அலகு 1.
1.
தமிழ் மொழியை “வடமொழியின் துணை
வேண்டாது தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட மொழி என்று முதன் முதலில் கூறியவர் யார்?
அ. பரிதிமார் கலைஞர் ஆ. கால்டுவெல்
இ. வீரமாமுனிவர் ஈ. திரு.வி.க
2.
இன்று வழக்கிலுள்ள திராவிட
மொழிகளில் பண்டைய மொழியாக விளங்குவது.
அ.
தமிழ் ஆ. வடமொழி
இ. தெலுங்கு ஈ. மலையாளம்
3.
முதற்சங்கம் இருந்த இடம்
அ. வடமதுரை ஆ. தென்மதுரை
இ. கபாடபுரம் ஈ.
கொற்கை
4.
இடைச்சங்கத்தில் கிடைக்கப்பெற்ற
இலக்கண நூல்
அ. அகத்தியம்
ஆ. தொல்காப்பியம்
இ. தண்டியலங்காரம் ஈ வீரசோழியம்
5.
திரிபுரம் எரித்த விரிசடைக்
கடவுள்
அ. திருமால் ஆ.
நான்முகன்
இ.
சிவன் ஈ.
கொற்றவை
6.
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
அ. குமரிக் கடலும் கொடுங்கடல் கொள்ள
ஆ. குமரிக்
கோடும் கொடுங்கோடு கொள்ள
இ.
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
ஈ. குமரிக் காடும் கொடுங்கோடு கொள்ள
7.
எட்டுத்தொகை நூல்களில் அக நூல்களின்
எண்ணிக்கை
அ. 3 ஆ. 4 இ. 5 ஈ. 6
8.
நற்றிணை நல்ல குறுந்தொகை
…………….
அ. அகநானூறு ஆ. ஐங்குறுநூறு
இ. பதிற்றுப்பத்து ஈ.
பரிபாடல்
9.
பரம்புமலைத் தலைவன்
அ.
பாரி ஆ.
காரி
இ. ஓரி ஈ.
நல்லியக்கோடன்
10. செம்புலப்
பெயல் நீர் போல
அ. அன்பில் நெஞ்சம் கலந்தனவே
ஆ. அன்பால் நெஞ்சம் கலந்தனவே
இ. அன்பும் நெஞ்சமும் கலந்தனவே
ஈ. அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
11. பதிற்றுப்பத்தில்
பரணர் பாடிய மன்னன்
அ. பல்யானைச் செல்கெழு குட்டுவன்
ஆ. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
இ. இமயவரம்பம் நெடுஞ்சேரலாதன்
ஈ. ஆடுகோட்பாட் சேரலாதன்
12. பத்துப்பாட்டில் நாளங்காடி, அல்லங்காடி பற்றிக் குறிப்பிடும் நூல்
அ. மதுரைக்காஞ்சி ஆ. பட்டினப்பாலை
இ. குறிஞ்சிப்பாட்டு ஈ.
நெடுநல்வாடை
13. பழமுதிர்சோலை மலைகிழவோனே – கிழவோன் யார்?
அ. முருகன் ஆ.
திருமால் இ. சிவன் ஈ.
இந்திரன்
14. ஆற்றுப்படை நூல்களில் சிறியது
அ. திருமுருகாற்றுப்படை ஆ. சிறுபாணாற்றுப்படை
இ. பெரும்பாணாற்றுப்படை ஈ. பொருநராற்றுப்படை
அலகு
2
15. கார்த்திகைத் திருவிழா குறித்து விளக்கும் நூல்
அ. களவழி நாற்பது ஆ. கார் நாற்பது
இ. இனியவை நாற்பது ஈ. இன்னா நாற்பது
16. குறிஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல
அ. கேள்வி அழகே அழகு அ. முக அழகே அழகு
இ. சொல் அழகே அழகு ஈ. கல்வி அழகே அழகு
17. குண்டலகேசியின்
ஆசிரியர்
அ. இளங்கோவடிகள் ஆ.
சீத்தலைச் சாத்தனார்
இ. திருத்தக்கத்
தேவர் ஈ. நாதகுத்தனார்
18. இடுக்கண் வருங்கால் நகுக – இடுக்கண் பொருள்
அ. இன்பம் ஆ. துன்பம்
இ. பிறப்பு ஈ. இறப்பு
19. பொய்யாமொழி என்று குறிப்பிடப்படும் நூல்
அ. நாலடியார் ஆ.
நான்மணிக்கடிகை
இ. திருக்குறள் ஈ. திரிகடுகம்
20. மூன்று கடுகங்கள்
அ. கடுகு, மிளகு, திப்பிலி ஆ. சீரகம், மிளகு, திப்பிலி
இ. சுக்கு, மிளகு, இஞ்சி ஈ. சுக்கு, மிளகு, திப்பிலி
21. நுணலும் தன் வாயால் கெடும் – நுணலும் என்பது யாது?
அ. நாரை ஆ. நத்தை
இ. தவளை ஈ. நண்டு
22. முதுமொழிக் காஞ்சியின் பாடுபொருள்
அ. நிலையாமை ஆ. கொல்லாமை
இ. கல்லாமை ஈ.
பொய்யாமை
23. ஏலாதி நூலின் ஆசிரியர்
அ. பொய்கையார் ஆ. புல்லங்காடனார்
இ. கணிமேதாவியார் ஈ. கண்ணன் சேந்தனார்
24. வெல்வது வேண்டின் ………………….. விடல்
அ. அச்சம் ஆ. ஆசை
இ. வெகுளி ஈ.
வெட்கம்
25. கார் நாற்பது நூலாசிரியர்
அ. கண்ணன் கூத்தனார் ஆ. கண்ணன் சேந்தனார்
இ. மாறன் பொறையனார் ஈ. நல்லாதனார்
26. சேர சோழ பாண்டிய நாடுகளை இணைக்கும் கதைக்குரிய காப்பியம்
அ. சீவக
சிந்தாமணி ஆ. சிலப்பதிகாரம்
இ. மணிமேகலை ஈ. வளையாபதி
27. துறவிற்கு முதன்மையளிக்கும் நூல்
அ. சீவக
சிந்தாமணி ஆ. சிலப்பதிகாரம்
இ. மணிமேகலை ஈ. வளையாபதி
28. மண நூல்
என அழைக்கப்படுவது
அ. சீவக சிந்தாமணி ஆ.
சிலப்பதிகாரம்
இ. மணிமேகலை ஈ. வளையாபதி
அலகு
3
29. திராவிட சிசு என சங்கரரால் அழைக்கப்பட்ட நாயன்மார்
அ. திருஞான சம்பந்தர் ஆ. திருநாவுக்கரசர்
இ. காரைக்கால் அம்மையார் ஈ. மாணிக்கவாசகர்
30. யார் கொடுக்கப் பாலுண்டனை என்றதற்கு ஞான சம்பந்தனின் துவக்கப் பாடல்
அ. காதலாகிக் கசிந்து ஆ. வலம் வந்த மடவார்கள் நடமாட
இ. சிறையாரும் மடக்கிளியே ஈ. தோடுடைய செவியன்
31. ‘நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக்கருளினோன் காண்’
எனத்
தமிழ்ச் சங்கம் இருந்தமைக்கான சான்றினைப் பகன்றவர்
அ. திருஞான சம்பந்தர் ஆ. திருநாவுக்கரசர்
இ. காரைக்கால் அம்மையார் ஈ. மாணிக்கவாசகர்
32. பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் திருவிளையாடலுக்குரிய நாயன்மார்
அ. திருஞான சம்பந்தர் ஆ. திருநாவுக்கரசர்
இ. காரைக்கால் அம்மையார் ஈ. மாணிக்கவாசகர்
33. ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ எனும் பாடல் வரிகளுக்குரியவர்
அ. திருமூலர் ஆ. திருநாவுக்கரசர்
இ. காரைக்கால் அம்மையார் ஈ. மாணிக்கவாசகர்
34. முதல் ஆழ்வார்கள்
அ. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார்
ஆ. திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்
இ. குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்
ஈ. தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
35. ‘நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்’ எனத் திருமாலைப் பாடியவர்
அ. பொய்கையாழ்வார் ஆ. பூதத்தாழ்வார்
இ. பேயாழ்வார் ஈ. திருமழிசையாழ்வார்
36. அரியணை துறந்த ஆழ்வார்
அ. நம்மாழ்வார் ஆ. குலசேகராழ்வார்
இ. பெரியாழ்வார் ஈ. மதுரகவியாழ்வார்
37. ‘இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ எனும் கூற்றிற்குரியவர்
அ. நம்மாழ்வார் ஆ. குலசேகராழ்வார்
இ. பெரியாழ்வார் ஈ. தொண்டரடிப் பொடியாழ்வார்
38. அரியணை பெற்ற ஆழ்வார்
அ. நம்மாழ்வார் ஆ. குலசேகராழ்வார்
இ. திருமங்கையாழ்வார் ஈ. மதுரகவியாழ்வார்
39. திருவிளையாடல் புராணம் பாடியவர்
அ. பரஞ்சோதி முனிவர் ஆ. அகத்திய முனிவர்
இ. திருமூலர் ஈ. மாணிக்கவாசகர்
40. நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
அ. சட்டி சுட்ட சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
ஆ. சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை
அறியுமோ?
இ. சுட்ட சட்டி சமத்துவம் கறிச்சுவை அறியுமோ?
ஈ. சட்டி சுட்ட சட்டுவம் கரிச்சுவை அறியுமோ?
41. தமிழ்ச் சித்த மரபில் முதன்மையானவர்
அ. திருமூலர் ஆ. சிவவாக்கியார்
இ. கடுவெளிச்சித்தர் ஈ. பாம்பாட்டிச் சித்தர்
42. தாவரம் இல்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் எதுக்கடி? பாடலுக்குரியவர்.
அ. சிவ வாக்கியார் ஆ. குதம்பைச்
சித்தர்
இ. கடுவெளிச்சித்தர் ஈ. இடைக்காட்டுச் சித்தர்
அலகு
4
43. சிற்றிலக்கிய வகை
அ. 76 ஆ. 86 இ. 96 ஈ.
106
44. அந்தாதிப் புலவன்
அ. ஒட்டக் கூத்தன் ஆ. கம்பன்
இ. கண்ணதாசன் ஈ. கவிமணி
45. உலா இலக்கியத்தின் முதல் நூல்
அ. திருக்கயிலாய ஞான உலா ஆ. திருக்குற்றால நாதருலா
இ. திருவாரூர் உலா ஈ.மூவருலா
46. நாராய் நாராய் செங்கால் நாராய்… வரி இடம்பெற்ற சிற்றிலக்கிய வகை
அ. பிள்ளைத்தமிழ் ஆ. தூது
இ. கலம்பகம் ஈ. குறவஞ்சி
47. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது
அ. தூது ஆ. கலம்பகம்
இ. பள்ளு ஈ. பரணி
48. ஒட்டக் கூத்தர் யார் மீது பிள்ளைத் தமிழ் பாடினார்?
அ. குலோத்துங்கச் சோழன் ஆ. கரிகாலச் சோழன்
இ. ராஜராஜ சோழன் ஈ. ராஜேந்திரச் சோழன்
49. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றியது
அ. குமரேசர் குறவஞ்சி ஆ.
அழகர் குறவஞ்சி
இ. திருவாரூர்க் குறவஞ்சி ஈ. திருக்குற்றாலக் குறவஞ்சி
50. சிற்றிலக்கிய வகைகளில் நாடக அமைப்புடையது
அ. கலம்பகம் ஆ. பள்ளு
இ. உலா ஈ.
பரணி
51. பிள்ளைத்தமிழின் முன்னோடி
அ. ஆண்டாள் ஆ. ஒட்டக்கூத்தர்
இ. குமரகுருபரர் ஈ. பெரியாழ்வார்
52. ‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப’ வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை
அ. கலம்பகம் ஆ. பள்ளு
இ. உலா ஈ. பரணி
53. கலம்பக உறுப்புகள்
அ. 08 ஆ.
18 இ. 28 ஈ. 38
54. ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ யாரிடம்
கூறப்பட்டது?
அ. திருஞானசம்பந்தர் ஆ. திருநாவுக்கரசர்
இ. சுந்தரர் ஈ. மாணிக்கவாசகர்
55. பெண்பாற் பிள்ளைத் தமிழிற்கே உரிய சிறப்புப் பருவங்கள்
அ. கழங்கு, அம்மானை, ஊசல் ஆ. சிற்றில், சிறுதேர், சிறுபறை
இ. காப்பு, செங்கீரை, தால் ஈ.
சப்பாணி, முத்தம், வருகை
56. ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என தொல்காப்பிய அடிப்படையில் தோன்றியது
அ. கலம்பகம் ஆ. தூது
இ. பள்ளு ஈ. பரணி
அலகு
5
57. தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடி
அ. மு. மேத்தா ஆ. அப்துல் ரகுமான்
இ. நா. காமராசன் ஈ. நா. பிச்சமூர்த்தி
58. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே’
அ. பாரதியார் ஆ. பாரதிதாசன்
இ. கவிமணி தேசிக விநாயகம் ஈ. நாமக்கல் வெ. இராமலிங்கம்
59. விடியுமா சிறுகதை ஆசிரியர்
அ. கு.ப. ராஜகோபாலன் ஆ. புதுமைப் பித்தன்
இ. க.நா. சுப்பிரமணியன் ஈ. சி. சு. செல்லப்பா
60. ‘பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல்
மடமை’
அ. பாரதியார் ஆ. பாரதிதாசன்
இ. கவிமணி தேசிக விநாயகம் ஈ. நாமக்கல் வெ. இராமலிங்கம்
61. சாப விமோசனம்
அ. கு.ப. ராஜகோபாலன் ஆ. புதுமைப் பித்தன்
இ. க.நா. சுப்பிரமணியன் ஈ. சி. சு. செல்லப்பா
62. வரலாற்று நாவலிலக்கிய வழிகாட்டி
அ. ஜானகிராமன் ஆ. கல்கி
இ. ஜெயமோகன் ஈ. ஜெயகாந்தன்
63. வேலைக்காரி நாடக ஆசிரியர்
அ. அறிஞர் அண்ணா ஆ. புதுமைப்பித்தன்
இ. ஜெயகாந்தன் ஈ. கு. ப. ராஜகோபாலன்
64. அக்கினிப் பிரவேசம் எனும் சிறுகதையின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட புதினம்
அ. சில நேரங்களில் சில மனிதர்கள்
ஆ. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
இ. உன்னைப் போல் ஒருவன்
ஈ. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
65. ஒரு புளியமரத்தின் கதை புதின ஆசிரியர்
அ. ஜெயகாந்தன் ஆ. தி.ஜானகிராமன்
இ. சுந்தர ராமசாமி ஈ. அகிலன்
66. ஜல்லிக்கட்டு குறித்து எழுதப்பட்ட வாடிவாசல் புதின ஆசிரியர்
அ. ஜெயகாந்தன் ஆ. தி.ஜானகிராமன்
இ. சுந்தர ராமசாமி ஈ. சி.சு. செல்லப்பா
67. அம்மா வந்தாள் புதின ஆசிரியர்
அ. ஜெயகாந்தன் ஆ. தி.ஜானகிராமன்
இ. சுந்தர ராமசாமி ஈ. சி.சு. செல்லப்பா
68. சங்கரதாஸ் சுவாமிகளால் ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்ட நாடகம்
அ. அபிமன்யு சுந்தரி ஆ. அல்லி அர்ஜுனா
இ. பவளக் கொடி ஈ. பிரகலாதா
69. சு. வெங்கடேசனின் சாகித்திய அகாடெமி விருது பெற்ற நாவல்
அ. காவல் கோட்டம் ஆ. வேள்பாரி
இ. கதைகளின் கதை ஈ.
வைகை நதி நாகரிகம்
70. தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்ற கவிதை நாடக நூல்
அ. அல்லி அர்ஜுனா ஆ. மனோன்மணீயம்
இ. பவளக் கொடி ஈ. பிரகலாதா
இரு மதிப்பெண் வினாக்கள்
அலகு
1
1.
கடைச்சங்கத்தில் கிடைக்கபெற்ற நூல்கள் நான்கினைக் குறிப்பிடுக.
2.
சங்கத்தைக் குறிக்கும் சங்க இலக்கியப் பாடல்கள் இரண்டினைக்
குறிப்பிடுக.
3.
எட்டுத் தொகைப் பாடல்களை எடுத்துரைக்கும் பாடல் ஒன்றினை எடுத்துரைக்க.
4.
ஆற்றுப்படை இலக்கியங்களை வரிசைப்படுத்துக.
5.
பத்துப்பாட்டினை விளக்கும் பாடலைக் குறிப்பிடுக.
6.
தொல்காப்பிய எழுத்ததிகார இயல்பகுப்பினை நிரல்படுத்துக.
அலகு
2
1.
அற நூல்களில் அகம் பற்றிய நூல்களைக் குறிப்பிடுக.
2.
அற நூல்களின் எண்ணிக்கையைச் சுட்டும் பாடலினைக் குறிப்பிடுக.
3.
திருக்குறளிற்கு முதன்மை உரை கண்ட பதின்மர் யாவர்?
4.
அகம் புறம் இல்லாமல் அறம் பாடும் நூல்கள் எத்தனை அவை யாவை?
5.
பெருங்காப்பியங்களின் பெயர்களை வரிசைப்படுத்துக.
6.
இரட்டைக் காப்பியத்திற்கான காரணத்தை எடுத்துரைக்க.
அலகு
3
1.
சமயக் குரவர் மூவர் யாவர்?
2.
மாணிக்கவாசகர் நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றினை எடுத்துரைக்க.
3.
காரைக்கால் அம்மையார் இயற்றிய நூல்கள் யாவை?
4.
முதல் ஆழ்வார்கள் யாவர்? ஏன்?
5.
ஆண்டாளின் நூல்களைக் குறிப்பிடுக.
6.
கண்ணனிற்குத் தாலாட்டுப் பாடிய பெரியாழ்வார் பாடலினைச் சுட்டுக.
அலகு
4
1.
பெண்பாற் பிள்ளைத் தமிழ் பருவங்களை நிரல்படுத்துக.
2.
அந்தாதி – விளக்கிச் சான்றுப்பாடலுரைக்க.
3.
கலம்பகம் பொருள் விளக்குக.
4.
பள்ளு இலக்கியத்தின் பாடுபொருள் இரண்டினை எடுத்துரைக்க.
5.
தூது இலக்கிய நூல்கள் நான்கினைக் குறிப்பிடுக.
6.
பரணி – விளக்குக.
அலகு
5
1.
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் நான்கினைக் குறிப்பிடுக.
2.
நவீன இலக்கிய வகைகளைக் குறிப்பிடுக.
3.
பெண்ணியக் கவிஞர்கள் நால்வரைக் குறிப்பிடுக.
4.
இலக்கியக் கோட்பாடுகள் நான்கினைக் குறிப்பிடுக.
5.
இலக்கிய இதழ்கள் நான்கினைக் குறிப்பிடுக.
6.
இலக்கியம்சார் துறைகள் நான்கினைக் குறிப்பிடுக.
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
அலகு
1
1.
வரலாற்று நோக்கில் இலக்கியத்தை வகைப்படுத்துக.
2.
சங்க இலக்கியம் இருந்தமைக்கான இலக்கியச் சான்றுகளை எடுத்துரைக்க.
3.
குறுந்தொகையின் நயத்தைப் புலப்படுத்துக.
4.
கற்றறிந்தோர் ஏத்தும் கலியின் சிறப்புக்களை விளக்குக.
5.
ஆற்றுப்படுத்தல் விளக்கி நூல்களை அறிமுகம் செய்க.
அலகு
2
1.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பட்டியலிடுக.
2.
தனிமனித ஒழுக்கம் நான்கினை வகைப்படுத்தி குறளுடன் பொருத்துக.
3.
பழமொழியின் திறத்தை பாடல் சான்று காட்டிப் பகர்க.
4.
சிலப்பதிகாரத்தின் மூன்று உண்மைகளை சான்றுடன் விளக்குக.
5.
சீவக சிந்தாமணி ஒரு மணநூல் நிறுவுக.
அலகு
3
1.
காரைக்கால் அம்மையார் சிறப்புரைக்க.
2.
பெரியபுராணம் குறிப்புரைக்க.
3.
ஆண்டாளின் பக்திச் சிறப்பினைப் புலப்படுத்துக.
4.
பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய நூல்களை எடுத்துரைக்க.
5.
சித்தர்களின் தத்துவங்களைப் பாடல்கள் கொண்டு இயம்புக.
அலகு
4
1.
தூது இலக்கிய வகைமை குறித்து விளக்குக.
2.
உலா இலக்கியத்தின் தன்மை குறித்து எடுத்துரைக்க.
3.
பள்ளு இலக்கிய வகைமையின் பாங்கினை எடுத்துரைக்க.
4.
பிள்ளைத் தமிழின் பருவங்களை பகுத்துரைக்க.
5.
குறிஞ்சி நிலத்தின் திறத்தை குறவஞ்சி வழி விளக்குக.
அலகு
5
1.
சிறுகதை இலக்கணம் வரையறுக்க.
2.
கவிதையின் வகைமைகளை விளக்குக.
3.
புதினங்களை வகைப்படுத்திச் சான்றுரைக்க.
4.
சங்கரதாஸ் சாமிகளின் நாடகப் பங்களிப்பினை எடுத்துரைக்க.
5. பெண்ணியப் படைப்பாக்கங்கள் குறித்து விளக்குக.
கட்டுரை வினாக்கள்
அலகு
1
1.
தமிழின் தொன்மையும் சங்கம் குறித்தத் தகவல்களும் கட்டுரைக்க.
2.
சங்க இலக்கியத் தொகைப் பாடல்களின் தொகுப்புமுறைகளை விரித்துரைக்க.
3.
பத்துப்பாட்டு நூல் விவரங்களை வரலாற்று நோக்கில் எடுத்துரைக்க.
அலகு
2
1.
பதினெண் கீழ்க்கணக்கில் அகம் பாடும் நூல்களின் தன்மையினை
விளக்குக.
2.
பதினெண் கீழ்க்கணக்கில் அறம் பாடும் நூல்களை விவரிக்க.
3.
இலக்கிய வரலாற்றில் காப்பியங்கள் இடம்பெறும் தன்மையினைக்
கட்டுரைக்க.
அலகு
3
1.
சைவ
இலக்கிய வரலாறு குறித்து விவரிக்க.
2.
வைணவ
ஆழ்வார்களின் இலக்கிய வரலாற்றினை விரித்துரைக்க.
3.
சித்தர்களின்
சிந்தனைகளை இலக்கியப் பதிவுகள் வழிக் கட்டுரைக்க.
அலகு
4
1.
சிற்றிலக்கிய வகைகளை விளக்கியுரைக்க.
2.
பிள்ளைத்தமிழ் பருவங்களையும் பாடப்பெற்ற வகைகளையும் எடுத்துரைக்க.
3.
பரணி இலக்கியத் தோற்ற வரலாறு குறித்துக் கட்டுரைக்க.
அலகு
5
1.
புதுக்கவிதை வளர்ச்சி நிலைகள் பற்றிக் கட்டுரைக்க.
2.
சிறுகதை தோற்ற வரலாறு விவரிக்க.