங்க நமக்கு வயக்காடு விட்டதே பெருசுப்பா. ஏதோ எம்மே உள்ள மரியாதையில பழக்கத்துல இந்த வயக்காட்ட நமக்கு விட்டுருக்காய்ங்க. அதுனால கொஞ்சம் சாதுவாத்தாம்பா போகனுமுனு ஊரின் சூழலை வேந்தனுக்குப் புரியவைக்க முயற்சி பன்னாரு மணி. நீ என்னப்பா ரொம்ப யோசிச்சிக்கிட்டு இருக்குற. நமக்கு அவிய்ங்க என்ன வயக்காட்ட ஓசியாவா கொடுத்திருக்காய்ங்க. காசுக்கு அக்கிரிமெண்டு போட்டுத்தானே கொடுத்திருக்காய்ங்க. இந்த வாமட தண்ணி யாரு வயக்காட்டுக்கு எல்லாம் பாயுதோ அவங்களையெல்லாம் கூப்பிடப் போறோம். அதுக்கும் சாதிக்கும் என்னப்பா சம்பந்தம். வாமட தொறக்க வரலேனா வாமட தொறந்த பின்னாடி இதுலேர்ந்து தண்ணி தொறக்க வராதவுங்க வயக்காட்டுல பாச்ச முடியாதுனு சொல்லுவோம். அப்பறம் அவன் அவன் பயந்துக்கிட்டு வந்திருவாய்ங்கள். அப்பறம் என்ன? தண்ணி வர்ரதுக்குள்ள வாமடய தோண்டி ரெடி பண்ணி வச்சிட்டோமுனா யாருக்கிட்டேயும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லேல. நாம பாட்டுக்கு வந்தோமா, மடய தொறந்தோமா தண்ணிய பாச்சுனோமா மடய அடச்சுப்புட்டு போயிக்கிட்டே இருக்கலாமுல. கம்மாய குத்தகைக்கு எடுத்தவன் வேனுமுனா மீனு குஞ்சுக்கு வலைய கட்டிப் பாதுகாத்துக்கிடட்டும். ஆத்துல வர்ற தண்ணி மொதல்ல வெவசாயத்துக்குத்தாம்பா. அப்பறந்தான் மீனு வளக்குறதுக்கெல்லாம் இப்படி யோசிச்சிக்கிட்டே இருந்தோமுனா கடைசிவரைக்கும் மடய தொறக்க முடியாது. ஏதாவது பன்னி மடய தொரந்தாதான் இந்த வருசம் நல்லபடியா வெள்ளாம போட முடியும். இனிமே அடுத்தடுத்த வருசமெல்லாம் வெள்ளம போடனுமுனா இப்பவே மடைய தொரந்து வச்சிக்கிட்டோமுனாத்தான் சரியாவரும். நீங்க நம்ம வயலுக்குக் கீழ உள்ள வயக்காரவுங்க எல்லாருக்கிட்டேயும் சொல்லி ஒரு நளு வரச் சொல்லுங்க. நானு நீங்க, தம்பிங்க எல்லாரும் சேர்ந்து கம்மா ரொம்புரதுக்குள்ள வாமடய தோண்டி ரெடி பன்னீருவோமுனு அப்பவை எப்படியோ பேசி ஒரு வழியா சம்மதிக்க வச்சிட்டான்  வேந்தன். மணிக்கும் மனசுக்குள்ள ஆச ஊத்தெடுக்க ஆரம்பிச்சிடுச்சு. வேந்தன் சொல்ற மாதிரி மடய மட்டும் தொரந்துட்டோமுனா தண்ணி பாச்சுர வேல நமக்கு ஈசியா போயிருமுனு நெனச்சுக்கிட்டு நாளைக்கு ஊருக்குள்ள ஆளுகள பாத்தேன்னா பேசிப்பாக்குறேம்பா. ஆத்துல தண்ணி வர்ரதுக்குள்ள தோண்டிருவோமுனு சொல்லிப் பாக்குறேம்பா. ஆமாம்பா. நீ சொல்றதும் சரிதாம்பா பன்னிருவோம்பானு சொல்லிக்கிட்டே வாப்பா சாப்பிடுவோம் இன்னைக்குள்ள இந்த கருவ முள்ளுகள தோண்டிப் போட்டுறனுமுனு சொல்லிக்கிட்டு வேந்தனை சாப்பிட கூப்பிட்டார்.  சாப்பிடும்போது மடைதிரக்கின்ற விசயத்தப் பத்தி தம்பிகளிடம் கூற அவர்களும் வேந்தனுக்கு ஆதரவா அண்ணன் சொல்லுறதும் சரிதாம்பா, யாரு வந்தாலும் வரலாட்டியும் நாமலே தோண்டிப்புடலாம்பானு சொன்னாய்ங்க. சரசு சற்று தயங்கியவாறு சின்னப் பயலுக பேச்ச கேட்டுக்கிட்டு நீயும் ஏதாவது சின்னப்புள்ளத் தனமா செஞ்சு வம்ப வெலைக்கு வாங்கீடாத அவிய்ங்க சும்மாவே காட்டுமிராண்டி பயலுக. எப்படா.. யாருக்கிட்டடா வம்பு இழுப்போமுனு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாய்ங்க. நமக்கு ஏதும் பொல்லாப்பு வந்ததுராம பார்த்துக்க.

அம்புட்டுத்தான் நான் சொல்லிப்புட்டேன். இந்த பக்கத்து வயக்காரனெல்லாம். பேச்சுத்தான் இனிக்க இனிக்க பல்லக்காட்டிக்கிட்டு பேசுவான். அவன்யெல்லாம் இருதலமுனியன் மாதிரி. நம்மல பாக்கும்போது ஒரு பேச்சு பேசுவான். அவிய்ங்கல பாக்கும்போது ஒரு பேச்சு பேசுவான். அதுனால எதுனாலும் ஒரு தடவைக்கு பலதடவ யோசிச்சு செய்யுங்க. உறுதியா வர்ராய்ங்களா இல்லையானு கேட்டுக்கிட்டு செய்யுங்க. தனியா போய்ட்டு மாட்டிக்கிட்டு இருக்காம, ஆமா பாத்துக்கோங்கனு எச்சரிக்கை விட்டாள் சரசு. நீ என்னம்மா? நாம ஒன்னும் புதுசா இல்லாத மடய தோண்டப் போறதில்லையே, ஏற்கனவே இருந்த மடயத்தானே தோண்டப் போறோம். மட தொறந்தா யாருக்கெல்லாம் தண்ணி பாயுமோ அவங்களத்தானே சப்போட்டுக்குக் கூப்பிடப் போறோம். இதுல என்ன தப்புனு? சரசு சொன்னதுக்கு பதில் சொன்னான். அதுக்கில்லப்பா நீங்க செய்யிரீங்கனு போயி வம்புதும்புனு வந்திட்டா மத்த பயலுகவெல்லாம் யாரோ எவரோனு போயிருவானுக. அப்பறம் நாமதான் வேலியில போற ஓணான வேட்டியில விட்ட கதையா திரியனுமுனு எதார்த்தத்தின் நடைமுறையை வேந்தனுக்குக் சொன்னாள் சரசு.

அண்ணேன்! நாம தோண்டுவோமுன்னேன், இப்படீ பயந்துக்கிட்டு இருந்தோமுனா அப்பறம் எப்பத்தான் மடய தொறக்குறது. ஏதாச்சும் ஒரு வழி கெடைக்காமலா போயிரும். என்னதான் நடக்குமுனு பாத்திருவோமுன்னேன். அப்பா நீ இந்த பக்கத்து வயக்காரய்ங்ககிட்ட பேசிப்பாருப்பா அதுக்கப்புறம் என்ன பன்னலாமுனு யோசிப்போம். அதுக்கும் சரி வரலேனா போலீஸ்ல கம்ப்லைண்ட் பன்னியாச்சும் மடய தொறந்துருவோம்ப்பா. இனிமே வெள்ளாம போடுறப்பயெல்லாம் வேறவயக்காரன்கிட்ட கெஞ்சிக்கிட்டே திரியமுடியுமா? அந்தாளு ஏற்கனவே ஒரு மாதிரி, எப்ப நல்லா பேசுவான், எப்ப மொறப்பானு தெரியாது. எப்படியாச்சும் மடைய தொறக்குறதுதான் ஒரே வழி. ஆத்துல திடீருனு தண்ணி நின்னு போயிட்டாகூட கம்மா மடய தொறந்து நம்மபாட்டுக்க பாச்சிக்கிறலாம். அதனால நாம வேற எதப்பத்தியும் யோசிக்காம மடய தொறக்குறதப் பத்தி யோசிப்போம். அதுக்கு என்ன பன்னனுமுனு யோசிங்க, மொதல்ல ஆளுக்காளு போட்டு கொளப்பிக்காதீங்க. மடைய தோன்றோம் சரியா? என ஒரு தீர்க்கமான முடிவை அனைவரின் முன்பாகவும் வைத்தான் பாண்டி. துக்குமேல யாரும் மறுத்துப் பேசுறதுக்கு இடமில்லாமல் போச்சு. எல்லோரும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினர். அடுத்து மத்தியானச் சாப்பாட்டுக்குள்ள பாதி அளவாச்சும் தோண்டிப் போட்டிரனும் அப்பத்தான் இன்னைக்குள்ள பூராத்தையும் தோண்ட முடியும். ஆத்துல தண்ணி வந்திட்டா ஒரு வாரத்துலயெல்லாம் வயக்காட்டுல தண்ணி பாஞ்சிரும். அப்பறம் அவன் அவன் உழுக ஆரம்பிச்சிருவாய்ங்க இப்பெல்லாம் யாரு கோட உழவு உழுகுறது. ஆட்டுச்சானம் மாட்டுச்சானம் வண்டிகள் கொண்டுவந்து கொட்டுற வழக்கமெல்லாம் மலையேறிப் போச்சு. ஊருக்குள்ள ஆடு மாடுகளே கொரஞ்சு போச்சு. கிராமத்துக் கடைகளுக்கே பாக்கெட்பால் வருதுனா! அந்த அளவுக்கு கிராமங்க கெட்டுக் கெடக்குனுதான் சொல்லனும். என்கிற மனவோட்டத்துடன் மணி மம்பட்டியை எடுத்துக்கிட்டு வயல நோக்கிச் சென்றார்.

எல்லோரும் ஆளுக்கொரு பக்கமா நின்னுக்கிட்டு கருவ முள்ளுகள வேரோட பிடுங்குறதுல மும்மரம் காட்டினாங்க. வேந்தனும் அவனுக்கு அடுத்த தம்பி பாண்டியும் ஒரு மூலையில் நின்னுகிட்டு கருவ முள்ளத் தோண்டிக்கிட்டிருந்தாங்க. இருவரும் மட திறப்பது குறித்து விவசாயங்களை மாறி மாறி சுவாரஸ்யமாகவும் சிரித்துக் கொண்டும் மடயத் திறந்துட்டா எவ்வளவு ஈசியா இருக்கும் என்பது குறித்தும ஒருவருக்கொருவன் பேசிக்கொண்டே மடயத் திறந்துவிட்ட வெற்றிக் களிப்பில் இருவரும் பேசிக்கொண்டே வேலைசெய்தனர்.

            தெக்க வரப்பிலயிருந்து, என்ன மணி? வேலையெல்லாம் பயங்கரமா நடக்குது போல என்ற குரல் கேட்டு மணி நிமிர்ந்து பார்க்க, வளந்த ஒல்லியான கருப்பு உருவத்தில் கருப்பன் நின்னுக்கிட்டு இருந்தாரு.  நிறத்துக்கேத்த பேரு. அவருடைய உண்மையான பேரு வெள்ளைச்சாமி. பிள்ளதான் கருப்பா பொறந்திருச்சு. பேருனாச்சும் வெள்ளையா இருக்கட்டுமேன்னு அவங்க அப்பா வெள்ளச்சாமினு வச்சாராம். என்னதான் பேர வச்சு நிறத்த மறைக்க நெனச்சாலும் கடைசியில அவரோட நெறமே அவருக்கு நிறந்தரமான பெயராயிடுச்சு. ஊருக்குள்ள வெள்ளச்சாமினு சொன்னா இவர யாருக்கும் தெரியாது. கருப்பன்னு சொன்னாத்தான் சரியா அடையாளம் காட்டுவாங்க. வயசு 60 தாண்டீருச்சு. இருந்தாலும் இன்னைக்கும் இளவட்டந்தான். இன்னைக்கும் அவரு சொல்லுவாரு. ஒரு கட்டிங் போட்டுட்டு ஒரு பிளேட் சிக்கன் சாப்பிட்டா போதும் ஒத்த ஏக்கருக்கு ஒத்த ஆளா வரப்பு வெட்டிப்புடுவேன். நம்மகூட இன்னைக்கும் வரப்பு வெட்டுரதுல போட்டிக்கு ஆளு இல்ல தெரியுமா? அப்படீனு பெருமபட்டுக்கிறுவாரு.