சனி, பிப்ரவரி 04, 2023

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - நாட்டுப்புறப் பாடல்கள்

 நாட்டுப்புறப் பாடல்கள்

குழந்தைப் பாடல்

1.    என்ன ஊர்?

மயிலப்பூர்

என்ன மயில்?

காட்டு மயில்

என்ன காடு?

ஆற்காடு

என்ன ஆறு?

பாலாறு

என்ன பால்?

கள்ளிப் பால்

என்ன கள்ளி?

இலைக் கள்ளி

என்ன இலை?

மா இலை

என்ன மா?

அம்மா.

தொழில் பாடல்

2.    மண்ணை நம்பி – ஏலேலோ

மரம் இருக்க - ஐலசா

மரத்தை நம்பி – ஏலேலோ

கிளையிருக்க – ஐலசா

கிளையை நம்பி – ஏலேலோ

கோல் இருக்க - ஐலசா

கோலை நம்பி – ஏலேலோ

இலை இருக்க - ஐலசா

இல்லையை நம்பி – ஏலேலோ

பூ இருக்க - ஐலசா

பூவை நம்பி – ஏலேலோ

பிஞ்சு இருக்கு - ஐலசா

பிஞ்சை நம்பி – ஏலேலோ

காயிருக்க - ஐலசா

காயை நம்பி – ஏலேலோ

பழம் இருக்க – ஐலசா

பழத்தை நம்பி – ஏலேலோ

நீ இருக்க – ஐலசா

உன்னை நம்பி – ஏலேலோ

நான் இருக்கேன் – ஐலசா.

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - சிற்றிலக்கியம்

 சிற்றிலக்கியம்

அந்தாதி

1.    முப்பதுடனெடுத்து மூங்கில் இலைமேலே

முங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே

தூங்கும் பனிநீரே வாங்கும் கதிரோனே

வாங்கும் கதிரோனை.

தூது

1.    பஞ்சுபடா நூலே, பலர் நெருடாப் பாவே கீண்

டெஞ்சி அழுக்கேறா வியற்கலையே – விஞ்சு நிறம்

தோயாத செந்தமிழே, சொல்லேருழவரகம்

தீயாது சொல்விளையும் செய்யுளே.                                  தமிழ் விடு தூது

உலா

கோவை

கலம்பகம்

தமிழ்விடு தூது

1.    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

பரணி

1.    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவனுக்கு வகுப்பது பரணி

2.    பரணியில் பிறந்தவன் தரணியாள்வான்

3.    எடுமெடு மெடுவென வெடுத்ததோர்

இகலொலி கடலொலி யிகக்கவே

விடுவிடு விடு பரிகரிக்குழாம்

விடும் விடுமெனுமொலி மிகைக்கவே.

பிள்ளைத் தமிழ்

1.    குழவி மருங்கினும் கிளவதாகும்                                         தொல்காப்பியம்

2.    குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்                                                            திருக்குறள்

3.    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டும்

தொட்டும் கௌவியும் துழந்தும் நெய்யுடை

அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை                        அறிவுடை நம்பி

பள்ளு

குறவஞ்சி

1.    ஓடக் காண்பது பூம்புணல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யொகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது சூலுளை சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே.

2.    வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.

3.    செங்கையில் வண்டு கலின்கலின் என்று

செயம் செயம் என்றாட – இடை

சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு

தண்டை கலந்தாட – இரு

கொங்கை கொடும்பகை வென்றனம் என்று

குழைந்து குழைந்தாட – மலர்ப்

பைங்கொடி நங்கை வசந்த சவுந்திரி

பந்து பயின்றாளே.

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - பக்தி இலக்கியம் - வைணவம்

 ஆழ்வார்கள்

பொய்கையாழ்வார்

1.    வையம் தகளி வார்கடலே நெய்யாக

வெய்யக் கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் நாரனற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்

பூதத்தாழ்வார்

1.    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.

2.    நாடினும் நின்னடியே நாடுவன், நாடோறும்

பாடினும் நின்புகழே பாடுவன் – சூடினும்

பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு

என்னாகில் என்னே எனக்கு.

பேயாழ்வார்

1.    திருக்கண்டேன், பொன்மேணி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறம் கண்டேன் – செருக்கிளரும்

பொன் ஆழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்

என் ஆழி வண்ணன்பால் இன்று.

திருமழிசை ஆழ்வார்

1.    கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய

செந்நாப் புலவன் போகின்றேன், நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

2.    கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டும் – துணிவுடைய

செந்நாப் புலவன் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய் விரித்துக்கொள்.

3.    அறியார் சமணர் அயந்தார் பௌத்தரும்

சிறியார் சிவப்பட்டார் செப்பில் – வெறியாய்

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்

ஈனவரே ஆதலால் இன்று.

நம்மாழ்வார்

1.    வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்.

2.    மேகங்களே உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்

யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்.

3.    இதுவோ திருநகரி ஈதோ பொருநை

இதுவோ பரமபதத்து எல்லை – இதுவோதான்

வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை

ஓதும் சடகோபன் ஊர்.

4.    உயர்வற உயர்நலம் உடையவன் எவன்? அவன்

மயர்வற மதிநலம் அருளினன் எவன்? அவன்

அயர்வுறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே.

5.    அற்றது பற்றெனில் உற்றது வீடு

6.    உண்ணும் சோறும் பருகும் நீரும்

தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்

 

மதுரகவியாழ்வார்

1.    கண்ணி நுன் சிறுதாம்பினால் கட்டுண்ணப்

பண்ணிய பெருமாயன்

குலசேகராழ்வார்

1.    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன்போல், மாயத்தால்

மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மா நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

2.    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

3.    அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள் நினைத்து அழுங்குழவியது போன்று

இருந்தேனே.

பெரியாழ்வார்

1.    மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்

பேணியுனக்குப் பிரமன் வீடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ

வையம் அளந்தானே தாலேலோ

2.    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

            மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்

                                                            சேவடி செவ்வி திருக்காப்பு

ஆண்டாள்

1.    வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

2.    கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?

மருப்பு ஒசித்த மாதவந்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே

3.    மாணிடவர்க்கு என்று பேச்சுப் படின்

வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே

4.    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்நாளால்

தொண்டரடிப் பொடியாழ்வார்

1.    பச்சைமாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதோ! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே!.

திருப்பாணாழ்வார்

1.    கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணவே!.

திருமங்கையாழ்வார்

1.    ஓடினேன் ஓடி உயர்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம் தெரிந்து

நாடினேன் நாடிநான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

2.    குலந்தரும் செல்வம் தந்திடும், அடியார்

படுதுயர் ஆயினவெல்லாம்

நிலம் தரஞ்செய்யும், நீள்விசும்பு அருளும்

அருளொடு பெருநிலமளிக்கும்

வலந்தரும், மற்றும் தந்திடும் பெற்ற

தாயினும் ஆயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

3.    பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவே

ஊரார் இகழினும் ஊராது ஒழியேன் நான்

வாரார் பெண்ணை மடல்.

கம்பராமாயணம்

1.    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

2.    வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

வில்லிபாரதம்

1.    பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்

திருப்பிலே யிருந்து, வைகை யேட்டிலே தவழ்ந்து பேதை

நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்தோரேன

மருப்பிலே பயின்ற பாவை, மருங்கிலே வளருகின்றாள்.

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - பக்தி இலக்கியம் - சைவம், சித்தர் மரபு

 பக்தி இலக்கியம்

நாயன்மார்கள்

திருஞான சம்பந்தர்                                     

1.    வலம்வந்த மடவார்கள் நடமாட

முழவதிர மழையென்றஞ்சி

சிலமந்தி அலமந்து மரமேறி

முகில் பார்க்கும் திருவையாறே

2.    காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேத நான்கினு மெய்ப்பொருளாவது

நாத நமச்சிவாயவையவே

3.    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை

4.    சிறையாரும் மடக்கிளி…

திருநாவுக்கரசர்

1.    நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக் கிழி தருமிக்கருளினோன் காண்

2.    மாசில் வீணையும் மலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

3.    குனித்த புருவமும் …

4.    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சும்

5.    இன்பமே எந்நாளும் துன்பமில்லை

6.    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.

7.    என் கடன் பணி செய்து கிடப்பதே

8.    ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே

9.    சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்

சுந்தரர்

1.    பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

மாணிக்கவாசகர்                      திருவாசகம்

1.    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.

2.    வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே             (இராமலிங்கடிகள்)

3.    திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்

கருங்கல் மனமும் கரைந்து உக

கண்கள் தொடுமணர் கேணியிற் சுரந்து நீர்பாய             நால்வர் நான் மணி மாலை

4.    நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க

5.    தென்னாடுடைய நிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

திருமூலர்

1.    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந் துய்ம்மினே.

2.    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

3.    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்.

4.    மரத்தை மரைத்தது மாமதை வனி

5.    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.

6.    ஊரெல்லாம் கூடி ஒழிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டுச்

சூரியங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழுந்தார்களே

காரைக்கால் அம்மையார்

1.    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்

உன்னை என்றும் மறவாமை வேண்டும்.

2.    அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்

அப்பொருள் தானே அவன்.

சேக்கிழார்

---

சித்தர்கள்

சிவ வாக்கியார்

1.    ஓடி ஓடி ஓடி ஓடி

உட்கலந்த சோதியை

நாடி நாடி நாடி நாடி

நாட்களும் கழிந்து போய்

வாடி வாடி வாடி வாடி

மாண்டு போன மாந்தர்கள்

கோடி கோடி கோடி கோடி

எண்ணிலாத கோடியே                                                                   

2.    நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?                              

3.    பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா

இறைச்சி தோல் எலும்னிலும் இலக்கமிட்டிருக்குதோ

குதம்பைச் சித்தர்

1.    மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பார்க்குத்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி? குதம்பாய்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்

பட்டயம் ஏதுக்கடி? குதம்பாய்

வஞ்சம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்

சஞ்சலம் ஏதுக்கடி? குதம்பாய்

அந்தரம் தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத்

தந்திரம் ஏதுக்கடி? குதம்பாய்

தாவரம் இல்லை தனக்கொரு வீடில்லை

தேவாரம் ஏதுக்கடி? குதம்பாய்!                                                     

கடுவெளிச்சித்தர்

1.    நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி,

கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

2.    பாவம் செய்யாதிரு மனமே – நாளை

கோபம் செய்யாதே எமன் கொண்டோடிப் போவான்

இடைக்காட்டுச் சித்தர்

1.    ஆடுமயிலே! நடமாடு மயிலே! எங்கள்

ஆதியணி சேடனைக் கண்டு ஆடுமயிலே

2.    மனம் என்னும் மாடு இறந்தால் தாண்டவக் கோனே

முத்தி என்று எண்ணடா தாண்டவக் கோனே

சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே – யாவும்

சித்தியென்றே நினையோடா தாண்டவக் கோனே!       

பாம்பாட்டிச் சித்தர்

1.    நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே

பாதலத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே!                           

2.    மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் வாயில்மட்டே

இனமான சுற்றமும் மயானம் மட்டே வழக்கேது துணை?

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே!